நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 10 August 2015

சிற்றிலக்கிய ஆய்வுகள் -1



சிற்றிலக்கிய ஆய்வுகள்
முன்னுரை
96 வகை சிற்றிலக்கியங்கள் உள்ளதாகப் பாட்டியல் நூல்கள் கூறுகின்றன. ஆனால், இந்த எண்ணிக்கைக்கு மேலும் சிற்றிலக்கிய நூல்கள் உள்ளன. அப்பட்டியலையும் அவை தொடர்பாக வந்துள்ள ஆய்வுகளையும் இனி வர வேண்டிய ஆய்வுகளையும் குறித்து இக்கட்டுரை  ஆராய்கிறது.


1.சாதகம் 2. பிள்ளைக்கவி 3. பரணி 4. கலம்பகம் 5. அகப்பொருட்கோவை6. ஐந்திணைச்செய்யுள்      7. வருக்கக் கோவை 8. மும்மணிக்கோவை9. அங்கமாலை 10. அட்டமங்கலம் 11. அனுராகமாலை 12. இரட்டைமணிமாலை13. இணைமணி மாலை 14. நவமணிமாலை15. நான்மணிமாலை 16. நாமமாலை 17. பல்சந்தமாலை18. பன்மணிமாலை19. மணிமாலை20. புகழ்ச்சி மாலை21. பெரு மகிழ்ச்சிமாலை                        22. வருக்கமாலை23. மெய்க்கீர்த்திமாலை24. காப்புமாலை25. வேனின்மாலை26. வசந்தமாலை    27. தாரகைமாலை28. உற்பவமாலை29. தானைமாலை             30. மும்மணிமாலை 31. தண்டகமாலை      32. வீரவெட்சிமாலை33.வெற்றிக்கரந்தை மஞ்சரி34. போர்க்கெழுவஞ்சி35. வரலாற்று வஞ்சி    36. செருக்களவஞ்சி37. காஞ்சிமாலை38. நொச்சிமாலை39. உழிஞைமாலை40. தும்பைமாலை41. வாகைமாலை 42. ஆதோரணமஞ்சரி 43. எண்செய்யுள் 44. தொகைநிலைச் செய்யுள்
 45. இயலியலந்தாதி        46. பதிற்றந்தாதி 47. நூற்றந்தாதி48. உலா 49. உலாமடல்50. வளமடல் 51. ஒருபாவொருபஃது  52. இருபாவிருபஃது 53. ஆற்றுப்படை54. கண்படைநிலை 55. துயிலெடை நிலை56. பெயரின்னிசை    57. ஊரின்னிசை58. பெயர்நேரிசை 59. ஊர்நேரிசை 60. ஊர்வெண்பா 61. விளக்குநிலை 62. புறநிலை   63. கடைநிலை 64. கையறுநிலை 65. தசாங்கப்பத்து 66. தசாங்கத்தியல் 67. அரசன்விருத்தம் 68. நயனப்பத்து  69. பயோதரப் பத்து70. பாதாதிகேசம் 71. கேசாதிபாதம் 72. அலங்காரபஞ்சகம் 73. கைக்கிளை   74. மங்கலவெள்ளை75. தூது76. நாற்பது 77. குழமகன். 78. தாண்டகம் 79. பதிகம் 80. சதகம் 81. செவியறிவுறூஉ82. வாயுறைவாழ்த்து 83. புறநிலைவாழ்த்து84. பவனிக்காதல் 85. குறத்திப்பாட்டு     86. உழத்திப்பாட்டு87. ஊசல் 88. எழுகூற்றிருக்கை 89. கடிகைவெண்பா 90. சின்னப்பூ91. விருத்தவிலக்கணம்                      92. முதுகாஞ்சி 93. இயன்மொழி வாழ்த்து       94. பெருமங்கலம் 95. பெருங்காப்பியம் 96. சிறுகாப்பியம்

சிற்றிலக்கிய வகைகளின் இலக்கணத்தைப் பன்னிருபாட்டியல், வெண்பாப் பாட்டியல், நவநீதப்பாட்டியல், பிரபந்தமரபியல், சிதம்பரப் பாட்டியல், இலக்கண விளக்கம், தொன்னூல் விளக்கம், முத்துவீரியம், பிரபந்த தீபிகை, சுவாமிநாதம், சதுரகராதி, அபிதான சிந்தாமணி முதலியன இயம்புகின்றன என்று தமிழில் சிற்றிலக்கிய வரலாறு எனும் நூலை எழுதிய முனைவர் தா.ஈசுவரபிள்ளை குறிப்பிடுகிறார். சிற்றிலக்கியங்களின் எண்ணிக்கை 160 என்று `இலக்கிய வகையும் வடிவம்என்கிற நூலில் ச.வே.சுப்பிரமணியன் குறிப்பிடுகிறார்.




சிற்றிலக்கியங்களில் பொதுத்தலைப்புகளில் வெளிவந்துள்ள ஆய்வுகள்


1.சங்க இலக்கியத்தில் சிற்றிலக்கியத்தின் கூறுகள் - தமிழ்ப் பல்கலைக்கழகம் தஞ்சாவூர் – இரா. உமாமகேசுவரிஇவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு பகுதிகளைக் கொண்டது
  *‘சங்க இலக்கியத்தின் சிறப்பியல்புகள்
  *.சிற்றிலக்கியம்என்ற தலைப்பில் இலக்கியம் என்பதன் விளக்கம்
 *.பொருண்மை அடிப்படையிலான சிற்றிலக்கிய வகைகளின் கூறுகள்
 *.உறுப்புகளைப் புகழ்தல் அடிப்படையிலான சிற்றிலக்கிய வகைகளின் கூறுகள்
 *.பாடல் எண்ணிக்கை மற்றும் யாப்பு அடிப்படையிலான சிற்றிலக்கிய வகைகளின் கூறுகள்
 *.பொருண்மை + பாடல் எண்ணிக்கையினை அடிப்படையிலமையும் சிற்றிலக்கிய வகைகளின் கூறுகள்   
 *முடிவுரை


2.சிற்றிலக்கியங்களில் பெண்ணடிமைத்தனமும் சமத்துவச் சிந்தனைகளும் அன்னை தெரசா மகளிர் பல்கலைக்கழகம் கொடைக்கானல் ஆய்வாளர் பெயர் இரா. மாலதி

 *ஆய்வு அறிமுகம்
*. சிற்றிலக்கியங்களின் வழி ஆணாதிக்கமும். பெண்ணின் இழிநிலையும்
*. சிற்றிலக்கியங்களில் பெண் வருணனைகள்
*. பெண்களின் உளச் சிதறலின் விளைவுகள்
*. சிற்றிலக்கியங்களில் உரையாடல் வழி சமத்துவம்
*. நிறைவுரை

3..இஸ்லாமியத் தமிழ்ச் சிற்றிலக்கியங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம் அரசர் கல்லூரி திருவையாறு ஆய்வாளர் பெயர் பீ. ரசுமத் பிபி
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஏழு இயல்களைக் கொண்டமைகிறது.
 *தமிழ் சிற்றிலக்கிய வளத்தில் இஸ்லாமியர்களின் பங்கு
*. புதுவைப் படைப்புகள்
*. பாடு பொருள்
*. கற்பனை
*. உணர்ச்சி
*. வடிவம்
7. ஒப்பீடு

4.சிற்றிலக்கியங்களில் நாட்டுப்புறக் கூறுகள் செ.காளிமுத்து பாரதிதாசன் பல்கலைக்கழகம்
இவ்வாய்வேடு முன்னுரை நீங்கலாக ஏழு இயல்களைக் கொண்டுள்ளது
*.சிற்றலக்கியங்கள் - ஓர் அறிமுகம்
* நாட்டுப்புறக் கூறுகள்
* சிற்றலக்கியங்களில் பழமொழி விடுகதைகளின் செல்வாக்கு
* நாட்டுப்புற பழக்க வழக்கங்கள்
* நாட்டுப்புற நம்பிக்கைகள்
 * நாட்டுப்புறத் தொழில்கள்
7 நிறையுரை

5.தமிழ்ப் பாட்டியல் இலக்கணமும் சிற்றலக்கியங்களும் (சிறப்பு நோக்கு பொருத்தங்கள்) இரா.மங்கள நாயகி பாரதிதாசன் பல்கலைக்கழகம்
இவ்வாய்வு முன்னுரை முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது
*.பாட்டியல் இலக்கணமும் பொருத்தங்களும்
 * சிற்றிலக்கிய ஆசிரியர்களும் நூல்களும்
* மங்கலப் பொருத்தம்
* எழுத்துப் பொருத்தம்
* கதி வருணப் பொருத்தங்கள்

6.திருமுறைகளில் தொன்மங்கள்
*தொன்மம் தோற்றமும் வளர்ச்சியும்
 *. பழந்தமிழ் இலக்கியங்களில் தொன்மங்கள்
*. தொன்ம வகைப்பாடுகள்
 *. இறைத் தத்துவங்களும் தொன்மங்களும்
 *. சமுதாய வாழ்வும் தொன்மங்களும்
முடிவுரை

7.பாட்டியல் நூல்களால் புலனாகும் சமூக அமைப்பு பி.எச்.டி. (எம்ஃபில் அழகப்பா)கு.மகுடீஸ்வரன்-198*

*
பாட்டியல் எழுந்த சூழல்
*.
பாட்டியல் காலச் சாதியமைப்பு முறை
*.
பாட்டியல் கா ட்டும் தெய்வங்கள்
*.
பாட்டியல் காட்டும் சமூக அமைப்பில் பெண்கள் நிலை
*.
இலக்கணமும் இசையும்

 பாட்டியல் காட்டும் பழக்கவழக்கங்களும் நம்பிக்கைகளும்
பாரதிதாசன் பல்கலைக்கழக பி.எச்.டி. ஆய்வேடுகள்

8.. திவ்ய பிரபந்தத்தில் தொன்மைக் கூறுகள் பி.எச்.டி. (பாரதிதாசன்)தி.அரங்கநாதன் -1987
நெறி: பொன். சௌரி ராஜன்
*
தொன்மம்
*.
தொன்மம் வளர்ந்த வரலாறு
*.
அவதாரங்கள்
*.
இராமன் கண்ணன் அவதாரங்கள்
*.
புராணத் தொன்மங்கள்
*.
ஆழ்வார்கள் பாடியுள்ள திறம்
*.
சமயநோக்கு தத்துவநோக்கு

9. அகப்பொருள் நோக்கில் ஆழ்வார் பாடல்கள் பி.எச்.டி. (பாரதிதாசன்)
கு. கண்ணன் -199*
நெறி: சொ.சற்குணம்
*
அகப்பொருள் விளக்கம்
*.
பக்திப்பாசுரங்களுள் அகப்பொருள் அமைந்ததற்கு காரணமும் பாசுரங்களின் அகப்பொருள் நெறியும்
*.
நாயகநாயகி பாவம்
*.
அகப்பொருள் பாசுரங்களில் தத்துவக் கருத்துக்கள்

10.கிறித்தவச் சிற்றிலக்கியங்களில் மரியன்னை பெறும் இடம் பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆ. மேரி இமாகுலேட்
இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஆறு இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளன. *கிறித்தவச் சிற்றிலக்கியங்களின் தோற்றமும் வளர்ச்சியும்
*. மரியன்னையின் வரலாறு
*. மரியன்னையைப் பாட்டுடைத் தலைவியாகக் கொண்ட சிற்றிலக்கியங்களின் அறிமுகம்.
 *. கிறித்தவச் சிற்றிலக்கியப் புலவர்கள் நோக்கில் மரியன்னை
 *. கிறித்தவச் சிற்றிலக்கியங்கள் உணர்த்தும் மரியன்னையின் பெருமைகள்
*. கிறித்தவச் சிற்றிலக்கிய ஆசிரியர்களின் புலமைச்சிறப்பு


தனிப்பட்ட சிற்றிலக்கியங்களில் இதுவரை வெளிவந்துள்ள ஆய்வுகள்

மடல்
மடல் இலக்கியம் அகப்பொருள் சார்ந்த சிற்றிலக்கிய வகை ஆகும். இது காதல் குறித்த ஓர் இலக்கியம். இந்த இலக்கிய வகைக்கு வேறு பெயர்களும் உள்ளன. 1) வள மடல் 2) இன்ப மடல்
கலித்தொகை என்ற நூலில் மடலூர்தல் பற்றிய செய்தி இடம் பெறுகிறது (பாடல்-139). தமிழ்மொழியில் முதன் முதலில் தோன்றிய மடல் இலக்கியங்கள் திருமங்கையாழ்வார் பாடியவையே ஆகும். அவை சிறிய திருமடல், பெரிய திருமடல்.  பிற மடல்கள்...

·         சித்திர மடல் -காளமேகப் புலவர்;

இதுவரை வெளிவந்துள்ள மடல் இலக்கிய ஆய்வுகள்

1.தமிழ் இலக்கியத்தில் மடல் -பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஜ. ஜான்சிராணி *007
இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது.
*மடல் இலக்கியத் தோற்றம் - வளர்ச்சி வகைகள்
 *. மடல் நூல்களும் மடல் உறுப்புகளும்
*. பக்தி மடல்களில் தலைவன் – தலைவி
 *. அகத்துறை மடல்களில் தலைவன் – தலைவி
 *. மடல் இலக்கியக் கூறுகள்
முடிவுரை

இனிவரும் காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்படும் சில தலைப்புகள்

·         பக்தி,காதல் நோக்கில் மடல் இலக்கியங்கள்
·         மடல் சமூகத்தின் மீது தலைவன் திணிக்கும் கருத்தியல் வன்முறை
·         மடல் பெண்கள் மீது திணிக்கப்பட்ட கருத்தியல் வன்முறை
·         மடலேறுதலில் தனிமனித வன்முறை
·         மடல் வழி சமூக மக்களின் வாழ்வியல் பிரதிபலிப்பு
·         மடல் உறுப்புகள்









கோவை
      தொல்காப்பியத்திலும் சங்க இலக்கியங்களிலும் மிகுந்து கிடைக்கும் அகப்பொருள் கருத்துக்களை இடைக்காலங்களில் பரப்பத் தமிழ்ப்புலவர்கள் மேற்கொண்ட முயற்சியின் விளைவே கோவையிலக்கியமாகும். தொல்காப்பியக் கருத்தும் சங்கத் தொகைநூல் செய்திகளும் கோவை நூல்களில் மறுபிறவி எடுத்துள்ளன.                   
    கோவை இலக்கியத்திற்குப் பாட்டுடைத் தலைவன் கிளவித் தலைவன் என இரு தலைவர்கள் உளர். இறைவனைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது திருக்கோவை.   வள்ளலைப் பாட்டுடைத் தலைவனாகக் கொண்டது தஞ்சைவாணன் கோவை. பாட்டுடைத் தலைவன் இல்லாத கோவை அம்பிகாபதிக்கோவை.
கோவை நூல்கள்
ஒரு துறைக் கோவை, பல துறைக்கோவை என இரு வகைக் கோவைகள் உள.
அமிர்த கவிராயர் நாணிக்கண் புதைத்தல்என்ற ஒரு துறைக்கு மட்டுமே 400  பாடல்கள் பாடியுள்ளார்.   தஞ்சைவாணன் கோவை பல துறைகளையுடையது. மாணிக்கவாசகரின் திருக்கோவையார் காலத்தால் முந்தியது.
ஒட்டக்கூத்தர் - குலோத்துங்கன் கோவை
  பாண்டிக்கோவை,     திருவெங்கைக்கோவை, கோடீச்சுரக்கோவை,     திருவாரூர்க்கோவை
பதினெட்டாம் நூற்றாண்டில் தமிழில் தோன்றிய கோவையிலக்கியங்களில் ஒன்று ஆனந்தரங்கன் கோவை- திருவாரூரைச் சேர்ந்த தியாகராய தேசிகர்
மற்றொன்று சோழீசுவரர் மல்லைக்கோவை.சேலம் மாவட்டத்தில் மல்லசமுத்திரத்தில் கோயில் கொண்டுள்ள ஈசனின் மீது பாடப்பட்ட கோவை நூல் இது.
 மும்மணிக்கோவைகள்
ஸ்ரீகுமர குருபரர் சுவாமிகள் தம் குருநாதர் மாசிலாமணி தேசிகர் மீது பாடிய 34 பாடல்களில் பண்டார மும்மணிக் கோவை என்பதும் ஒன்று.
·         மூத்த பிள்ளையார் திரு மும்மணிக் கோவை - இயற்றியவர் அதிராவடிகள்
·         திருக்கழுமல மும்மணிக்கோவை - திருவெண்காட்டு அடிகள்
·         திருவாரூர் மும்மணிக்கோவை - சேரமான் பெருமாள் நாயனார்.
·         திருக்கழுமல மும்மணிக்கோவை, திருவிடைமருதூர் மும்மணிக்கோவை,-பட்டினத்துப் பிள்ளை
·         திருவலஞ்சுழி மும்மணிக்கோவை-நக்கீர தேவ நாயனார்.
·         திருவொற்றியூர் மும்மணிக் கோவை- மறைமலை அடிகள்
·         ஆளுடைய பிள்ளையார் திருமும்மணிக் கோவை- நம்பியாண்டார் நம்பி

