நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.
Showing posts with label திருவாசகம். Show all posts
Showing posts with label திருவாசகம். Show all posts

Thursday, 9 April 2020

திருவாசகத்தில் தொடர்கள்



திருவாசகத்தில் தொடர்கள்

                சொற்கள் தனியாக இருக்கும்பொழுது அவற்றிற்கு முழுப்பொருளையும் உணர்த்தும் ஆற்றல் முழுவதும் இல்லை. அவற்றைத் தக்கவகையில் பயன்படுத்தும் நிலையிலேயே அவை பொருளைச் சரியாக உணர்த்துகின்றன. சொற்கள் இடம் நோக்கியே சரியாகப் பொருளை உணர்த்துகின்றன. சொற்கள் இடம் நோக்கியே சரியான பொருளை உணர்த்தும். சிறந்த சொற்களைத் தேர்ந்தெடுப்பதே ஒருவகை ஆற்றலாகும். அவற்றை இடம் நோக்கிச் சிறந்த முறையில் அடுக்கிக் கவிதையில் இடம்பெறச் செய்வதென்பது தேர்ந்தெடுத்தலை விடப் பெரிய ஆற்றலாகும்.
                கவிஞன் சொற்களை ஒரு குறிப்பிட்ட முறையில் அடுக்குவதன்மூலம் அச்சொற்கட்குத் தனிப்பட்ட முறையில் பெருஞ்சிறப்பை வழங்கி விடுகிறான். ஒரு சொல்லின் சிறப்பானது, அது பிற றசாற்களுடன் தொடுக்கும்பொழுதே வெளிப்படுகிறது. எனவே, சொற்தொடர் அமைப்புப் பற்றி அறியவேண்டியது அவசியமாகிறது. சொற்றொடர் பல இணைந்து வாக்கியம் உருவாகிறது.

மாணிக்கவாசகரின் மொழிவளர்ச்சிக் கொள்கை



மாணிக்கவாசகரின் மொழிவளர்ச்சிக் கொள்கை


மாணிக்கவாசகர் புதுச்சொற்களை உருவாக்கும்பொழுது எளிமையாக்கம், புதுமையாக்கம் நிலைபேறாக்கம் என்ற மூன்று கொள்கைகளின் அடிப்படையில் உருவாக்கியுள்ளது தெரிகிறது.

 

எளிமையாக்கம்

                மொழிவளர்ச்சிக் கொள்கைகளில் எளிமையாக்கமும் ஒன்றாகும். சொற்களுக்குப் புதுப்புதுப் பொருள்கள் காலந்தோறும் அதனைக் கையாளும் கலைஞர்களுக்கு ஏற்ப உருவாகிறது. இதனால், ஒரு சொல்லானது பல பொருள்களுக்கு உரிமையாகி விடுகிறது. பொதுவாக, நுட்பமான கருத்துக்களை விளக்கப் புதுச்சொற்கள் உருவாகின்றன. நுட்பமும், ஆழமும் பொருந்திய நுண்ணியச் சொற்களை உருவாக்குவதில் மணிவாசககர் பெருவிருப்பு உள்ளவர் என்பதை அவர் உருவாக்கியுள்ள சொற்களிலிருந்து உணர்ந்த கொள்ளலாம்.
எ.கா
உள்ளக்கரு          -      உளக்கரு
ஒப்பற்றவன்         -      ஒப்பன்
நுகர்பொருளானவன்  -      துப்பன்
கூறுடையவன்       -      கூறன்
தேசுடையவன்       -      தேசன்
                                                                                                                                                                                உய்யக்கருவானவன் இறைவன்என்பதை விளக்கும் உள்ள.க்ருஎன்னும் சொல்லை மேலும் எளிமைப்படுத்தி உளக்கருஎன்கிறார். இதைப்போலவே, சிவபெருமாள் உமையைத் தன் உடலில் பாதியாக்கியுள்ளதால், பாதியானவன் என்பதை உணர்த்த கூறன், பாகன், பாதியன் போன்ற சொற்களை உருவாக்கியுள்ளார். சொற்கள் எளிமையாக்கம் செய்யப்பட்டாலும், முழுப்பொருளை இழக்காமல், முந்தைய பொருளைவிட மிக ஆழமான பொருளைப் பெற்றுப் புதுப்பொலிவோடு திகழ்வது தெரிகிறது.

புதுமையாக்கம்

                ‘‘மொழி வளர்ச்சிக் கொள்கைகளில் முதன்மையானது புதுமையாக்கம் ஆகும். இப்புதுமையாக்கம் கலைச்சொற்களையும், புதுத்தொடர்களையும் உருவாக்கவும், பெருக்கவும் உதவுகிறது. புதுமையாக்கத்தின் அடிப்படையில் கலைச்சொற்கள் உருவாக்கப்படும்போது மொழியில் புதுச்சொற்கள் காணப்படுதல் இயற்கையே’’ என்பார் தங்கமணியன். இவ்வகையில் திருவாசகத்தில் ஏரானமான புதுச்சொற்கள் இடம்பெற்றுள்ளன.
எ.கா
கருத்திருத்தி  உள்ளான்
உள்ளொலி    புவன்
உலவா          உடையவன்
                                                                                               
                கருத்திருத்திஎன்னும் சொல்லானது இருவேறு பொருளைத் தரும் வகையில் அமைந்த புதுமைச் சொல்லாகும். கருவிலேயே திருந்தச் செய்துஎன்னும் பொருளிலும், ‘இறை எண்ணத்தைத் தன்னிடத்திலே பதியச் செய்துஎன்னும் பொருளிலும் இச்சொல் பயின்றுவருகிறது. புவன் என்னும் சொல் புவனம் ஆள்பவன்என்னும் பொருளிலும், ஒலி வடிவானவன்8 என்னும் பொருளிலும் பயின்று வருகிறது.
                உலவாஎன்னும் சொல் அழிவில்லாத என்னும் பொருள் தரும் புதுமையாக்கச் சொல்லாகும். இடம்நோக்கி இப்பொருளைப் பெற்ற புதுச் சொல்லாகும். உலவா இன்பச்சுடர் என்னும் சொல்லானது உலர்ந்துபோனேன் என்னும் சொல்லுக்கு எதிரானப் பொருளைத் தரும்வகையில் பயின்று வருகிறது. உலர்ந்துஎன்னும் சொல்லுக்கு எதிரான சொல்லாக உலவாஎன்னும் புதுச் சொல்லைக் கையாண்டுள்ளார்.

திருவாசக மொழியமைப்பில் சொற்கள்



         ஆதித்தமிழன், பறையன், முதற்சித்தன் ...    சிவபெருமானின் அடி முதல் முடி வரை உறுப்புகளை பொருத்தமான அடைச்சொற்களின் மூலம் அவர் தம் உருவ எழிலைப் படம்பிடித்துக் காட்டுகிறார்.

மணிவாசகரின் காலம்



மணிவாசகரின் காலம்

                மணிவாசகரின் காலம் இன்றுவரை விவாதத்திற்கு உரியதாகவே இருந்து வருகிறது. இவர் காலம் கி.பி. மூன்றாம் நூற்றாண்டு என்றும், கி.பி. ஒன்பதாம் நூற்றாண்டு என்றும் இருவேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
                மறைமலையடிகளும், செங்கல்வராயபிள்ளையும் மணிவாசகரின் காலத்தைக் கி.பி.மூன்றாம் நூற்றாண்டு என்றே உறுதிப்படுத்துவர். இவர்களைப் போன்றே மணிவாசகரின் காலத்தைக் கி.பி.மூன்றாம் நூற்றாண்டே என்று குறிப்பிடும் பிறரது கூற்றுக்கள் கீழே விளக்கப்பட்டுள்ளன.
                சைவ சமயக்குரவர் மூவருள் காலத்தால் முற்பட்டவராகக் கருதப்படுபவர் திருநாவுக்கரசர். இவருடைய சமயகாலத்தில் வாழ்ந்தவர் திருஞானசம்பந்தர். திருநாவுக்கரசரின் காலம் ஆறாம் நூற்றாண்டின் இறுதியும், ஏழாம் நூற்றாண்டின் தொடக்கமுமாகும். மணிவாசகர் பற்றித் தனது தேவாரத்தில் தனித்திருத்தாண்டகத்தில் இரண்டு செய்திகளைக் குறிப்பிடுகிறார் நாவுக்கரசர்.
1.             மணிவாசகர் பொருட்டு இறைவன் நரியை பரியாக்கிய செய்தி
2.             வந்தியின் பொருட்டு இறைவன் பிட்டுக்கு மண் சுமந்த செய்தி இதன்மூலம் நாவுக்கரசரின் காலத்திற்கு முற்பட்டவரே மணிவாசகரின் என்று குறிப்பிடப்படுகிறது.

மணிவாசகரின் சிறப்பு



மணிவாசகரின் சிறப்பு

                சமயக்குரவர் மூவரின் பாடல்கள் பெரும்பாலும், கோவில்களையே மையமாகக் கொண்டு பாடப்பட்டுள்ளன. இம்மூவரும் பாடியருளிய தலங்கள், இருநூற்றி எழுபத்தைந்தாகும். இப்பாடல்களில் பல்வேறு கோவில்களைப் பற்றியும், அக்கோவில்களுக்குப் பின்னணியாக விளங்கும் இயற்கைக் காட்சிகளைப் பற்றியும், கோவில் கொண்டுள்ள இறைவனைப் பற்றியும் பாடப்பட்டுள்ளன. மணிவாசகர் ஐம்பத்து நான்கு தலங்களை மட்டுமே பாடியுள்ளார். தம் பாடல்களில், உள்ளத்தில் எழும் உணர்ச்சியை உள்ளது உள்ளபடி சிறந்த சொல்லாட்சியின் மூலம் வெளிப்படுத்தியுள்ளார். இதனால், தலங்களைப் பற்றிக் குறிப்பிடும் தலவரலாற்று நூலாக மட்டும் அமையாமல் தன்னுணர்ச்சியை அழகுபட வெளிப்படுத்தும் உயிரோவியமாகத் திருவாசகம் திகழ்கிறது.

அழுதடியடையும் தொண்டர்

                இறையனுபவத்தில் திளைத்து இறையருளை வெளிப்படுத்துமிடத்திலும் மணிவாசகர் வேறுபடுகிறார். தான் பெற்ற இன்பத்தை வெளிப்படுத்துமிடத்து, தேவார மூவரிடத்தில் ஒருசில இடங்களில் மட்டுமே நெகிழ்வின் காரணமாக அழுகை வெளிப்படுகிறது. மணிவாசகருக்கோ, இறையருளை வெளிப்படுத்துமிடத்து அவரது உணர்ச்சி பெரும்பாலும் அழுகையாகவே வெடிக்கிறது.
                                ‘‘வினையேன் அழுதால் உன்னைப் பெறலாமே’’ (5-90)
                                ‘‘அழும் அதுவேஅன்றி மற்றுஎன்
                                                செய்கேன் பொன்அம்பலத்து அரைசே’’ (21-4)
                இவர்தம் பாடல்களில் பரவலாகக் கேட்கும் அழுகைக் குரலானது, அழுகை ஒருபேறு, அதைப் பெறுவதற்கும் இறையருள் வேண்டும் என்பதைப் புலப்படுத்துகிறது. இப்பாடல் வரிகள் மணிவாசகரின் உள்ள நெகிழ்வினையும், உள்ளம் உருகி அழுதால் இறையருளைப் பெறலாம் என்ற உண்மையினையும் வெளிப்படுத்துகின்றன.

திருவாசகத்தின் இசையமைதி



திருவாசகத்தின் இசையமைதி

திருவாசகத்தின்  சிறப்பு இசைப்பாடல் வடிவத்தில் பாடல்கள் அமைந்திருப்பதே. இதற்குக் காரணமாக அமைந்துள்ள மொழிக் கூறுகளை அறிவது அவசியமாகிறது.
இசையமைதி
                இசையுணர்ச்சியே பாக்களுக்கும் பாவினங்களுக்கும் அடித்தளமாக விளங்குகின்றது. படைப்பாளர்கள், கற்பனைத்திறத்திற்கும் படைப்பாற்றலுக்கும் மட்டுமல்லாது ஓசை ஒழுங்கிற்கும் ஏற்றாற்போலவே பாக்களின் வடிவங்களில் மாற்றங்களையும் புதுமைகளையும் புகுத்திச் சோதனை முயற்சிகள் செய்துள்ளனர். இசையுணர்ச்சி.கு காரணமாக விளங்குபவை மோனை, எதுகை, முரண், இயைபு, அளபெடை போன்றவையாகும். இவற்றைத் தொடையின் வகைகளாகக் குறிப்பிடுவர்.

திருவாசகத்தில் உள்ள இலக்கிய வகைகள்



இலக்கிய வகைகள்
                தொல்காப்பியர் காலத்திலும், சிலப்பதிகார காலத்திலும் பல புது இலக்கியக் கூறுகள் தோன்றின. அவை பின்னர்த் தனித்த இலக்கிய வகையாகவே வளர்ந்தன. அவ்வாறு தனித்த இலக்கிய வகைகளாகப் போற்றப்படும் சில கூறுகள் திருவாசகத்தில் இடம்பெற்றுள்ளன.

