நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 9 December 2013

சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை


 சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை



முன்னுரை


        ஒருவன் உணவின்றிச் சில வேளைகள் வாழலாம்; ஆனால் உடையின்றி அரைக் கணமும் வாழ இயலாது. அரசரின் மானத்தையும், ஆண்டியின் மானத்தையும் காக்கக் கூடியது உடை. துறவிகளும் துறக்காத சிறப்புடையது உடை. தீ மூட்டி வேள்வி செய்யும் அந்தணரின் தொழிலைவிட, தீ மூட்டி உணவு சமைக்கும் சமையல் தொழிலைவிட உயர்ந்தது நெசவுத் தொழில் என்பதால்தான் வள்ளுவரும், கம்பரும் நெசவுத் தொழில் மேற்கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை.