நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 16 November 2020

நீரலைகள்

 கற்பாறை மீது மோதி மோதி நீரலைகள்

நீரத்திவலைகளாக மாறி உடைந்து கொண்டே இருக்கும்

யுகயுகங்களாகத் தொடரும் நீரின் போராட்டம்

யுகங்கள் கடந்தும் கரையாத...

 மனப்பாறைகளின் சதிராட்டம்..

மறக்கவியலா நினைக்கவுமியலா சில பதிவுகள்

கடக்கவியலா தொடரவுமியலா சில நினைவுகள்

மீட்கவியலா நீட்சியாகும் சில கனவுகள்

சொல்லவியலா கொல்லவுமியலா சில உணர்வுகள்

நிழலா வெயிலா கேட்கவியலா நோகங்கள்....

தொண்டைக் குழிக்குள் விசம் போல

விழுங்கவோ உமிழவோ முடியாத சில ஆசைகள்

ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துபோகுமா

 இந்தத் தருணங்கள்?

பதில்களற்ற கேள்விகள் ...

அறையெங்கும் நிரம்பி வழிகின்றன

Sunday 15 November 2020

நம்பிக்கை

 பாசமாக நட்பாக அன்பாக வீரமாக நல்லவராக

தன்னை உயர்த்திக் காட்டிக் கொள்வதுதான் 

மனித வாழ்வின் குறிக்கோளா?

யாரோடாவதாது ஒப்பிட்டுப் பார்த்து 

 ஒரு படி மேலே இருக்க வேண்டுமென்பது கட்டாயமா?

அப்போதுதான்  மதிப்பு என ஏமாற்றிக் கொள்கிறோமா? 

நான் என்ற அடையாளம் எதுவரை?

நம் மரணம் வரை. அவ்வளவே.

ஒரு பூ, ஒரு காற்று, ஒரு மேகம், ஒருபுழு, ஒரு புல் 

அதனதன் போராட்டம் வேறு. 

வாழ்க்கைப் பாடு வேறு

மலர்வதற்குள் ஒரு பூவிற்கு எத்தனைப் போராட்டம்?

முளைப்பதற்குள் ஒரு புல்லுக்கு எத்தனை மிதிபடல்? 

சிலர்  வாழ்வில் தான் எத்தனை போலித்தனம்?

எல்லோருக்கும் எத்தனையோ போராட்டம்.

சிலருக்கு நாமே போராட்டம். 

மகிழ்வதற்கு எத்தனையோ காட்சிகள் 

இரசிப்பதற்கு எத்தனையோ நிகழ்ச்சிகள்

இயற்கைத்தரும் போலித்தனமில்லா வாழ்க்கை பெருவரம்

எவ்வளவு முயலுமோ அவ்வளவு முயலுவோம்

இயல்பு நிலை என்பதை நோக்கிய பயணம்பாதுகாப்பானது.

ஆனால் துயரம் நிறைந்தது.

நம்மைத் தெரிந்தவர்களிடம் நிரூபிக்கத் தேவையில்லை

நம்மைத் தெரியாதவர்களிடமும் நிரூபிக்கத் தேவையில்லை

எப்படியும் நம்பப் போவதில்லை என்பதால்...

நம்பிக்கை இருக்கிறதென்றால்

நிரூபிக்கத் தேவையில்லை.

நிரூபிக்கத்தான் வேண்டுமென்றால்

நம்புவதற்கு ஏதுமில்லை.



புத்தா...



 வழியில் ஒரு கடையில் புத்தா நீ...

உன்னை வாங்க தூண்டும் மனம்...

உன் சிலையின் மீதான ஆசை கூட 

உன் கொள்கைக்கு முரணானது...

நீயோ கனத்த மெனளம் காக்கிறாய்...

உன்னை உனக்கு அடையாளம் காட்டிய

போதி மரம் எங்கே தொலைந்தது? 

புடவைகளிலும், ஜாக்கெட்டுகளிலும்,

பைகளிலும்... அழகழகான வண்ணங்களி்ல் நீ.

அரண்மனை விடுத்து, 

அன்னையை விடுத்து, 

அன்பு மனைவியை விடுத்து,

அருமை குழந்தை விடுத்து

உன் தவத்தின் விளைவாய்

கடவுளே இல்லையென்றாய்...

உன்னையே கடவுளாக்கிவிட்டார்கள்

அப்போது கண்களை இழுத்து மூடினாயோ?

இப்போது விற்பனைப் பொருளானாய்...

இறுகிய உதடுகளின் இதழ்களில் 

தென்படும் குறுநகை....

இகழ்ச்சியா....ஞானச் சிரிப்பா?

ஊமையாகி உள்ளுக்குள் குமுறுகின்றன 

சொல்ல முடியா வார்த்தைகள்....

மௌனம் உடைக்கவே மொழிகள் முயல்கின்றன.

அதை மறைக்க சிரித்துப் பேசி நடித்தால்

வாழ்க்கை முழுதும் நடிக்க வேண்டி வரும்...

அது தேவையற்றது....

புத்தா உன் கண் மூடலிலும்

இறுகிய உதடுகளிலும்

நீ இன்னும் எதைப் போதிக்கின்றாய்?

மோன நிலையின் அற்புதத்தையா?

சிலையின் மௌனம் கலையாகும்

கடலின் மௌனம் முத்தாகும்

விதையின் மௌனம் மலராகும்

மௌனமே இங்குச் சிறையானால்?

உன் சிலை எனக்கு வேண்டாம்.

உன் மெளனச் சிறை போதும்.

எப்போதும் நீ போதிதான்.

 



பட்டாம்பூச்சி



 வானில் எத்தனையோ பட்டாம்பூச்சி

என்னைக்  கவர்ந்த ஒன்று

.பார்வை பறித்து மனதை இழுத்து வசமாக்கி,

நினைவு முளையில் என்னைக் கட்டிவிட்டு்ப் போனது. 

விடுபட்டுத் தேடினேன் அதுஅறியாமல்...

பூக்களின் மேல்....மரக்கிளையில்

தோட்டத்துச் சுவற்றில்

கண்ணில் பூச்சி காட்டி பறந்தது...

விண்ணில் மண்ணில் காட்டில்  நீரில்

என்னில்.....கைப்பிடிக்குள் வராமல்....

நானும் சிறகடித்தேன்....விழுந்தேன்..

அழுதேன்...மெல்ல....

பார்வையிலிருந்து மறைந்து போனது...

அமைதி தேடி ஓரிடம் அமர்ந்தேன்

 நினைவெங்கும்  பட்டாம்பூச்சி...

நிழலெல்லாம் பட்டாம்பூச்சி....