இதுவரை வெளிவந்துள்ள கோவை இலக்கிய ஆய்வுகள்
1.ஒருதுறைக் கோவை நூற்கள் (எம்ஃபில் அழகப்பா) செ.ஜெயராணி-1987
*
ஒருதுறைக் கோவை நூற்களின் தோற்றமும் வளர்ச்சியும்
*.
கோவை நூற்களின் அமைப்பு
*.
சொல்லும் பொருளும்
*.
கற்பனைகளின் ஒப்பீடு
*.
கோவையில் காணும் புறப்பொருட் செய்திகள்

2..திருக்கோவையாரும் இறையனார் களவியலும் ஒப்பீடு (எம்ஃபில் அழகப்பா) அ.மீனாட்சி-
*
மாணிக்க வாசகரும் திருக்கோவையாரும்
*.
திருக்கோவை கட்டமைப்பு
*.
திருக்கோவையாரும் தொல்காப்பியமும்
*.
திருக்கோவையாரும் இறையனார் களவியலும்
*.
இக்கால இலக்கியங்களில் கோவைத்துறைகளின் தாக்கம்

3.அகப்பொருள் நோக்கில் ஆழ்வார் பாடல்கள்(எம்ஃபில் அழகப்பா) கு. கண்ணன் -
*
அகப்பொருள் விளக்கம்
*.
பக்திப்பாசுரங்களுள் அகப்பொருள் அமைந்ததற்கு காரணமும் பாசுரங்களின் அகப்பொருள் நெறியும்
*.
நாயகநாயகி பாவம்
*.
அகப்பொருள் பாசுரங்களில் தத்துவக் கருத்துக்கள்

4.சோழீசுவரர் மல்லைக்கோவை து.பிரபா அரசுகலைக் கல்லூரி,சேலம்-7

5. கல்லாடத்தில் திருச்சிற்றம்பலக் கோவையின் தாக்கம் இரா.கார்த்திகேயன் -
அரசர் கல்லூரி, திருவையாறு, தஞ்சாவூர் மாவட்டம்
1. திருச்சிற்றம்பலக் கோவையின் உருவமும் உள்ளடக்கமும்
2. கல்லாடத்தின் அமைப்பும் சிறப்பும்
3. கல்லாடத்தில் திருச்சிற்றம்பலக் கோவையின் தாக்கம்
4. தொன்மமும் புராணச் செய்திகளும்
5. நுண்கலைச் செய்திகள் மற்றும் சொல்லாட்சியும் தொடராட்சியும்

6.தமிழில் கோவை இலக்கியம் - வகைத் திறனாய்வு வே. சிவகுமார் காந்திகிராமம் பல்கலைக்கழகம், திண்டுக்கல்
முன்னுரை
*இலக்கிய வகைத் திறனாய்வு ஒரு பொது அறிமுகம்
 *. கோவை இலக்கிய வகை வரையறையும் இலக்கணமும்
*. கோவை வகைக்கான தோற்ற மூலங்கள்
*. கோவை வகை முன் வளர்நிலை
 *. கோவை இலக்கியத்தின் கட்டமைப்பு
 *. கோவை வகை பின் வளர்நிலை
7. முடிவுரை
 இவற்றிலிருந்து கோவை இலக்கிய நூல்களில் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்படவில்லை என்பது புலனாகிறது.


அந்தாதி

அந்தாதி என்பது அந்தம், ஆதி ஆகிய இரு சொற்களால் ஆன வடமொழித் தொடராகும். அந்தம் என்பது முடிவு என்றும் ஆதி என்பது முதல் என்றும் பொருள்படும். அந்தமே ஆதியாக - முடிவையே முதலாகப் பெற்று அமைவது அந்தாதியாகும்.  பதிற்றுப்பத்தில் நான்காம் பத்தும், ஐங்குறுநூற்றில் பதினெட்டாம் பத்தும் அந்தாதித் தொடையில் அமைந்தவை. தேவாரம்,   திருவாசகம்,    திவ்யப் பிரபந்தம் ஆகியவற்றிலும் அந்தாதிமுறை அமைந்துள்ளது. அந்தாதி நூல்கள் ஏராளமாய் உள்ளன. எனினும் மேற்கொள்ளப்பட்ட ஆய்வுகள் மிகமிகக் குறைவு. இனி வரும் மாணவர்களுக்கு அந்தாதி இலக்கியங்களில் ஆய்வு மேற்கொள்ளலாம்.

·         அற்புதத் திருவந்தாதி - காரைக்கால் அம்மை
·         திருக்கருவைப் பதிற்றுப்பத்து அந்தாதி - அதிவீரராம பாண்டியர்

·         திருச்செந்தில் நிரோட்டக யமக அந்தாதி- துறைமங்கலம் சிவப்பிரகாச சுவாமிகள்.

·         சடகோபர் அந்தாதி, சரஸ்வதி அந்தாதி- கம்பர்
·         முதல் திருவந்தாதி, இரண்டாந் திருவந்தாதி, மூன்றாந்திருவந்தாதி-மூன்றுமுதலாழ்வார்கள்

·         திருவரங்கத்து அந்தாதி -மணவாள தாசர்
·         கந்தர் அந்தாதி- அருணகிரிநாதர்
·         திருவந்தாதி - திருமழிசையாழ்வார்
·         திருவருணை அந்தாதி -எல்லப்ப நாவலர்
·         பொன்வண்ணத்தந்தாதி -சேரமான் பெருமாள்
·         திருத்தொண்டர் திருவந்தாதி - நம்பியாண்டார் நம்பிகள்
·           சடகோபரந்தாதி -கம்பர்  
·         கயிலைபாதி காளத்திபாதி அந்தாதி- நக்கீரர்,
·         இராமாநுச நூற்றந்தாதி - திருவரங்கத்தமுதனார்
·         திருவாய்மொழி நூற்றந்தாதி
·         அருணகிரி வெண்பா அந்தாதி குகை நமச்சிவாயர்.
·         கோணமலை அந்தாதி - புலவர் சு. ஆறுமுகம்
·         அபிராமி அந்தாதி - அபிராமி பட்டர்


·         மீனாட்சி சுந்தரம்பிள்ளை எட்டு அந்தாதிகள் பாடியுள்ளார்.


இதுவரை வெளிவந்துள்ள அந்தாதி இலக்கிய ஆய்வுகள்
.1.திருவேங்கடத்தந்தாதி-அழகரந்தாதி ஒப்பாய்வு (எம்ஃபில் அழகப்பா)அ.ஆனந்தராஜ்-1988

*
முன்னுரை
*.
பிள்ளைப் பொருமாள் ஐயங்கார் வரலாறு
*.
அந்தாதியின் தோற்றமும் வளர்ச்சியும் திருவேங்கடத்தந்தாதி அழகரந்தாதி பெறுமிடம்
*.
திருவேங்கடம் அழகர்சாமி அன்றும் இன்றும்
*.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் காட்டும் வைணவ சமயக் கருத்துக்கள்
*.
பிள்ளைப் பெருமாள் ஐயங்கார் வழி சிற்றிலக்கியக் கொள்கைகள்

2.இராமாநுச நூற்றந்தாதித்திறன் ஓர் ஆய்வு(எம்ஃபில் அழகப்பா) ச.மங்களம்-199*
 அந்தாதியின் தோற்றமும் வளர்ச்சியும்
*.
இராமாநுசர் வாழ்வியல்
*.
திருவரங்கத்தமுதனார்
*.
அந்தாதியும் ஆழ்வார்களும்
*.
இராமாநுசரும் அமுதனாரும்
*.
இலக்கியக் கொள்கை

