நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 December 2013

சிலப்பதிகாரம் 8. வேனில் காதை

8. வேனில் காதை
இளவேனிலின் வருகை

""""நெடியோன குன்றமும், தொடியோள் பௌவமும்,
துமிழ் வரம்பு அறுத்த தண் புனல் நல் நாட்டு,
மாட மதுரையும், பீடு ஆர் உறந்தையும்,
கலி கெழு வஞ்சியும், ஒலி புனல் புகாரும்,
அரைசு வீற்றிருந்த, உரைசால் சிறப்பின்,                                     5

மன்னன் மாரன் மகிழ் துணை ஆகிய
இன் இளவேனில் வந்தது இவண்"""" என,
வளம் கெழு பொதியில் மா முனி பயந்த
இளங்கால்-தூதன் இசைத்தனன். ஆதலின்,
மகர வெல் கொடி மைந்தன் சேனை!                                        10
புகர் அறு கோலம் கொள்ளும்’ என்பது போலல்,
கொடி மிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணி மொழி கூற-


மாதவி நிலா-முற்றத்தில் தனியளாய் அமர்ந்து
மதுர கீதம் பாடுதல்

மடல் அவிழ் கானல் கடல் விளையாட்டினுள்
கோவலன் ஊட, கூடாது ஏகிய,                                            15
மா மலர் நெடுங் கண் மாதவி விரும்பி;
வான் உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில்-பள்ளி ஏறி ; மாண்-இழை,
தென் கடல் முத்தும், தென் மலைச் சந்தும்,
தன் கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்,
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து,                                        20
மை அறு சிறப்பின் கையுறை ஏந்தி;
அதிரா மரபின் யாழ் கை வாங்கி,
மதுர கீதம் பாடினள், மயங்கி-
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி;                                         25

யாழ் மீட்டிப் பாடி, புறத்து ஒரு பாணியில்
மாதவி மயங்குதல்

வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி,
இடக்கை நால் விரல் மாடகம் தழீஇ,
செம்பகை, ஆர்ப்பே, கூடம், அதிர்வே,
வெம் பகை நீக்கும் விரகுளி அறிந்து,
பிழையா மரபின் ஈர்-ஏழ் கோவையை                                        30
உழை முதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
இணை, கிளை, பகை, நட்பு, என்று இந் நான்கின்
இசை புணர் குறிநிலை எய்த நோக்கி,
குரல்வாய், இளிவாய், கேட்டனள்; அன்றியும்,
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்,                                     35
உழை முதல் ஆகவும், உழை ஈறு ஆகவும்;
குரல் முதல் ஆகவும், குரல் ஈறு ஆகவும்;
அகநிலை மருதமும், புறநிலை மருதமும்,
அருகியல் மருதமும், பெருகியல் மருதமும்;
நால் வகைச் சாதியும் நலம் பெற நோக்கி,                                    40
மூ-வகை இயக்கமும் முறையுளிக் கழிப்பி,
திறத்து வழிபடூஉம் தெள் இசைக் கரணத்து,
புறத்து ஒரு பாணியில் பூங்கொடி மயங்கி

மாதவி கோவலனுக்குத் திருமுகம் வரைந்து,
வசந்தமாலையிடம் கொடுத்து அனுப்புதல்

சண்முகம், மாதவி, தமாலம், கருமுகை,                                         45
வெண் பூ மல்லிகை, வேரொடு மிடைந்த
அம் செங்கழுநீர், ஆய் இதழ்க் கத்திகை
எதிர் பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர் பூந் தாழை முடங்கல் வெண் தோட்டு-
விரை மலர் வாளியின் வியல் நிலம் ஆண்ட                                    50
ஒரு தனிச் செங்கோல் ஒரு மகன் ஆணையின்,
ஒரு முகம் அன்றி, உலகு தொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி-
அலத்தகக் கொழுஞ் சேறு அளைஇ, அயலது
பித்திகைக் கொழு முகை ஆணி கைக்கொண்டு,                                55
‘மன் உயிர் எல்லாம் மகிழ் துணை புணர்க்கும்
இன் இளவேனில் இளவரசாளன்;
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்;
புணர்ந்த மாக்கள் பொழுது இடைப்படுப்பினும்,                                60
தணந்த மாக்கள் தம் துணை மறப்பினும்,
நறும் பூ வாளியின் நல் உயிர் கோடல்
இறும்பூது அன்று; அஃது அறிந்தீமின்’ என,
எண்-எண் கலையும் இசைந்து உடன் போக,
பண்ணும் திறனும் புறங்கூறு நாவில்                                        65
தளை வாய் அவிர்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்து உரை எழுதி;
பசந்த மேனியள் படர் உறு மாலையின்,
வசந்த மாலையை, ‘வருக’ எனக் கூஉய்,
‘தூ மலர் மாலையின் துணி பொருள் எல்லாம்                                70
கோவலற்கு அளித்து, கொணர்க ஈங்கு’ என-
வசந்தமாலை கடைவீதியில் கோவலனைக் கண்டு
மாதவி எழுதிய திருமுகத்தைச் சேர்த்தல்

