நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 31 October 2020

நந்தவன நாட்கள்

நகர்ந்து போன நந்தவன நாட்களை

 சாட்டையால் அடித்தது யாருடைய கைகள்?

 நம் வீட்டுத் தெருக்களில் 

பாம்புகளை நெளிய விட்டது யாருடைய கைகள்?

  தென்றலைத் திசை மாற்றித் திருப்பியது யாருடைய கைகள்? 

 வசந்தங்களை விசமாக்கியது யாருடைய

 நச்சுக் கைகள்? 

 எப்போதாவது உண்ணும் கால்வயிற்றுக் கஞ்சியை 

பறித்தது யாருடைய  கைகள்?

மனிதம் மறைவதற்குக் காரணமாக இருந்தவை 

எந்த அரக்கனுடைய மாயக் கைகள்?

 சக மனிதனைச் சாவின் தூதுவனாகப் 

பார்க்கத் தூண்டியவை யாருடைய மரணக் கைகள்? 

 மகத்துவமெல்லாம் வெறும் மண்ணாகிப் போகக் 

காரணமாக இருந்தவை யாருடைய கைகள்? 

இந்தக் கைகளாக இருக்கலாமோ? 

வியர்வை வழிய வேலை செய்பவனை 

இழிவாகப் பார்க்கும் சோம்பேறிக் கைகள்! 

மூத்த தலைமுறையைச் சுமையாகக் கருதி

 தன் போக்கில் வாழ நினைக்கும் அல்ல கைகள்!

 உழைப்பை மறுத்து உறிஞ்சிக் கொளுத்து

 தலைமுறைகளைக் காக்கும் பெருங்கைகள்

 பூமிப் பந்தினைத் தன் காலத்திலேயே

 பூக்காத பந்தாகப் பாலைவனமாக்கும் நம்கைகள்!

 --------------------------------------------------- 



சாதி சடங்குகள் எங்குப் போயின? 

அட சாதிக்கொரு சுடுகாடுதான் எங்குப் போயின?

செய்த புண்ணியங்கள் மௌனித்துவிட்டன.

சேவை செய்த கோயில் மூடிப் பல நாளாயின

கடவுள்களும் முகக் கசவமிட்டு விளம்பரம் செய்கின்றன

பொட்டலங்களாய்க கட்டப்படுவதற்கா

அறிவியலை வளர்த்தெடுத்தோம்?

அச்நம்தான் கடவுள் நம்பிக்கைக்குக் காரணமென்ற மானிடவியல் கோட்பாடுகள் சலசலக்கின்றன

எல்லாம் படவுள் பா்த்துக் கொள்வார்...

 இக்குரல்கள் கேலிக்குள்ளாக்கப்படுகின்றன

ஆன்மீகமும் அறிவியலும் தலை கவிழ்ந்து கிடக்கின்றன

உடல்தான் உண்மையான கடவுள்.... 

 திருமூலரின் குரல் உறங்கியே கிடக்கிறது

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?