தோளில் மௌன சிறகடிப்பு

மனதில் ஒரு குறுகுறுப்பு...

பார்வை பாவை நகர்த்திப் பார்த்தேன்

பட்டாம்பூச்சி...அதே பட்டாம்பூச்சி...

மெல்ல கைவிரலில் எடுத்துப்பார்த்தேன்

அசைவின்றி இசைந்தது...

மெல்ல ஒரு கணம்...மனம்

அதை சொந்தமாக்க நினைத்தது...

அது வனதேவதைக்குச் சொந்தமானது...

விரல் விரித்தேன்....விடுபட்டுப் பறந்தது..

விரல் பார்த்தேன்.....

விரலில் அதன் வண்ணம் 

என்றும் நீங்காத வண்ணம்.

Saturday 31 October 2020

முயற்சி

சேர்ர்வுகள் வாழ்வைச் சிதைத்தாலும் ஓய்விலும் வெற்றியை நினைத்தே இளைப்பாறிவிடு. தோல்விகள் உன்னிடம் துவளும் வரை முயற்சியால் மட்டுமே பதிலளித்திடு.

வானம்.

கடந்த பாதைகள் எல்லாம் கலைந்த கனவாக வரும்பாதைகள் எல்லாம் முற்றிலும் புதிராக வாழ்க்கை போகிறது ஒரு முடியாத பயணமாய், மௌனமே இதமாக, உடன் வரும் நிலவையும், அழத்தோன்றும் வேளையில்.. ஆறுதலாய் தலைகோதும் தென்றலையும் தேடிக் கொண்டேயிருக்கிறது மனம்.... திசையறியா பறவைக்கு... வானமெங்கும் பாதைகளே! இலக்கில்லா பயணத்தில்... பாதையெங்கும் புத்த போதிகளே! தீராத பாதையின் முன் ஒரு நீண்ட கனவாய்... ஊர்கிறது ஆழ்மனப் பயணம்! கடக்க கடக்க முடியவேயில்லை தூரம். போகப் போகத் தீரவேயில்லை வானம். தேங்கிக் கொண்டேயிருக்கும் நினைவலைகள் விடுபட விடுபட நிரம்பிக்கொண்டேயிருக்கும். எல்லா நதிகளும் கடலுள் சென்று சேருவது போல, கருங்குழிக்குள் எல்லா கோள்களும் ஈர்க்கப்படுவது போல, நினைவலைகள் எல்லாம் ஓர் ஒற்றைப் புள்ளியில். உறுதியானதென நினைத்துக்கொண்டிருந்த வலுவான அடித்தளம் நழுவியது எப்போது? -------------------------------------------

நந்தவன நாட்கள்

நகர்ந்து போன நந்தவன நாட்களை

 சாட்டையால் அடித்தது யாருடைய கைகள்?

 நம் வீட்டுத் தெருக்களில் 

பாம்புகளை நெளிய விட்டது யாருடைய கைகள்?

  தென்றலைத் திசை மாற்றித் திருப்பியது யாருடைய கைகள்? 

 வசந்தங்களை விசமாக்கியது யாருடைய

 நச்சுக் கைகள்? 

 எப்போதாவது உண்ணும் கால்வயிற்றுக் கஞ்சியை 

பறித்தது யாருடைய  கைகள்?

மனிதம் மறைவதற்குக் காரணமாக இருந்தவை 

எந்த அரக்கனுடைய மாயக் கைகள்?

 சக மனிதனைச் சாவின் தூதுவனாகப் 

பார்க்கத் தூண்டியவை யாருடைய மரணக் கைகள்? 

 மகத்துவமெல்லாம் வெறும் மண்ணாகிப் போகக் 

காரணமாக இருந்தவை யாருடைய கைகள்? 

இந்தக் கைகளாக இருக்கலாமோ? 

வியர்வை வழிய வேலை செய்பவனை 

இழிவாகப் பார்க்கும் சோம்பேறிக் கைகள்! 

மூத்த தலைமுறையைச் சுமையாகக் கருதி

 தன் போக்கில் வாழ நினைக்கும் அல்ல கைகள்!

 உழைப்பை மறுத்து உறிஞ்சிக் கொளுத்து

 தலைமுறைகளைக் காக்கும் பெருங்கைகள்

 பூமிப் பந்தினைத் தன் காலத்திலேயே

 பூக்காத பந்தாகப் பாலைவனமாக்கும் நம்கைகள்!

 --------------------------------------------------- 



சாதி சடங்குகள் எங்குப் போயின? 

அட சாதிக்கொரு சுடுகாடுதான் எங்குப் போயின?

செய்த புண்ணியங்கள் மௌனித்துவிட்டன.

சேவை செய்த கோயில் மூடிப் பல நாளாயின

கடவுள்களும் முகக் கசவமிட்டு விளம்பரம் செய்கின்றன

பொட்டலங்களாய்க கட்டப்படுவதற்கா

அறிவியலை வளர்த்தெடுத்தோம்?

அச்நம்தான் கடவுள் நம்பிக்கைக்குக் காரணமென்ற மானிடவியல் கோட்பாடுகள் சலசலக்கின்றன

எல்லாம் படவுள் பா்த்துக் கொள்வார்...

 இக்குரல்கள் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன

ஆன்மீகமும் அறிவியலும் தலை கவிழ்ந்து கிடக்கின்றன

உடல்தான் உண்மையான கடவுள்.... 

 திருமூலரின் குரல் உறங்கியே கிடக்கிறது

மழை

  

 சிப்பியின் வயிற்றில் நீ முத்துத் துளி

உழவனின் பார்வையில் நீ வைரத்துளி , 

இலையின் நுனியில் நீ ஒளியின் துளி, 

கவிஞனின் பார்வையில் நீ அமுதத்துளி.  

மலர்களில் பூகம்பம் உன்னால்.  

விண்ணில் இருந்து வந்த நீ கண்ணீர் துளியா,

 பூமிக்கு வானம் கொடுத்த முத்தத்துளியா?

 விண்ணிலிருந்து மண்ணில் வந்த தேவதை நீயோ?

 வானுக்கும் மண்ணுக்கும் பாலம் நீயோ? 

உன் கரங்களைப் பற்ற கைநீட்டுகிறேன்.

 நீயோ ஏன் துளியாய்ச் சிதறிப் போகிறாய்? 

கைக்குள் பிடிக்கப் போகிறேன் காணாமல் போகிறாய். 

நான் பாராதிருக்கும் போது வந்து போகிறாய். 

பார்த்திருக்கும் போதோ...

 மேகத்திற்குள் நீ ஒளிந்து கொள்கிறாய்.  