மாலை வாங்கிய வேல் அரி நெடுங் கண்,
கூல மறுகின், கோவலற்கு அளிப்ப-
திலகமும், அளகமும், சிறு கருஞ் சிலையும்,
குவளையும், குமிழும், கொவ்வையும், கொண்ட                                75
மாதர் வாள் முகத்து, மதைஇய நோக்கமொடு,
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்;
புயல் சுமந்து வருந்தி, பொழி கதிர் மதியத்து,
கயல் உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்,
பாகு பொதி பவளம் திறந்து, நிலா உதவிய                                    80
நாகு இள முத்தின் நகை நலம் காட்டி,
""""வருக"""" என வந்து, """"போக"""" எனப் போகிய
கரு நெடுங் கண்ணி காண் வரிக் கோலமும்;
அந்தி-மாலை வந்ததற்கு இரங்கி,
சிந்தை நோய் கூரும் என் சிறுமை நோக்கி,                                    85
கிளி புரை கிளவியும், மட அன நடையும்,
களி மயில் சாயலும், கரந்தனள் ஆகி,
செரு வேல் நெடுங் கண் சிலதியர் கோலத்து
ஒரு தனி வந்த உள் வரி ஆடலும்;
சிலம்பு வாய் புலம்பவும், மேகலை ஆர்ப்பவும்,                                    90
கலம் பெற நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்து வேறு ஆய என் சிறுமை நோக்கியும்,
புறத்து நின்று ஆடிய புன்புற வரியும்;
கோதையும், குழலும், தாது சேர் அளகமும்,
ஒரு காழ் முத்தமும், திரு முலைத் தடமும்,                                    95
மின் இடை வருத்த நல்-நுதல் தோன்றி,
சிறுகுறுந் தொழிலியர் மறு மொழி உய்ப்ப,
புணர்ச்சி உட்பொதிந்த கலாம் தரு கிளவியின்
இரு புற மொழிப் பொருள் கேட்டனள் ஆகி,
தளர்ந்த சாயல், தகை மென் கூந்தல்                                        100
கிளர்ந்து வேறு ஆகிய கிளர் வரிக் கோலமும்;
பிரிந்து உறை காலத்து, பரிந்தனள் ஆகி,
என் உறு கிளைகட்குத் தன் உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சி வரி; அன்றியும்,
வண்டு அலர் கோதை மாலையுள் மயங்கி,                                    105
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்;
அடுத்துஅடுத்து, அவர் முன் மயங்கிய மயக்கம்
எடுத்து அவர் தீர்த்த எடுத்துக்கொள் வரியும்;
ஆடல மகளே ஆதலின், ஆய்-இழை!
பாடு பெற்றன அப் பைந்தொடி-தனக்கு’ என-                                110

திருமுகத்தைக் கோவலன் மறுத்த செய்தியை வசந்தமாலை
மாதவிக்கு உரைத்தல்

அணித் தோட்டுத் திரு முகத்து ஆய்-இழை எழுதிய,
மணித் தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி,
வாடிய உள்ளத்து வசந்தமாலை
தோடு அலர் கோதைக்குத் துனைந்து சென்று உரைப்ப-

மாதவி செயலற்ற உள்ளத்துடன் மலர்-அமளியில்
கண் துயிலாது கிடத்தல்

‘மாலை வாரார் ஆயினும், மாண்-இழை!                                    115
காலை காண்குவம் என, கையறு நெஞ்சமொடு
பூ மலர்-அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்-
மா மலர் நெடுங் கண் மாதவி-தான்-என்.

செந்தாமரை விரிய, தேமாங் கொழுந்து ஒழுக,
மைந்து ஆர் அசோகம் மடல் அவிழ, கொந்து ஆர்
இளவேனல் வந்ததால்; என் ஆம்கொல்-இன்று,
வள வேல் நல் கண்ணி மனம்?

‘ஊடினீர் எல்லாம், உருவிலான்-தன் ஆணை!
கூடுமின்’ என்று குயில் சாற்ற, நீடிய
வேனல்-பாணிக் கலந்தாள் மென் பூந் திருமுகத்தை,
கானல்-பாணிக்கு அலந்தாய்! காண்.

9. கனாத் திறம் உரைத்த காதை

மகளிர் இரவிற்கு ஏற்ற கோலம் கொண்டு,
இல் உறை தெய்வத்தை வழிபடுதல்

அகல் நகர் எல்லாம் அரும்பு அவிழ் முல்லை
நிகர் மலர் நெல்லொடு தூஉய், பகல் மாய்ந்த
மாலை மணி விளக்கம் காட்டி, இரவிற்கு ஓர்
கோலம் கொடி-இடையார்-தாம் கொள்ள-

மாலதியின் வரலாறு

மாலதி இறந்த மகவைக் கொண்டு
தெய்வக் கோட்டங்களுக்குச் சென்று, வரம் வேண்டுதல்

மேல் ஓர் நாள்,                                        5
மாலதி மாற்றாள் மகவுக்குப் பால் அளிக்க,
பால் விக்கி, பாலகன்-தான் சோர, மாலதியும்,
‘பார்ப்பானொடு மனையாள் என்மேல் படாதன விட்டு
ஏற்பன கூறார்’ என்று ஏங்கி, மகக் கொண்டு,
அமரர் தருக்கோட்டம், வெள்யானைக் கோட்டம்,
புகர் வெள்ளி நாகர் - தம் கோட்டம், பகல் வாயில்                                    10
உச்சிக்கிழான் கோட்டம், ஊர்க் கோட்டம், வேல்கோட்டம்,
வச்சிரக் கோட்டம், புறம்பணையான் வாழ் கோட்டம்,
நிக்கந்தக் கோட்டம், நிலாக் கோட்டம், புக்கு எங்கும்,
‘தேவிர்காள்! எம் உறு நோய் தீர்ம்’ என்று மேவி -

