நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday 13 February 2014

சோழீசர்மல்லைக் கோவை


சோழீசர்மல்லைக் கோவை

நூலாசிரியர்-பிள்ளைப் பெருமாள் சிறைமீட்டான் கவிராயரென்பவர்.


   
இம்மல்லைக் கோவை பாடிய ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் சிறைமீட்டான் கவிராயரென்பவர். பாகை என்னும் ஊரினர். இற்றைக்கு 334 ஆண்டுகளின் முன்பு (கி.பி.1634) வாழ்ந்தவர். இவரியற்றிய வேறு நூல்கள் அர்த்தநாரீசுவரர் சந்திரசேகரமால, கபிலமலைக் குழந்தைக் குமாரர் வருக்கக் கோவை முதலியன. இவர் மல்லசமுத்திரக் காணியாளர்களாகிய விளிய குல வேளாள குலச் செல்வர்களின் * வேண்டுகோளின்படி இந்நூல் இயற்றினார் எனத் தெரிகிறது. இந்நூலாசிரியரின் பெயர்போன்ற பெயர் சோழர்காலக் கல்வெட்டொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

(
கபிலைமலைக் கோவை பிள்ளை பெருமான் சிறை மீட்டான் கவிராயர் என்பவர் கபிலைமலைக் கோவை என்ற அகப்பெருமாள் இலக்கிய நூலை சுவைமிகப் பாடியுள்ளார். அவரது காலம் கலியுக சகாப்தம் 4740. தற்போது கலியுக சகாப்தம் 5095 ஆகும். ஏறத்தாழ 350 ஆண்டுகளுக்கு முன் அவர் வாழ்ந்தவர். பாகை எனும் நகரத்தில் அவர் பிறந்தார். அவர் கபிலைமலை குழந்தை குமாரரைக் குலதெய்வமாக கொண்டவர். கபிலைமலைக் கோவை இந்நூல் காப்பு செய்யும் முதலாக 105 செய்யுளை கொண்டது. இந்நூலின் பாட்டுடை தலைவனாகிய முருகக் கடவுளை ஞானக் குழந்தை குமாரர் என்றும் இவர் பூமியின் மேல் முற்றும் துறந்த முனிவர்களாலும், தேவர்களாலும் அரசர்களாலம் துதிக்கப்படுவராவர்.)

"""". . . . .
எட்டாவது சிறைமீட்ட பெருமாளான சீயகங்க தேவர் மாமம் மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன்""""
(
தென்னிந்தியச் சாசனங்கள் IV 317)

சோழீசர்மல்லைக் கோவை 

காப்பு


விண்டலத்தோர் ஏத்த விளங்கியசோ ழீசர்தம்மேல்
மண்டலத்தோர் போற்றுமல்லை மாலைசொலக் - கண்டங்
கறுத்தானை மாமுகத்தான் காரணத்தால் போற்றக்
கறுத்தானை மாமுகத்தான் காப்பு.

  1. கைக்கிளை


   
களவுக் கூட்டத்தில் முதல் முதல் நிகழ்வது கைக்கிளையாம் கைக்கிளையாவது ஒருதலைக்காமம். இது ஆண்பாற் கைக்கிளையாம். காட்சி ஐயம் துணிவு குறிப்பறிதல் என நான்கு வகைப்படும்.

1.  காட்சி

- தலைவன் தலைவியை ஒரு செண்பகப் பூஞ்சோலை யினிடத்தில் காண்பது.

கட்டளைக் கலித்துறை


கல்லாரந் தூது வளைகோ கனகங் கழையாக்காம்
பல்லாரங் கொண்டு பழனங்கள் தோறும் பணிலந்தவழ்
மல்லா புரிவரு சோழீச லிங்கர் மணிவரைமேற்
செல்லாருஞ் செண்பகப் பூங்காவில் ஓர்கொம்பு தோன்றியதே.

2.  ஐயம்

- தலைமகளைக் கண்ட தலைவன் அவளது வடிவமும் இடமும் துணிதற்கு அமையாமல் இவள் எவ்விடத்தாளோ என்று ஐயுற்றுக் கூறுதல்.

வானோ படைத்திடு வானோ தரிய வடகயிலை
தானோவெண் பாற்கடல் தானே புவியிடந் தானோதொழும்
பானோர் புகழ்ச்சிசெய் சோழீசர் மல்லை யசலத்திற்செந்
தேனோ மதிமறந் தேனோ இவர்தலந் தேர்கிலவே.

3.  துணிபு

- தெய்வமாதோ மானிடமாதோ என்று சந்தேகிக்கப்பட்ட தலைமகள் மானிட மாதென்று தலைவன் துணிதல்.

பண்டே யடிமை யெனச்சுந் தரரைப் பழமுறிகைக்
கொண்டேதொண் டாண்டவர் சோழீசர் மல்லைக் குவடனையார்
அண்டே யணுகுதற் காரோ விவரென் றயிர்க்குமெல்லை
கண்டேவ ரன்றெனக் கண்டேயென் உள்ளங் களிகொண்டவே.

4.  குறிப்பறிதல்

- தலைவியின் பொதுப்பார்வையால் துன்பமுற்ற தலைவன் அவளது சிறப்புப் பார்வையின் குறிப்பால் தன்னிடத்து அவள் வேட்கையுண்டென்றறிதல்.

அறுவிட மெண்ணிலிப் பார்வைக் குவமையன் றந்தகற்காய்
மறுஇடம் அற்றுப் பயந்துவந் தண்டியம hர்க்கண்டனார்
சிறுவிட மாற்றிய மல்லையில் வாழும்சோ ழீசுரனார்
குறைவிடம் போலுந் தெறுவிடம் போலுமைக் கண்ணிவர்க்கே.

 2. '''இயற்கைப் புணர்ச்சி

'''
   
இது ஊழ்வினை கூட்டுவிக்ககூடும் புணர்ச்சி; இது தெய்வப் புணர்ச்சி எனவும் பெயர்பெறும். இயற்கை-ஊழ், தெய்வம். இது இரந்து பின்னிற்றற் கெண்ணல் முதலாகிய துறைகளை புடையது.

5.
 
இரந்து பின்னிற்றற் கெண்ணல்
-
தலைவன் தலைவியை இரந்து வின்னிற்றற் கெண்ணல்.

இரப்போர்எம் மட்டல்ல மும்மூர்த் திகளும் இரந்துகொண்டு
புரப்போர் இடங்களிற் போகில ரோபுல வோர்க்குச்சந்து
வரப்போக உள்ளவர் சோழீசர் மல்லை வரையனையார்
உரப்போர் எனச்சொல்லு வாரோ சொலவீர் ஒழுக்கங்களே.

6.  இரந்து பின்னிலை நிற்றல்

- முன் கூறியவாறு எண்ணிய தலைவன் தலைவிக்கு இதமானதைச் சொல்லிப் பின்னே நிற்றல்.

பண்மேல் இசைக்கும் மொழியீர் உமது பதமலர்கள்
மண்மேல் மிதிக்கை வழக்கல வேகங்கை வார்சடைமேல்
விண்மேல் மதிவைத்த சோழீசர் மல்லை வியன்சிலம்பில்
கண்மேலே வைத்தரு ளீர்தமி யேனுங் கதிபெறவே.

7.  மொழி வினாதல்

- தலைவன் தலைவியை அவளது வாய்மொழி கேட்க வினாவுதல். இதனை முன்னிலையாக்கல் என்பர். இதற்குத் தலைவி நிற்பது தன் காரியத்திற்கு வேண்டுங் காரணம் என்று எண்ணி அவளைத் தலைமகன் முன்னிலை யாக்கி மொழிதல் என்பது பொருள்.

அருக்கான மின்னிடை யுங்குளிர்ப் பார்வையும் அஞ்சனமும்
முருக்கான செவ்விதழ் தேனூ றுறவம் முகவழகும்
திருக்கா வளஞ்செறி சோழீசர் மல்லைச் செழுஞ்சிலம்பில்
ஒருக்காலும் வந்திலீர் இன்றிங்கு வந்த துரைசெயுமே.

8.  நெஞ்சோடு புலம்பல்

- தலைவி வாய்மொழி கூறாமையால் தலைவன் வருத்தமுற்றுத் தன் நெஞ்சொடு கூறா நிற்றல்.

முடிக்குடி யானவர் சோழீசர் மல்லை முளரிவெற்பில்
துடிக்கொடி நுண்மருங் காளுக்கு நானிச்சை சொன்னமட்டோ
குடிக்கள பத்தொடை சேருநெஞ் சேயவர் கஞ்சமலர்
அடிக்கடி மைத்திறம் புக்காலும் சற்றும் அறிகிலரே

9.  முறுவற் குறிப்புணர்தல்

- முறுவல் - புன்சிரிப்பு; வருந்தியிருந்த தலைவன் தலைவியின் புன்னகையால் அவளது உடன்பாட்டினை அறிதல்.

தொகைகண் டிடாவிருட் செங்கதிர்க் கே டி துலங்குதல்போல்
முகைகின்ற போர்தனக் கஞ்சா அவுணாதம் முப்புரத்தை
மிகைகண் டெரித்தருள் சோழீசர் மல்லையில் வெற்பனையார்
நகைகண்ட மட்டிலென் மாலிரு ளூடு நலிந்தனவே

10.  புணர்ச்சியின் மகிழ்தல்  

- தலைவன் தலைவியைக் கூடுதலால் மகிழ்தல்.

எருக்குங் கடுக்கையுஞ் சூடிய மல்லைச்சோ ழீசர்வெற்பில்
மருக்குங் குமமலர்ப் பாயலின் மீது வரச்சொல்லித்தன்
பெருங்குங் கனதனத் தெந்தனைச் சேர்த்திப் பிரியமுற்றுச்
செருக்குங் கலவி யதிவித மாகச் செலுத்தினரே.

11.  தலைவன் புகழ்தல்

- புணர்ச்சியின்பம் நல்கிய தலைவியைத் தலைவன் புகழ்தல்.

விணிலா பரணம் எனலாம் மதியத்தை வீரைசுற்று
மணிலா பரணம் எனலாம் அனமிடு வாரையெந்தன்
கணிலா பரணத்தர் சோழீசர் மல்லைக் கனகவெற்பில்
பெணிலா பரணம் எனச்சொல்லல் ஆகும்இப் பெண்ணிலர்க்கே.

 3. '''வண்புறை'''


தலைவி  தலைவன் பிரிவானோவென ஐயமுற்றது தெரிந்து தலைவன் அவளது ஐயந்தீர வற்புறுத்தல்.

12.  பிரியேனென்றல்  

- தலைவன் தன்னூர்க்குப் பிரிந்து செல்வான் என்னும் கவலையால் தலைவி மேனி வெளுத்ததைக் கண்ட தலைவன் உன்னை விட்டுப் பிரியேன் என்றல்.

கோங்குங் குவடும் பொருதனத் தாய்இமை கூட்டிச்சற்றே
வாங்கும் பொழுதும் உமைப்பிரி யேன்வளஞ் சேருமல்லை
ஓங்கிய சூலத்தர் சோழீச லிங்கர் உயர்வரைமேல்
தாங்கும் உயிரன்றி எவ்வாறு வாழும் சரீரங்களே.

13.  தலைவன் நீங்குதற் கருமை சாற்றல்

 - தலைவன் தலைவியைப் பிரிதற்கியலாமை குறித்துத் தன் நெஞ்சோடு கூறாநிற்றல்.

தொழுவள் அனுப்பித் திரும்பவும் மீளவுஞ் சொல்லிச்சொல்லி
யழுவல்எப் போதுன்னை யான்காண்ப தென்பள் அயர்ந்தயர்ந்து
விழுவன்தென் மல்லையிற் சோழீச லிங்கர்தம் வெற்பினெஞ்சே
யெழுவன்பின் போவள் இவளையெவ் வாறுவிட் டேகுவதே.

 வன்புறையின் பின் நான்காவதாகத் தலைவன் பிரிந்து வருவேனென்றதைத் தலைவி மெய்யெனத் தெளிந்தாற்றுவதாகிய தெளிவும்,

 அதன்பின் ஐந்தாவதாகத் தலைவி பிரிந்து தம்முடைய உயிர்த் தோழியர் கூட்டத்தைச் சேரும்பொழுது செல்லுகின்ற தலைவியின் தோற்றத்தைக் கண்டு தலைவன் மகிழ்வதாகிய பிரிவுழி மகிழ்ச்சியும்,

  ஆறாவதாகத் தலைவி பிரிந்த விடத்துத் தலைவன் மனங்கலங்கிக் கூறுதலாகிய பிரிவுழிக் கலங்கலும்,

 ஏழாவதாக இயற்கைப் புணர்ச்சி புணர்ந்த தலைவன் மறுநாளும் தந்த தெய்வம் தருமெனத் தேறி அவ்விடத்தில் வந்து தலைமகளைக் கூடுதலாகிய இடந்தலைப்பாடும் நிகழும். அதன்பின் நிகழ்வது பாங்கற் கூட்டம்.

 8. பாங்கற் கூட்டம்


பாங்கற் கூட்டம்  இயற்கைப் புணர்ச்சியிற் கலந்த தலைமகன் மூன்றாம் நாள் தலைவியைத் தோழனாற்கூடும் கூட்டம்.

14.  பாங்கன் தலைவனையுற்றது வினாவுதல்.


பாங்கன் உதவியால் தலைவியைக் கூடலாம் என்றெண்ணி வந்த தலைவனைப் பாங்கன் முகவேறுபாடு கண்டு உற்ற துன்பத்தை வினாவுதல்

கல்லாத பேருடன் ஊடாடி உள்ளங் கரைந்தனையோ
இல்லாத எண்ணங்கள் எண்ணினை யோகொங்கில் ஏழ்கரைசூழ்
மல்லா புரிவரு சோழீச லிங்கர் வரையிறைவா
உல்லாச மாமுகத் தாமரை யார்பதி யுற்றதுவே

15.  தலைவன் உற்ற துரைத்தல்

- இங்ஙனம் வினவிய பாங்கனுக்குத் தலைவன் தனக்குற்ற வேறுபாட்டின் காரணத்தைக் கூறுதல்.

கால்கொண்ட மேகக் குழற்காடு கண்டு கதைக்குமுன்னே
வேல்கோண் டிரண்டு மலையேறி யப்புறம் வேதனொடு
மால்கண் டிடாமறைச் சோழீசர் மல்லை வரையிடத்தில்
ஆல்கண்டு ரோம வரையுங்கண் டேநெஞ் சயர்கின்றதே.

16.  பாங்கன் தலைவனைப் பழித்தல்

- தலைவனைப் பாங்கன் பழித்துக் கூறுதல்.

குரவர்க் கருன்தரு சோழீசர் மல்லைக் குவட்டிலொன்னார்
பரவச் சயித்த பராக்ரம நீயொரு பைந்தொடிக்கா
அரவைச் சிரம்பறி மஞ்ஞைபச் சோந்திக் கடங்கினபோல்
உரவச் சிரப்புயந் தந்தன வீர மொடுங்கினவே.

17.  தலைவன் பாங்கினை முனிதல்

- முனிதல் -கோபித்தல்.

அன்னஞ் சிறந்த நடையார்க்கு மால்உற் றழியுமெந்தன்
நன்னெஞ் சகத்தில் துயர்தணி யாதிவை சாற்றினையே
முன்னஞ் சருந்திய சோழீசர் மல்லை முளரிவெற்பில்
கன்னெஞ்ச ராயிருந் தாய்நண் பனேயுன் கருத்துநன்றே

18.  பாங்கன் எவ்விடத் தெவ்வியற் றென்றல்

- தலைவன் முனிந்ததைக் கண்ட பாங்கன் தலைவியைக் கூட்டாதொழியின் இவன் இறந்து விடவும் கூடுமெனத் தோழி நின்னாற் காணப்பட்ட உருவம் எவ்விடத்திலுள்ளது, எவ்வியல்பினையுடையது என்று வினாவல்.

மாகண்ட மானதும் தீவேழும் எட்டு வரைகளுடன்
ஆகண்ட லன்பனி சோழீசர் மல்லை அணிவரைமேல்
பாகண் டமுத மொழிமட மாதையிப் பைம்புனத்தே
நீகண்ட தாய தனையுரை யெங்கள் நெடுந்தகையே

19.  தலைவன் அஃதிவ்விடத்தில் இவ்வியற்றென்றல்

 தலைவன் தன்னை வினாவிய பாங்கற்கு என்னாற் காணப்பட்ட உருவம் இந்த இடத்தில் இந்த இயலையுடையதென்று கூறல்.

கடல்முத்த மஞ்சலர் கண்ணகை கூந்தல்மெய் கண்டுசங்கம்
அடல்மிஞ்சு வேழ மொழிகண்டங் கொங்கை அரக்கனையன்
றுடல்கன்ற ஊன்றிய சோழீசர் மல்லையில் ஒண்ணுதலை
மடல்கொண் டெழுதிட மாட்டார் எவரும் வடிவுகண்டே

 

  9.பாங்கன் தலைவன் கூறிய இடத்திற்சென்று அவள் பேரழகைக் கண்டு முன்னம் எம்பருமானை அறிவின்றி இகழ்ந்தே மெனக் கூறி யிரங்குதல்.


நெறியாம் இதுவும் வனமும் இதாம்மன் னிலையுமிதாம்
குறியாம் இறைசொன்ன கோதையும் ஆகுமிக் கோதைதன்னைப்
பிறியா திருந்தவர் சோழீசர் மல்லைப் பிறங்கலில்யாம்
அறியாமை யேயிகழ்ந் தோம்ஐயை யோநம் அறிவின்மையே

 


   
பாங்கியானவள் தலைவியின் வேறுபாட்டைக் கண்டு அவளுக்குத் தலைவனுடன் புணர்ச்சி யுண்மை உண்டென்று ஆராய்ந்து அறிந்து அதற்குத் தன் மதியையுடன் படுத்தல்.

21.  பாங்கி தலைவியை யச்சுற்று வினாதல்- பாங்கி தலைவியைக் காணாமல் அச்சமுற்றுத் தேடி வினாவுதல்.


உன்னேர் தனையறி யாதுநா னின்றென் னுளமறுகித்
தென்னேர் முகமயி லேயிந்தக் காவெங்குந் தேடிச்சென்றேன்
மின்னே ரிடையங்கர் சோழீசர் மல்லை வியன்சிலம்பில்
இன்னோ மெந்தனைக் காணாமற் போயெங் கிருந்தனையே.

22. கனை வியந்துரைத்தல்-

 எங்கு சென்றாய் என வினவிய பாங்கிக்குத் தலைவி சுனையாடப் போயிருந்தேன் எனவும், பாங்கி இங்ஙனம் செய்த சுனை எவ்விடத்தில் என்று சுனை வியந்துரைத்தல்.

நோக்கிய னீலம் சிவப்பா கவுமின் னுவல்பவளம்
போக்கி வழங்கு தரளம தாகவும் பூங்கமலத்
தூக்கிய பாதத்தர் சோழீசர் மல்லைச் சுடர்க்கிரிமேல்
ஆக்கிய பூஞ்சுனை எங்கே குடைந்தனை ஆரமுதே.

23.  வேழம் வினாதல்

- இது இருவருமுள்வழி வன் வரவுணர்தலின் பாற்படும்.