கவிழ்ந்து கிடந்து நகர்ந்து போகிறாய்.

மழைத்துளியோ நினைவுத்துளியோ

சிறு பூகம்பத்தை ஏற்படுத்தி மனதில் 

நீங்காத பள்ளத்தை ஏற்படுத்தி விடுகிறது

 -------------------------------------

 

 வாசம்

மழையின் போது மண் வாசம்

முத்தமிடும் போது மழலை வாசம்

மலரும் போது பூ வாசம்

அரைக்கும் போது சந்தனம் வாசம். 

சிலரை நினைக்கும் போது நேரமே வாசம்

 

-------------------------------------------------------

 

பார்வை பார்த்துப் பூத்திருக்க

சொல்லாமலே வந்து விட்டுப் போய்விடுகிறது.

குழந்தை போல் செல்லச் சிணுங்கல்

சில்லென்று வீசும் சாரல்...

இலைகளின் நுனியிலும் மரங்களின் கிளைகளிலும்

மட்டுமா சாலம் காட்டுகிறாய்?

புவியின் உள்ளடுக்குகளில் உள் நுழைந்து

வற்றாத ஜீவநதியாகி....

சிலரின் நினைவுகளைப் போல்...

ஓடிக் கொண்டேயிருக்கிறாய். 

மழையின் ஓசையும் புவியின் வைரங்களும்

பேசிக் கொள்கின்றன

 சிலர்....

என்னோடு பேசாத வார்த்தைகளையும் சேர்த்து.....

--------------------------


எத்தனை ஆண்டுகள் கடந்தாலும் 

மழை மழையாகவே இருக்கிறது.

எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்

ஈர்ப்பும் அப்படியே இருக்கிறது.

கொஞ்சம் அக்கறையும் நிறைய அன்பும்

விண்ணிலிருந்து மழை இறங்கி வர காரணங்கள் 

சிலருக்கு மழையும் தனிமையும் போதும் 

மழை காட்டும் ஜாலம் போதும்

மண்ணைச் சுத்தப்படுத்தும்  மழை

ஏனோ மனதைச் சுத்தப்படுத்தத் தவறிவிடுகிறது.

மழை தனக்குள் கவிதையை ஒளித்து வைத்திருக்கிறது

அதைப் பார்த்துக் கொண்டிருந்தால் போதும் 

மழை எங்கிருந்து வருகிறது? 

மேகமாவதற்கு முன் என்னவாக இருந்தது?

விண்ணுக்கும் மண்ணுக்கும் இது போடும் கோடுகள்

வரிசை மாறாமல்...

இடைவெளி மாறாமல்...

இசையோடு தன் வருகையை வெளிப்படுத்தும் ஆரவாரங்கள்..

காற்றுக் காதலனோடு இது நடத்தும் நடனங்கள்...

இலைகளின் மீது மழை வைக்கும் செல்லக் குட்டுகள் 

மண்ணில்மழை வைக்கும் தொடர் புள்ளிக் கோலங்கள்

மழை விட்டாலும் விடாத தூவாணம் போல 

சிலரது நினைவுகள்....

நாணேற்றிய வானவில்லில் அம்பாக உன்னை

சரம் சரமாக விட்டது யாரோ?

 மழை வரைவது நெடிய கோடுகள்

வானவில் வரைவது வளைந்த கோடுகள்

நீர்த்தாரைகள் வரைவது நீண்ட கோடுகள்

பெண்களுக்கும் கோடுகளுக்கும் கூட

நெருங்கிய தொடர்புண்டு....

பெண்களைச் சுற்றும் லட்சுமணக் கோடுகள்...

உணர்ச்சிப் பிரவாகத்தில் சில சமயம் 

மழையைப் போல கொட்டித் தீர்த்துவிடுகிறோம்... 

சிலசமயம் மேகம் போல் ...

கலைந்து காணாமல் போய் விடுகிறோம்.

சிலசமயம் சொல்லாமல் வரும் மழையைப் போல 

யாரும் காணாமல் அழுது தீர்த்துவிடுகிறோம்

இறுகிய பனிக்கட்டியாக முயற்சித்து ...

முடியாமல் கரைந்து கொண்டே இருக்கிறோம் 

ஆவியாகி காற்றில் கலந்தாலும் மீண்டும்

மேகமாகி மழையாகி விடுகிறோம்

மழையின் வருகை சிலருக்கு இதமாகவும்

சிலருக்கு வெறுப்பாகவும் இருக்கிறது

மழையே உள்னோடு பழகுவதால் உள்ளுக்குள் குளிரெடுத்து

நரம்புகள் சிலிர்ப்தென்னவோ உண்மைதான்

ஆனால் மழையே உன்னோடு பழகுவதில்

ஆபத்தும் இருக்கிறது....

-----------------------------------------------

 






Thursday 15 October 2020

உயிரோட்டம் நாவல் திறனாய்வு - ஆங்கிலத்தில் ..

உயிரோட்டம் நாவல் தொடர்பான என் திறனாய்வு வையவன் மொழிபெயர்ப்பாக, ஆங்கிலத்தில் .. The author 'Vaiyavan’s novel. Published by Chennai Dharini Padhippagam[Publisher. There is a fountain of life buried within every human mind and swirling inward. The novel is based on the idea that if you find the source of life and bring it out, you can create paradise on earth. Manorama is the one who chases us without letting us finish the novel. The novelist introduces Manorama as a woman with a stylized appearance, polite speech, a half-dress, a college-educated friend who drives a car alone for smarts, and an arrogant woman who speaks right to previously unfamiliar young people. The reader first approaches her as a minor character in the novel. At the second meeting, she invites Raghunathan to a cup of coffee alone and expresses her love for him by appearing as a representative of today's deteriorating young community. But Raghunathan 's indifferent gaze and indifference to idealism and his zeal to reform the country in the grip of Vivekananda's policies overturned Manorama. If a love can do this magic, Manorama changes as the mountain collapses and becomes fertile soil, proving that true love can do anything. She stands tall, lying about the proverb that a child is like a mother. She seeks out the reason for Raghunathan s indifference. The mother's messy life is caught. Behind him, Raghunathan finds a fountain of life beneath the tiger's hair, exposes it, and turns the barren five hundred acres of barren land of Javadu into hungry fields by his labor. But I must say that he also opened the fountain of life hidden inside Manorama's mind with his indifferent axe. Her civility, arrogance and ingenuity, which until then had concealed the fountain of life of grace, are shattered and she emerges as a true romantic social service, benefiting wherever she is and wherever she goes. Manorama grew up as the only woman in wealth. Realizing that all the rich entertainment, hobbies and facilities are due to her mother's immorality, she brushes off like a Siddhartha and leaves with a simple sari. The mother comes and calls repeatedly but she refuses. The novelist says in one place. “The individual conscience is the social conscience. If everyone behaves reasonably proper, then only social service is fulfilled " (p-130) How true is the fact! No one should go out to serve the community alone. Great community service begins if everyone decides to become right. Manorama's zeal is not mythical zeal. Manorama willingly accepts the job of clerk in a disability hostel. Dressed in glamorous strength, Manorama dressed in simple attire and became a maid serving the physically challenged. Everything is for Raghu's love. But she is shocked to learn that he loves Indumati. However, she is resurrected when given the chance to give shape to Raghu's ideal dream. Indumati realizes that Raghu has not changed her mind after her death and immerses herself in his national development work as an ideal companion.