சாத்தன் கோயிலில் மாலதி பாடுகிடக்க, இடாகினிப் பேய்
அவள் கையிலிருந்த பிணத்தைப் பிடுங்கித் தின்னுதல்

ஓர்                                        15
பாசண்டச் சாத்தற்குப் பாடு கிடந்தாளுக்கு,
ஏசும் படி ஓர் இளங்கொடி ஆய், ‘ஆசு இலாய்!
செய் தவம் இல்லோர்க்குத் தேவர் வரம் கொடார்;
பொய் உரையே அன்று; பொருள் உரையே; கையில்
படு பிணம் தா’ என்று, பறித்து, அவள் கைக் கொண்டு,
சுடுகாட்டுக் கோட்டத்து, தூங்கு இருளில் சென்று, ஆங்கு                             20
இடு பிணம் தின்னும் இடாகினிப்பேய் வாங்கி,
மடிஅகத்து இட்டாள், மகவை-


சாத்தன் மகவாய் வருதல்

இடியுண்ட
மஞ்ஞை போல் ஏங்கி அழுதாளுக்கு, அச் சாத்தன்
‘அஞ்ஞை! நீ ஏங்கி அழல்’ என்று, ‘முன்னை
உயிர்க் குழவி காணாய்’ என்று, அக் குழவி ஆய், ஓர்                                25
குயில்-பொதும்பர் நீழல் குறுக, அயிர்ப்பு இன்றி,
மாயக் குழவி எடுத்து, மடித் திரைத்து,
தாய் கைக் கொடுத்தாள், அத் தையலாள்.

தேவந்தியின் வரலாறு
சாத்தன் கலை பல பயின்று; தேவந்தியுடன் எட்டி யாண்டு
இல்லறம் புரிந்து நீங்குதல்

தூய
மறையோன் பின் மாணி ஆய், வான் பொருள் கேள்வித்
துறைபோய், இவர் முடிந்தபின்னர், இறையோனும்                                    30
தாயத்தாரோடும் வழக்கு உரைத்து, தந்தைக்கும்
தாயார்க்கும் வேண்டும் கடன் கழித்து, மேய நாள்
தேவந்தி என்பாள் மனைவி, அவளுக்கு,
‘பூ வந்த உண் கண் பொறுக்க’ என்று மேவி, தன்
மூவா இள நலம் காட்டி, ‘எம கோட்டத்து                                        35
நீ வா’ என உரைத்து, நீங்குதலும் -

தேவந்தி சாத்தன் கோட்டத்தை வழிபட்டிருத்தல்

தூ-மொழி,
‘ஆர்த்த கணவன் அகன்றனன், """"போய் எங்கும்
தீர்த்தத் துறை படிவேன்"""" என்று; அவனைப் பேர்த்து இங்ஙன்
மீட்டுத் தருவாய்’ என ஒன்றன்மேல் இட்டு,                       
கோட்டம் வழிபாடு கொண்டிருப்பாள்,

தேவந்தி கண்ணகியிடம் சென்று ஆசி கூறுதல்

வாட்டு - அரும் சீர்க்                                                        40
கண்ணகி - நல்லாளுக்கு உற்ற குறை உண்டு என்று
எண்ணிய நெஞ்சத்து இளையளாய் நண்ணி;
அறுகு,  சிறு பூளை, நெல்லொடு தூஉய்ச் சென்று;                                       
 ‘பெறுக, கணவனொடு’ என்றாள்-

கண்ணகி தான் கண்ட கனாவினைத் தோழிக்கு உரைத்தல்

‘பெறுவேன்;
கடுக்கும் என் நெஞ்சம்; கனவினால், என் கை                                    45
பிடித்தனன் போய் ஓர் பதியுள் பட்டேம்;
பட்ட பதியில், படாதது ஒரு வார்த்தை
இட்டனர் ஊரார், இடுதேள் இட்டு, என் - தன்மேல்;
""""கோவலற்கு உற்றது ஓர் தீங்கு"""" என்று அது கேட்டு,
காவலன் முன்னர் யான் கட்டுரைத்தேன்; காவலனோடு                          50
ஊர்க்கு உற்ற தீங்கும் ஒன்று உண்டால்; உரையா டேன்;
தீக் குற்றம் போலும், செறி - தொடீஇ! தீக் குற்றம்
உற்றேனொடு உற் உறுவனோடு யான் உற்ற
நல் திறம் கேட்கின் நகை ஆகும்’ -

