நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Saturday 19 March 2016

ஏனடி தோழி, கேளொரு சேதி, இதுதானோ உங்கள் மன்னவன் நீதி?


Image result for தோழி 

ஏனடி தோழி, கேளொரு சேதி, இதுதானோ உங்கள் மன்னவன் நீதி?


களவொழுக்கத்தின்போது விரைவில் வந்து மணமுடிப்பதாகக் கூறிச் சென்ற தலைவன் நெடுநாட்களாகியும் வரவில்லை.  தலைவியோ தலைவனை மறக்கமுடியாமல் தவித்தாள்.  அவனையே நினைத்து வருந்தி உடல் மெலிந்து போனாள்.
தலைவன் மலைநாட்டைச் சேர்ந்தவன்.  வணிகத்தின் பொருட்டு இப்பகுதிக்கு வந்தபோது, தலைவியைக் கண்டு காதல்கொண்டவன்.  அவன் ஊர் தெரியாது.  பேர் தெரியாது.  சென்றவன் திரும்ப அவனாகவே வந்தால்தான் உண்டு.  தலைவியோ யாரிடமும் எதுவும் சொல்லவும் முடியாமல், அவனை மறக்கவும் முடியாமல் உலகை வெறுத்துக் காணப்பட்டாள்.  தோழியால் இதைப்பொறுக்க இயலுமா?

பூங்காற்றிலே தேடிய உயிர்மூச்சு!

Image result for தலைவி தோழி 

பூங்காற்றிலே உன் சுவாசத்தை நான் தேடித் தேடிப் பார்த்தேன்.......
குறிஞ்சிக்கலி நான்காம் பாடலைப்போன்ற பாடலே இதுவும்.  எனினும் இவள் வேறொரு தலைவி.  தோழியும் வேறொரு தோழி.  துயரம் ஒன்றாக இருந்தாலும், அவரவர் பாடு அவரவர்களுக்கு.
தலைவன் தன் நாட்டிற்குச் சென்று தன் பெற்றோர் ஒப்புதல் பெற்று உடன் தெரிவதாகத் தெரிவித்தான்.  போனான்.  போயே விட்டான்.  வந்தபாடில்லை.
போகும்போது, ‘இனி உன்னைப் பிரியேன்’ என்றான். 

சந்திப்போமா? இன்று சந்திப்போமா? தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா?



Image result for tiger and elephant fight 

சந்திப்போமா? இன்று சந்திப்போமா?
தனிமையில் நம்மைப் பற்றிச் சிந்திப்போமா?



கலித்தொகை-13

இரவில் தலைவன் தலைவியைச் சந்திப்பதற்காகப் பல கொடிய பாதைகளைக் கடந்து வருகிறான். அவன் வரும் வழியில் அச்சமூட்டும் பல விலங்குகள் இடர்ப்படும். வேடர்கள் விலங்குகளுக்காக வைத்த பொறி மறைந்திருக்கும். காட்டாறு எதிர்ப்படும் இப்படிப்பட்ட கொடுமையான பாதையை அவன் கடந்து வரும்பொழுது அவனுக்கு ஏதாவது ஆபத்து ஏற்பட்டுவிடுமோ என்று தோழியும் தலைவியும் அஞ்சுகின்றனர். தலைவன் தலைவியை மணந்து கொள்ளுதலே இதற்குத் தீர்வு. அதை மறைமுகமாக இரவுக்குறி இனி காவல் மிகுந்திருப்பதால் கிடையாது என்றும் இனி பகலில்தான் தலைவியைச் சந்திக்க வேண்டுமென்றும் தோழி உறுதிபடக் கூறுகிறாள்.

நாளை இந்த வேளை பார்த்து ஒடிவா நிலா..... இன்று எந்தன் தலைவன் இல்லை சென்றுவா நிலா.....



Image result for தலைவி  நிலா 

நாளை இந்த வேளை பார்த்து ஒடிவா நிலா.....
இன்று எந்தன் தலைவன் இல்லை சென்றுவா நிலா.....

 
குறிஞ்சிக்கலியின் பனிரெண்டாவது பாடல் இது. இப்பாடல் தலைவன் தலைவியை மணக்கும் எண்ணமின்றி, களவுக் காதலிலேயே காலம் கடத்திக் கொண்டிருக்கிறான். இவர்களின் காதலோ ஊராருக்குத் தெரிந்து அவர் பேசுக்கின்றார்கள். இந்நிலையில் தலைவியைச் சந்திக்க வந்திருக்கும் தலைவனை வழி மறித்துத் தோழி அவனிடம் கூறுவதாக இப்பாடல் அடைந்துள்ளது.

அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா? அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?



Image result for தலைவன் தலைவி அச்சம் 
அன்பு மனம் கனிந்த பின்னே அச்சம் தேவையா?
அன்னமே நீ இன்னும் அறியாத பாவையா?
Image result for தலைவன் தலைவி அச்சம் 
குறிஞ்சிக்கலி பதினோராவது பாடல் தோழி கூற்றுப் பாடல், தலைவனின் ஆசையைத் தலைவிக்குப் புரிய வைக்க முயலும் தோழியின் இக்கட்டா சூழலை வெளிப்படுத்தும் பாடல்.  தலைவிக்குத் தலைவனின் பால் அன்பிருக்கிறது. ஆனால் அச்சமும் இருக்கிறதே. குடும்பத்தாரையும், உறவுகளையும், ஊரையும் நினைத்து மிகுந்த அச்சம் கொண்டிருப்பதால் தலைவனைக் கண்டும் காணாதது போல இருக்கிறாள். தலைவனோ தோழியின் உதவியை நாடுகிறான். தோழி தலைவியிடம் இவ்வாறு கூறுகிறாள்.

சொல்லத்தான் நினைக்கிறேன் சொல்லாமல் தவிக்கிறேன் காதல் சுகமானது..........



Image result for தலைவன் தலைவி பிரிவு

சொல்லத்தான் நினைக்கிறேன்
சொல்லாமல் தவிக்கிறேன்
காதல் சுகமானது.........
.  



 குறிஞ்சிக்கலியின் பத்தாவது பாடல். தோழி கூற்றாக வருகிறது. தோழியின் மேன்மையான குணத்தை விளக்கும் பாடல் இது. தலைவன்-தலைவி சேர்கையில் அவள் எடுத்துக் கொள்ளும் முயற்சியை இப்பாடல் எடுத்துரைக்கிறது. தலைவிக்குத் தலைவன் மீதுள்ள சினத்தைப் போக்க தன் மீது பழியைச் சுமத்திக் கொள்ளும் தோழியின் பெருந்தன்மையை வெளிப்படுத்துவதாக உள்ளது. தலைவன்-தலைவிக்கு இடையை ஏற்படும் மன ஊசலாட்டத்தையும், தவறான புரிதல்களையும் போக்குபவளாக இத்தோழி படைக்கப்பட்டிருக்கிறாள். காதலர்களிடையில் ஏற்படும் ஐயத்தை நீக்கி, நெருக்கத்தை ஏற்படுத்த நம்பிக்கையுடைய நெருங்கிய ஒரு நட்பின் தேவையை, தோழியின் இன்றியாமையை வலியுறுத்துவதாக இப்பாடல் அமைந்துள்ளது. வார்த்தைகள் பயன்படுத்தும்போது அதை உணர்ந்து உத்தேசித்து சரியான வார்த்தைகளை உப்போகப்படுத்திப் பேசவேண்டும் என்பதற்கு தேழி கூற்றுப்பாடல்கள் நல்ல சான்று.