சங்க காலத்தில் போரும் வாழ்வும் நூல் அறிமுகம் ஆங்கிலத்தில்.

சங்க காலத்தில் போரும் வாழ்வும் நூல் அறிமுகம் ஆங்கிலத்தில். War and life during the Sangam period [By Dr. Jawahar Premalatha, Associate Professor Govt. Arts and Science College [Autonomous] Salem-7
(Translated into English: Vaiyavan] _____________________________________________________ Who wants war? Does the world like those who love and support it? In fact, no one with a good heart would want a war that kills people. Bharathidasan said, "Let us uproot the evil warring world." The result of the war was nothing but devastation. The welfare of the people will be neglected. The amount of mandavar will increase. Those who have lost organs cannot be counted. The future struggle of the children who have lost their fathers, the bereaved women who have lost their husbands, the elderly who have lost their sons and the disabled will be mourned everywhere. The result of this war is nothing but the destruction of conscience and the destruction of the people. Although it is a book on the Purananuru war, which is the historical repository of the Tamils, it is also an excellent book. Although the book tells of the wars, heroism, generosity, and hospitality of the ancients, it does say that there should be no war that contributes to social peace and that affects the welfare of the people. During the Sangam period, the youth, who were fed up with the obligation of ‘throwing stones and moving shifts to the bulls’, waited for the war to come. They were beating to see the blood of the enemy. They have gone to the battlefield and lived with the feeling that the day when they fall heroically and fall by the sword, bow and arrow are useful days and all other days are useless useless days. This is what Thiruvalluvar says in the verse, "Take the day that keeps everything slippery on the day when it does not fall." The war veterans went to war only after the enemy had said viciously, "If I fail to do this, this will happen." Sangam Tamil Maravars are considered to be qualified to complete what is considered. Women are not heroes either. A woman, who lost her father and husband in the ensuing battle, hears the roar of war on the third day and sends her son, who was playing, with a small whip on his head, to go to war. Seeing this, the female poet Okkur Masathiyar marvels at the heroism of the Ammarakkudi woman, saying, ‘Closer and closer to each other New World Nature Page-70) In the same book that supports war, voices say that war is not necessary, that the world is the nature of opposing, attacking and retaliating against each other. Although man is convinced that he originated from the beast, questions and voices calling out to the kings to consider whether it is appropriate to seek revenge, slaughter, and massacre in the name of heroism are loud and clear. Tamils have repeatedly fought among themselves for a variety of reasons, in a time when poets like Computer Bloom, who brought all the people of the world under one roof and celebrated everyone as relatives, said, "Everybody listens everywhere." Were the poets simply joking that the kings were massacring people in the name of war and flying the welfare of the people in the air for the sake of manna? No. They have tried to unite the kings as much as they can regardless of their lives. The songs of the Sangam poets, while seemingly praising the war on the one hand, have a lot of style in it as well as expressing the tragedies caused by the war as its content. They also had the courage and expertise to meet the kings at the right time and advise them to give up the war. The kings, in spite of all their power, arrogance, creativity, selfishness and efforts, have valued the voice of the witnesses and maintained their sovereignty. The Sangam kings considered the poets to be superior to themselves. Learned attestors were highly praised. They understand the vitality in their words, realize their mistakes and act with generosity. Adiyaman Nedumaan Anji has given the long-live life giving gooseberry which was presented to him; offer it to Avvaiyaar for the special reason of these people who are concerned about the welfare of the people [Continued]

சங்ககாலத்தில் போரும் வாழ்வும் நூல் - கலந்துரையாடல்

 





Sunday 6 September 2020

காலந்தோறும் இன்னியம்

 

காலந்தோறும் இன்னியம்

முன்னுரை

கூட்டு வாத்திய இசை அமைப்பு முறையைப் பழந்தமிழர் இன்னியம் - பன்னியம் - பல்லியம் என அழைந்தனர். மேலைநாடுகளில் சிறப்பாக நடத்தப்படும் கூட்டு வாத்திய இசையமைப்பு முறை –பேண்டு வாத்திய இசை – ஆர்க்கெஸ்ட்ரா என்று பல சொற்களால் குறிப்பிடப்பட்டாலும், பழந்தமிழர் இசை முறையே ஆகும். இது தொடர்பாக வழங்கப்பட்ட பெயர்களையும், கூட்டு வைத்திய இசைக்குப் பயன்படுத்தப்பட்ட இசைக் கூட்டு வாத்திய இசைக்குப் பயன்படுத்தப்பட்ட இசைக் கருவிகளையும் இக்கட்டுரை ஆராய்கிறது.

இயற்கை பாடம்

இயற்கை எழுப்பும் பலவித ஒலிகளைக் கேட்ட மனிதன், இதைப் போலவே இசைக் கருவிகளைக் கேட்டு இசைக்கத் தொடங்கினான்.

“ஆடமைக் குயின்ற அவிர்துளை மருங்கன்

கோடை யவ்வரி குழலிசையாகப்

பாடின் அருவிப் பனிநீர் இன்னிசைத்

தோடமை முழவின் துதை குரலாகக்

கனக்கலை இகுக்கும் கடுங்குரல் தும்பொடு (அகநா. 82)

என்ற பாடல் மூங்கிலில் வண்டுகள் துளையிட்டு அந்தத் துளைகளில் காற்றுப் புகுந்து வெளியேறும் போது இனிய ஒலி பிறந்தது உடன் அரு. நீரின் ஓசை முழவு போலும், வண்டின் இமியொலி யாழின் இசை போலவும் முழங்கியது என்கிறது.

