நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 11 September 2016

தமிழ்வலைப்பூக்களில் தரவுபெயர்வுதிறன் தேவைக்கான தமிழ்இணையச்சேவை



தமிழ்வலைப்பூக்களில் தரவுபெயர்வுதிறன் தேவைக்கான
தமிழ் இணையச்சேவை




முன்னுரை

இணைத்தின் மற்றொரு பயன் வலைப்பூக்கள் ஆகும். மின்னஞ்சல்., மின்குழு, இணையதரவு தளங்கள், இணைய இதழ்கள் வரிசையில் மற்றுமொரு மைல்கல் இணைய வலைப்பூக்கள் ஆகும். இது சில இணைய நிறுவனங்கள் இலவசமாக தம்மிடம் கணக்கு துவங்கியுள்ள பயனர்களுக்கு வழங்கும் இலவச சேவையாகும். இச்சேவையை முதன்முதலில் துவங்கிய நிறுவனம்எக்ஸான்யா’  .    ஆகும். 1996ம் ஆண்டில் இச்சேவையை இது தொடங்கியது. இது இணைய பயனர்களால் பெரிதும் பயன்படுத்தப்பட்டதால் கூகுள், வேர்ட்பிரஸ் போன்ற நிறுவனங்களும் இச்சேவையைத் தொடங்கின. தனிநபர் தன் கருத்தை இணையம் வழி பதிவிட இது சிறந்த தளமாகும். கட்டற்ற கருட்துச்சுதந்திரம், நேரம் கிடைக்கும்பொழுது பதிவிடும் வசதி, தம் கருத்துக்களை, படைப்புகளை, வாழ்க்கை அனுபவங்களை, பயண அனுபவங்களை, கலைகளை, புகைப்படங்களை வெளியிட வலைப்பூ மிகச் சிறந்த இடமாகும். இதைப்படிக்கும் பலரும் தம் கருத்துக்களை வெளியிடவும் வாய்ப்புள்ள பகுதியாகும். இணையத்தில் காலத்தேவைக்கேற்ப பல இணையச் சேவைகள் பெருகி வந்தாலும், பெருகிவரும் பயனீட்டாளர்களுக்கேற்ப மேலும் பல சேவைகள் தேவைப்படுகின்றன. வலைப்பூக்களின் பெருக்கம் தமிழ் இலக்கியத்திற்கும் பெரும்பங்காற்றி வருகிறது. பல செறிவுள்ள கருத்துக்களைக் கொண்ட ஆய்வுகள் தமிழ் இலக்கியம் சார்ந்து வெளிவருகின்றன. ஆனால் இவற்றிற்கான ஒருங்கிணைப்பு இல்லை. தரவு பெயர்வுத் திறன் என்னும் இணைய சேவையை வலைப்பூக்களில் பயன்படுத்தினால் இக்குறையை நீக்கி பல கருத்துச் செறிவுடைய கட்டுரைகளை  ஒருங்கிணைக்கமுடியும். இணையச்சேவைகளில் ஒன்றான தரவுபெயர்வுத் திறன் குறித்து ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கமாகும். தரவு கண்டறிதல் , தரவு பெயர்வு தரவு சேர்க்கை, தரவு முழுமை மற்றும் தரவு காப்பு ஆகிய நிலைகளில் தமிழ் வலைப் பூக்களைச்  சரியாக கோர்த்து தமிழ் மாலையாக மாற்ற இந்த ஆய்வுக்கட்டுரை ஒரு முன்னோடியாக இருக்கும்  

15th international internet conference in gandhigramam university, dindigul

15th international internet conference in 
gandhigramam university, dindugul
பேராசிரியர் முனைவர் பத்மநாபபிள்ளை (காந்தி கிராமகிராமிய பல்கலைகழகத் தலைவர்)மற்றும் முனைவர் மற்றும் பேராசிரியர் முனைவர் தி. நெடுஞ்செழியன் சான்றிதழ் வழங்கிய போது......


முனைவர் ஜ. பிரேமலதா - வலைப்பூக்களில் தரவுப் பெயர்வுத் திறன் தேவை பற்றி......


மலேசியா சாந்தினி இராமலிங்கத்துடன்....

திருச்சிராப்பள்ளி, தூய வளனார் கல்லூரித் தமிழ்த்துறைப் பேராசிரியருமான முனைவர் தி. நெடுஞ்செழியன் அவர்களது தலைமையில் நடைபெற்ற ‘தமிழ் வலைப்பூக்கள்” எனும் முதன்மைத் தலைப்பிலான அமர்வில்,

முனைவர் வ.இராஜரத்தினம் - மின் அகராதிகளில் பாட்டும் தொகையும்.

முனைவர் க. துரையரசன் - திரட்டிகள் இதற்கு மேலும்...

6. திரு வீ.கே. கார்த்திகேயன் - இணையத் தமிழும் தகுதிப்பாடுகளும்
முனைவர் இரா. குணசீலன் - வலைப்பதிவு நுட்பங்கள்.
முனைவர் தி.நெடுஞ்செழியன் - சதுரகராதி இலக்கமயமாக்கல்.