நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 29 January 2016

சுயபுராணம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வீட்டில்.......................

இசைக் கச்சேரி...................தேஜஸ்வினும்  சர்வேஸ்வரகுமாரும்.....................

இனிய சொந்தங்கள்........................

Wednesday 13 January 2016

திருமங்கையாழ்வார் - பன்முகநோக்கு


திருமங்கையாழ்வார் - பன்முகநோக்கு


முன்னுரை


Image result for திருமங்கையாழ்வார் 
ஆழ்வார்களில் மிக அதிகமான பாமாலைகளை வகை வகையாகத் திருமாலுக்குப் புனைந்தவர். ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்தவர். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஓராயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இந்தியா முழுமையுமுள்ள 108 திருமால் திவ்ய தேசங்களில் 86 திருமால் திவ்ய தேசங்களைத் தரிசித்து அத்தலங்களின் பெருமையுணர்த்தும் வகையில் அவற்றின் மீது பாடல்களைப் பாடியவர். தம் துணைவியார் குமுதவல்லியுடன் எழுந்தருளியுள்ள பெருமைக்குரியவர். திருமாலின் அவதாரங்களை அனைத்துப் பாசுரங்களிலும் இடம்பெறுமாறு பாடியவர். இயற்கைச் சூழலை வர்ணிப்பதில் வல்லவர் எனப் பல பெருமைக்குரியவர் திருமங்கையாழ்வார். ஆசுகவி, மதுரகவி,சித்திரக்கவி, வித்தாரக்கவி என்னும் நான்கு வகையான கவி புனைவதில் வல்லவர். எனவேநாலுகவிப் பெருமாள்எனப்பட்டவர். பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தியிலக்கியத்தில் பயன்படுத்திக் கொண்ட இவருடைய படைப்புகளின் சிறப்புக் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

இவருடைய படைப்புகள்

1.
பெரிய திருமொழி 2. திருவெழுக்கூற்றிருக்கை 3. திருக் குறுந்தாண்டகம்
4.
திரு நெடுந்தாண்டகம் 5. பெரிய திருமடல் 6. சிறிய திருமடல் போன்றவையாகும்.

Saturday 2 January 2016

பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும் – மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......



பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும்
மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......

முன்னுரை


கிறித்துப் பிறப்பதற்கு முன் தோன்றிய உலகத் தத்துவ ஞானிகளில் மிக உயர்ந்த இடத்தை வகிப்பவர் புத்தர். மனிதர்க்கெட்டாத எந்தத் தத்துவத்தையும் புத்தர் சொல்லவில்லை. வாழ்வியலை நெறிப்படுத்தலும் மக்கள் மனதைப் பண்படுத்துதலுமே அவரின் நோக்கங்கள். புத்தருக்கு சமகாலத்திலிருந்து, கிட்டத்தட்ட கி.பி.11ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கொங்குமண்ணில் பௌத்தம் சிறப்புற்றிருந்திருக்கிறது. புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. பௌத்த, சமணச் சமயங்கள் 8ம் நூற்றாண்டுக்குப் பின்னர்ப் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கபட்டுவிட்டன. ஆனால் வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் சிதைக்கப்பட்டது போக எஞ்சியுள்ளவை அவை புத்தர்சிலைகள் என்று தெரியாமலே இந்து மதக்கடவுளர்களின் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றன.

தமிழ்ப் பண்பாட்டு நோக்கில் காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும்.



தமிழ்ப் பண்பாட்டு நோக்கில்
காவிய கம்பனும் காப்பிய இளங்கோவும்.

 



Image result for கம்பன் இளங்கோ 

உலகப் பொதுமறையான திருக்குறள், மனிதப் பண்பாட்டின் இலக்கணமாகத் திகழ்கிறது. அந்த இலக்கணத்துக்கு ஏற்ப அமைந்திருப்பதே இளங்கோவடிகளின் சிலப்பதிகாரமும் கம்பரின் இராமாயணமும். வள்ளுவர் வகுத்த லட்சியக் கனவின் இலக்கிய வடிவமே இவ்விருநூல்களும்.  இந்த காப்பியங்கள் தமிழர்கள் தங்களின் வாழ்வியல், பண்பாடு குறித்து அறிந்து கொள்ள ஆதாரமாக விளங்குகின்றன.

மன்னர்களின் இடையறாத பூசல்கள், சமயங்களுக்கு இடையிலான மோதல்கள் நிகழ்ந்த காலத்தில், தமிழ்ச் சமுதாயத்திலும், இந்தியச் சமுதாயத்திலும் ஒற்றுமை, ஒருமைப்பாடு தேவை என்பதை வலியுறுத்தவே இவை எழுதப்பட்டன.

பிற்காலத்தில் சமயப் பூசல்கள் அதிகரிக்கக் கூடும் என்ற தொலைநோக்குப் பார்வையுடன், அவற்றுக்குத் தீர்வு காணும் விதமாக ஒரு தமிழ்த் தேசிய தெய்வத்தை உருவாக்க வேண்டும் என்ற நோக்குடன் சிலப்பதிகாரத்தை இளங்கோவடிகளும், இந்தியத் தேசியத் தெய்வத்தை உருவாக்கவேண்டும் என்ற நோக்குடன் இராமவதாரத்தை கம்பரும் இயற்றியுள்ளனர்.