நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 11 September 2014

டால்ஸ்டாயின் அன்னா கரினினா





டால்ஸ்டாயின் அன்னா கரினினா,அன்னா என்னும் உயர்குல பெண்ணின் ஆழ்ந்த தீவிரமான காதலை சித்தரிக்கும் கதை. எனினும், ரஷ்யாவின் செல்வச் சீமான்கள் நடத்திக் கொண்டிருந்த சோம்பேறித்தனமான ஆடம்பர உல்லாச வாழ்க்கையை, அவர்களது செயல்களை, எண்ணங்களை, பொழுதுபோக்குவெட்டிப்பேச்சுகளை, அவர்களது உள்ளத்தின் இயல்புகளை எல்லாம் உள்ளது உள்ளபடி கலைத் தன்மையோடு விவரிக்கும் நாவலாகவும் அமைந்துள்ளது. 

‘டால்ஸ்டாயின் அன்னா கரினினா வெறும் நாவல் மட்டும் அல்ல பெரிய காவியம். தன்னுள்ளே முத்துக்களை வைத்திருக்கும் மகா சமுத்திரம், மனித சமுதாயத்திற்கு அன்னா கரினினா ஒரு வரப்பிரசாதம்" எனப் படித்தவர்களால் பாராட்டப்படுகிற அன்னா  கரினினா நாவல், எல்லாஅம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு.