நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday 24 October 2014

சேலம்கோட்டைபெருமாள் - அழகரிநாதர்சுவாமி கோயில் சிற்பங்கள்


ஆழ்வார்
தூண் சிற்பங்கள்
வாமனர்

விஷ்ணு துர்க்கை


நரசிம்மர்



அடியவர்

துந்துபி

சங்கு சக்ரதாரி

கோயிலுக்கு நீர் எடுத்து வரும் ஒரு பெண்

இராமர்

கண்ணன் மரத்தின் மீது அமர்ந்துள்ளான். கோபியர் ஆடை கேட்டு வணங்கி நிற்கின்றனர்.

துளசிமாடம்


துளசி மாடச் சிற்பங்கள்


இராமர் பாதுகை

கோவரத்தன கிரியை குடையாய் பிடித்து....
யக்ஞ நாராயணன்

Saturday 18 October 2014

பழமொழிகளும் புது விளக்கங்களும்


‘உண்டி சுருங்குதல் பண்டிக்கு அழகு’


    நாம் இன்று பல சொற்களைக் கால மாறுபாட்டின் காரணமாக வழக்கில் பயன்படுத்துவதில்லை. சில சொற்களுக்குப் பொருளையே மறந்துவிட்டோம். அப்படி மறந்துபோனதால் என்ன நட்டம் என்கிறீர்களா?

நட்டம்தான் தப்பும் தவறுமாகப் புரிந்துகொண்டு தேவையில்லாத இடத்தில் தவறாகப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறோம்.

Sunday 12 October 2014

இன்று நாம்......

இன்றைய உணவு




ஒரு வயதில்
மலத்தை நக்கி
வாயி்ல் சப்பியவன்
வளர்ந்தபின் கேட்கிறான்
பீ....ட்சா வாங்கித் தா.

பிடி(பி.டி.) சாபம்

எலிக்கும் குரங்கிற்கும்
கல்லீரல்,சிறுநீரகம்
வெந்தது போதாதா
மான்சாண்டோவே?
நீ பிடி சாபம் கொடுக்க
கொக்கென்று நினைத்தாயோ
இந்தியரை?
ஒரு கத்தரிக்காயும் வேண்டாம்
போ.



டாஸ்மார்க்


 
மக்களைச் செல்லாக் காசாக்கி
சுண்டி விளையாடும்
அரசியல் விளையாட்டில்
எப்போதும் 
பூக்களே விழுகின்றன.

தனிமரம்...

 
உன்னை
யாரோ அழைக்கிறார்கள்
போ என்றதும் போனாள்
சன்னமல்லி...
குண்டுமல்லி...
ஊசிமல்லி...
வாசலில் நின்று
பூவிற்றவனைக் கண்டு
பெருங்கோபத்துடன்
உள்ளே வந்தவளைப் பார்த்து
“நா சொன்னா மட்டும் அடிக்க வர்றே”
என்ற தம்பியைத் துரத்திய நாட்களை
நினைத்துப் பார்த்துப் பெருமூச்சுவிடுகிறாள்
விக்கிற விலைவாசிக்கு
ஒன்று போதும் என நிறுத்திவிட்ட
மல்லிகா.