நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 27 March 2020

திருவாசகம் - மொழியமைப்பு

திருவாசகம் – மொழியமைப்பு


                திருவாசகம் தோன்றிய காலத்தொட்டு அதனைப் போற்றாத சான்றோர் பெருமக்கள் இல்லை. இராமலிங்க அடிகள், சிவப்பிரகாச சுவாமிகள், குமரகுருபரர், சிவஞான சுவாமிகள், தாயுமானவர், கல்லாடர் முதலிய எண்ணிறந்த சான்றோர்கள் திருவாசகத்தினைத் தன் உயிரினும் மேலான விழுமிய நூலாக வழிவழியே போற்றி வந்திருக்கின்றனர். அவ்வாறு இவர்கள் வியந்து பாராட்டுவது.
                                ‘‘மாணிக்க வாசகன் புகன்ற மதுரவாசகம்’’     (1984-221)
                                ‘‘திருவாசகமிங் (கு) ஒருகால் ஓதில்
                                  கருங்கல் மனமும் கரைந்துருக’’     (1984-70)
என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாசரும்,
                                ‘‘வான்கலந்த மாணிக்க வாசகரின் வாசகத்தை
                                  நான்கலந்த பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
                                  தேன்கலந்த பால்கலந்த செழுங்களித் தீஞ்சுவை கலந்த
                                  ஊன்கலந்த உவட்டாமல் இனிப்பதுவே’’ (1970-246)
                என்று வள்ளாரும் திருவாசகத்தின் பெருமையைப் போற்றிப் பாரட்டுகின்றார். கற்றாரும், கல்லாரும் வியந்து போற்றும் திருவாசகத்தின் மொழியடையை அறிய வேண்டியது

மணிவாசகரின் பக்திநெறி

மணிவாசகரின் பக்திநெறி

பக்தி சூஃபி இயக்கங்கள்-1 | ExamsDaily Tamil

ஆதி மனிதனின் அறிவு மலர்ந்த நிலையில், அவன் தன்னையும் விஞ்சிய ஓர் ஆற்றல் உலகில் இருப்பதாக உணர்ந்தான். இயற்கையின் எழுச்சி மிக்கப் படைப்புகளிலும், நிகழ்ச்சிகளிலும் ஏதோ ஓர் ஆற்றல் இருப்பதாக அறிந்து தெளிந்தான். தன் அறிவிற்கு அப்பாற்பட்டு விளக்கும் அந்த ஆற்றலை, தன் அனுபவங்களுக்கேற்ப பலரும் பலவிதமாக உரைத்தனர். நிலையற்ற இவ்வுலகில் நிலைபெறுவதற்கு அந்த ஆற்றல் உதவும் என்று கூறி, அதைப் பெற சில வழிமுறைகளையும் கூறினர். அந்த ஆற்றலை இறைஎன்று போற்றி, இறையை நினைத்து வழிபட்டால் பேரின்பம் கிட்டுமென்றும், நிலையான வாழ்வு வாழலாம் என்றம் தங்களுக்குத் தோன்றியதைக் கூறினர்.

திருவாசகம் ஒப்புயர்வற்ற ஞானப்பனுவல்


   திருவாசகம் ஒப்புயர்வற்ற ஞானப்பனுவல்



திருவாசகம் (Thiruvasagam) | Arulakam (அருளகம்) 

                தமிழ் மொழிக்கண் உள்ள பெருஞ்சிறப்புப் பெற்ற நூல்களுள் திருவாசகமும் ஒன்று. இதனை இயற்றியவர் மணிவாசகராவார். குருவாக வந்த இறைவனை நேரில் கண்டு, அந்த இறைக்காட்சியின் இன்பத்தில் தினைத்து, தித்திக்க அனுபவித்துப் பாடிய நூலே திருவாசகம். நிறைந்த அன்பிலே ஊறி வெளிப்பட்ட வாசங்களை உடையதாலாலே இந்நூல் கருங்கல் மனதையும் கணிவிக்கும் உருக்கமுடையதாகத் திகழ்கிறது. அளப்பரிய பொருளும், எளிமையும், இனிமையும் மிக்கது இந்நூல். சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் எட்டாம் திருமுறையாக வைத்து எண்ணப்படும் ஏற்றமுடைதாகும். இலக்கியம், மொழி, சமயம், ஞானம் முதலிய பலதுறைகளிலும் பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகவும் சைவ சமயப் பெருமக்கள் அனைவராலும் போற்றப்படும் சிறப்புடையதாகவும் திகழ்கிறது இந்நூல். பக்தி இலக்கியங்களும் சிறந்த விளங்கும் திருவாசகத்தின் தனிச்சிறப்பினையும், மணிவாசகரின் பக்தியினையும் இவ்வியல் விளக்குகிறது.

கொரானா


நமது பள்ளிக்கூடம் - Home | Facebook 


புதிதாக 14 ஆயிரம் பேருக்கு கொரானா ... 

இலக்கற்ற இலக்கியம்
இதமற்ற அறிவியல்
மனிதமற்ற அரசியல்
இரக்கமற்ற தலைமை
கேள்வியற்ற மக்கள்
அறமற்ற மனம்
நோய் செய்யும் உலகுக்கே.