   
தலைவியுந் தானு மொருங்கிருந்த விடத்தில் தலைவன் தனித்துவரப் பாங்கிகண்டு அதனானே இருவருக்கும் கலப்புண்மை யறிதல். அதன் விரி வேழம் வினாதல் முதலியன.பாங்கியுந் தலைவியுந் தனித்திருக்கு மிடத்துத் தலைவன் தரங்கனில்லாமல் தனித்துச் சென்று யான் துரத்தி வந்த அனையொன்று இங்கே வந்ததோ எனல்.

கருதி யிவன்கொல் லெனக்கஞ்சன் விட்ட களிற்றுமருப்
பொருதிகி ரிக்கைத் திருமா லொசித்தன போலலிங்ஙன்
சுருதி மணந்திடுஞ் சோழீசர் மல்லைச் சுடர்க்கிரியீர்
குருதி புகுக்க வரக்கண்ட தோவொரு குஞ்சரமே.

24.  எதிர்மொழி கொடுத்தல்   

பாங்கி தலைவன் வினாவுக்கு விடை கூறுதல்.

பொருந்தும்பி யென்னை வினாவுகி றீர்விந்தை புந்தி கல்வி
தருந்தும்பி யொன்றறி வோமது வன்றித் தனிவிடத்தை
அருந்தும் பிரான்மல்லைச் சோழீச லிங்கர் அணிவரையில்
கருந்தும்பி வேணது கண்டோமின் னார்குழற் காட்டிடத்தே.

25.  பிறை தொழுகென்றல்

 பாங்கி வானிற் பிறை சந்திரனைக் காட்டித் தொழுது நின்று தலைவியை நோக்கி """"நீயுமிதனைத் தொழுவாயாக"""" வென்று கூறி அவளது புணர்ச்சி நிலையை யறிதல். கன்னியராயிற் பிறை தொழுவாதிற் கலந்தவராயின் பிறை தொழார். இது பாங்கியின் ஐயந் தீர்தற் குரியதாம்.

சுரும்பிறை யாநிற்குந் தேன்மலர்ச் சோலைகள் சூழமல்லை
விரும்பிறை முக்கண்ணர் சோழீச லிங்கர் விழிக்கனலால்
கரும்பிறை யோனை முடித்தோன் முடிக்குங் கதிர்முடிமேல்
வரும்பிறை காணணங் காய்வணங் காய்பவ மாறுதற்கே.

10.  பாங்கியிற் கூட்டம்


   
பாங்கியாற் கூட்டுவிக்கத் தலைவன் தலைவியைக் கூடும் கூட்டம். மேல்வருவன இதன்விரி.

26.  தலைவன் உட்கோள் சாற்றல்

- தலைவன் தான் தன்னுள்ளத்திற் கொண்ட காதலைப் பாங்கிக்குக் கூறுதல்.

முப்போதும் போற்றி வணங்கடி யாருக்கு முத்திதரும்
கைப்போ தகவுரிச் சோழீசர் மல்லைக் கனகவெற்பின்
செப்போது மென்முலை யீர்முகம் பார்த்தொன்று செப்பினிரால்
எப்போது முங்கட் கடியேன் அடிமை யெழுதிக்கொள்ளே.

27.  பாங்கி குலமுறை கிளத்தல்

- தலைவன் இவ்வாறு கூறியதற்குப் பாங்கி குல முறைமையால் ஒவ்வாதெனல்.

கோதில் இராச குலமன்னன் நீகுற மாதிவ*ளிப்
போதினி தாரம் புனைபவன் நீசங்கு பூண்பதிவன்
ஏதிலு மல்லைப் பதியினில் வாழுஞ்சோ ழீசர்வெற்பில்
நீதிய தல்ல வுனக்கிந்த மாற்ற நெடுந்தகையே.

28.  தலைவன் தலைவியை மேம்பட உயர்த்தல்;  

உயர்த்தல் - உயர்த்திக் கூறுதல், மேம்படுத்திச் சொல்லுதல்.

வந்தே யுலவு மலைக்குற வாணர் மகளிரென்றால்
தொந்தேறு மின்பங் குறைந்திடு மோமலர்க் கொன்றையுடன்
இந்தே  முடித்திடு மல்லையில் வாழுஞ்சோ ழீசர்வெற்பில்
செந்தே னெவிடத் திருந்தாலும் உண்டிடத் தித்திக்குமே

29.  பேதைமையூட்டல்

- பாங்கி தலைவியின் அறியாமையை மனங்கொள்ளும்படி தலைவனுக்குக் கூறுதல்.

வீங்காத் தனமும் விரகங்கொள் ளாத விழியுமலர்
தூங்காத கூந்தலும் ஆகிய பேதைக்குத் துய்யதமிழ்
நீங்காத மல்லையில் சோழீச லிங்கர் நெடுங்கிரிமேல்
வாங்காத காதல்கொண் டாய்மன்ன வாஉன் மதியின்மையே

30.  தலைவன் தலைவியை உயர்த்தல்

- தலைவி பேதைத் தன்மையுடையாள் என்ற பாங்கிக்குத் தலைவன் தலைவி மூதறிவுடையாள் என்று உயர்த்திக் கூறுதல்.

ஆயும் கலைகள் அறு த்து நாலும் அறிவித்தென்னைத்
தோயும் அணங்கினைப் பேதையென் றாய்தொடு வேளைக்கண்ணால்
காயும் கனல்விழிச் சோழீசர் மல்லைக் கனகவெற்பிற்
தீயும் விடமும் பகையும் சிறிதல தேன்மொழியே.

31. மடலே பொருளென மதித்தல்

-  -இரந்து குறை பெறாது வருந்திய தலைவன் தலைவியைப் பெறுதற்குப் பனைமடலாற் செய்த குதிரையின் மேலேறி வீதியிற் போதலே தக்கதென மதித்துக் கூறுதல் (எண்ணுதல்)

எவையெவை சொல்லினு நீரிரங் காதிருந்த தீரினியுன்
அவையவந் தன்னை மடலினில் தீட்டி அடியர்நெஞ்சில்
நவையணு காதருள் சோழீசர் மல்லைநன் னாட்டிலுங்கள்
சவையிடை நாளை வருவேன் உமக்கொரு தாழ்வுகொண்டே.

32.  எழுதரி தென்றல்

- தலைவன் மடல் ஏறுவேன் எனக் கூறக்கேட்ட பாங்கி படமெழுதிய பின்னன்றோ மடலேறுவது தலைவியின் அவயங்கள் படத்தில் எழுதுதற்கரியன என்று தலைவனுக்குக் கூறுதல்.

விழியே யெழுதிலும் தோளே யெழுதிலும் மெய்யிலுந்திச்
சுழியே யெழுதிலும் மார்பே யெழிதிலும் தொன்மறையின்
வழியே     விளங்கிய சோழீசர் மல்லை வரையனையார்
மொழியே யெழுதுவை யோவழு வாமல் முடிமன்னனே

33.  மடலொளி மயக்கம்

- இது தலைமகன் தன்னைத் தானே புகழ்தல் என்னும் துறைப்பொருள் அமைந்தது.    யான் மடலின் இம்மாதின் உருவம் எழுதத் தொடங்கின பொழுதே சோழீசரைக் கண் முன்னிலையிற் கண்டேன். அவர் திருவருளால் மயக்கம் தீர எழுதுவேன் எனல்.

மால்தான் தணிய வரையவென் றேட்டிலிம் மாதுதன்னைச்
சேறான தூரிகை தீண்டின மட்டினில் செஞ்சடைவெண்
ணீறான மேனி யெருக்கலர் பூளை நிறையவணிந்
துhறார் சடைமல்லைச் சோழீ சரைக்கண் டறிந்தனமே

34.  நீ வரை கென்றல்-

 - பாங்கி தலைவனை நோக்கி உலகியல் முறைப்படி மணத்திற்குரிய பொன்னும் மணியும் பிற அணிகலனுந்தந்து நுமரும் எமரும் காணச் சான்றோர் முன்னிலையில் மணந்துகொள்க எனக் கூறுதல்.

ஈரஞ் சுகமுள னார்பாக்க மெய்தி யிருநிதிய
மாரஞ் சுகம்படத் தந்தேn மணக்கி லதுநலம்விண்
ணாரஞ் சுகம்புனை சோழீசர் மல்லைநன் னாட்டிலிந்தச்
சோரஞ் சுகமல்லப் பாரஞ் சுகச்சொல்லைத் தோய்வதற்கே.

35.  தலைவன் பாங்கியொடு வருந்தல்

- பாங்கி கூறியதைக் கேட்ட தலைவன் தலைவி தன்னை வருத்தியது கூறி வருந்துதல்.

உழைகட் டியகரச் சோழீசர் மல்லை யுயர்வரைமேல்
தழைகட் டியவனஞ் சென்றேன் ஒருமயில் தன்னைக்கண்டேன்
கழைகட் டியசிலைக் காமன்எய் தான்அந்தக் காயத்துக்கா
யிழைகட்டி னாலன்றி யாறாதெங் காயமிங் கென்னுயிரே.

36.  உண்டென மறுத்தல்-

 தலைவன் கையுறையாகக் கொண்டு வந்த முத்துமாலையைக் காட்சிப் பொருளாகத் தலைவிக்குக் கொடுக்குமாறு கூறவும் பாங்கி இம்முத்துமாலை எம்நாட்டிலுள்ளதென ஏற்பதற்கு மறுத்தல்.

படிபுடை சூழும் கடலில் உலாவும் பணிலமணி
பிடியும்இந் தாரும் எனச்சொல்லி னீர்விப் பிரர்விடுத்த
அடல்மழு வேந்திய சோழீசர் மல்லை வயலிற் செந்நெல்
முடிநடு மள்ள ரளப்பார் வலம்புரி முத்தங்களே.

37.
 கல்லைப் பதித்ததன் மேல்தங்கம் வார்த்துக் கனகமணி
தொல்லைப் பதினொரு கோடிதந் தாலும் தொடேமெமக்கு
மல்லைப் பதிவரு சோழீச லிங்கர் வகுத்தமுன்னாள்
எல்லைப் பதிவுவெண் சங்கொடு கானில் இபமருப்பே.