சதகம்

                சதகமானது, நூறு பாடல்களைக் கொண்டு இறைவனையோ, புலவர் தாம் பாட விரும்பி தலைவர்களையோ அரசர்ககளையோ பாட்டுடைத் தலைவர்களாக்கி அப்பாடல்கள் அனைத்தும் ஒரே யாப்பில் அமையும் வண்ணம் பாடப்படுவதாகும். திருவாசகத்தில் அமைந்துள்ள திருச்சதகம் இதற்கு எடுத்துக்காட்டாகும். ஆனால், திருச்சதகம் சதக இலக்கியத்தின் பெயருடையதன்று. தனி நூலாக இல்லாமல் திருவாசகத்தின் ஒரு பகுதியாகவும், அந்தாதி அமைப்புடனும் அமைந்திருப்பதால் மணிவாசகர், சதகத்தை இயற்றிய பின்னரே தமிழில் சதகங்கள் தோன்றியிருக்க வேண்டும் என எண்ணத் தோன்றுகிறது.

Saturday, 28 March 2020

திருவாசக யாப்பமைதி

           திருவாசக யாப்பமைதி


                கவிஞர்கள் தன் உள்ளத்தெழும் உணர்வுகளை, வெளிப்படுத்தக்கூடிய மொழி வடிவங்களே இலக்கியங்களாகும். கவிஞர்கள் ஓர் அனுபவத்தை என்பது போது, அவ்வனுபவத்தில் ஆழ்ந்து தோய்கின்ற நிலையில் அவர்களது உணர்வுகள் ஊற்றெடுத்துப் பாட்டாக வெளிப்படுகிறது. அந்த உணர்வு சொல் வடிவம் பெறும்பொழுது அது யாப்பு  எனப் பெயர் பெறுகிறது. ‘‘காலத்திற்கு ஏற்ற கருத்துகளையும் சிந்தனைகளையும் கவிஞர்கள் ஆற்றல் மிக்க மொழிநடையில் வெளியிடுவதற்குக் கருவியாகப் பயன்படும் செய்யுள் வடிவங்களே யாப்பு எனப் பெயர் பெறும்’’ என்கிறார் அகத்தியயலங்கம் (1983-3) கருத்துக்களுக்கு ஏற்பவும் ணர்ச்சிகளுக்கு ஏற்பவும் கவிஞர்கள், பலவகையான யாப்புகளை இலக்கியத்தில் கையாண்டுள்ளனர்.

திருவாசக மொழியும், மொழிப் பயன்பாடும்



திருவாசக மொழியும், மொழிப் பயன்பாடும்


Why should you learn Foreign Language? | Asap German Language Class
                ஒரு மொழியில் அமைந்துள்ள சொற்கள் எண்ணற்றவை. அவற்றைக் கொண்டு சொல்லமைப்புகளையும், தொடர்களையும், வாக்கியங்களையும் உருவாக்கலாம். வாக்கியங்களையும் தொடர்களையும் உருவாக்கும்பொழுது மொழியிலுள்ள அனைத்துச் சொற்களையும் கையாள்வதில்லை. இடம் நோக்கி அதனதன் பயன் நோக்கி சொற்கள் அமைக்கப்படுகின்றன. கேட்பவரை மனதில் கொண்டும் அவருக்கு எளிதில் புரியவண்ணமும், நேரடிப் பொருள்தரும் வண்ணமும் சொற்களைத் தேர்வு செய்ய் அமைப்பதென்பது ஒரு கலையாகும்.
                ஒருவர்தம் உள்ளத்தில் எழும் கருத்துக்களை அடுத்தவர் மனதில் எளிதில் பதியவைப்பதும், சலனமடையச் செய்வதும் சொற்களின் துணகொண்டுதான். சொற்களைப் பபயன்படுத்தும் முறையில் ஒவ்வொரு கலைஞனும், ஆசிரியனும், பேச்சாளனும் வேறுபடுகிறான்.
                சொற்களைச் சரியான இடத்தில், சரியானப் பொருளைத் தரும் வகையில் பயன்படுத்துவதுடன், அச்சொல்லானது கேட்பவர் மனதில் ஒருவிதத் தாக்கத்தை ஏற்படுத்தும், வகையிலும் சொற்களைப் பயன்படுத்துபவனுடைய படைப்பே அல்லது பேச்சே நிலைபேறடைகிறது எனலாம். இக்காரணம் பற்றியே கலைகளில் இலக்கியக்கலைசிறப்பானதாகப் போற்றப்படுகிறது. எனவே, சொற்பயன்பாடு இலக்கியப் படைப்பைச் செம்மையுறவும் முழுமையடையவும் செய்கிறது என்பது தெளிவாகிறது.

Friday, 27 March 2020

திருவாசகம் - மொழியமைப்பு

திருவாசகம் – மொழியமைப்பு


                திருவாசகம் தோன்றிய காலத்தொட்டு அதனைப் போற்றாத சான்றோர் பெருமக்கள் இல்லை. இராமலிங்க அடிகள், சிவப்பிரகாச சுவாமிகள், குமரகுருபரர், சிவஞான சுவாமிகள், தாயுமானவர், கல்லாடர் முதலிய எண்ணிறந்த சான்றோர்கள் திருவாசகத்தினைத் தன் உயிரினும் மேலான விழுமிய நூலாக வழிவழியே போற்றி வந்திருக்கின்றனர். அவ்வாறு இவர்கள் வியந்து பாராட்டுவது.
                                ‘‘மாணிக்க வாசகன் புகன்ற மதுரவாசகம்’’     (1984-221)
                                ‘‘திருவாசகமிங் (கு) ஒருகால் ஓதில்
                                  கருங்கல் மனமும் கரைந்துருக’’     (1984-70)
என்று நால்வர் நான்மணி மாலையில் சிவப்பிரகாசரும்,
                                ‘‘வான்கலந்த மாணிக்க வாசகரின் வாசகத்தை
                                  நான்கலந்த பாடுங்கால் நற்கருப்பஞ் சாற்றினிலே
                                  தேன்கலந்த பால்கலந்த செழுங்களித் தீஞ்சுவை கலந்த
                                  ஊன்கலந்த உவட்டாமல் இனிப்பதுவே’’ (1970-246)
                என்று வள்ளாரும் திருவாசகத்தின் பெருமையைப் போற்றிப் பாரட்டுகின்றார். கற்றாரும், கல்லாரும் வியந்து போற்றும் திருவாசகத்தின் மொழியடையை அறிய வேண்டியது

மணிவாசகரின் பக்திநெறி

மணிவாசகரின் பக்திநெறி

பக்தி சூஃபி இயக்கங்கள்-1 | ExamsDaily Tamil

ஆதி மனிதனின் அறிவு மலர்ந்த நிலையில், அவன் தன்னையும் விஞ்சிய ஓர் ஆற்றல் உலகில் இருப்பதாக உணர்ந்தான். இயற்கையின் எழுச்சி மிக்கப் படைப்புகளிலும், நிகழ்ச்சிகளிலும் ஏதோ ஓர் ஆற்றல் இருப்பதாக அறிந்து தெளிந்தான். தன் அறிவிற்கு அப்பாற்பட்டு விளக்கும் அந்த ஆற்றலை, தன் அனுபவங்களுக்கேற்ப பலரும் பலவிதமாக உரைத்தனர். நிலையற்ற இவ்வுலகில் நிலைபெறுவதற்கு அந்த ஆற்றல் உதவும் என்று கூறி, அதைப் பெற சில வழிமுறைகளையும் கூறினர். அந்த ஆற்றலை இறைஎன்று போற்றி, இறையை நினைத்து வழிபட்டால் பேரின்பம் கிட்டுமென்றும், நிலையான வாழ்வு வாழலாம் என்றம் தங்களுக்குத் தோன்றியதைக் கூறினர்.