பரிபாடலில்,

 ஒரு திறம் பாணர் யாழின் தீங்குரல் எழ

  ஒரு திறம் பாணர் வண்டின் இமிரிசை எழ

  ஒரு திறம் கண்ணார் குழலின் கரைபு எழ

  ஒரு திறம் பண்ணார் தும்பி பரந்திசை ஊத

  ஒரு திறம் பண்ணார் முழவின் இசை எழ

  ஒரு திறம் அண்ணல் நெடு வரை அருவி நீர் ததும்ப

  ஒரு திறம் பாடல் நல்விறவியல் ஒல்குபு நுடங்க

  ஒரு திறம் வாடை உளவயின் பூங்கொடி நுடங்க

  ஒரு திறம் பாழனி குரலும் பாலையங் குரலின்’’ (பரிபால் 17, 9-17)

 

என்ற பாடல், திருப்பரங்குன்றத்தில் பாணர்கள் இசைக்கும் இனிய யாழின் ஓசை, வண்டுகளின் இமிரிசை, புல்லாங் குழல் இசை, தும்பியின் ஓசை, முழவின் ஓசை, மலையருவி ஓசை, பாடினியின் பாலைப்பண்ணிசை, மயிலின் அகவல் இவையத்தும் சேர்ந்து பேரிசையாகக் கூட்டிசையாக முழுங்கியது என விவரிக்கிறது.

தொடக்கத்தில் யயழ் இசை, பாலைப் பண்ணிசை முதலான செயற்கை கருவிகளால் எழுத்தப்பட்ட இசையை, இயற்கையில் எழும்பும் அருவி ஓசை, மயிலின் அகவல் முதலான இசையோடு இணைத்து இணைந்து இரசித்தனர்.பின்னர், இயற்கையில் எழும் ஓசையை ஒத்த ஓசையெழப்பும் கருவிகளைக் கண்டு பிடித்தனர். இக்கருவிகளைக் கொண்டு டுட்டு வாத்திய இசைகளை எழுப்பினர். பின் கூட்டு வாத்தியக் குழு அமைத்தனால் இவற்றையே கூத்தர்களும், பாணர்களும் தங்கள் வாழ்க்கைத் தொழிலாகக் கொண்டனர். பத்துப் பாட்டு மலைபடு கடாம் கூத்தர் கொண்டு சென்ற வாத்தியங்களைப் பட்டியலிடுகிறது.

திண்வார் விசித்த முழலோடு ஆகுளி  கலப்பையீர்’’(மலைபடு 1-14)

 ஆற்றுப்படை நூல்கள் இக்கூட்டு வாத்திய இசைக் கலைஞர்களையும், கருவிகளையும் அவர்கள் வாழ்க்கையைப் பற்றியுமே கூறுகின்றன.

பரிபாடல் வையை ( பாடல் 12 ) பாடல் கீழ்க்கண்ட கருவிகளை இணைத்து கூட்டு வாத்திய இசைக்குப் பயன்படுத்தினர் என்பதைப் பட்டியலிடுகிறது.

ஒத்த குழலின் ஒலி எழ முழவிமிழ்’’

இப்பாடல் மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி, முழவு முதலிய இசைக் கருவிகள் சேர்ந்து ஒரே நேரத்தில் இசைக்கப்பட்டன என்றும் ஒருவர் பிற்படார்என்ற வரிகள் யாரும் முற்படவோ, பிற்படவோ இன்றி ஒரே நேரத்தில் இணைந்து வாசத்தனர் என்கிறது.

ஒரு கருவியின் இசை மற்றொரு கருவின் இசையோடு ஒத்திருந்தால் மட்டுமே, அதை இணைக் கருவியாகச்சேர்ந்து இசைப்பர்.

விண்ணதிர் இமிழிசை கடுப்பப் பண்ணiiத்துத்

        திண்வார் விசித்த முழவொ டாகுளி

        நண்ணுருக் குற்ற விளங்கர் பாண்டில்’’(மலை படு 1-4)

என்ற பாடல் வரிகள் முழவு, ஆகுளி, பண்டிரு மூன்றும் சேர்ந்து இசைக்கப்பட்டதைத் தெரிவிக்கிறது.

மன்னர்- பள்ளியெழுச்சி

  இரங்குகுரன் முரசமொடு வலம்புரி ஆர்ப்ப

  இரவுப் புறங்கண்ட காலைத் தோன்றி’’(புறநானூறு, 397, 5-6)

பாசறையில் உறங்கும் மன்னளை எழுப்ப பள்ளியெழுச்சி பாடப்படும்பொழுது, முரசும் வலம்புரிச் சங்கும் சேர்ந்து இசைக்கப்பட்டுள்ளள என்கிறது. புறநானூறு

பல்லியம்-இறைவனுக்காக

குறுந்தொகை இறைவனுக்காகப் பல கருவிகளை இணைத்து இசைக்கப்படும் நிலையில் பல்லியம்என்ற சொல்லால் குறிப்பிடுகிறது.

மறிக்குரல் அறுத்துத் தினைப் பிரப்பு இரீஇச்

       செல் ஆற்று கவலை பல் இயல் கறங்க’’(குறு 263, 1-2)

ஓடும் ஆற்றில் கரையில் முருகப் பெருமானுக்காக ஆட்டின் கழுத்தை அறுத்து, தினையாகிய பலியை வைதது வழிபடுமிடத்து, பல்வேறு இசைக் கருவிகளை இணைத்து இசைத்துள்ளார். பல இசைக் கருவிகளின் கூட்டு இசையை பல்லியம்எனவும் அழைத்துள்ளனர். இயம்புணர் தூம்புஎன்ற இசைக் கருவி பற்றி ஜங்குறுநூறு (377) தெரிவிக்கிறது.

வேலனுக்கு வெறியாட்டு நிகர்த்தும் போதொல்லாம் வலிமையான ஒசையெழும்பும் இசைக்கருவிகளை இசைத்துள்ளனர்.

“----- வேலன்

  இன்இயம் கறங்கப் பாடி

  பல் மலர் சிதறிப் பரவுறு பலிக்கே’’( நற் 322, 9-11 )

கூடு கொள் இன்இயம் கறங்க களன்இழைத்து’’( அகம், 98, 14 )

வன் பரணரைத் தலைவராகக் கொண்ட வல்லில் ஓரி மன்னிர்டம் பரிசு பெற்ற பின், பாணர்கள் செல்வ வளத்த்தனால் இசைக்கருவிகளை இசைத்து இன்னியம் எழுப்ப மறந்தனர் என்பதை,

பசியார் ஆகல் மாறுகொல்  விசி பிணிக்

கூடுகொள் இன்னியம் கறங்க

ஆடலும் ஒல்லார் தம்பாலும் மறந்தே“( புறம். 153, 10-12 )

“கூடு கொள் இன்அயட் குரல் குரலாக“( சிறு.229 )

“வீசி வீங்கு இன் இயம் கடுப்பக் கயிறு பிணித்து( பெரு. 56 )

“கருங்கோட்டு இன்இயம் இயக்கிளார் கழிமன்( பெரு. 392 )

“தெரி இமிழ் கொண்ட நும் இயம்போல் இன் இசை( மலை, 296)

அதைப்போல் மத்தரி, தடாரி, தண்ணுமை, மகுளி என்ற நான்கு தாளக் கருவிகளும் தங்களுக்குள் இணைத்து இயக்கப்பட்டன என்கிறது பரிபாடல்.

மத்தரி தடாமரி தண்ணுமை மகுளி

       ஓத்தளந்து சீர்தூக்கி’’ (பரிபாடல் 12, 41-42)

தேரை ஒலியின் மானச் சீரமைத்துச்

 சில்லரி கறங்கும் சிறுபல் லியத்தோடு’’(அகநானூறு, நி, கோ-301, 19-20)

என்ற பாடல் சில்லரி என்ற இசைக்கருவி மற்ற இசைக் கருவிகளுடன் இணைத்து இசைக்கப்படும் என்கிறது. அந்தரப் பல்லியங் கறங்கத் திண்காழ்

       “வயிரெழந் திசைப்ப வால்வளை ஞரல

        உரந்தலை கொண்ட வுருமிடி முரசமொரு

        பல்பொறி மஞ்ஞை வெல்கொடி அகவ’’( திருமுருகாற்றுப்படை , 119 -122)

பல்லியம் என்று அழைக்கப்பட்ட கூட்டு இசைக் கருவிகளுடன் வயிர், வளை, முரசம் முதலான கருவிகளும் கோயில்களில் இசைக்கப்பட்டுள்ளன. இத்தனை இசைக் கருவிகளையும் சேர்த்து எழுப்பிய இசை குறிஞ்சியில் கீழ்க்கண்டவாறு ஒலித்ததை,

இமிழ் இசை அருவியொடு இன் இயம் கறங்க’’(திருமுரு . 240)

என்று திருமுருகாற்றுப்படை மேலும் கூறுகிறது.  மலைக் கடவுளான முருகப் பெருமானின் வாயிலில் மலையருவி ஓசையை ஒத்து எழுப்பப்பட்ட இசையை இன்னியம்என்ற சொல்லால் குறிப்பிடுவதைக் காணலாம்.

முருகனுக்கு உகந்த இசைக்கருவிகள் முருகியம்எனவும் அழைக்கப்பட்டன.

முருகு இயம் நிறுத்து முரணினர் உட்க

முருகு ஆற்றுப் படுத்த உருகெழு வியல் நகர்’’(திருமுருகாற்றுப்படை, 244)

இவ்வாறு பல கருவிகளின் கூட்டிசையை இன்னியம், பல்லியம், முருகியம் எனப் பல சொற்களால் அழைத்து உள்ளனர்.

 

பல்லியம்- சிறு பல்லியம்

ஓரிரு கருவிகள் மட்டும் இணைத்து இசைக்கப்படுவது சிறு பல்லியம்என்று அழைக்கப்பட்டுள்ளது. யாழிசையோடு பிற கருவிகள் இணைத்து இசைக்கப்படும் போது அக்கூட்டு இசையை பல்லியம்என்ற சொல்லால் புறநானூறு குறுப்பிடுகிறது.

வாங்கு மருப் பியாழொடு பல்லியம் கறங்க’’  (புறநானூறு, 28, 2)

யாழின் இசையோடு ஒத்த இசை மணமுழா என்னும் கருவியிலிருந்து வருவதால், அதனை யாழோடு இணைத்து இசைத்துள்ளார்.

மணமுழா வனமமின் பண்டயாழ் நிறுமின்’’(புறநானூறு 103, 1-2)

 பொன்யில் நடுவ ணேங்கும் பூநிறை யசோக நிழல்

  இன்னிய லாலயத்து ளேந்தரி யாசனத்தின்’’( பெருங்கதை, உஞ்சை, 2)

என்ற பாடலில் இன்னியய என்னும் சொல் காண்பதற்கினிய என்ற பொருளில் வருகிறது. இசை குறித்து வருமிடத்து கேட்பதற்கினியஎன்று பொருள்படுகிறது.  நற்றிணை பாடலொன்று ஓர்மகள் பல மலைகளின் ஓசைக் கேற்ப ஆடிய ஆட்டத்தைக் கூறுமிடத்து,

“பெருவரை அடுக்கம் பொற்பச் சூர்மகள்

அருவி இன்இயத்து அடும் நாடன்  ( நற், 34, 4-5)

பல அருவிகளின் ஓசையை இன்னியம் என்கிறது.

அரிக் கூட்டு இன்னியம்

கழைக் கூத்தாடிகளின் சிறுமி தூக்கி நிறு.திய கழைகளுக்கு இடையே உள்ள கயிற்றில் நடக்கும் பொழுது, மக்களைக் கவர்வதற்காக தேர்ந்தெடுத்த சில இசைக் கருவிகளை கழைக்கூத்தாடிகள் இணைந்து இசைப்பார். இது அரிக்கூட்டு இன்னியம்என அழைக்கப்பட்டுள்ளது. 

அரிக்கூட்டு இன்னியம் கறங்க ஆடுமகள்  கயிறு ஊர் பாணியின்’’(குறி, 193)

 

இன்னியம்  - ஏறுதழுவும் பொழுது

ஏறுதழுவும் பொழுதும் பல இசைக்கருவிகளை இசைத்துள்ளனர்

“இடி உறழ் இசையின் இயம் எழுந்து ஆர்ப்ப (கலி, 104, 54)

“கார் எதிர் கலி ஒளி இடி உருமின் இயம் கறங்க (கலி, 105, 24)

இடி முழக்கம் போன்ற இசைக் கருவிகளின் முழக்கத்தினடியில் ஏறு தழுவும் நிகர்ங்சசி நடைபெற்றுள்ளது. ஏறுதழுவும் இளைஞர்களையும், மக்களையும் உற்சாகப்படுத்தவும் இன்னியம் இசைத்துள்ளனர்.

 

இசைக்கருவிகளை வாசிப்பவர்கள்

பலவித கருவிகளை இசைப்பவர்களை இயவர் என்றும் இன்னியம் எனவும் அழைத்துள்ளனர்.

