நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 10 August 2015

சுயபுராணம்



சுயபுராணம்


விருது பட்டயத்துடன்...


குடும்ப உறவுகளுடன்.......

சிற்றிலக்கிய ஆய்வுகள் -1



சிற்றிலக்கிய ஆய்வுகள்
முன்னுரை
96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளதாகப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு மேலும் சிற்றிலக்கிய நூல்கள் உள்ளன. அப்பட்டியலையும் அவை தொடர்பாக வந்துள்ள ஆய்வுகளையும் இனி வர வேண்டிய ஆய்வுகளையும் குறித்து இக்கட்டுரை  ஆராய்கிறது.


1.சாதகம் 2. பிள்ளைக்கவி 3. பரணி 4. கலம்பகம் 5. அகப்பொருட்கோவை6. ஐந்திணைச்செய்யுள்      7. வருக்கக் கோவை 8. மும்மணிக்கோவை9. அங்கமாலை 10. அட்டமங்கலம் 11. அனுராகமாலை 12. இரட்டைமணிமாலை13. இணைமணி மாலை 14. நவமணிமாலை15. நான்மணிமாலை 16. நாமமாலை 17. பல்சந்தமாலை18. பன்மணிமாலை19. மணிமாலை20. புகழ்ச்சி மாலை21. பெரு மகிழ்ச்சிமாலை                        22. வருக்கமாலை23. மெய்க்கீர்த்திமாலை24. காப்புமாலை25. வேனின்மாலை26. வசந்தமாலை    27. தாரகைமாலை28. உற்பவமாலை29. தானைமாலை             30. மும்மணிமாலை 31. தண்டகமாலை      32. வீரவெட்சிமாலை33.வெற்றிக்கரந்தை மஞ்சரி34. போர்க்கெழுவஞ்சி35. வரலாற்று வஞ்சி    36. செருக்களவஞ்சி37. காஞ்சிமாலை38. நொச்சிமாலை39. உழிஞைமாலை40. தும்பைமாலை41. வாகைமாலை 42. ஆதோரணமஞ்சரி 43. எண்செய்யுள் 44. தொகைநிலைச் செய்யுள்
 45. இயலியலந்தாதி        46. பதிற்றந்தாதி 47. நூற்றந்தாதி48. உலா 49. உலாமடல்50. வளமடல் 51. ஒருபாவொருபஃது  52. இருபாவிருபஃது 53. ஆற்றுப்படை54. கண்படைநிலை 55. துயிலெடை நிலை56. பெயரின்னிசை    57. ஊரின்னிசை58. பெயர்நேரிசை 59. ஊர்நேரிசை 60. ஊர்வெண்பா 61. விளக்குநிலை 62. புறநிலை   63. கடைநிலை 64. கையறுநிலை 65. தசாங்கப்பத்து 66. தசாங்கத்தியல் 67. அரசன்விருத்தம் 68. நயனப்பத்து  69. பயோதரப் பத்து70. பாதாதிகேசம் 71. கேசாதிபாதம் 72. அலங்காரபஞ்சகம் 73. கைக்கிளை   74. மங்கலவெள்ளை75. தூது76. நாற்பது 77. குழமகன். 78. தாண்டகம் 79. பதிகம் 80. சதகம் 81. செவியறிவுறூஉ82. வாயுறைவாழ்த்து 83. புறநிலைவாழ்த்து84. பவனிக்காதல் 85. குறத்திப்பாட்டு     86. உழத்திப்பாட்டு87. ஊசல் 88. எழுகூற்றிருக்கை 89. கடிகைவெண்பா 90. சின்னப்பூ91. விருத்தவிலக்கணம்                      92. முதுகாஞ்சி 93. இயன்மொழி வாழ்த்து       94. பெருமங்கலம் 95. பெருங்காப்பியம் 96. சிறுகாப்பியம்

சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணத்தைப் பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப்பாட்டியல், பிரபந்தமரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம், சதுரகராதி, அபிதான சிந்தாமணி முதலியன இயம்புகின்றன என்று தமிழில் சிற்றிலக்கிய வரலாறு எனும் நூலை எழுதிய முனைவர் தா.ஈசுவரபிள்ளை குறிப்பிடுகிறார். சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை 160 என்று `இலக்கிய வகையும் வடிவம்என்கிற நூலில் ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.