38. தலைவன் பாங்கியைப் பழித்தல்

பாங்கி கையுறையை மறுத்தலைச் சகியாத தலைவன் அவளைப் பழித்துக் கூறுதல்.

மத்தளை யுந்தயிர் போலுடைந் தெந்தன் மனங்குமுறிப்
பித்தளை யும்படி கண்டே யிருந்தும பிணைமுனின் றீர்
முத்தளை சூழ்மல்லைச் சோழீசர் வெற்பின் மொழியுமெந்தன்
கைத்தளை வாங்குதற் கித்தனை வேணுமோ கண்ணளியே.

39.  தலைவி கையுறை யேற்றமை பாங்கி தலைவற் குரைத்தல்  

-     கையுறை -காட்சிப் பொருள். தலைவன் வருந்தியதை யறிந்த பாங்கி அவன் கொடுத்த கையுறையை வாங்கித் தலைவியை யேற்கும்படி செய்து அவளிசைவைத் தலைவனுக்குச் சொல்லுதல்.

திருமாலைக் கொன்றையர் சோழீசர் மல்லைச் சிலம்பிடைநீ
திருமாலை செய்த தகவெளி தேசெந் தழலெழுந்து
பொருமாலை நீக்கிச் சேருவேள் சினந்தனைப் போக்கிநெஞ்சில்
வருமாலை யாற்றித் திருமாலை யாற்றின மன்னவனே

40.  புணர்ச்சியின் மகிழ்தல்

- பாங்கி கையுறையேற்ற தலைவியை ஒரு குறியிடத்தில் நிறுத்தித் தலைவனுக்குக் குறிப்பாட்காட்டி செல்லவும் தலைவன் தலைமகளை யெதிர்ப் பட்டுப் புணர்ந்து மகிழ்தல்.

பணைக்குங் குமக்கொங்கை மீதெந்த னாகம் பரிமளிக்க
அணைக்கும் பொழுதந்த லீலாவி நோதத் தடைவதெல்லாம்
இணைக்குங் கமல மலர்ப்பாதர் மல்லைச்சோ ழீசர்வெற்பில்
துணைக்குந் தளக்குழை யாள்தந்த ஆனந்தஞ் சொல்லரிதே.

41.  விருந்து விலக்கல்-

 செல்வேனென்ற தலைவனை நோக்கி எம்மூர்க்கு வந்திருந்து விருந்துண்டு போமெனப் பாங்கி தலைவன் சொல்லுதலை விலக்குதல்.

மாலுண் டுமிழ்ந்தமண் ணாளுமன் னாவெம் மனையினின்மான்
பாலுண்டு தேனுண்டு செந்தினை மாவுண்டு பைஞ்சுனையில்
சேலுண்டு நீருண்டு சோழீசர் மல்லைச் சிலம்பில் தென்றல்
காலுண் டுமிழ்மணச் சோலையுண் டாறுண்டு காவலனே.

42.  விருந்திறை விரும்பல் -

 விருந்தைத் தலைவன் விரும்புதல்.

வாசிய தானமின் னேதினை மாவுடன் மான்தசையைக்
கூசி யெனக்கிங் களிப்பதென்றீர்*நன்று கூறுபுகழ்
வீசிய மல்லையிற் சோழீச லிங்கர் விரும்புதசை
ஆசையி னாலல்ல வோஆத்தி ஸ்ரீ மாலை யணிந்ததுவே.

 11. ஒருசார் பகற்குறி.


ஒரு கூற்றுப் பகற்குறி

   
தலைவன் மறுநாள் தன் வேட்கை மிகுதியால் பகற்குறியிடத்து வந்து நிற்கத் தலைவியைப் பாங்கி குறியிடத்துச் செலுத்தாது மறுத்துக்கூறத் தலைவன் வருந்திப் போதல்.

   
பகற்குறியிடத்து ஒருவரையொருவர் எய்தாமல் தலைவனும் தலைவியும் வருந்துதல் ஒருசார் பகற்குறியென்பர்.

 12.  பகற்குறியிடையீடு


   
இடையீடு-தடங்கல். பகற்குறிக்கண் வந்த தலைமகன் குறியிடத்துச் செல்லாது இடையீடு பட்டுப் போதல்.

   
பகற்குறிக்கு இடையிற்சில தடைகள் நிகழ்தல் பகற்குறியிடையீடு என்பர்.

43.  பாங்கி யாடிடம் விடுத்துக் கொண்ட கறல்-

தலைவியைப் பாங்கி விளையாடுமிடங்களை விட்டு நீக்கிக் கொண்டு தம்மூர்க்குச் செல்லுதல்.

அன்னனைச் சென்னிகொய் சொழீசர் மல்லைவெற் பன்பர்வந்து
மின்னனை யாரெங் கெனவுமைக் கேட்கில் விழிபூபுனலால்
என்னனை `நாரியைக் காட்டியெம் மூர்க்கெய்த வேசொலுங்கா
மன்னனை நேரெனுங் கண்ணாய தோகை மயிலினமே.

44.  குறுந்தொடி வாழுமூர் நோக்கி மதிமயங்கல்-

தலைவி வாழும் ஊரை நோக்கித் தலைவன் மதிமயங்கல்.

பொரநீட்டு வாளெயிற் றின்னா வாயிற் பொருந்துமணி
கரநீட்டி வாங்கும் படியொக்கு மேயன்று கானனெச்சில்
தரநீட்ட வாங்கிய சோழீசர் மல்லைத் தடஞ்சிலம்பில்
அரநீட்டிக் கண்ணியைச் சீ¦¦றுhர் புகுந்தின் றணைவதுவே.

 13. இரவுக் குறி


அஃதாவது - தலைவன் தலைவியை அடையாளமாகக் குறித்த இடத்தில் கூடுதல்.

 14. இரவுக் குறியிடையீடு


   
அஃதாவது இரவுக் குறிக்கண் வந்த தலைமகன் அல்ல குறிப்பிடுதலால் இடையீடு பட்டுப்போதல் இடையீடு படுதல்-குறிதவறுதல். இரவுக் குறிக்கண் தடைநிகழ்தல்; தலைவி குறியிடஞ் செல்வதற்கியலாமல் நேரும். இடையூறுகள் நாள் துஞ்சாமை முதலியன.

45.  நாய் துஞ்சாமை

- தாய் உறங்கிய பின் ஊரில் உள்ள நாய் உறங்காதிருத்தலைக் குறித்துத் தலைவி பாங்கியோடு சொல்லா நிற்றல்.

மடுப்பாலி சூழ்மல்லைச் சோழீச லிங்கர் வரையிறைவர்
நடுப்பாதி நேரம் வரவைத் தவிர்த்தது நாவலர்க்குக்
கொடுப்பார் அருகிருந் தேகுற்றம் பேசிக் கொடாதபடி
தடுப்பாரை யொத்தது ஞாளியின் வாயெழுஞ் சத்தங்களே.

46. காவலர் கடுகுதல்  

- நாயுரங்கினும் நகர் காவலர் பறையடித்து ஊர் சுற்றி வருதலைக் கூறுதல். கடுகி-விரைந்து.

மட்டுண்ட கொன்றைச் சடையாளர் பூவுடன் வானுலகம்
எட்டும் புகழ்மல்லைச் சோழீச லிங்கர் இருஞ்சிலம்பில்
தெட்டுங் கவட்டுரைக் காவலர் சேருவர் இன்னகரில்
கொட்டுந் துடிக்குத் துடிக்குநெஞ் சேநந்தங் கொற்றவரே.

47.  கோழி குரல் காட்டல்

இருவர்க்கும் இடையூறாய்க் கோழிகள் கூவா நிற்றல் பற்றி, அவற்றை முன்னிலையாக்கித் தலைவன் கூறுதல்.

துடியார் கரத்தினர் சோழீசர் மல்லைச் சுடர்க்கிரிமேல்
விடியாமல் வேண்டிக் கலந்தணை வேனை விலக்குதற்கோ
கடியார் கடப்பந் தொடையாளர் பன்னிரு கையருக்குங்
கொடியாய் எனக்குங் கொடிதாய் மனையிடை கூவினையே.

48.  அல்லகுறி யலர்க்குறி  

- அல்லகுறி-குறி தவறிய இடம், அலர்க்குறி-மலரைக் குறியாக வைத்தல். இரவுக்குறியிடத்து¦த தலைவி அடையாளமிட்ட இடந்தவறியதால் தலைவனைக் காணாது வருந்துதலும் தலைவன் தான் குறிக்கப்பட்ட இடத்திலிருந்து தலைவி அல்ல குறியடைந்து வாராமையால் தலைவன் புலர்ந்து தன்னூர்க்குப் போதலும் நிகழும் இருளூ விடிந்தபின் தலைவி குறியிடத்து வந்து தலைவனில்லாத வெற்றிடத்தைக் (வறுங்களம்) கண்டு வருந்திஇரவுக் குறியில் நிகழ்ந்ததை மலர் அடையாளத்தால் தெரிந்து தோழிக்குச் சொல்வள். இது அல்லகுறி யலர்க்குறி யெனப்படும்.

செந்தே னனைய மொழியாய்புன் னாகஞ் சினந்தெழுந்தோர்
வந்தே யடிக்கப் பயத்தோ டொழிந்தன வாலிதுபார
இந்தே முடித்தவர் சோழீசர் மல்லை யிமயவெற்பில்
சந்தேக மொன்று வரைமேன் முறைத்தசெந் தாமரை.

49.  தலைவியைக் காண்டல்-

  மறுநாள் இரவுக்குறிக்கண் தலைவன் தலைவியைக் காணுதல்.