இம்மென் பெரும்களத்து இயவர் ஊதும்’’( நற், 113, 10-11)

கடிப்பு எண் உறூஉம் தொடிதோள் இயவர்’’(பதி 17-7)

ஊக கொம்பு ஊதி மசையெழப்புவரைக் கோடியர் என்றழைத்தனர். பல்லியக் கோடியர், (சிறுபாணாற்றுப்படை- 125) கடும்பறைக் கோடியர் எனவும் இவர்களை அழைத்துள்ளனர். வயிர் என்னும் கருவி இசைத்தவரை ‘வயிரியர்என்றனர். பாட்டு பாடுபவரை பாட்டியர், யாழிசைப் போரை யாழோர்என்றும் பறை இசைப்பவரை அரிப்பறை வினைஞர்என்றும், கிணை என்றும் கருவிகளை இசைத்தவரை கிணைஞர்’ (புறநா , 375, 388) எனவும் அழைத்துள்ளனர். இவ்வாறு தனித்தனியாக இசைத்தவரை அக்கருவிகளின் பெயரைக் கொண்டு அழைத்தது போல், பலவிதமான இசைக்கருவிகளை இணைத்து இசைத்தவர்களை பல்லியர்என அழைத்துள்ளனர்.

இன்னிசையை விஞ்சிய பேரிசை

ஊரில் ஒலிக்கும் இசைக்கருவிகளின் முழக்கம் கேட்காதவாறு தயிரைக் கடையும் மத்தின் ஒலி மிகுந்து கேட்கும் செல்வச் செழிப்பு மிக்க ஆய்ச்சியர் மனைகள் என்பதைக் குறிக்கும் பாடலடி

மத்து உரறிய மனை னன்இயம் இமிழா ""

ஆலமரத்தின் உள்ள பறவைகளின் ஒலி இசைக் கருவிகள் பலவற்றைக் கூட்டாக ஒலிப்பது போன்று மிகப் பெரியதாகும். அத்தகைய வளம் பொருந்திய ஊர்களை உடையது

கல்லென இயங்கல் ஓம்பி நும் இயங்கள் தொடுமின்"" (மலை, 276-277)

 நன்ன ராணர் கூடுகொள் இன்இயம்

தேர் ஊர் தெருவில் ததும்பும்" (அகம் 139, 13-14)

பன்னிரு திருமுறைகளில் பல்லியம்

முருகனுக்கு இசைக்கப்பட்டதைப் போல பிற்காலத்தில் சிவனுக்கும் இசைக்கப்பட்டது. இதை காரைக்காலம்மையார் பாடலில் விரிவாகக் காணலாம்.

திருவாலங்காட்டில் இனிமையாகப் பாடிக்கொண்டு, இசைக்கருவிகளை இசைத்துக் கொண்டு சிவபெருமான் ஆடுகின்றான். திருவாலங்காட்டு மூத்த திருப்பதிகம் இதை வருணிக்கிறது.
“துத்தங்கைக் கிளை விளரி தாரம்
உழை இளிஓசைபண் கெழுமப் பாடிச்
சச்சரி கொக்கரை தக்கை யோடு
தகுணிதம் துந்துபி தாளம் வீணை
மத்தளம் கரடிகை வன்கை மென்றோல்
தமருகம் குடமுழா மொந்தை வாசித்(து)
அத்தனை விரவினோடாடும் எங்கள்
அப்பன் இடம் திருவாலங் காடே

என்ற பாடலில் காணலாம். சச்சரி, கொக்கiரை, தக்கை, தகுணிதம், தந்துபி, தாளம், வீணை, மத்தளம், கரடிகை, தமருகம், குடமுழா முதலான பத்திற்கும் மேற்பட்ட இசைக்கருவிகள் இணைத்து இசைக்கப்பட்டதை இப்பாடல் கூறுகிறது.

திருக்கைலாய ஞான உலாவில் இறைவன் புறப்பாட்டிற்கு வாசிக்கப்படும் இசைக்கருவிகள் பட்டியலிடப்படுகின்றன.

சல்லரி தாளம் தகுணிதம் தத்தளகம்
கல்லலகு கல்ல வடமொந்தை - நல்லியத்
தட்டழி சங்கம் சலஞ்சலந் தண்ணுமை
கட்டிழியாப் பேரி கரதாளம் - கொட்டும்
குடமுழவம் கொக்கரை வீணை குழல்யாழ்
இடமாம் தடாரி படகம் _ இடவிய
மத்தளம் துந்துபி வாய்ந்த முரு(டு) இவற்றால்  
எத்திசை தோறும் எழுந்தியம்ப _ ஒத்துடனே
மங்கலம் பாடுவோர் வந்திறைஞ்ச  (44-49)

காரைக்காலம்மையார் குறிப்பிடாத பல இசைக் கருவிகள் சேரமான் பெருமான் நாயனார் குறிப்பிடுவதிலிருந்து பல இசைக்கருவிகளின் வளர்ச்சியைக் காணமுடிகிறது.

‘’பிரசம் திகழும் வரைபுரை யானையின் பீடழித்தார்

முரசம் திகழும் முருகியம் நீங்கும் எவர்க்கு முன்னாம்(திருக்கோவை-மணஞ்சிறப்புரைத்தல், 1)

 

“பல்லியல் பாணிப் பாரிட மேத்தப்( 1.101.3 )

“பண்ணாரப் பல்லியம் பாடினான் காண் ( 6.8.11 )

“ஆனந்தம் பல்லியம் ஆனந்தம் வாச்சியம்( 10. 2725 )

“பல்லியங்கள் பரந்த ஒலியுடன்( 12.0088)

“மங்கல வாழ்த்து மல்க மருங்க பல்லியங்கள் ஆர்ப்ப( 12.06 89 )

“கோதில் பல்லியமும் கொடியும் பயில்( 12.1181 )

“சொல்லார் மறைகள் துதி செய்யச் சூழ் பல்லியங்கள் எழ (12.1262)

“பொங்கு பல்லிய நாதம் பொலிந்து எழ(12.2101)

“முன் எம்மங்கும் நிரத்த முரசு உடைப் பல்லியம் ஆர்ப்ப(12.2181)

“பல்லிய நாதம் பொங்கப்படர் (12. 2641)

“பன்மணி முரசும் சூழ்ந்த பல்லியம் இயம்ப(12.2709)

“அளவு இறந்த பல்லியங்கள் முழக்கி ஆர்த்து(12.2862)

“பண்மணி மங்கல முரசும் பல்லியங்கள் நிறைந்து ஆர்ப்ப(12.3070)

“பயில்தரும்  பல்லிய முழக்கும் முறை (12.4026)

“கயப் பொருப்பின் முழக்கு ஒலியும் கலந்து எழு பல்லிய ஒலியும் (12.4073)

தேவார பாடல்களில் இடக்கை, உடுக்கை, கத்திரிக்கை, கல்லவடம், கல்லலகு, கிணை, குடமுழா, கொக்கரை. கொடுகொட்டி, சல்லரி, தக்கை, தகுணரிச்சம், தண்ணுமை, பறை பிடவம், முழவு மொந்தை, முரவம் முதலிய தோற்கருவிகளும், வேய்ங்குழல் முதலிய நரம்புக் கருவிகளும், தாளம் முதலிய கஞ்சக்கருவிகள் பயின்று வந்துள்ளன

தேவாரம் உள்ளிட்ட திருமுறைகள் பல்லியம் என்று கூற,

 இன்னியம் எங்கும் நிறைந்தினிதாக இயம்பிடும்

(49-6) என்று திருவாசகம் இசைக்கருவிகளின் கூட்டு இசையை  இன்னியம்என்று கூறுகிறது.