தேவந்தி கூறிய தேறுதல் உரை

பொன் - தொடிஇ!
கைத்தாயும் அல்லை; கணவற்கு ஒரு நோன்பு                                55
பொய்த்தாய் பழம் பிறப்பில்; போய்க் கெடுக! உய்த்துக்
கடலொடு காவிரி சென்று அலைக்கும் முன்றில்,
மடல் அவிழ் நெய்தல் அம் கானல், தடம் உள,
சோம குண்டம், சூரிய குண்டம்; துறை மூழ்கி,
காமவேள் கோட்டம் தொழுதார், கணவரொடு                                60
தாம் இன்புறுவர் உலகத்து, தையலார்;
போகம் செய் பூமியினும் போய்ப் பிறப்பர்; யாம் ஒரு நாள்
ஆடுதும்’ என்ற அணி-இழைக்கு-



கண்ணகியின் மறுமொழி

அவ் ஆய்-இழையாள்,
‘பீடு அன்று’ என இருந்தபின்னரே-

கோவலன் வருகையும், அவன் நிகர்ந்ததற்கு இரங்கிக் கூறுதலும்

‘நீடிய
காவலன் போலும், கடைத்தலையான் வந்து - நம்                                 65
கோவலன்!’ என்றாள் ஓர் குற்றிளையாள். கோவலனும்
பாடு அமை சேக்கையுள் புக்கு, தன் பைந்தொடி
வாடிய மேனி வருத்தம் கண்டு, ‘யாவும்
சலம் புணர் கொள்கைச் சலதியொடு ஆடி,
குலம் தரு வான் பொருள் - குன்றம் தொலைத்த;                                70
இலம்பாடு நாணுத் தரும் எனக்கு’ என்ன-

கண்ணகியின் விடை
நலம் கேழ் முறுவல் நகை முகம் காட்டி,
‘சிலம்பு உள; கொண்ம்’ என-



கோவலன் மதுரை சென்று பொருள் ஈட்ட எண்ணியுள்ள
தனது கருத்தை வெளியிட்டு, விடியுமுன் கண்ணகியுடன்
மதுரைக்குப் புறப்பட்டுச் செல்லுதல்

‘சேயிழை! கேள்; இச்
சிலம்பு முதல் ஆக, சென்ற கலனோடு
உலந்த பொருள் ஈட்டுதல் உற்றேன், மலர்ந்த சீர்                                    75
மாட மதுரை அகத்துச் சென்று; என்னோடு இங்கு,
ஏடு அலர் கோதாய்! எழுக’ என்று, நீடி
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான் - கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.

வெண்பா

காதலி கண்ட கனவு கரு நெடுங் கண்
மாதவி - தன் சொல்லை வறிதாக்க, மூதை -
வினை கடைக்கூட்ட வியம் கொண்டான் - கங்குல்
கனை சுடர் கால் சீயாமுன்.

10. நாடு காண் காதை

கோவலனும் கண்ணகியும் வீட்டின் நெடு வாயிலைக்
கடந்து செல்லுதல்

வான்கண் விழியா வைகறை யாமத்து,
மீன் திகழ் விசும்பின் வெண் மதி நிங்க,
கார் இருள் நின்ற கடை நாள் கங்குல் -
ஊழ்வினை கடைஇ உள்ளம் துரப்ப,
ஏழகத் தகரும், எகினக் கவரியும்,                                            5
தூ மயிர் அன்னமும், துணை எனத் திரியும்,
தாளொடு குயின்ற தகைசால் சிறப்பின்
நீள் நெடு வாயில் நெடுங் கடை கழிந்து - ஆங்கு -

மணிவண்ணன் கோயிலை வலம் செய்து போதல்

அணி கிளர் அரவின் அறிதுயில் அமர்ந்த
மணிவண்ணன் கோட்டம் வலம் செயாக் கழிந்து-                                10

இந்திரவிகாரங்களை வணங்கிப் போதல்

பணை ஐந்து ஓங்கிய பாசிலைப் போதி
அணி திகழ் நீழல் அறவோன் திருமொழி
அந்தர-சாரிகள் அறைந்தனர் சாற்றும்
இந்திர-விகாரம் ஏழ் உடன் போகி-

சிலாதலத்தைத் தொழுது வலம் கொள்ளல்

புலவு ஊண் துறந்து, பொய்யா விரதத்து,                                    15
அவலம் நீத்து, அறிந்து, அடங்கிய கொள்கை,
மெய் வகை உணர்ந்த விழுமியோர் குழீஇய
ஐ-வகை நின்ற அரகத்தானத்துச்
சந்தி ஐந்தும் தம்முடன் கூடி
வந்து, தலைமயங்கிய வான் பெரு மன்றத்து,                                    20
பொலம் பூம் பிண்டி நலம் கிளர் கொழு நிழல்,
நீர் அணி விழவினும், நெடுந் தேர் விழவினும்,
சாரணர் வரூஉம் தகுதி உண்டாம் என,
உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட
இலகு ஒளிச் சிலாதலம் தொழுது, வலம் கொண்டு-                            25

புகார் நகரின் வாயிலைக் கடத்தல்

மலை தலைக்கொண்ட பேர் யாறு போலும்
உலக இடைகழி ஒருங்குடன் நீங்கி-




இலவந்திகைப் பள்ளியின் எயிலின் புறத்தே போதல்

கலையிலாளன் காமர் வேனிலொடு
மலய மாருதம் மன்னவற்கு இறுக்கும்,
பல் மலர் அடுக்கிய, நல் மரப் பந்தர்                                            30
இலவந்திகையின் எயில் புறம் போகி-


காவிரியின் கடைமுகம் கழிந்து, வடகரையின் வழியாக
மேற்கு நோக்கி வழிக்கொள்ளல்

தாழ் பொழில் உடுத்த, தண்பதப் பெருவழிக்
காவிரி வாயில் கடைமுகம் கழிந்து,
குட திசைக் கொண்டு, கொழும் புனல் காவிரி
வட பெரும் கோட்டு மலர்ப் பொழில் நுழைந்து-                                35

கவுந்திஅடிகள் வாழும் பள்ளியை அடைதல்

காவதம் கடந்து, கவுந்திப் பள்ளிப்
பூ மரப் பொரும்பர்ப் பொருந்தி-

கண்ணகியின் வினாவும், கோவலன் உரைத்த விடையும்

ஆங்கண்,
இறும் கொடி நுசுப்போடு இனைந்து, அடி வருந்தி,
நறும் பல் கூந்தல் குறும் பல உயிர்த்து,
முதிராக் கிளவியின், முள் எயிறு இலங்க,                                    40
‘மதுரை மூதூர் யாது?’ என வினவ-
‘ஆறு-ஐங் காதம் நம் அகல் நாட்டு உம்பர்;
நாறு ஐங் கூந்தல்! நணித்து’ என நக்கு-

கோவலனும் கண்ணகியும் அறப்பள்ளியில் இருந்த
கவுந்திஅடிகளைத் தொழுதல்

தேமொழி-தன்னொடும், சிறைஅகத்து இருந்த
காவுந்திஐயையைக் கண்டு, அடி தொழலும்-                                    45

கவுந்தி அடிகளின் வினாவும் கோவலனது மறுமொழியும்

‘உருவும், குலனும், உயர் பேர் ஒழுக்கமும்,
பெருமகன் திருமொழி பிறழா நோன்பும்,
உடையீர்! என்னோ, உறுகணாளரின்
கடை கழிந்து இங்ஙனம் கருதியவாறு?’ என-
‘உரையாட்டு இல்லை; உறு தவத்தீர்! யான்                                    50
மதுரை மூதூர் வரை பொருள் வேட்கையேன்’-




கவுந்திஅடிகள் ஊழின் வலிமையை எடுத்துக் காட்டியதோடு
மதுரை செல்ல இருக்கும் தனது விருப்பத்iயும் வெளியிடுதல்

‘பாடகச் சீறடி பரல் பகை உழவா;
காடு இடையிட்ட நாடு நீர் கழிதற்கு
அரிது; இவள் செவ்வி அறிகுநர் யாரோ?
""""உரியது அன்று;  ஈங்கு ஒழிக"""" என, ஒழியிர்;                                    55
மற உரை நீத்த மாசு அறு கேள்வியர்
அற உரை கேட்டு, ஆங்கு அறிவனை ஏத்த,
தென் தமிழ் நல் நாட்டுத் தீது தீர் மதுரைக்கு
ஒன்றிய உள்ளம் உடையேன் ஆகலின்,
போதுவல் யானும்; போதுமின்’                                                60

கோவலன்அடிகளின் வருகையை உவந்து கூறல்

என்ற
காவுந்திஐயையைக் கைதொழுது, ஏத்தி,
‘அடிகள்! நீரேஅருளுதிர் ஆயின், இத்
தொடி வளைத் தோளி துயர் தீர்த்தேன்’ என-

மதுரை செல்லும் வழியின் அருமை பற்றிக் கவந்தி கூறல்
சோலையும் தோட்டமும் ஆகிய கரை வழி

‘கோவலன்! காணாய்; கொண்ட இந் நெறிக்கு
ஏதம் தருவன யாங்கும் பல; கேள்மோ;                                        65
வெயில் நிறம் பொறாஅ மெல்லியல் கொண்டு
பயில் பூந் தண்டலைப் படர்குவம்எனினே,
மண் பக வீழ்ந்த கிழங்கு அகழ் குழியைச்
சண்பகம் நிறைத்த தாது சோர் பொங்கர்
பொய்யறைப் படுத்து, போற்றா மாக்கட்குக்                                    70
கையறு துன்பம் காட்டினும் காட்டும்;
உதிர் பூஞ் செம்மலின் ஒதுங்கினர் கழிவோர்
முதிர் தேம் பழம் பகை முட்டினும் முட்டும்;
மஞ்சளும் இஞ்சியும் மயங்கு அரில் வலயத்துச்
செஞ் சுளைப் பலவின் பரல் பகை உறுக்கும்,                                    75

வயல் வழி

கயல் நெடுங் கண்ணி காதல் கேள்வ!
வயல் உழைப் படர்குவம்எனினே, ஆங்கு,
பூ நாறு இலஞ்சிப் பொரு கயல் ஓட்டி,
நீர் நாய் கௌவிய நெடும் புற வாளை
மலங்கு மிளிர் செநறன் விலங்கப் பாய¨ன்,                                    80
கலங்கலும் உண்டு இக் காரிகை; ஆங்கண்,
கரும்பில் தொடுத்த பெரும் தேன் சிதைந்து,
சுரும்பு சூழ் பொய்கைத் தூ நீர் கலக்கும்;
அடங்கா வேட்கையின் அறிவு அஞர் எய்தி,
குடங்கையின் நொண்டு, கொள்ளளவும் கூடும்;                                85
குறுநர் இட்ட குவளை அம் போதொடு
பொறி வரி வண்டு இனம் பொருந்திய கிடக்கை,
நெறி செல் வருத்தத்து, நீர் அஞர் எய்தி,
அறியாது அடி ஆங்கு இடுதலும் கூடும்;
எறி நீர் அடை கரை இயக்கம் - தன்னில்                                    90
பொறி மாண் அலவனும், நந்தும், போற்றாது,
ஊழ் அடி ஒதுக்கத்து உறு நோய் காணின்,
தாழ்தரு துன்பம் தாங்கவும் ஒண்ணா,
வயலும் சோலையும் அல்லது யாங்கனும்;
அயல்படக் கிடந்த நெறி ஆங்கு இல்லை;                                    95
நெறி இருங் குஞ்சி! நீ வெய்யோளொடு
குறி அறிந்து, அவை அவை குறுகாது ஓம்பு’ என-

மூவரும் வழிக்கொள்ளல்

தோம் அறு கடிஞையும், சுவல்மேல் அறுவையும்,
கவுந்தி ஐயை, கைப் பீலியும், கொண்டு;
‘மொழிப் பொருள் தெய்வம் வழித் துணை ஆக’ என                            100
பழிப்பு - அரும் சிறப்பின் வழிப் படர் புரிந்தோர் -


காவிரி ஆற்றின் ஒலியும் பறவைகளின் ஓசையும்

கரியவன் புகையினும், புகைக்கொடி தோன்றினும்,
விரி கதிர் வெள்ளி தென் புலம் படரினும்,
கால் பொரு நிவப்பின் கடுங் குரல் ஏற்றொடும்                                    105
சூல் முதிர் கொண்மூப் பெயல் வளம் சுரப்ப,
குட மலைப் பிறந்த கொழும் பல் தாரமொடு
குடல் வளன் எதிரக் கயவாய் நெரிக்கும்
காவிரிப் புது நீர்க் கடு வரல் வாய்த்தலை
ஓ இறந்து ஒலிக்கும் ஒலியே அல்லது,                                            110
ஆம்பியும், கிhhரும், விங்கு இசை ஏத்தமும்,
ஓங்கு நீர்ப் பிழாவும், ஒலித்தல் செல்லா;
கழனிச் செந்நல், கரும்பு சூழ் மருங்கின்
பழனத் தாமரைப் பைம் பூங் கானத்து,
கம்புள் கோழியும், கனை குரல் நாரையும்,
செங் கால் அன்னமும், பைங் கால் கொக்கும்,                                    115
கானக் கோழியும், நீர்நிறக் காக்கையும்,
உள்ளும் ஊரலும், புள்ளும், புறாவும்,
வெல் போர் வேந்தர் முனையிடம் போல,
பல் வேறு குழுஉக் குரல் பரந்த ஓதையும்;

உழவரின் ஒலியும் பாட்டும்

உழா அ நுண் தொளியுள் புக்கு அழுந்திய                                        120
கழாஅ மயிர் யாக்கைச் செங் கண் காரான்
சொரி புறம் உரிஞ்ச, புரி ஞெகிழ்பு உற்ற
குமரிக் கூட்டில் கொழும் பல் உணவு
கவரிச் செந்நெல் காய்த்தலைச் சொரிய,
கருங்  கை வினைஞரும் களமரும் கூடி                                            125
ஒருங்கு நின்று ஆர்க்கும் ஒலியே அன்றியும்;
கடி மல் களைந்து, முடி நாறு அழுத்தி,
தொடி வளைத் தோளும் ஆகமும் தோய்த்து,
சேறு ஆடு கோலமொடு வீறு பெறத் தோன்றி,
செங் கயல் நெடுங் கண் சில் மொழிக் கடைசியர்                                    130
வெங் கள் தொலைச்சிய விருந்தின் பாணியும்;
கொழுங் கொடி அறுகையும் குவளையும் கலந்து,
விளங்கு கதிர்த் தொடுத்த விரியல் சூட்டி,
பார் உடைப்பனர் போல், பழிச்சினர் கைதொழ
ஏரொடு நின்றோர் ஏர் மங்கலமும்;                                                135
அரிந்து கால் குவித்தோர் அரி கடாவுறுத்த
பெருஞ் செய்ந் நெல்லின் முகவைப் பாட்டும்;
தெண் கிணைப் பொருநர் செருக்குடன் எடுத்த
மண் கணை முழவின் மகிழ் இசை ஓதையும்;
பேர் யாற்று அடைகரை நீரின் கேட்டு, ஆங்கு,                                    140
ஆர்வ நெஞ்சமோடு அவலம் கொள்ளார்-

மறையோர் இருக்கையும் உழவர் இருக்கையும் ஆகிய
ஊர்கள் இடையிட்ட நாட்டின் வழியாகச் செல்லுதல்