வருவேடர் போற்றிய சோழீசர் மல்லை வரையிடத்திற்
பெருவே தனையின் மயலான வென்னைப் பெருங்கணையிற்
பொருவேள் விலகவிக் கங்குல்வந்த தீர்கஞ்சப் போதுமனைத்
திருவே கதிரவ னல்லாமல் யாவர் திறந்தவரே

 15. வரைவு வேட்கை


   
அஃதாவது தலைவன் வரவு இடையீடு பட்டதனால் தலைவி மணஞ் செய்து கொள்ள விரும்புதல். அஃது அச்சம் உவர்த்தல், ஆற்றாமை என்னும் மூன்று வகையால் நிகழும்.

 16. வரைவு கடாதல்


பாங்கி தலைவனுடன் வரைவு கடாதல்- தலைவியை மணஞ்செய்து கொள்ளும்படி பாங்கி வற்புறுத்திக் கூறல். விரைவில் மணஞ்செய்து கொள்ளுதற்குக் காரணமாக வெறி விலக்கலும், (வெறியச்சுறுத்தலும்) நெறியினதருமை கூறலும் (ஆறு பார்த்து¦றற அச்சக் கிளவியும்) கூறுகின்றாள்.

50.  வெறிவிலக்கல்(வெறியச்சுறுத்தல்) -

     தலைவியின் உடல் (மேனி) வேறுபாடு கண்ட தோழியரும் செவிலித் தாயாரும் நற்றாயரும் இவளைப் போய் தீண்டிற்றே வென்று தெய்வங்களைப் பராவுதற்கு வெறியாடுவித்தலை மேற்கொண்டனா. இதனையறிந்த தலைவி அஞ்சுகின்றாள். ஆதலின் தலைவியை விரைவில் மணஞ்செய்து கொண்டு வெறியாடல் நிகழாவண்ணம் அவளது அச்சத்தைப் போக்கவேண்டுமென்று பாங்கி தலைவியிடம் கூறுதல்.

பறுமையர் அன்னையர் அன்னதெய் வங்கள் பராவுவதென்?
நறுமைய தான குழலாருந் தாயரும் நம்மையிம்மை
மறுமையும் வாழ்விக்குஞ் சோழீச லிங்கர்தம் மல்லைவெற்பில்
சிறுமைய தேதுக் கறிகின்றி ¬லுருந் திருவுளமே.

51.  நெயின தருமை கூறல்

- ஆறு பார்த்துற்ற அச்சங்கூறுதல். வரும் வழியைக் கருதி அவ்வழியில் திரிதரும் கொடிய விலங்கு முதலியவற்றால் தோன்றும் பயத்தைத் தோழி தலைவனுக்குக் கூறுதல்.

கரியும் அரியும் கொடுங்கோலு நீங்கிக் கலந்திட்டடொன்றாய்த்
திரியும் இருளுக்கெவ் வாறுவந்த தீர்திசை நான்முகனும்
அரியும் பரவிய சோழீசர் மல்லை யணிவரைமேல்
எரியுஞ்     சுடர்வடி வேற்கரத் தேந்து மிறையவனே.

52.  புகழ்தல்-  

கொடிய வழியில் எவ்வாறு வந்தீர் என்னும் பாங்கிக்குத் தலைவியைக் கூடுதலால் வரும் இன்பம் பொன்னுலக இன்பத்திலும் மாவிந்த இன்பத்திலும் சிறந்ததாகலின் கொடிய விலங்கு முதலியவற்றான் வரும் துன்பத்தை நோக்காது வந்தேன் என்னும் குறிப்புத் தோன்றத் தலைவன் தலைவியைப் புகழ்தல்.

ஊடிய மோகங் கரையேறக் கண்சிவப் புற்றகொங்கை
நாடி யலைந்து குழையப் புலிமுனி நாகருய்ய
ஆடிய பாதத்தர் சோழீசர் மல்லை யணிவரையார்
கூடிய வின்பத்துக் கொவ்வாது சொர்க்கம்வை குந்தமுமே.

 

17. ஒருவழித்தணத்தல்


 
மேற்கூறிய பாங்கியோடு வரைதற்குடன்பட்ட தலைவன் தன்னூர்க் கொருவழி போய் வருகிறேனென்று போதல்

53.  பிரிவுழிக்கலங்கல்-

 தலைவன் பொருள் காரணமாகப் பிரியும் பொழுது தலைமகளை விட்டு எவ்வாறு வாழ்வேனென்று உள்ளங் கலங்குதல்.

காந்தளங் கையும் வளையும் புளகக் கனதனமும்
சேந்தவ ராகம் விளைகின்ற கொன்றையுஞ் செஞ்சடைமேல்
பாந்தளுஞ் சூடிய சோழீசர் மல்லைப் பதியினில்வாழ்
மாந்தளிர் மேனி யுடையாளை விட்டெங்ஙன் வாழ்வதுவே.

 20. அறத்தொடு நிற்றல்


   
அதாவது களவை முறையே வெளிப்படுத்தி நிற்றல். துலைவி பாங்கி செவிலிநற்றாய் தன்னையர் ஆகியோர் முறையே ஒருவர்க்கொருவர் அறத்தொடு நிற்பர்.

 21. உடன்போக்கு


   
தலைவன் தலைவியைத் தன்னூர்க்குத்  தன்னுடன் கொண்டு போதல்.

54.  வைகிருள் விடுத்தல்-

 இருள்நிறைந்த இடையாமத்தில் பாங்கி தலைவியைத் தலைவனுடன் விடுத்தல்.

வேதவர் போற்றிசெய் ஆதவன் தோன்றி வெளிப்படுமுன்
நீதிய வாகி யொருகை படாவகை நின்னகர்க்குப்
பெதையொர் பாகத்தர் சொழீசர் மல்லைப் பிறங்கலிவெம்
மாதையிங் காரு மறியாமற் கொண்டுசெல் மன்னவனே.

55.  தலைவன் மறுத்தல்

- இங்கு காவல் அதிகப்படுதலால் தலைவியை உன்னூருக்கு உன்னுடன் கொண்டு செவ்வாயெனக் கூறிய பாங்கிக்குத் தலைவன் தலைவி பாலைநிலழெயிலுள்ள கல்முரம்பில் நடக்கச் சகியாள் எனக் கூறுதல்.

கண்மேற் பதிக்க வுடனே சிவந்திடுங் கான்முரம்பின்
மண்மேன் மிதிக்கப் பொறுத்திடு மோமதி வாழ்சடையில்
விண்மேல் நதிவைத்த சோழீசர் மல்லை வியன்சிலம்பிற்
பெண்மேல் பழியெமக் காமோ மொழிந்தருள் பெண்கொடியே.

 22. கற்பொடு புணர்ந்த கௌவை


தலைவி தலைவனது உடைமையாய்க் கற்பொடு கூடிய அதனை அயலார் விராய சேரியர் பலருமறிதல். அது செவிலி புலம்பல், நற்றாய் புலம்பல், மனை மருட்சி, (நற்றாய் மருட்சி) கண்டோரிரக்கம், செவிலி பின்தேடிச் செல்லல் என ஐந்து வகைப்படும்.

 23. மீட்சி


   
அதாவது மீண்டு வருதல். செவிலி புதல்வியைக் காணாது மீண்டு வருதலும் உடன் போய தலைவனுந் தலைவியும் மீண்டு வருதலும் அடங்கப் பொதுப்பட மீட்சி யென்றார். அது செவிலி சேணகன்றமை, செவிலிதாய்க் குணர்த்தல் முதல் நற்றாய் கேட்ட வனுளங் கோள் வேலனைவினாதல் ஈறாகிய ஆறு விரிகளையுடையனவாய் வரும்.

56.  அச்சத் தன்மைக் கச்சமுற்று இரங்கல்

- தலைமகள் தலைமகனுடன் போனதைச் செவிலியால் அறிந்த நற்றாய் தலைவியது அஞ்சுந் தன்மையை யறிந்து வருந்தா நிற்றல்.

விரைகின்ற தாளுங் கரமு மருப்பும் விழியுஞ்சுவர்
வரைகின்ற வேழங்கண் டேயஞ்சு மேவரை யாமனன்னூல்
இரைகின்ற மல்லையிற் சோழீசர் வெற்பில் இலங்கிழையார்
கரைகின்ற மும்மத வேழங்கண்டாலுயிர் காண்பரிதே.

57.  போக்குடன் படுத்தல்-  

பாங்கி தலைவியை யுடன் கூட்டிப் போகுமாறு தலைவனையுடன் படுத்தல்.

சொரிதழன் மூளுங் கொடியவெம் பாலைச் சுரங்கடக்க
அரிதது நீவிரிங் கென்னசொன் னீரறு காத்திபுனை
விரிசடை வேணியர் சோழீசர் மல்லையில் வெற்பிலுன்னைப்
பிhதலிற் பற்றச் சுடுமோவெம் பாலை பெருந்தகையே.

58.  சுரமெளிதென்றல்-

 தலைவிக்குப் பாலை நிலத்தின் கொடுமை கூறிய பாங்கி தலைவனை நோக்கிப் பாலைநிலம் நின்னுடன் செல்லுதலின் தலைவி கடத்தற்கு எளிதாமெனக் கூறுதல்.

இறைநீ பிரிந்த வனையும் வெம்பாலையும் உன்புயமும்
முறைநீள் முரம்பும் நிறைமல ரேவுயர் வேதநன்னூல்
பொறைநீளு மல்லையிற் சோழீச லிங்கர் பொருப்பிடத்திற்
கறைநீடு வேல்விழிக் குன்னுடன்போதல் கருத்துநன்றே.

59.  கையடை கொடுத்தல்-

 பாங்கி தலைவனுக்குத் தலைவியை அடைக்கலமாகக் கொடுத்தல். கையடை-அடைக்கலம்.

விண்ணின் வடிவுள சோழீசர் மல்லை வியன்சிலம்பில்
*
எண்ணிண் கலைக்குப் பொருந்திய மானிவள் எந்தனிரு
கண்ணின் கருமணி மாதிதுன் காதல் கலந்தகலாப்
பெண்ணும் பெருந்திரு வையாகை யாரப் பிடித்தருளே.

60.  உடன்போக்கு-

 தலைவன் தலைவியைத்தன்னுடன் பாலை நிலத்தில் மெல்லக் கொண்டு செல்லுதல்.

புத்தமு தான மொழீயீரிக் காவினிற் போகுதும்யாம்
மெத்தன வாரும் முரம்பழுந் தாமெய்மை மீதிற்கொளும்
உத்தமர் போற்றிய சோழீசர் மல்லை யுயர்வரைமேல்
நித்தில மாலை நிலவால் இருள்தனை நீக்கினவே.

 9.
கையடை கொடுத்தல்- பாங்கி தலைவனுக்குத் தலைவியை அடைக்கலமாகக் கொடுத்தல். கையடை-அடைக்கலம்.

61.  கண்டோரிரக்கம்

- தலைவனையுந் தலைவியையுங் கண்டோர் வருந்திக் கூறுதல்.

உலைவா யுருகுசெம் பொன்போல வெங்கதி ரோன்மழுங்கி
மலைவா யழுந்துதல் கண்டே யிருந்துங்கை மானுடனே
கொலைவாய் மழுப்படைச் சோழீசர் மல்லையிற் கொற்றவசெஞ்
சிலைவா ணுதலுடன் எவ்வாறு நீதனிச் செல்லுவதே.

62.  தன்னூர் அடைந்தமை தலைவன் சாற்றல்-

 தலைவன் தன்பதியை யடைந்ததைத் தலைவிக்குச் சொல்லுதல்.

நூபுர மென்பத மின்னே சுரத்தின் நுழைந்துநடந்
தேபுரம் வாடி யறமெலிந் தீரினி யேவிடைகாண்
மாபுரஞ் செற்றவர் சோழீசர் மல்லை வரையிலெம்மூர்க்
கோபுர மும்மணி மேடையு நீண்ட கொடிகளுமே.

63. தன்மனை வரைதல்

63.   அஃதாவது உடன்போய் மீண்டு வந்த தலைவன் தலைவியைத் தன்னூர்க்குக் கூட்டிக்கொண்டு போய்த்தன் மனையின் கண் வரைதல்.

கொழுவாரி மன்னரில் சொல்லா விழிய குலத்தவர்கள்
தொழுவா கமப்பொருள் மல்லையில் வாழுஞ்சோ ழீசர்வெற்பா
எழுவாரி சூழ்புவி யெல்லாருங் காண விராசநெறி
வழுவாமற் காத்தரு ளப்படி மாதை மணந்தனனே.

64.  செவிலி தேடல்-

  விடியற்காலையில் தலைமகளைப் படுக்கையிற் காணாது பாங்கியருடன் செவிலித் தாயாரும் தேடுதல்.

பாங்கியுந் தாயரும் பாயலிற் nடிறத்தம் பாலகியை
நீங்கிய வாறென்கொல் லென்றே திகைத்து நெடிதுயிர்த்தே
ஓங்கிய வான்புகழ் சோழீச லிங்கர் உயர்வரைமேல்
ஈங்கிது காரண மென்றடி தேடி யிரங்கினரே.

65.  பாங்கியை வினாவுதல்-

 என் மகள் உன்னையறியாமல் எங்கே போயினாளென்று செவிலி பாங்கியைக் கேட்டல்.

தாயறி யாத மகவுமுண் டோவிந்தத் தாரணியில்
ஈயறி யாதசெந் தேனுமண் டோமறை யெப்பொழுது
மாயறி வாரெணுஞ் சோழீசர் மல்லை அணிவரையில்
நீயறி யாவகை போவதெவ் வாறிந்த நேரிழையே

66.  பூத்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்-

 அறத்தொடு நிற்றல் என்பது களவை வெளிப்படுத்தி நிற்றல். ஊண்மை கூறுதல். கற்பின்றலை நிற்ல், தக்கதைச் சொல்லி நிற்றல் என்னும் பொருளில் வருவது. தலைவி தன்னுடைய இளமைப் பருவத்தில் தலைவன் தன் கையிற் பொருந்தும்படி பூமாலை யொன்றைத் தந்தனன். அதுமுதல் தலைவி தலைவனை நினைந்து வருந்திக் கொண்டிருந்தாள் என்பதன் வழியாகப் பாங்கி செவிலிக்குக் களவை வெளிப்படுத்துதல்.

பெருந்திசை நான்கும் புகழ்மல்லை வாழ்வு பெருகநன்றாய்
இருந்தருள் காரணர் சோழீச லிங்கர் இருஞ்சிலம்பில்
பொரு¦நதிய மாலைப் பொழுதொரு வேந்தெம் புனத்தில்வந்து
திருந்திய மாலை தனையளித் தார்நந் திருவினுக்கே.

67. பு  னல்தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்-

 மலைச் சுனையில் நீருண் வேட்கையால் சென்றவள் நீரினுள் மூழ்கி வருந்தா நிற்கையில் ஒரு வேந்தன் அவளை யெடுத்துக் கரையேற்றினான். இதனால் இவள் அவனுக்குரியளாயினாளெனக் களவை வெளிப்படுத்துதல்.

பெண்ணீர தானவர் சோழீசர் மல்லைப் பிரான்றன்வெற்பில்
உண்ணீர் உகந்ததி னூடே படிந்தனள் ஓடிவந்து
மண்ணீர்மை வேந்தன் எடுத்தான் எடாவிடில் வாழன்னையே
கண்ணீர் எமக்குவெந் நீராகுநெஞ்சுங் கரைந்திடுமே.

68.  களிறு தரு புணர்ச்சியால் அறத்தொடு நிற்றல்-

மதயானை யொன்றைக் கண்டு தலைவி யஞ்சி யலறியபொழுது ஒருவன் அக்களிற்றை மிரட்டிப் பின் போகச் செய்து தலைவியை மீட்டானெனக் களவை வெளிப்படுத்தல்.

படநாக மல்லைப் பதிப்பூ சுரனைமுற் பற்றவவன்
விடநாக பூடணர் சோழீச லிங்கர்முன் மீட்டபண்பாய்த்
தொடர்நாகங் கண்டிவ ளஞ்சவஞ் சாயெனச் சொல்லியந்தக்
கடநாகந் தன்னைப்பின் மீட்டானப் போதொரு காவலனே.

69.  செவிலி சுரத்தியல் புரைத்தல்-

 தலைவி, களவாகத் தலைவனுடன் சென்றாள் என்பதைப் பாங்கியால் அறிந்த செவிலித்தாய் கொடிய பாலை நிலத்தை இருவரும் எவ்வாறு கடந்தனரோ வென்று பாலையின் தன்மை கூறுதல்.

எரியுங் கனன்மழுச் சோழீச லிங்கர் எழில்வரைமேல்
திரியுங் கதிரவன் நில்லா தயருஞ் செகங்குழையச்
சொரியுங் கனமும் பயங்கொண்டு நீங்குந் துணைமருப்புக்
கரியுங் கரியுஞ் சுரத்தை எவ்வாறு கடந்தனரே.

70. ஆற்றிடை முக்கோற் பகவரை வினாதல்-

 செவிலி தன்மகளைத் தேடிப் பாலைநில வழியில் செல்லும் பொழுது வழியில் எதிர்ப்பட்ட திரி தண்டத்தையுடைய அந்தணரை வினாவுதல்.

பொற்கலை நீத்து மணிவடம் பூண்டு பொடியணிந்து
வற்கலை சாத்தி வரும்அந்த ணீரொரு மன்னர்பின்னே
சொற்கலை யாய்ந்திடு மல்லையில் வாழுஞ்சோ ழீசர்முடி
யிற்கலை மாமதி வாணுதற் போதல் இயம்பிடுமே.

71.  எதிர்மொழி கொடுத்தல்

- முற்கூறிய அந்தணர்கள் செவிலியின் வினாவிற்குத் தலைமகளும் தலைமகனும் வழியில் செல்லுதலைக் கண்டோமென்று விடை சொல்லுதல்.

கோலுஞ் சிலைகையில் ஏந்தி மடந்தையைக் கூட்டிச்செல்ல
மாலுந் திருவு மனவிருந் தோம்வள மேவுதிக்கு
நாலும் புகல்மல்லைச் சோழீச லிங்கர் நளினவெற்பில்
வேலுந் தியகண்ணி சென்றாள்கண் டோமினி மீளன்னையே.

72.  தெய்வம் போற்றல்-

 வழியில் புலி முதலியவைகள் ஊறு செய்யாமல் உறவாகவேண்டுமென்றும் செவிலி, தலைவிக்குப் பாலைநிலம் குளிர்ச்சியான மருத நிலமாக ஆக வேண்டுமென்றும் தெய்வத்தைத் துதித்தல்.

உரம்பும் புலியுங் கொடுவேடும் எண்கும் உறவுசெய்ய
முரம்புங் குழுந்தலர் போலாக வேமணி முத்துஞ்சங்கும்
நிரம்பும் வயன்மல்லைச் சோழீச லிங்கர் நெடுங்கிரியில்
வரம்பும் புனலு நிழலுமுண் டாக வழிதொறுமே.

27.  இல்வாழ்க்கை


அஃதாவது தலைவனுந் தலைவியும் இல்லின் கண்ணே வாழுதலைக் கூறுதல். அது கிழவோன் மகிழ்ச்சி, கிழத்தி மகிழ்ச்சி, பாங்கி மகிழ்ச்சி, செவிலி மகிழ்ச்சி யென நான்கு வகைப்படும்.

73. இல்வாழ்க்கை நன்றென்றல்-  

அன்னவர் காதலறிவித்தல் பாங்கியால் தலைவியின் இல்லற வாழ்க்கை மிகவும் நன்றாயிருக்கின்ற தென்றறிந்த செவிலி நற்றாய்க்குத் தலைவனும் தலைவியும் பிரிவின்றி யில்லற வாழ்க்கையை நன்கு நடத்துவார்களெனக் கூறுதல்.

குணந்தாழ்வி லாதன்னை யேயிறை யோனுங் கொடியிடையும்
கணந்தா வியசடைச் சோழீசர் மல்லைக் கனகவெற்பில்
மணந்த    hல் மலரணை மீதே யிருப்பர் மனமுனிவாய்த்
தணந்தா விருவர்தம் நெஞ்சமு மாறித் தரிப்பர்களே.

74.  ஓதற்பிரிவு விலக்கல்-

 ஓதல்-கல்வி, ஓதற் பிரிவுணர்த்திய தலைவனுக்குப் பாங்கி ஓதற்பிரிவு மறுத்தல்.

விடஞ்சே ரயிற்கட் டிருவுன் பிரிவெனில் வீடுமுயிர்
குடஞ்சேரும் என்புபெண் ணாகிய வித்தை கொடுவருவாய்
நடஞ்சேரும் பாதத்தர் சோழீசர் மல்லை நளினவெற்பில்
கடஞ்சேரும் வெள்ளெயிற் றன்நீழற் சீறுங் களிற்றண்ணலே.

75.  தலைவி தலைவன் கொடிமை பாங்கிக் குறைத்தல்

- கொடிமை-கொடிய தன்மை. உன்னைப் பிரியேன் என்ற தலைவர் என்னைப் பிரிந்து சென்றனரென்று தலைவி பாங்கிக்குத் தலைவன் செய்த கொடுமை கூறல்.

சொற்படி கூடு மயிலேயின் றுன்னைத் தொகுத்தினியான்
எப்படிப் போவ தெனச்சொன்ன காதல ரின்றுசில
வைப்படி யார்க்கருள் சோழீசர் மல்லை வரையினிலென்
நெய்ப்படி போல நழுவிக்கொண் டேமெல்ல நீங்கினரே.

76.  தலைவன் தன் மனத்து உவகை கூறல்

- பிரிவின் கண் தலைவன் தலைவியை நினைந்து தன் மனத்தின்கண் தோன்றி மக¨ழ்ச்சி மிகுதி கூறாநிற்றல்.


பலவிற் பனர்புகழ் சோழீசர் மல்லைப் பதியனையார்
நிலவிற் சிறந்த முகமலர்ந் தென்னை நினைத்தபடி
நலவிற் பனமோ டநுராக போக நலம்விளைத்த
கலவிப்     பொருளை மறவாதென் சிந்தையெக் காலமுமே.

77. பாங்கி தலைவியைத் தேற்றல்

- தலைவனது பிரிவினால் வருந்திய தலைவியைக் கார்காலம் தோன்றியவுடன் தலைவர் வந்துவிடுவாரெனப் பாங்கி தேற்றுதல்.

முந்தவே போமவன் தம்பலம் வாங்கி முயங்கிப்பின்னை
வந்தவன் வாயுமிழ் மாதரன் றேமல ரோனுடனே
செந்திரு மால்புகழ் சோழீசர் மல்லைச் சிலம்பிற்சிலை
யந்தரம் வீசிலங் கேதங்கு மோவரு மம்புவிக்கே.

78.  வருவர் மீண்டெனப் பாங்கி வலித்தல்-

 தலைவன் விரைவில் திரும்பி வருவானென்று பாங்கி தலைவியை மீண்டும் வற்புறுத்திக் கூறுதல்.

என்றான் மெலிந்த பிடிக்குப் பசுந்தழை யேந்தித்தந்தி
நின்றா லதுகண்டு நேர்வரன் றோநெடு நேமிசுற்றுங்
குன்றான வில்லினர் சோழீசர் மல்லைக் குவட்டிற்றென்றல்
கன்றா லசையு மருங்கீர் வருவர்நங் காதலரே.

79.  கார் கண்டழுங்கல்-  

கார்ப்பருவம் வந்தும் தலைவர் வாராமையால் தலைவி மனம் நொந்து இரங்குதல்.

காருக்கு முன்வருந் தேரென்று சொன்னநங் காதலந்தந்
தேருக்கு முன்வந்து காரெய்த லாற்றமைச் சேவைசெய்யும்
பேருக்கு வாழ்வருள் சோழீசர் மல்லைப் பிறங்கலினா
னாருக்கென் றிச்சைசொல் வேறொரு சீவனுக் காகவன்றே.

80.  நிமித்தம் போதல்

- தலைவன் விரைந்து வருதற்குரிய நல்ல சகுனத்தைக் கண்டு பாங்கி தலைவிக்குக் கூறுதல்.

கடிமலர்க் கூந்த லணங்கே வருந்துங் கருத்தொழிவாய்
துடியிi    ட தாங்குந் தனத்தே யிறைவரைத் தோய்ந்தருள்வாய்
படிபுகழ் மல்லையிற் சோழீச லிங்கர் பனிவரைமேற்
கொடியிறை போன திசைநோக்கி யெம்மனை கூவியதே.

81.  வலம்புரி கிழத்தி வாழ்த்துதல்-

 தலைவன் ஊதிய வலம்புரிச் சங்கின் ஒலிகேட்ட தலைவி தலைவர் விரைவில் வந்து விடுவாரென்று மகிழ்ந்து வலம்புரியை வாழ்த்துதல்.

முகவான போது மமுதூட்டி யென்னை வளர்த்துக்கண்டம்
புகுவா யணிய மணியா கியுமுப் புரமெரிய
நகுவார்தென் மல்லையிற் சோழீச லிங்கர் நளினவெற்பிற்
றகுவா யிறைவர் வருநாளுஞ் சாற்றுந் தவளச்சங்கே.

82.  தெய்வத்திறம் பேசல்-

 பிரிந்து வந்த தலைவன் தலைவியைக் கூடி மகிழ்ந்த பொழுது தம்மைக் கூட்டுவிதத் தெய்வத்தின் (ஊழின்) தன்மையைப் புகழ்தல்.

பொன்செய்த பூண்முலை யாய்நந்த மாகம் புளகிக்கக்கா
மன்செய்த வீரம தெல்லா மகன்றிட மாதவத்தோர்
என்செய்த பேறென மல்லையில் வாழுஞ்சோ ழீசர்வெற்பின்
முன்செய்த மாதவம் நம்மையில் வாறு முயக்கியதே.

83.  தலைவி வருந்திய வண்ணம் பாங்கி தலைவர்க்குரைத்தல்-  

தலைவனைப் பிரிந்த பிரிவின்கண் தலைவி வருந்தியிருந்த விதத்தைப் பாங்கி தலைவனுக் குணர்த்தல்.

அஞ்சன வேற்கண்ணி நீபொருட் காக வகன் றவந்நாள்
அஞ்சனந் தேடிலள் மஞ்சன மாடில ளண்டர்குழாம்
அஞ்சநஞ் சுண்டவர் சோழீசர் மல்லை யசலமன்னா
அஞ்சனங் கன்படை மட்டல வூரு மறப்பகையே.

84. உதவியிற் பிரிதல் பாங்கி மறுத்தல்

- தலைவன் அரசனுக்குதவியாகப் பாசறைக்குப் பிரியும் பிரிவுக்குடன் படாமல் பாங்கி மறுத்தல்.

மனைக்கான வாழ்வு *பொருந்தவன் றேமற்ற நாடுநகர்
தனைக்காவல் ஸ்ரீ செய்வது வேலண்ண லேசந் தனமகில்பூம்
புனைக்காவுஞ் சூழ்மல்லைச் சோழீச லிங்கர் பொருப்பிடத்தில்
உனைக்காண வின்பம் பெறுவாள் பிரிவை யுணர்த்துவதே.

85.  அமர்க்களத்துரு வெளிப்படுதல்-

 பாசறைக் காவலின் பொருட்டுத் தலைவியின் உடன்பாடு பெற்றுச் சென்ற தலைவன் போர்க்களத்தில் தலைமகளது உருவெளித் தோற்றத்தைக் கண்டு மகிழா நிற்றல்.

அத்தம தாரவெண் ணீறுந்தண் ணீரு மயிலுமிதழ்
முத்தமுந் தந்தெனைப் போய்வாரு மென்று மொழிந்தடியார்
சித்தம தாமல்லைச் சோழீசர் வெற்பில் செருமுகத்தில்
பித்தில வாணகை யாய்பின்னை யேனெதிர் நின்றனையே.

86.  பாங்கனொடு சொல்லல்-  

பாசறைத் தொழில் முடிந்த பின்பு தலைவன் தலைவியை நினைந்து பாங்கனொடு சொல்லல்.

சஞ்சீ வனத்தைக் கொளுஞ்செழுந் தேனைச் சரசகுண
செஞ்சீர மான வமுதைச்செம் பாகைமுற் சிந்தில்வந்த
பொன்சீர் தருமல்லைச் சோழீச லிங்கர் பொருப்பினண்பா
என்சீவ நாயகி யாரைப் பிரிந்திங் கிருந்தனனே.

87. தலைவி தன் மனத்தழுங்கல்-

 தலைவன் பிரிவாற்றாமல் வருந்திய தன் மனத்தொடு கூறி வருந்தல்.

ஆகம் புளகிக்கக் கூடுங் கலலி யமளியிற்கம்
போகம் விளைக்குங் கருவூல மான பொருள்தனைத்தெய்
வீகம் விளைத்திடுஞ் சோழீசர் மல்லையில் வெற்பிலெந்தன்
சோகந் தவிர்க்கும் படிகூட்டு வாரில்லைத் தோழியரே.

