நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 28 March 2020

திருவாசக யாப்பமைதி

           திருவாசக யாப்பமைதி


                கவிஞர்கள் தன் உள்ளத்தெழும் உணர்வுகளை, வெளிப்படுத்தக்கூடிய மொழி வடிவங்களே இலக்கியங்களாகும். கவிஞர்கள் ஓர் அனுபவத்தை என்பது போது, அவ்வனுபவத்தில் ஆழ்ந்து தோய்கின்ற நிலையில் அவர்களது உணர்வுகள் ஊற்றெடுத்துப் பாட்டாக வெளிப்படுகிறது. அந்த உணர்வு சொல் வடிவம் பெறும்பொழுது அது யாப்பு  எனப் பெயர் பெறுகிறது. ‘‘காலத்திற்கு ஏற்ற கருத்துகளையும் சிந்தனைகளையும் கவிஞர்கள் ஆற்றல் மிக்க மொழிநடையில் வெளியிடுவதற்குக் கருவியாகப் பயன்படும் செய்யுள் வடிவங்களே யாப்பு எனப் பெயர் பெறும்’’ என்கிறார் அகத்தியயலங்கம் (1983-3) கருத்துக்களுக்கு ஏற்பவும் ணர்ச்சிகளுக்கு ஏற்பவும் கவிஞர்கள், பலவகையான யாப்புகளை இலக்கியத்தில் கையாண்டுள்ளனர்.

திருவாசக மொழியும், மொழிப் பயன்பாடும்



திருவாசக மொழியும், மொழிப் பயன்பாடும்


Why should you learn Foreign Language? | Asap German Language Class
                ஒரு மொழியில் அமைந்துள்ள சொற்கள் எண்ணற்றவை. அவற்றைக் கொண்டு சொல்லமைப்புகளையும், தொடர்களையும், வாக்கியங்களையும் உருவாக்கலாம். வாக்கியங்களையும் தொடர்களையும் உருவாக்கும்பொழுது மொழியிலுள்ள அனைத்துச் சொற்களையும் கையாள்வதில்லை. இடம் நோக்கி அதனதன் பயன் நோக்கி சொற்கள் அமைக்கப்படுகின்றன. கேட்பவரை மனதில் கொண்டும் அவருக்கு எளிதில் புரியவண்ணமும், நேரடிப் பொருள்தரும் வண்ணமும் சொற்களைத் தேர்வு செய்ய் அமைப்பதென்பது ஒரு கலையாகும்.
                ஒருவர்தம் உள்ளத்தில் எழும் கருத்துக்களை அடுத்தவர் மனதில் எளிதில் பதியவைப்பதும், சலனமடையச் செய்வதும் சொற்களின் துணகொண்டுதான். சொற்களைப் பபயன்படுத்தும் முறையில் ஒவ்வொரு கலைஞனும், ஆசிரியனும், பேச்சாளனும் வேறுபடுகிறான்.
                சொற்களைச் சரியான இடத்தில், சரியானப் பொருளைத் தரும் வகையில் பயன்படுத்துவதுடன், அச்சொல்லானது கேட்பவர் மனதில் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும், வகையிலும் சொற்களைப் பயன்படுத்துபவனுடைய படைப்பே அல்லது பேச்சே நிலைபேறடைகிறது எனலாம். இக்காரணம் பற்றியே கலைகளில் இலக்கியக்கலைசிறப்பானதாகப் போற்றப்படுகிறது. எனவே, சொற்பயன்பாடு இலக்கியப் படைப்பைச் செம்மையுறவும் முழுமையடையவும் செய்கிறது என்பது தெளிவாகிறது.