திருப்புகழில் இன்னியம்

“தபலை திமிலைகள் பூரிகை பம்பைக்

கரடி தமருகம் வீணைகள் பொங்கத்

தடிய ழனவுக மாருதச் சண்டச் சமரேறி………

என்று திருப்புகழில் நீண்ட தாளத்துக்குப் பின்

பேரி திமிலை கரடிகை பதலை சலரிதவில்

தமர முரசுகள் குடமுழவொடு துடி

சத்தக் கணப் பறைகள் மெத்தத் தொனித்து அதிர ” (சிதம்பரம் ப-855)

போன்றவை இசைக்கப்படுமென அருணகிரிநாதர் சிதம்பரம் என்னும் ஊர் பற்றி பாடும்பொழுது குறிப்பிடுகிறார்.

இருபதாம் நூற்றாண்டில் இன்னியம்

அரங்கநாதர் ஸ்ரீரங்கம் கோவிலில் 1953ஆம் ஆண்டு எடுக்கப்பட்ட இசைத்திருந்த கருவிகளாக http://templemusicinstrumentstraditional.blogspot.com/

இணையதளம் இப்பட்டியலைத்தருகிறது.


பெரிய மேளம் – 1  மேளம் (தவில், தாளம், ஒத்து,நாயனம் 4 உருப்படிகள்- 3 ஜதை
   


 அதிக நாயனம்-1
   
கவுரி காளை-2
   
திருச்சின்னம்-1
   
எக்காளை-1
   
வீரவண்டி-1
   
சேமக்கலம்-1
  சங்கு-1
   
மங்களவாத்தியம்-1 நட்டு, முட்டு-2
  சுத்து மத்தளம்-1
   
கொக்கை

  உடுக்கை -1
   
பெரியகைத்தாளம்-1
     
பாரி-1


திருவாரூர் தியாராஜ பெருமாள் ஆலயத்திற்கு 18 இசைக்கருவிகள் உண்டு. அவை:
சர்வ வாத்தியம் என அழைக்கப்பட்டுள்ளன.


1. பாரி நாதசுரம்
2.
பஞ்சமுக வாத்தியம்
3.
கொடுகொட்டி
4.
சுத்த மத்தளம்
5.
நாட்டு தாளம்
6.
ஜல்லரி (பெரிய தாளம்)
7.
எக்காளம்
8.
வாங்கா
9.
கர்ணா
10.
துத்தி
11.
சங்கம்
12.
சேமக்கலம்
13.
டக்கா
14.
பேரிகை
16.
தவண்டை
17.
புல்லாங்குழல்
18.
திருச்சின்னம்


 

இதே போல 74 வகையான கருவிகள் இசைக்கப்பட்டதாக இந்த இணையதளம் குறிப்பிடுகிறது. ஆனால். தற்கால புதிய இசைக்கருவிகள் வயலின், கிளாரினெட் போன்றவை இணைந்துவிட்டதால் பல பழைய இசைக்கருவிகள் வழங்கொழிந்து வருகின்றன.

இலங்கை ' இன்னிய அணி '

தமிழ் இசை வடிவங்களுக்குப் புத்துயிர் அளித்து வரும் வகையில்இலங்கையைச் சார்ந்த பேராசிரியர் சி. மௌனகுரு 'பேண்ட்' வாத்தியக் குழுவுக்கு பதிலீடாக தமிழ் மரபு அடிப்படையில் வாத்தியக் குழுவொன்றை அமைத்துள்ளார்.

தமிழ் 'இன்னிய அணி' எனப்பெயரிடப்பட்டுள்ள இந்த இன்னியக் குழுவிலே பெரும்பறை, தப்பட்டை, றபான், உடுக்கு, மத்தளம், வணிக்கை எனும் தோல் வாத்தியங்களும் சிலம்பு, சிறுதாளம், பெருதாளம் போன்ற கஞ்ச வாத்தியங்களும் சங்கு, எக்காளம் போன்ற துளை வாத்தியங்களும் இணைத்து இசைக்கப்படுகின்றன. (http://tamilopera.blogspot.com/2009/09/blog-post_13.html) கிழக்குப் பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவின் போது இடம்பெற்ற இந்த வாத்தியக் குழுவின் இன்னியமும், ஆட்டமும் பார்வையாளர்கள் பலரையும் கவர்ந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

முடிவுரை

சங்கத்தமிழரின் வாழ்வோடு கலந்துவிட்ட இன்னியம் பல வகைகளில் காலந்தோறும் உயிர்தெழுந்து வருகிறது. பொழுதுபோக்கிற்காக, அரசனுக்காக, இறைவனுக்காக இசைக்கப்பட்ட இன்னியம் இன்று பல்கலைக்கழகப் பட்டமளிப்பு விழாவில் வாசிக்கப்படும் நிலையை எட்டியுள்ளது. இன்னியத்தின் பரிணாம வளர்ச்சியையே இது காட்டுகிறது.

துணைநின்ற நூல்கள்

1.அகளங்கன், பன்னிருதிருமுறை,பாலசுப்ரமணியன்.கு.வெ. மற்றும் பலர்(உ.ஆ) சங்க இலக்கியம்,என்.சி.பி.எச்,சென்னை. மு.ப 2004

2.கிருஷ்ணன்.ந. (ப.ஆ)  திருப்புகழ் குகாநந்தா திருப்புகழ் சபை, காந்திரோடு சேலம் -7

3.சுப்ரமணியன்.ச.வே, (ப.ஆ)  பன்னிருதிருமுறை, மணிவாசகர் பதிப்பகம் சென்னை


4.பத்மதேவன், (ப.ஆ)  திருவாசகம்,கற்பகம் புத்தகாலயம், சென்னை

 

முனைவர் ஜ.பிரேமலதா,

தமிழ் இணைப் பேராசிரியர்,

அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),

                                                 சேலம் -636007.தொலைபேசி 9488417411