3.சடகோபரந்தாதித் திறன்(எம்ஃபில் மு.சண்முகசுந்தரம்-1998

*
நூலாசான் வரலாற்றாய்வு
*.
சடகோபர் வாழ்வும் பணியும்
*.
திருவாய்மொழிச் சிறப்பு
*.
அணியின் அமைப்பும் அழகும்
*.
அகப்பொருளின் தன்மையும் சீர்மையும்

4.கயிலைபாதி காளத்தி பாதி அந்தாதியில் சைவசித்தாந்தக் கருத்துக்கள்(அழகப்பா)சு.வளர்மதி-
முன்னுரை
*
நக்கீர தேவ நாயனாரின் வாழ்வும் சமயப்பணியும்
*.
இறைக்கோட்பாடு
*.
உயிர்க் கோட்பாடு
*.
பாசக் கோட்பாடு
*.
வழிபாட்டுக் கோட்பாடு
முடிவுரை

இனிவரும் காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்படும் சில தலைப்புகள்
சைவ அந்தாதிகள்,
வைணவ அந்தாதிகள்,
 அந்தாதி வகை இலக்கியங்கள்,
யாப்பு நோக்கில் அந்தாதி இலக்கியங்கள்,
தல அந்தாதிகள்,
 தனிநபர் அந்தாதிகள்,
அந்தாதிகளில் மொழியியல்,
அந்தாதிகள் இடம்பெறும்  உத்திகள்,
 அந்தாதிகளில் சமய மரபுகள்,
அந்தாதிகளில் அகப்புற மரபுகள்


பள்ளு இலக்கியங்கள்
பள்ளு எனும் நூல்வகை தமிழ் சிற்றிலக்கிய வகையைச் சார்ந்தது. இது மருதநில இலக்கியமாகும்.இளங்கோவடிகள் ஏர் மங்கலம், முகவைப் பாட்டு என்பனவற்றைக் குறிப்பிடுகின்றார். (நாடுகாண் காதை, 125 :134- 137) பள்ளு என்ற இலக்கிய வகைக்குப் பள்ளு நாடகம், பள்ளு மூவகைத்தமிழ், பள்ளேசல், பள்ளிசை என்ற பெயர்களும் காணப்படுகின்றன.
பள்ளு இலக்கியங்கள்


·         ஞானப்பள்ளு,
·         திருவாரூர்ப் பள்ளு,
·         குருகூர்ப் பள்ளு,
·         சிவசயிலப் பள்ளு,
·         வைசியப்பள்ளு,
·         வடகரைப் பள்ளு,
·         திருமலை முருகன் பள்ளு,
·         சீகாழிப் பள்ளு,
·         செண்பகராமன் பள்ளு,
·         தில்லைப் பள்ளு,
·         வையாபுரிப் பள்ளு,
·         கண்ணுடை அம்மை பள்ளு,
·         திருப்புன வாயிற் பள்ளு,
·         கதிரை மலைப் பள்ளு,
·         பறாளை விநாயகர் பள்ளு,
·         தண்டிகைக் கனகராயன் பள்ளு,
·         குற்றாலப் பள்ளு,
·         திருச்செந்தில் பள்ளு,
·         போரூர்ப் பள்ளு,
·         இருப்புலிப் பள்ளு,
·         திருவிடை மருதூர்ப் பள்ளு,
·         புதுவைப் பள்ளு



இதுவரை வெளிவந்துள்ள பள்ளு இலக்கிய ஆய்வுகள்
1.பள்ளு இலக்கியங்கள் வழி அறியலாகும் பழந்தமிழர் வாழ்வியல் - பாரதிதாசன் பல்கலைக்கழகம் கோ. இராமச்சந்திரன் *00*

இவ்வாய்வேடு முன்னுரை முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களாகப் பகுக்கப்பட்டுள்ளதுது 1 பள்ளு பெயர்க் காரணம் தோற்றம் வளர்ச்சி பாடுபொருள் * வாழ்வியல் * சமயச் சிந்தனைகள் * வட்டார வழக்கில் மொழிநடை * அழகியல்

2..பள்ளு இலக்கியங்களின் சமூகப்பண்பாட்டுப் பின்புலம் - தமிழ்ப் பல்கலைக்கழகம் நா. சண்முககனி
இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக நான்கு தலைப்புகளைக் கொண்டு அமைந்துள்ளது. *பள்ளர் சமூக வரலாறு *. பள்ளு இலக்கியங்களின் அமைப்பியல் ஆய்வு *. பள்ளு இலக்கியங்களில் நாடகப்பாங்கும் உத்திகளும் *. பள்ளு இலக்கியங்களில் குடும்ப அமைப்பும் உறவுகளும்

இனிவரும் காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்படும் சில தலைப்புகள்
பள்ளு இலக்கியங்களில் தல வரலாறு
பள்ளு இலக்கியங்களில் கடவுளர்
பள்ளு இலக்கியங்களில் பள்ளர்களின் வாழ்க்கை
பள்ளு இலக்கியங்களில் சொல்லாக்கங்கள்
பள்ளு இலக்கியங்களில் சங்க இலக்கியத் தாக்கங்கள்
பள்ளு இலக்கியங்களில் வாழ்வியல்
பள்ளு இலக்கியங்களில் வளங்கள்
பள்ளு இலக்கியங்களில் துலங்கிடும் இயற்கை எழில்
பள்ளு இலக்கியங்களில் நகைச்சுவை



மாலை
ஒரு பொருள் குறித்து பல செய்யுள்கள் பாடுவதை மாலை என்கிறார்கள்.
வகைகள்
மாலை என்று முடியும் நூல்கள் 28 வகைகள் ஆகும்
அங்க மாலை, அநுராக மாலை, இரட்டைமணி மாலை, இணைமணி மாலை, நவமணி மாலை, நான்மணி மாலை, நாம மாலை, பலசந்த மாலை, கலம்பக மாலை, மணி மாலை, புகழ்ச்சி மாலை, பெருமகிழ்ச்சி மாலை, வருத்த மாலை, மெய்கீர்த்தி மாலை, காப்பு மாலை, வேனில் மாலை, வசந்த மாலை, தாரகை மாலை, உற்பவ மாலை, தானை மாலை, மும்மணி மாலை, தண்டக மாலை, வீர வெட்சி மாலை, காஞ்சி மாலை, நொச்சி மாலை, உழிஞை மாலை, தும்பை மாலை, வாகை மாலை என்பன அவை.
இதுவரை வந்துள்ள மாலை இலக்கிய நூல்கள்
திருமூலரின் திருமந்திர மாலையும், காரைக்கால் அம்மையாரின் இரட்டை மணி மாலையும், அப்பரின் அரங்க மாலையும், தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருமாலையும், பலரும் சேர்ந்து இயற்றிய திருவள்ளுவ மாலையும் அல்லியரசாணி மாலை, புலேந்திரன் களவு மாலை எனப் பல மாலைகள் காலத்தால் மூத்தவை.
·         திருநாரையூர் விநாயகர் திருவிரட்டை மணிமாலை- நம்பியாண்டார் நம்பி
·         திருநாவுக்கரசு தேவர் திருஏகாதச மாலை-நம்பியாண்டார் நம்பி
·         சகல கலாவல்லி மாலை - குமரகுருபரர்
·         ஆளுடையப் பிள்ளையார் திருவுலா மாலை-ஆதி சைவர் நம்பியாண்டார் நம்பி
·         மூத்த நாயனார் திருவிரட்டை மணிமாலை- கபில தேவ நாயனார்
·         சிவபெருமான் திரு இரட்டை மணிமாலை-கபில தேவ நாயனார்
·         திரு இரட்டை மணிமாலை-காரைக்கால் அம்மையார்.
·         திரு அரங்கத்து மாலை- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
·         திரு வேங்கட மாலை- பிள்ளைப் பெருமாள் ஐயங்கார்
·         களக்காட்டு சத்தியவாசகர் இரட்டை மணி மாலை –ஆசிரியர் பெயர் தெரியவில்லை
·         திருக்காளத்தி இட்டகாமிய மாலை - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
·         பழனி இரட்டை மணிமாலை - ஆசிரியர் பெயர் தெரியவில்லை
·         கயற்கண்ணி மாலை - உ.வே.சா
·         அகிலாண்ட நாயகி மாலை - திருசிரபுரம் மகா வித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
·         மகர நெடும்குழைக் காதர் பாமாலை - ஆசிரியர் பெயர் தெரியவில்லை



இதுவரை வெளிவந்துள்ள மாலை இலக்கிய ஆய்வுகள்
1.தோத்திரச் சொல் மாலை(எம்ஃபில் பாரதிதாசன்) கு.சாந்தி--*00*
*
ஆசிரியர் வாழ்வும் பணியும்
*.
திருவோத்தூர் (வேதநாதர்)வெண்பாமாலை
*.
திருவோத்தூர் (வேதநாதர்) பதிற்றுப்பத்தந்தாதி
*.
திருவோத்தூர் (வேதநாதர்) கலித்துறை மாலை
*.
திருவோத்தூர் (வேதநாதர்) கலித்துறை அந்தாதி

2..சீகாழி திருஞானசம்பந்த மாலை, திருநாவுக்கரசர் மாலை ஓர் ஆய்வு(எம்ஃபில் பாரதிதாசன்)
செ.காத்தமுத்து

*
நூலும் நூலாசிரியர் வரலாறும்
*.
சம்பந்தர் வரலாறும் சமயப்பணியும்
*.
நாவுக்கரசர் வாழ்வும் வாக்கும்
*.
திருஞானசம்பந்தர் மாலை இலக்கியக் கூறுகள்
*.
திருநாவுக்கரசர் மாலை இலக்கியச் சிறப்புகள்

3.மிகுராசுமாலை-ஆய்வு(எம்ஃபில் அழகப்பா) டீ.காதர் இபுராஹிம்-1991
*
புலவர் வாழ்வும் வரலாறும்
*.
நூற்பொருள்
*.
இஸ்லாமிய வரலாற்றுக் குறிப்புகள்
*.
இஸ்லாமியர் கொள்கை விளக்கம்
*.
புலமை வளம்

4.முதுமொழி மாலை-ஓர் ஆய்வு(எம்ஃபில் அழகப்பா) சூ.ஆரோக்கியமேரி-*00*

*
புலவர் வாழ்வியல்
*.
முதுமொழி மாலை அறிமுகம்
*.
முகம்மது நபி சிறப்புகள்
*.
பாடும் திறன்
*.
முதுமொழி மாலை-சீறாப்புராணம் ஒப்பீடு

5..வள்ளலாரின் வடிவுடை மாணிக்க மாலையில் குறைநிலை(எம்ஃபில் அழகப்பா) கு.காந்தி
முன்னுரை
*
வள்ளலாரின் வாழ்வும் வாக்கும்
*.
மாலை இலக்கியம்-ஓர் ஆறிமுகம்
*.
வடிவுடை மாணிக்க மாலையில் சக்திநிலை
*.
வடிவுடை மாணிக்க மாலையில் இறைவனின் திருவிளையாடல்கள்
முடிவுரை

6.தமிழில் மாலை இலக்கியங்கள் பற்றிய ஆய்வு -மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் சு. சண்முக சுந்தரம்
*முன்னுரை
*. மாலை இலக்கியத் தோற்றமும் வளர்ச்சியும்
*. பாட்டியல் கூறும் மாலை நூல் இலக்கண விளக்கம்
*. மாலை இலக்கியம் பொது அறிமுகம்
*. மாலை நூல்களின் பாடுபொருள்
*. மாலை நூல்களின் தனித்தன்மை உத்தி அணி
7. முடிவுரை

இனிவரும் காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்படும் சில தலைப்புகள்
1.       மாலை இலக்கியங்களில் காணலாகும் திருவிளையாடல்கள்
2.       மாலை இலக்கியங்களில் தலவரலாறு
3.       யாப்பு நோக்கில் மாலை இலக்கியங்கள்
4.       மாலை இலக்கியங்களின் பாடுபொருள்
5.       சைவ இலக்கிய மாலைகள்
6.       வைணவ இலக்கிய மாலைகள்
7.       மாலை இலக்கியங்களில் சக்தி
8.       மாலை இலக்கியங்களில் வர்ணனை
9.       மாலை இலக்கியங்களில் இலக்கியநயம்
10.    மாலை இலக்கியங்களும் சமயமும்


கலம்பகம்
கலம்பகம் என்பதற்குக் கலவை என்று ஒரு பொருள் உண்டு. சங்க இலக்கியங்களில் ஒன்றான பெரும்பாணாற்றுப்படை என்ற நூலில்,பல் பூ மிடைந்த படலைக்கண்ணி(பெரும்பாணாற்றுப்படை - 174)
என்ற அடி இடம் பெற்றுள்ளது. கதம்பம் என்று ஒரு வகையான பூ மாலையை நாம் இப்பொழுதும் காண முடிகிறது. பல வகையான பூக்களைச் சேர்த்துத் தொடுத்த மாலையே கதம்பம் எனப்படுகிறது. கலம்பகம் என்பதே பேச்சு வழக்கில் கதம்பம் என்று மாறி வழங்கப்படுகிறது எனலாம். தொல்காப்பியர் கூறும் அகத்துறை, புறத்துறை சார்ந்த உறுப்புகளின் கலவையாகக் கலம்பகம் என்ற இலக்கிய வகை தோன்றியது எனலாம். வைணவ பக்தி இலக்கியத்தை வழங்கியவர்கள் பன்னிரண்டு ஆழ்வார்கள். அவர்களுள் ஒருவர் தொண்டரடிப்பொடி ஆழ்வார். அவர், ''கலம்பகம் புனைந்த அலங்கல் அம் தொடையல்" (திருப்பள்ளியெழுச்சி.5) என்று குறிப்பிடுகின்றார். இறைவனையோ, அரசனையோ, தலைவனாகக் கொண்டு, பலவகைச் செய்யுள்களால் பாடப்படும் ஒரு சிற்றிலக்கிய வகை கலம்பகம்.
இதுவரை வந்துள்ள கலம்பக இலக்கிய நூல்கள்
இதற்குப்பின் கலம்பகம் இயற்றிப் புகழ்பெற்றவர் குமரகுருபரர். காசிக் கலம்பகம், கயிலைக் கலம்பகம், மதுரைக்கலம்பகம் ஆகியவற்றை இவர் இயற்றியிருக்கிறார். இங்கிலாந்திலிருந்து தமிழகத்துக்கு வந்த டாக்டர் ஜி.யு. போப் அவர்களும் கலம்பகத்தின் சுவையினால் கவரப்பட்டு, தமிழ்ச்செய்யுட் கலம்பகம் என ஒன்று இயற்றியிருப்பதாகத் தெரிகிறது. இருபதாம் நூற்றாண்டிலும் பல கலம்பகங்கள் இயற்றப்பட்டுள்ளன. சிறப்பாக, மறையரசன் என்பார் இயற்றிய திரு.வி.க. கலம்பகத்தைக் குறிப்பிடலாம். முஸ்லீம் புலவர்களும் கலம்பகம் இயற்றியுள்ளனர். சான்றாக, சையத் மீரான் லெப்பை அண்ணாவியார் இயற்றிய மதீனாக் கலம்பகத்தைச் சான்றாகக் கூறலாம்.

·         திருக்கோட்டாற்றுக் கலம்பகம் : எம். கருப்பையாப் பாவல
·         ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்,
·         தில்லைக் கலம்பகம்

இதுவரை வெளிவந்துள்ள கலம்பக இலக்கிய ஆய்வுகள்
1.அழகர் கலம்பகம்-திருவரங்கக் கலம்பகம் ஒப்பாய்வு(எம்ஃபில் அழகப்பா)
மு.அய்யாச்சாமி-199*

*
வாழ்வும் வரலாறும்
*.
கலம்பக உறுப்புகள்
*.
புராணக் கதைகள்
*.
புலமை நயம்

2..திருவாமாத்தூர் கலம்பகமும் திருவரங்கக் கலம்பகமும் ஒப்பாய்வு
த.சாயிமகாலெட்சுமி எம்ஃபில் பாரதிதாசன்)
நெறிப.பாஸ்கரன்
*
தமிழில் கலம்பக இலக்கியங்கள்
*.
திருவாமாத்தூர் கலம்பகமும் திருவரங்கக் கலம்பகமும்
*.
பாடுபொருள்
*.
புராணக் கூறுகள்
*.
இலக்கிய நயம்

3.தமிழில் கலம்பகங்கள் பாரதிதாசன் பல்கலைக்கழகம்  க. செல்வி *001

இவ்வாய்வேடு முன்னுரை, முடிவுரை நீங்கலாக ஐந்து இயல்களைக் கொண்டுள்ளது. *கலம்பகத்தின் தோற்றமும் வளர்ச்சியும் *. கலம்பக அமைப்பும் பொருன்மையும் *. கலம்பக உறுப்புகளும் யாப்பமைப்பும் *. சங்கச் சாயலும் மாற்றமும் *. அணிநலன்