உழைப் புலிக் கொடித் தேர் உரவோன் கொற்றமொடு
மழைக் கரு உயிர்க்கும் அழல் திகழ் அட்டில்,
மறையோர்ஆக்கிய ஆவுதி நறும் புகை
இறை உயர் மாடம் எங்கணும் போர்த்து,                                            145
மஞ்சு சூழ் மலையின் மாணத் தோன்றும்
மங்கல மறையோர் இருக்கை; அன்றியும்,
பரப்பு நீர்க் காவிரிப் பாவை - தன் புதல்வர்,
இரப்போர் சுற்றமும் புரப்போர் கொற்றமும்
உழவிடை விளைப்போர் பழ விறல் ஊர்களும்,                                    150
பொங்கழி ஆலைப் புகையொடும் பரந்து,
மங்குல் வானத்து மலையின் தோன்றும்,
ஊர் இடையிட்ட நாடுடன் கண்டு,
காவதம் அல்லது கடவார் ஆகி,
பல் நாள் தங்கி, செல் நாள் ஒரு நாள்-                                            155

திருவரங்கத்தில் சாரணர் தோன்றுதல்

ஆற்று வீ அரங்கத்து, வீற்று வீற்று ஆகி,
குரங்கு அமை உடுத்த மரம் பயில் அடுக்கத்து,
வானவர் உறையும் பூ நாறு ஒரு சிறை-
பட்டினப் பாக்கம் விட்டனர் நீங்கா,
பெரும் பெயர் ஐயர் ஒருங்குடன் இட்ட                                            160
இலங்கு ஒளிச் சிலாதலம் மேல் இருந்தருளி,
பெருமகன் அதிசயம் பிறழா வாய்மைத்
தருமம் சாற்றும் சாரணர் தோன்ற-

மூவரும் சாரணரை வழிபடுதலும், அச் சாரணர் அறிவுரை பகர்தலும்

‘பண்டைத் தொல் வினை பாறுக’ என்றே
கண்டு அறி கவுந்தியொடு கால் உற வீழ்ந்தோர்                                    165
வந்த காரணம், வயங்கிய கொள்கைச்
சிந்தை விளக்கின், தெரிந்தோன்ஆயினும்,
ஆர்வமும் செற்றமும் அகல நீக்கிய
வீரன் ஆகலின், விழுமம் கொள்ளான்-
‘கழி பெரும் சிறப்பின் கவுந்தி! காணாய்,                                        170
ஒழிக என ஒழியாது ஊட்டும் வல் வினை;
இட்ட வித்தின் எதிர்ந்துவந்து எய்தி,
ஓட்டும்காலை ஒழிக்கவும் ஒண்ணா;
கடுங் கால் நெடு வெளி இடும் சுடர் என்ன
ஒருங்குடன் நில்லா உடம்பிடை உயிர்கள்;                                        175
அறிவன், அறவோன், அறிவு வரம்பு இகந்தோன்,
செறிவன், சினேந்திரன், சித்தன், பகவன்,
தரும புதல்வன், தலைவன், தருமன்,
பொருளன், புனிதன், புராணன், புலவன்,
சினவரன், தேவன், சிவகதி நாயகன்,                                            180
ழுரமன், குணவதன், பரத்தில் ஒளியோன்,
தத்துவன், சாதுவன், சாரணன், காரணன்,
சித்தன், பெரியவன், செம்மல், திகழ் ஒளி,
இறைவன், குரவன், இயல் குணன், எம் கோன்,
குறைவு இல் புகழோன், குணப் பெரும் கோமான்,                                    185
சங்கரன், ஈசன், சயம்பு, சதுமுகன்,
அங்கம் பயந்தோன், அருகன், அருள் முனி,
பண்ணவன், எண் குணன், பாத்து இல் பழம் பொருள்,
விண்ணவன், வேத முதல்வன், விளங்கு ஒளி,
ஓதிய வேதத்து ஒளி உறின் அல்லது                                           
போதார், பிறவிப் பொதி-அறையோர்’ என-                                        190

சாரணரது அறிவுறையைக் கேட்டு, கவுந்தி கூறிய புகழ்மாலை

சாரணர் வாய்மொழி கேட்டு, தவ முதல்
காவுந்திகை தன் கை தலைமேல் கொண்டு,
‘ஒரு மூன்று அவித்தோன் ஓதிய ஞானத்
திருமொழிக்கு அல்லது, என் செவிஅகம் திறவா;                                    195
காமனை வென்றேன் ஆயிரத்து எட்டு
நாமம் அல்லது, நவிலாது, என் நா;
ஐவரை வென்றேன் அடி இணை அல்லது,
ஐகவரைக் காணினும், காணா என் கண்;
அருள் அறம் பூண்டோன் திரு மெய்க்கு அல்லது, என்                                200
பொருள் இல் யாக்கை பூமியில் பொருந்தாது;
அருகர், அறவன், அறிவோற்கு அல்லது, என்
இரு கையும் கூடி ஒரு வழிக் குவியா;
மலர்மிசை நடந்தோன் மலர் அடி அல்லது என்
தலைமிசை உச்சி தான் அணிப்பொறாஅது;                                        205
இறுதி இல் இன்பத்து இறை மொழிக்கு அல்லது,
மறுதர ஓதி என் மனம் புடைபெயராது’                                           

சாரணர் மறைதல்

என்று அவன் இசை மொழி ஏத்தக் கேட்டு, அதற்கு
ஒன்றிய மாதவர் உயர்மிசை ஓங்கி,
நிவந்து, ஆங்கு ஒரு முழம் நீள் நிலம் நிங்கி,                                        210
‘பவம் தரு பாசம் கவுந்தி கெடுக’ என்று,
அந்தரம் ஆறாப் படர்வோர் தொழுது,
‘பந்தம் அறுக’ எனப் பணிந்தனர் போந்து-



