நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 December 2019

தமிழ் இலக்கிய ஆய்வின் விரிந்த பரப்பும் எதிர்காலப் போக்கும்


தமிழ் இலக்கிய ஆய்வின் விரிந்த பரப்பும், எதிர்காலப் போக்கும்

      தமிழ் இலக்கிய உலகம் பரந்து பட்டது. தொல்காப்பியம் தொடங்கி இன்றைய நவீன இலக்கியங்கள் வரை அதன் வளமை வகைமை சொல்லில் அடங்காது. அதே சமயம் ஆய்வுகளும் பிற துறைகளை விட மிகுதியாக நிகழ்த்தப்படுகின்றன. ஆனால் இவ்வளவு விரிந்த பரப்பில் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்ற இலக்கியங்களே மிகக்குறைவு. பல்கலைக்கழகத் தன்னாட்சி தகுதி பெற்ற கல்லூரிகளின் பாடத்திட்டங்களும் இதற்கு ஓர் காரணம். நவீனப்படுத்தல் என்பது கட்டிடங்களுக்கு மட்டுமல்ல பாடத்திட்டங்களுக்கும் உரியது. பெரும்பாலும் முனைவர் பட்ட ஆய்வுகள் ஆய்வாளர்கள் தமக்கு முன்பே அறிமுகமான இலக்கியங்களிலிருந்தே தலைப்பைத் தேர்ந்தெடுக்கிறார்கள். எனவே, பாடத்திட்டங்கள் முனைவர் பட்ட ஆய்வுகளுக்கு அடித்தளமாக அமைவதால் பாடத்திட்டங்களிலேயே எதிர்கால நோக்குத் தேவைப்படுகிறது