திருவாசகம் ஒப்புயர்வற்ற ஞானப்பனுவல்


   திருவாசகம் ஒப்புயர்வற்ற ஞானப்பனுவல்



திருவாசகம் (Thiruvasagam) | Arulakam (அருளகம்) 

                தமிழ் மொழிக்கண் உள்ள பெருஞ்சிறப்புப் பெற்ற நூல்களுள் திருவாசகமும் ஒன்று. இதனை இயற்றியவர் மணிவாசகராவார். குருவாக வந்த இறைவனை நேரில் கண்டு, அந்த இறைக்காட்சியின் இன்பத்தில் தினைத்து, தித்திக்க அனுபவித்துப் பாடிய நூலே திருவாசகம். நிறைந்த அன்பிலே ஊறி வெளிப்பட்ட வாசங்களை உடையதாலாலே இந்நூல் கருங்கல் மனதையும் கணிவிக்கும் உருக்கமுடையதாகத் திகழ்கிறது. அளப்பரிய பொருளும், எளிமையும், இனிமையும் மிக்கது இந்நூல். சைவத் திருமுறைகள் பன்னிரண்டில் எட்டாம் திருமுறையாக வைத்து எண்ணப்படும் ஏற்றமுடைதாகும். இலக்கியம், மொழி, சமயம், ஞானம் முதலிய பலதுறைகளிலும் பெருஞ்சிறப்பு வாய்ந்ததாகவும் சைவ சமயப் பெருமக்கள் அனைவராலும் போற்றப்படும் சிறப்புடையதாகவும் திகழ்கிறது இந்நூல். பக்தி இலக்கியங்களும் சிறந்த விளங்கும் திருவாசகத்தின் தனிச்சிறப்பினையும், மணிவாசகரின் பக்தியினையும் இவ்வியல் விளக்குகிறது.

Thursday, 7 March 2013

திருவாசகத்தில் வினைஉருபன்கள்

 

திருவாசகத்தில் வினைஉருபன்கள்


       தமிழ் மொழிக்கண் தனிச்சிறப்பு வாய்ந்த நூல்களுள் ஒன்று திருவாசம்.ஒரு நூலின் சிறப்பிற்கு அதன் மொழிநடையும் காரணமாகும். ஒரு மொழியில் மக்களின் வாழ்வியல் முறை, செயல்பாடு,அனுபவ அறிவிற்கு ஏற்ப புதுப்  புதுச் சொற்கள் மொழியில் காலப்போக்கில் உருவாகி அல்லது கலக்கப்பெற்று வழக்கில் பயன்படுத்தப்படுகின்றன. இவை இலக்கியத்தில் இடம்பெறுவதற்கு நீண்ட காலம் ஆகின்றன.. சொற்கள் மட்டுமின்றி உருபுகளும் புதியதாக வழக்கில் அவ்வகையி்ல் பயன்படுத்தப்படுகின்றன.
மொழியியலில் சொற்களின் அடிப்படையாகக் கூறப்படும் உருபன்கள் காலப்போக்கில் தமிழில் பெற்ற மாற்றங்களை ஆராய்வது இக்கட்டுரையின் நோக்கமாகும்
இக்கட்டுரையில்,தொல்காப்பியத்தில் கூறப்படும் வினைஉருபன்களும் திருவாகத்தில் உள்ள வினைஉருபன்களும் ஆராயப்படுகின்றன.

திருவாசகக் கருத்துப் புலப்பாட்டில் உணவுப் பொருட்கள்

திருவாசகக் கருத்துப் புலப்பாட்டில் உணவுப் பொருட்கள்




     திருவாசகம் சைவர்களின் வேதம் என்று போற்றப்படுகிறது. திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார் என்பது அனுபவப்பழமொழி. அதன் சிறப்பிற்குப் பல காரணங்கள் இருந்தாலும் மொழியமைப்பும் கருத்துப்புலப்பாட்டுத்திறனும் முக்கியப் பங்காற்றுகின்றன. உணவுப் பொருட்சொற்களைக் கருத்துப்புலப்பாட்டுத்திறனுக்குப் பயன்படுத்தி மாணிக்கவாசகர் நம் மனதை பக்குவபடுத்தும் முயற்சியில் வெற்றிக் கண்டுள்ளார். 

திருவாசகமும் அரவாணியரும்


  திருவாசகமும் அரவாணியரும்


    விளிம்பு நிலை மனிதர்கள் எனப் புறந்தள்ளப்பட்ட பெண்கள், குழந்தைகள்,தலித்துகள் இவர்களோடு அரவாணியர்களையும் இருபத்தியோராம் நூற்றாண்டு மைய நிலைக்கு கொண்டு வந்து, அவர்களின் வாழ்க்கையை நடுநிலையோடு அணுகக் கற்றுக் கொடுத்துள்ளது. இவர்கள் குறித்த ஆய்வுகளும்> படைப்புகளும் வெளிவரும் சூழலில், மரபிலக்கியங்களில் இவர்களைப் பற்றிய புரிதலை ஆராய வேண்டியுள்ளது.