4. திருக்காவலூர்க் கலம்பகம், ஓர் ஆய்வுஆர். ஜோசப் ஜெயகாந்தன்: கொழும்பு 2006,
இனிவரும் காலங்களில் ஆய்வு மேற்கொள்ளப் பரிந்துரைக்கப்படும் சில தலைப்புகள்
வைணவ கலம்பகங்களில் இலக்கியக் கூறுகள்
கலம்பக வழி வாழ்க்கைப் பாடங்கள்
கலம்பகம் வழி அரசியல் அறங்கள்
கலம்பகம் காட்டும் சமுதாய நெறிகள்

பிள்ளைத்தமிழ்

பிள்ளைத் தமிழ் இலக்கியமானது, இறைவனையோ, இறைவனை ஒத்த சிறப்புடைய மானிடரையோ சிறு குழந்தையாய் பாவித்து அவர்கள் மேல் பாடல்கள் பாடுவது பிள்ளைத்தமிழ் இலக்கியம் ஆகும்.
இதுவரை வெளிவந்துள்ள பிள்ளைத்தமிழ் நூல்கள்

குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் ஒட்டக்கூத்தர்.
திருப்பெருந்துறைச் சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ்
சம்பந்தர் பிள்ளைத் தமிழ் வ.சு. செங்கல்வராய பிள்ளை
சிவந்தெழுந்த பல்லவன் பிள்ளைத் தமிழ் படிக்காசுப் புலவர்
மகர நெடுங்குழைக் காதர் பிள்ளைத் தமிழ்
திருப்பெருணை நல்லூர்த் திருவேண்ணூற்றுமை பிள்ளைத் தமிழ் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருவானைக்கா அகிலாண்டநாயகி பிள்ளைத் தமிழ் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
உறையூர்க் காந்திமதியம்மை பிள்ளைத் தமிழ்- மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருத்தவத்துறைப் பெருந்திருப்பிராட்டியார் பிள்ளைத் தமிழ் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
திருக்குடந்தை மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
அனுமன் பிள்ளைத் தமிழ் இயற்றியவர் - அருணாச்சலக் கவிராயர்

முருகன் மீது பாடப்பட்டவை

  1. சேயூர் முருகன் பிள்ளைத் தமிழ் - அந்தகக்கவி வீரராகவ முதலியார்
  2. செப்பறைப் பிள்ளைத் தமிழ் - சுப்பிரமணியக் கவிராயர்
  3. க்ஷேத்திரக் கோவைப்பிள்ளைத் தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
  4. திருப்போரூர் முருகன் பிள்ளைத் தமிழ் - திருப்போரூர் சிதம்பர சுவாமிகள்
  5. திருச்செந்தூர்ப் பிள்ளைத் தமிழ் - பகழிக்கூத்தர்(இவர் வைஷ்ணவ மதத்தினர்)
  6. திருமலை முருகன் பிள்ளைத் தமிழ் - கவிராசபண்டாரம்
  7. திருவிடைக்கழி முருகன் பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான்மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  8. திருவிரிஞ்சை முருகன் பிள்ளைத் தமிழ் - மார்க்கசகாயர்
  9. நல்லூர் சுப்பிரமணியர் பிள்ளைத் தமிழ - அப்புகுட்டி ஐயர்
  10. முத்துக் குமாரசாமி பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
  11. தணிகைப் பிள்ளைத் தமிழ் - கந்தப்பய்யர்
  12. பழனிப் பிள்ளைத் தமிழ் - தண்டாயுத சுவாமி
  13. திருத்தணிகைச் சிங்காரவேலர் பிள்ளைத் தமிழ் - வ. சு. செங்கல்வராயப் பிள்ளை
  14. திருமயி்லைப் பிள்ளைத் தமிழ் – தாண்டவராயர்
  15. திருக் கதிர்காமப் பிள்ளைத் தமிழ் கருனாலயப் பாண்டியர்
  16. மருதாசலக் கடவுள் பிள்ளைத் தமிழ் வடவழி அருணாசலக் கவிராயர்
  17. பழனி பிள்ளைத் தமிழ் விசயகிரி வேலச் சின்னோவையன்

திருமால் மீது பாடப்பட்டவை
  1. அழகர் பிள்ளைத் தமிழ் - சாமி கவிகாளருத்திர
  2. நவநீத கிருட்டினன் பிள்ளைத் தமிழ் - அண்ணாமலை ரெட்டியார்
  3. வேங்கடேசர் பிள்ளைத் தமிழ் - தெய்வநாயகர்
  4. வைகுந்தநாதன் பிள்ளைத் தமிழ் - வரதராசப் பிள்ளை

விநாயகர் மீது பாடப்பட்டவை

  1. கலைசைச் செங்கழுநீர் விநாயகர் பிள்ளைத்தமிழ் - சிவஞான முனிவர்
  2. சென்னை விநாயகர் பிள்ளைத்தமிழ் - கச்சியப்ப முனிவர்
  3. தேசிய விநாயகர் பிள்ளைத்தமிழ் - கணபதி ஆச்சாரி

சைவ சமயாசாரியர்கள் மீது பாடப்பட்டவை

  1. திருஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் - மாசிலாமணி தேசிகர்
  2. திரு சம்பந்தர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
  3. திரு ஞானசம்பந்தர் பிள்ளைத் தமிழ் - தணிகைமணி செங்கல்வராயப் பிள்ளை
  4. அப்பர் பிள்ளைத் தமிழ் - மு. கோ. இராமன்
  5. அப்பர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
  6. சுந்தரர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
  7. மாணிக்கவாசகர் பிள்ளைத் தமிழ் - காரைக்குடி சொக்கலிங்க ஐயா
  8. சேக்கிழார் பிள்ளைத் தமிழ் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  9. அம்பலவாண தேசிகர் பிள்ளைத் தமிழ் மகாவித்வான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  10. நால்வர் பிள்ளைத் தமிழ் இராம. சொ. சொக்கலிங்கச் செட்டியார்
  11. திருநாவுக்கரசர் பிள்ளைத் தமிழ் மு.கோ. இராமன்

வைணவம் அடியவர் மீது பாடபட்டவை

  1. மாறன் பிள்ளைத் தமிழ் - இரத்தினக் கவிராயர்
  2. அநுமார் பிள்ளைத் தமிழ் - அருணாசலக் கவிராயர்
  3. ஆண்டாள் பிள்ளைத் தமிழ் எஸ்.ஜெகத்ரட்சகன்

