நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 16 November 2020

நீரலைகள்

 கற்பாறை மீது மோதி மோதி நீரலைகள்

நீரத்திவலைகளாக மாறி உடைந்து கொண்டே இருக்கும்

யுகயுகங்களாகத் தொடரும் நீரின் போராட்டம்

யுகங்கள் கடந்தும் கரையாத...

 மனப்பாறைகளின் சதிராட்டம்..

மறக்கவியலா நினைக்கவுமியலா சில பதிவுகள்

கடக்கவியலா தொடரவுமியலா சில நினைவுகள்

மீட்கவியலா நீட்சியாகும் சில கனவுகள்

சொல்லவியலா கொல்லவுமியலா சில உணர்வுகள்

நிழலா வெயிலா கேட்கவியலா நோகங்கள்....

தொண்டைக் குழிக்குள் விசம் போல

விழுங்கவோ உமிழவோ முடியாத சில ஆசைகள்

ஒவ்வொருவர் வாழ்விலும் வந்துபோகுமா

 இந்தத் தருணங்கள்?

பதில்களற்ற கேள்விகள் ...

அறையெங்கும் நிரம்பி வழிகின்றன