காவிரியைக் கடந்து தென்கரை அடைந்து
மூவரும் ஒரு பொழிலில் இருத்தல்

கார் அணி பூம் பொழில் காவிரிப் பேர் யாற்று
நீரணி - மாடத்து நெடுந் துறை போகி,                                            215
மாதரும், கணவனும், மாதவத்து ஆட்டியும்,
தீது தீர் நியமத் தென் கரை எய்தி,
போது சூழ் கிடக்கை ஓர் பூம் பொழில் இருந்துழி-

வம்பப் பரத்தையும் வறுமொழியாளனும்

வம்பப் பரத்தை வறுமொழியாளனொடு
கொங்கு அலர் பூம் பொழில் குறுகினர் சென்றோர்,                                220
‘காமனும் தேவியும் போலும் ஈங்கு இவர்
ஆர்? எனக் கேட்டு, ஈங்கு அறிகுவம்’ என்றே-
‘நோற்று உணல் யாக்கை நொசி தவத்தீர்! உடன்
ஆற்று வழிப்பட்டோர் ஆர்?’ என வினவ -

கவுந்தியின் மறுமொழி

‘என்
மக்கள் காணீர்; மானிட யாக்கையர்;                                            225
பக்கம் நீங்குமின்; பரி புலம்பினர்’ என-

தூர்த்தர்கள் பழிப்புரை

‘உடன் வயிற்றோர்கள் ஒருங்குடன் வாழ்க்கை
கடவதும் உண்டோ? கற்றறிந்தீர்!’ என-

கவுந்திஅடிகள் சாபம்

தீ மொழி கேட்டு, செவிஅகம் புதைத்து,
காதலன் முன்னர்க் கண்ணகி நடுங்க -                                            230
‘எள்ளுநர் போலும் இவர், என் பூங்கோதையை;
முள்ளுடைக் காட்டின் முது நரி ஆக’ என -

கண்ணகியும் கோவலனும் கவுந்தி அடிகளை வணங்கி,
சாபத்தை நீக்கியருள வேண்டுதல்

கவுந்தி இட்டது தவம் தரு சாபம்;
கட்டியது ஆதலின், பட்டதை அறியார்,
குறு நரி நெடுங் கூவிளி கேட்டு,                                                235
நறு மலர்க் கோதையும் நம்பியும் நடுங்கி,
‘நெறியின் நீங்கியோர் நீர் அல கூறினும்,
அறியாமை என்று அறியல் வேண்டும்;
செய் தவத்தீர்! நும் திருமுன் பிழைத்தோர்க்கு
உய்திக் காலம உரையீரோ!’ என-                                                240

கவுந்தி அடிகள் சாபத்துக்கு எல்லை கூறுதல்

‘அறியாமையின் இன்று இழி பிறப்பு உற்றோர்
உறையூர் நொச்சி ஒரு புடை ஒதுங்கி,
பன்னிரு மதியம் படர் நோய் உழந்தபின்,
முன்னை உருவம் பெறுக, ஈங்கு இவர்’ என-

உறையூர் சென்று சேர்தல்

சாபவிடை செய்து, தவப் பெரும் சிறப்பின்                                        245
காவுந்திஐயையும், தேவியும், கணவனும்,
முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
புறம் சிறை வாரணம் புக்கனர் புரிந்து - என்.

கட்டுரை

முடி உடை வேந்தர் மூவருள்ளும்
தொடி விளங்கு தடக்கைச்சோழர் குலத்து உதித்தோர்
அறனும், மறனும், ஆற்றலும், அவர்-தம்
பழ விறல் மூதூர்ப் பண்பு மேம்படுதலும்,
விழவு மலி சிறப்பும், விண்ணவர் வரவும்,                                        5
ஒடியா இன்பத்து அவர் உறை நாட்டுக்
குடியும், கூழின் பெருக்கமும், அவர் - தம்
தெய்வக் காவிரித் தீது தீர் சிறப்பும்,
பொய்யா வானம் புதுப் புனல் பொழிதலும்;
அரங்கும், ஆடலும், தூக்கும், வரியும்                                            10
பரந்து இசை எய்திய பாரதி - விருத்தியும்,
திணைநிலை வரியும் இணைநிலை வரியும்
அனைவுறக் கிடந்த யாழின் தொகுதியும்,
ஈர் - ஏழ் சகோடமும், இடைநிலைப்பாலையும்,
தாரத்து ஆக்கமும், தான் தெரி பண்ணும்,                                        15
ஊர் அகத்து ஏரும், ஒளி உடைப் பாணியும்
என்று இவை அனைத்தும் பிற பொருள் வைப்போடு
ஒன்றித் தோன்றும் தனிக்கோள நிலைமையும்;
ஒரு பரிசா நோக்கிக் கிடந்த
புகார்க் காண்டம் முற்றிற்று.                                                    20


வெண்பா

காலை அரும்பி மலரும் கதிரவனும்,
மாலை மதியமும் போல் வாழியரோ-வேலை
அகழால் அமைந்த அவனிக்கு மாலைப்
புகழால் அமைந்த புகார்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?