88.  தலைவன் கொடுமை சங்கரற் குரைத்தல்

- பிரிவில் வாராமல் வருந்திய தலைவனது கொடுங்கோன்மையைச் சிவபிரானுக்குக் கூறுதல்.

கனியார் மொழிகள் பலபல பேசிக் கனவிலுநான்
றனியா யுனைப்பிரி யேனென்று சொன்ன தலைவரிப்போ
தனியாய மாக வெனைப்பிரிந் தேகின ராதலினால்
இனியாரை நோவது மல்லையில் வாழுஞ்சோ ழீசுரனே.

89.  தலைவி பாங்கியொடு வருந்தல்-

 தலைவனது பிரிவுத்துயர் சகியாத தலைவி தன் உயிர்ப் பாங்கியோடு வருந்திக் கூறுதல்.

குயிலோவ தன்றியு மன்றிலு மெத்தக் கொடிதுமின்னார்
பயிலோ பொறுக்க முடியாது பைத்தலைப் பாந்தட்பகை
மயிலோ    னைத் தந்தவர் சோழீசர் மல்லை வரையினிற்கூ
ரயிலோ வெனும்விழி யீருரை யீருயி ராற்றுதற்கே.

90.  புணர்ச்சியின் மகிழ்தல்-

 உதவியிற் பிரிந்த தலைவன் மீண்டுவந்து தலைவியைப் புணர்ந்து மகிழ்தல்.

முன்ன ளரிய தவமேது செய்தன மோவறியேம்
இன்னா ளதனிலிப் போதுவந் தெய்திற் றிமையவர்கள்
பன்னாளு போற்றிசெய் சோழீசர் மல்லைப் பருத்திநன்னாட்
டன்னாள் களபப் புளகத் தனத்தின் றணைவதற்கே.

91.  பிரிவெளிதென்றல்

- தான் முன்பு தலைவனது பிரிவினால் நேர்ந்த து¦னபத்தை நினைந்த தலைவி முன்பிரிதற்கென்று தவமியற்றினோர்க்குப் பிரிவு எளிதாகுமென்று கூறுதல்.

அரிதல வேது மியற்றின பேர்க்கென் றறிந்திருந்துந்
தெரிகில மேநந்த மேழமை தன்னைத் தெளிர்திங்ஙனே
விரிதலை வேணியர் சோழீசர் மல்லையில் வெற்பிலன்பா
பிரிதலை நாமுன் னியற்றமற் போயின பேதமைக்கே.

92.  தலைவி வருத்தம்

- தலைவி முன் பிரிவின் கண் வருந்திய வருத்தத்தைத் தோழி தலைவனுக்குக் கூறுதல்.

மாசைக் கடந்த மறையோனை வெவ்விட மாற்றியவன்
பூசைக் குகந்தருள் சோழீசர் மல்லைப் பொருப்பிலன்பர்
ஆசைக் கடல்செய்யும் வேளுமல் லாம லலைசெறியும்
ஓசைக் கடலு மனைவாயுஞ் சற்று மொடுங்கிலவே
.

93. பாங்கி தலைவன் நினைத்தமை வினாதல் 

-  பொருளின் கண் பிரிந்து சென்று மீண்டு வந்த தலைவனிடத்துப் பாங்கி தலைவியை நினைத்த துண்டோ வென்று வினவல்.

தனையாரு மொப்பற்ற சோழீசர் மல்லைச் சயிலத்துச்செம்
பொனையா தரித்துநீ போயின தாலப் பொழுதினிலம்
மனையாட னித்திரை மஞ்சன மன்ன மறந்துசற்றும்
நினையாளை நீநினைத் தாயோ வுனதிட நெஞ்சகத்தே.

94.  நினைந்தமை யுரைத்தல்-  

 தலைவியை நினைந்த துண்டோவென்று வினவிய பாங்கிக்குத் தலைவன் தலைவியும் நீயும் என் மனத்தை வாங்கி நன்றாய் வைத்துக் கொண்டீர்கள். என்மனம் என்னிடமிருந்தாலன்றோ நான் நினைப்பேன் என்று கூறுதல்.

தருந்தாரு நேர்மல்லைச் சோழீசர் வெற்பினிற் றையனல்லீர்
வருந்தா தெனதிங் கிதயக் கமலத்தை வாங்கிநன்றாய்ப்
பொருந்தா தரவுடன் வைத்துக்கொண் டீரெனும் போதெனெஞ்சம்
இருந்தா லலோநினைப் பேனறி யாதிங் கியம்பினையே.

95   தையல் நல்லீர்

-பெண்களிற் சிறந்தவரே; வருந்தாது-சற்றும் சிரமமில்லாமல்; வாங்கி-என்னிடமிருந்து வாங்கி; பொருந்து ஆதரவுடன்-உள்ளத்திற் பொருந்திய அன்புடன்; எனும்போது-என்று சொல்லுங் காலத்தில்; இருந்தால் அலோ-என்னிடமிருந்தாலன்றோ; அறியாது-இதனையறியாமல்; இயம்பினை-நினைத்தாயோ வென்று பேசினாய்; உமது தலைவியை எப்பொழுதும் நினைத்துக்கொண்டே யிருந்தே னென்பது இப்பாடற் கருத்தாம்.

95. கனவு நலிவுரைத்தல்-  

தலைவிக்குக் கனவினால் வந்த துன்பத்தைப் பாங்கி தலைவனுக்குக் கூறல்.

கருந்தாரை வேற்கண்ணி நின்னொடு சேருங் கனவைமெய்யாய்ப்
பொருந்தா தரவுட னேவிழித் தாள்புல வோர்க்குநித்தம்
தருந்தாரு வாமல்லைச் சோழீச லிங்கர் தடஞ்சிலம்பில்
வருந்தாத நெஞ்சம் வருந்தினள் காணென்ன மாறந்தையே.

97.  தலைவனிலைமை யுரைத்தல்

தலைவி தலைவனைப் புகழ்தல்.

பரத்iயிற் பிரிந்த தலைவன் மீண்டுவந்து தலைவியின் ஊடல் தீர்த்துக்கூடிய வழித் தலைவனைப் புகழ்தல்.

பொழியுங் குடதிக்குத் தோன்றிக் குணதிக்குப் போகும்பொன்னி
வழியுங் கரையிற் பொசியப் பொறாதல மாரனங்கம்
விழியுங் கனல்சுட்ட சோழீசர் மல்லை வியன்கிரிமேல்
மொழியும் பிறரின்பஞ் சற்றேயுன் காதல் முழுப்பெருக்கே.

98.  பாங்கி கொடுஞ்சொற் சொல்லல்

- அரசற்குத் தூதிற் பிரிந்த தலைமகன் வரவு நீட்டித்தமையால் வருந்திய தலைவியை நோக்கிப் பாங்கி நம்மை வருத்திய தலைவரைக் கூடுதல் தகாதெனக் கூறித் தெளிவித்தல்.

வருந்தாரை நாமே வருந்தவுந் தம்மிட வன்னனெஞ்சுகொண்
டிருந்தாரை யெவ்வணங் கூடிய வாறிங் கிறைஞ்சமனம்
பொருந்தாரைச் சென்றிடுஞ் சோழீசர் மல்லைப் பொருப்பிலினிப்
பொருந்தாரை வேல்விழி யீரிது வோநம பெண்புத்தியே.

99.  பாங்கி தலைவியை முனிதல்-

 பாங்கி தலைவியைத் தேற்றியும் தலைமகள் ஆற்றாமை கண்டு தலைவியைக் கோபித்துக் கூறுதல்.
சூலனை யானனன் சூரனை மார்பு துளைத்தவடிவேலனை யானை முகத்தனைத் தந்து விளங்குமிடற்றலனை  யாதருள் சோழீசர் மல்லை யணிவரைமேல்மாலனை யாயுனை யேயைன யாரை மறந்தருளே.

100.  புணர்ச்சியின் மகிழ்தல்

தூது முற்றி வந்த தலைவன் தலைவியைக் கூடி மகிழ்ந்து கூறல்.

கனக்குங் குமத்தத் தீர்நீர் அளித்த கலவியின்பம்
தனக்கிங் குவமை சொலப்போவ தேதினித் தான்மதனைச்
சினக்குங் கனல்விழிச் சோழீசர் மல்லைச் செழுஞ்சிலம்பில்
உனக்கு மெனக்கு முடலிரண் டான துயிரதொன்றே.

101.  வாழ்த்து-


 
தம்முள் கூடி மகிழ்ந்திருந்த தலைவனையும் தலைவியையும் பாங்கி வாழ்கென வாழ்த்துதல்.
கனமான மாமழை * மன்னுக வையகங் காவலர்தம்இனமான நீதியிற் செங்கோல் செலுத்துக விப்படியேதினமான மல்லையில் சோழீச லிங்கர் திருவுளத்தால்ஆனமான மென்னடை யாளுடன் வாழுக வாண்டகையே.

102. நூல் செய்தோர்



இந்தக் கலிவந்து நாலா யிரத்தெழு நூற்றுமுப்பத்தைந்திற் சிறிமுக வாண்டா வணிமுத லானவெள்ளிவந்திக்கும் பேர்க்கருள் சோழீசர் மேல்மல்லை மாலைசொன்னான்விந்தைப் புயன்பிள்ளை நாயகன் சொற்சிறை மீட்டவனே

103. நூற்பயன்

ஏறும் பிறையறு காத்தி யெருக்க மிதழிதும்பை
யாறும் புனைசடைச் சோழீசர் மீதினி லார்ந்தகவி
நூறும் படித்தோ ரறுபத்து மூவரு நோற்றுப்பெற்ற
பேறும் பதமும் அழியா வரசும் பெறுவர்களே.

மல்லைச்சோழீசுவரர் துணை.



.

1 comment:

  1. மிகச்சிறப்பான இடுகை..அழியும் நிலையில் இருந்த ஒரு நூலை மீட்டமைக்கு நன்றி

    ReplyDelete

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?