தலைவர்கள் மீது பாடப்பட்டவை

  1. குலோத்துங்கன் பிள்ளைத் தமிழ் - ஒட்டக்கூத்தர் (அரசன் மீது பாடப்பட்டது )
  2. சிவந்தெழுந்த பல்லவராயன் - பிள்ளைத் தமிழ் (உபகாரி மீது பாடப்பட்டது)
  3. காங்கேயன் பிள்ளைத் தமிழ் - அதிச்சதேவன்
  4. செங்குந்தர்பிள்ளைத் தமிழ் - ஞானப்பிரகாசர்
  5. இராகவர் பிள்ளைத் தமிழ் - குற்றாலக்குழந்தை முதலியார்
  6. மறைமலை அடிகளார் பிள்ளைத் தமிழ் - புதுமைக் கவிஞர் அரங்கசாமி
7.       பாவேந்தர் பிள்ளைத் தமிழ்
8.       ராய.சொ.வின் காந்திப் பிள்ளைத் தமிழ்
9.       பெரியார் பிள்ளைத் தமிழ்,
10.    பேரழகன் பிள்ளைத் தமிழ்
11.    பாவலர் மணிவேலனார் பிள்ளைத்தமிழ்
12.சிவஞான பாலய்ய சுவாமிகள் பிள்ளைத் தமிழ் - சிவப்பிரகாச சுவாமிகள்
13.திருவாவடுதுறை அம்பலவாண தேசிகர் பிள்ளைத்தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  1. சாமிநாதன் பிள்ளைத்தமிழ் - சாமிநாதப் பிள்ளை
  1. நபிநாயகம் பிள்ளைத் தமிழ் - செய்யது அனபியாசாகிப்
  2. றசூல் நாயகம் பிள்ளைத் தமிழ் - மீறான் சாகிப் புலவர்
  3. நத்ஹரொலி ஆண்டவர்கள் - பிச்சை இபுராகிம் புலவர் பிள்ளைத் தமிழ்
  4. நபிநாயகம் பிள்ளைத் தமிழ் - பீர்முகமதுப் புலவர்
  5. முகய்யித்தீன் ஆண்டவர் பிள்ளைத் தமிழ் - ஜாவாது புலவர்
  6. முகய்யித்தீன் பிள்ளைத் தமி்ழ் - செய்யிது முகய்தீன் கவிராஜர்
  7. நாகூர்ப் பிள்ளைத் தமிழ் - ஷாஹுல் ஹமீதுப் புலவர்
  8. நாகூர்ப் பிள்ளைத் தமிழ் - ஆரிபு நாவலர்
  9. நாகூர்ப் பிள்ளைத் தமிழ் - பிச்சை இபுராகீம் புலவர்
  10. முகய்யித்தீன் ஆண்டவர் காரணப் பிள்ளைத் தமிழ் - அப்துல் காதிறுப் புலவர்
  11. செய்குதாவூது வீலியுல்லா பிள்ளைத் தமி்ழ் - சொர்ண கவி நாயினா முகம்மது பாவா புலவர்
  12. நபிகள் நாயகம் பிள்ளைத் தமி்ழ் - செய்குமீரான் புலவர்
  13. கோட்டாற்றுப் பி்ள்ளைத் தமிழ் - செய்குதம்பிப் பாவலர்
  14. நபிகள் நாயகம் பிள்ளைத் தமிழ்-கவிஞர் நாஞ்சில் ஷா
  15. பாத்திமா நாயகி பிள்ளைத் தமிழ் - செய்குமீரான் புலவர்
பெண்பால் பிள்ளைத்தமிழ் நூல்கள் இந்துமதம்
  1. மீனாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் - குமரகுருபரர்
  2. அமுதாம்பிகை பிள்ளைத் தமிழ் - சிவஞான முனிவர்
  3. காஞ்சி காமாட்சி அம்மன் பிள்ளைத் தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
  4. சிவயோக நாயகி பிள்ளைத் தமிழ் -  ?
  5. சிவகாமி அம்மை பிள்ளைத் தமிழ - கிருஷ்ணய்யர்
  6. திரிபுரசுந்தரி பிள்ளைத் தமிழ் - முத்துக்குமரன்
  7. மங்களாம்பிகை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  8. திருத்தவத்துறைப் பெருந் திருப்பிராட்டியார் பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  9. திருப்பெருமணநல்லூர் திருநீற்று அம்மை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  10. அகிலாண்ட நாயகி பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  11. திருஉறந்தை காந்திமதி அம்மை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  12. திருவதிகை வீரட்டானப் பெரிய நாயகி பிள்ளைத் தமிழ் - சுப்பிரமணியச் செட்டியார்
  13. திருவருணை உண்ணாமுலை அம்மை பிள்ளைத் தமிழ் - சோணாசல பாரதி
  14. நீலாயதாட்சி அம்மை பிள்ளைத் தமிழ் - கிருஷ்ணசாமி உபாத்தியாயர்
  15. பாகம்பிரியா அம்மை பிள்ளைத் தமிழ் - மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை
  16. மங்கையர்க்கரசியார் பிள்ளைத் தமிழ் - நடேசக் கவுண்டர்
  17. மங்களேஸ்வரி பிள்ளைத் தமிழ் - ?
  18. அளகாபுரி உமை அம்மை பிள்ளைத் தமிழ் - தியாகராயர்
  19. அறம் வளர்த்த நாயகி பிள்ளைத் தமிழ் - தொட்டிக்கலை சுப்பிர மணிய முனிவர்
  20. கோமதி அம்மை பிள்ளைத் தமிழ் - புளியங்குடிப் பிள்ளை
  21. வடிவுடை அம்மன் பிள்ளைத் தமிழ் - வீர வேலாயுத சுவாமி
  22. அபயாம்பிகைப் பிள்ளைத் தமிழ் - ?
  23. கமலாலய அம்மன் பிள்ளைத் தமிழ் -  ?
  24. மயிலம்மை பிள்ளைத் தமிழ் - வைத்தியநாத தேசிகர்
  25. சௌந்தர்ய நாயகி பிள்ளைத்தமிழ் - வீர சுப்பைய சுவாமிகள்
  26.  தில்லைச் சிவகாமி அம்மை பிள்ளைத் தமிழ் இராம. சொக்கலிங்கம்
  27. தில்லைச் சிவகாமி அம்மை பிள்ளைத் தமிழ்- கிருஷ்ணையர்
இதுவரை வெளிவந்துள்ள பிள்ளைத்தமிழ் இலக்கிய ஆய்வுகள்

1.மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழ், ஆயிஷா நாச்சியார் பிள்ளைத்தமிழ்-ஓர் ஒப்பாய்வு(எம்ஃபில் அழகப்பா) மு.சாதிக்பாட்சா-199*

*
ஆசிரியர் வரலாறு
*.
கட்டமைப்பு-ஒப்பீடு
*.
சமயக் கருத்துக்கள்
*.
சமயக் கருத்துக்கள் ஒப்பீடு
*.
புலமைத்திறன் ஒப்பீடு

2.ராய.சொ.வின் காந்திப் பிள்ளைத் தமிழ் ஆய்வு(எம்ஃபில் அழகப்பா) ச.குழந்தைசாமி-1991
*
முன்னுரை
*.
இராய.சொக்கலிங்கனாரின் வாழ்வும் பணியும்
*.
காந்தி பிள்ளைத்தமிழ் அமைப்பு
*.
பாட்டுடைத்தலைவன்
*.
இலக்கியத்திறன்
*.
காந்தியம்

3.மதுரை மீனாட்சியம்மை பிள்ளைத்தமிழில் குமரகுருபரரின் தமிழ்ப்பற்று(எம்ஃபில் அழகப்பா) து.லலிதா
முன்னுரை
*
குமரகுரபரரின் வாழ்வும் வரலாறும்
*.
சிற்றிலக்கியங்களில் பிள்ளைத்தமிழ்
*.
கடவுள் தத்துவங்களும் புராணங்களும்
*.
தமிழும் குமரகுருபரரும்
முடிவுரை

4.பெருமானார் பிள்ளைத்தமிழ்--ஓர் ஆய்வு (எம்ஃபில் பாரதிதாசன்) அ.ஹாஜிரா பேகம்
*
பிள்ளைத்தமிழ் இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
*.
இசுலாமிய பிள்ளைத்தமிழ் அமைப்பு நலம்
*.
பெருமானார் பிள்ளைத் தமிழ் இலக்கிய நலம்
*.
பெருமானார் பிள்ளைத்தமிழ் சமய நலம்

5.பிள்ளைத் தமிழில் ஆளுமை மேம்பாடு(எம்ஃபில் பாரதிதாசன்) வீ.லெட்சுமி
*
பிள்ளைத்தமிழ் இலக்கியங்கள்
*.
ஆளுமை மேம்பாடு
*.
பி.த. இலக்கியங்களில் ஆளுமை மேம்பாடு
*.
பிள்ளைத் தமிழ் இலக்கியங்களில் உள ஆற்றலும், உடலாற்றலும்


பரிந்துரைக்கப்படும் தலைப்புகள்
1.பிள்ளைத் தமிழ் காட்டும் வாழ்வியல் நெறிகள்.
2.பிள்ளைத் தமிழ் காட்டும் ஆண்-பெண்வளர்ப்பு வேறுபாடு.
3.பிள்ளைத் தமிழ் காட்டும் சமூகம்.
4.தலைவர்கள் பிள்ளைத்தமிழ்
5. சைவ பிள்ளைத்தமிழ் நூல்கள்
6.இசுலாமிய பிள்ளைத்தமிழ்
7. பிள்ளைத்தமிழ் நூல்களில் இலக்கிய நயம்
8.பிள்ளைத்தமிழ் நூல்களில் ஆடை அலங்காரம்
9. பிள்ளைத்தமிழ் நூல்களில் இடம்
பிள்ளைத்தமிழில் ஆய்வு மேற்கொள்ள வேண்டி தேவை நிறைய உள்ளது.


கவசம்
கவசம் என்பது உடலைக் காக்க உதவும் அணிகலன் போன்று கவச நூல்கள் மனதைக் காக்கக்கூடியவை.
நூல்கள்
சிவ கவசம்
கந்த சத்தி கவசம்
சண்முக கவசம்
சத்தி கவசம்
நாராயண கவசம் 
விநாயக கவசம்
அனுமன் கவசம்



இதுவரை வெளிவந்துள்ள கவச இலக்கிய ஆய்வுகள்
1.கவச இலக்கிய ஆய்வு(எம்ஃபில் அழகப்பா) ஆர்.சித்ரா-*000

*
தோற்றமும் வளர்ச்சியும்
*.
அமைப்பும் பாடுபொருளும்
*.
வகைகள்
*.
தனிக்கவசங்கள்
*.
இலக்கியத் திறன்

 பரிந்துரைகள்
கவச இலக்கியங்களின் வளர்ச்சி
கவச இலக்கியங்களில் தொன்மைக் கூறுகள்
கவச இலக்கியங்களில் இலக்கிய நயம்
கவச இலக்கியங்களில் பக்தி நிலையும் மக்கள் வழிபாடும்
 கவசத்தின் தேவையும் மக்களின் நம்பிக்கையும்
கசவங்களில் இடம் பெறும் கடவுளரின் பல பெயர்கள்
 

அம்மானை
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்ட சங்க கால இலக்கியத்திலேயே கழங்கு ( அம்மானை ) ஆடிய செய்தி பேசப்பட்டுள்ளது . சங்கம் மருவிய காலத்தைச் சார்ந்த ( கி.பி. 2ம் நூற்றாண்டு ) சிலப்பதிகாரம் அம்மானை வரி என்னும் வரிப் பாடலை முதலில் தந்தது . கி.பி. 8ம் நூற்றாண்டைச் சேர்ந்த திருவாசகத்தில் அம்மானை விளையாட்டுப் பற்றிய குறிப்பு வருகின்றது .தமிழில் இதுகாரும் வெளிவந்துள்ள அம்மானை நூல்களில் குமார தேவர் , ஞானியார் அப்பா ஆகிய இருவர் மட்டுமே ஞான அம்மானை என்ற பெயரிலான இலக்கியங்களை பாடியிருப்பதாக தெரிய வருகின்றது. நாட்டுப்புறப் பாடலாக இருந்து இலக்கியமாக ஏற்றம் பெற்ற பா வகைகளுள் அம்மானை குறிப்பிடத் தக்கது .
இதுவரை வெளிவந்துள்ள அம்மானை இலக்கிய ஆய்வுகள்
1.விக்டோரியா அம்மானை-ஓர் அறிமுகம்(எம்ஃபில் அழகப்பா)ரெ.சுப்புலட்சுமி
நெறி-இரா.சுகந்தி ஞானம்மாள்

*
முன்னுரை
*.
விக்டோரியா அம்மானை நூல் அறிமுகம்
*.
சிற்றிலக்கிய வகையில் அம்மானையின் தோற்றம் வளர்ச்சி
*.
விக்டோரியா மகாராணி அம்மானை ஒரு பார்வை
*.
விக்டோரியா மகாராணி அம்மானை நூற் சிறப்புகள்
*.
முடிவுரை

2..தேம்பாவணி கித்தேரி அம்மாள் அம்மானை பி.எச்.டி. (பாரதிதாசன்)
ஆ.ஜோசப் -1999
நெறி: ஆ.செகந்நாதன்
*
வீரமாமுனிவரின் வரலாறுகளும் படைப்புகளும்
*.
இயேசு சபை வரலாற்றில் வீரமாமுனிவர்
*.
தேம்பாவணிப் பின்னணி
*.
கித்தேரி அம்மாள் அம்மானை பின்னணி
*.
தேம்பாவணி-கித்தேரி அம்மாள் அம்மானை ஓர் ஆய்வு
*.
பக்தி நிலையும் மக்கள் வழிபாடும்

3.வைகுண்டரின் அகிலத்திரட்டு அம்மானையும் திருவிதாங்கூர் அரசாட்சியில் நிலவிய வரிமுறைகளும் - மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்
 பா. ம. ஜெயகலா

இவ்வாய்வு முன்னுரை, முடிவுரை நீங்கலாக மூன்று இயல்களாக பகுக்கப்பட்டுள்ளத. *திருவிதாங்கூர் *. திருவிதாங்கூர் அரசாட்சியில் நிலவிய வரிமுறைகளும் தண்டனைகளும் *. சமூகவியல் நோக்கில் அகிலத்திரட்டு அம்மானை குறிப்பிடும் வரிகள்

 அம்மானையும் கிறித்துவ சமயமும்
அம்மானை இலக்கியங்களில் நாட்டுப்புறக்கூறுகள்
அம்மானை வழி சமூக ஆராய்ச்சி

சதகம்
சதகம் என்பது, ‘நூறு பாட்டுக்களை அந்தாதித் தொடையான் தன்னகத்தே கொண்ட நூல்.
சதக இலக்கியம் பொதுவாக அரசன், இறைவன், சான்றோர், அடியார் பற்றி பாடப்படுபவை. இவற்றுள் தொண்டை மண்டல (பல்லவ) சதகம், பாண்டி மண்டல சதகம், சோழ மண்டல சதகம், ஈழ மண்டல சதகம், நந்தி மண்டல சதகம், கொங்கு மண்டல சதகம், குருபாததாசர் எழுதிய குமரேச சதகம்,
தண்டலையார் சதகம்- படிக்காசுப் புலவர்,அம்பலவாணக் கவிராயர் பாடிய அறப்பளீசுர சதகம்,அகத்தீசர் சதகம், அரபிச்சதகம் போன்றவற்றை இஸ்லாமியர்கள் பாடியுள்ளனர். இயேசுநாதர் திருச்சதகம், திருக்குமார சதகத்தை யாழ்ப்பாணம் சதாசிவப்பிள்ளையும் தாவீது அதிசயநாதனும் எழுதியுள்ளனர்.திருச்சதகம் -மாணிக்கவாசகர்

இதுவரை வெளிவந்துள்ள இலக்கிய ஆய்வுகள்
1.அறப்பளீசுர சதகமும் குமரேச சதகமும் கூறும் நீதியுரைகள்(எம்ஃபில் அழகப்பா)
ப.நளாயினி
முன்னுரை
*
சதக இலக்கியத்தின் தொன்மை
*.
சதகத்தின் பிரிவு நிலை
*.
இரு சதகங்களின் அமைப்பு முறைகள்
*.
அறவாழ்வும்-ஒத்த கருத்துரைகளும்
முடிவுரை

பரிந்துரைகள்

சதக இலக்கியங்களின் அறக் கோட்பாடு
சதக இலக்கியங்களில் வாழ்வியல் விழுமியங்கள்
திருச்சதகம் முதல் குமரேச சதகம் வரை 
சதக இலக்கியங்களின் அமைப்பு முறையும் எண்ணிக்கையும்

குறவஞ்சி

இதுவரை வெளிவந்துள்ள குறவஞ்சி இலக்கிய ஆய்வுகள்
1.திருக்குற்றாலக் குறவஞ்சி உணர்த்தும் பண்பாடு(எம்ஃபில் அழகப்பா) நிர்மலா-*00*

*
குறவஞ்சி இலக்கியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்
*.
திருக்குற்றாலக் குறவஞ்சி ஒரு பொதுப்பார்வை
*.
குறவஞ்சி மாந்தர்கள்
*.
பண்பாட்டுச் செய்திகள்
*.
புராணச் செய்திகள்
*.
முடிவுரை

2.குற்றாலக் குறவஞ்சி-ஓர் ஆய்வு(எம்ஃபில் அழகப்பா)ஜெயலெட்சுமி-*007
முன்னுரை
*
குறவஞ்சியின் அமைப்பும் சிறப்பும்
*.
குற்றாலத் தலத்தின் சிறப்பு
*.
திரிகூடநாதரின் சிறப்பியல்புகள்
*.
வாழ்வியல் செய்திகள்
முடிவுரை

குறவஞ்சி வழி குறவர் வாழ்க்கை
குறவஞ்சி வழி  அறங்கள்
குறவஞ்சி காட்டும் சமுதாய நெறிகள்  
குறவஞ்சி  - புராணச் செய்திகள்
 குறவஞ்சிகாட்டும் வளங்கள்
 குறவஞ்சியில் காணலாகும் உணர்ச்சிக் கூறுகள்


                                                   


1 comment:

  1. திருவேங்கடதந்தாதி தொடர்பான ஆய்வேடுகள் குறிப்பிடுக

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?