நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Sunday 15 November 2020

பட்டாம்பூச்சி



 வானில் எத்தனையோ பட்டாம்பூச்சி

என்னைக்  கவர்ந்த ஒன்று

.பார்வை பறித்து மனதை இழுத்து வசமாக்கி,

நினைவு முளையில் என்னைக் கட்டிவிட்டு்ப் போனது. 

விடுபட்டுத் தேடினேன் அதுஅறியாமல்...

பூக்களின் மேல்....மரக்கிளையில்

தோட்டத்துச் சுவற்றில்

கண்ணில் பூச்சி காட்டி பறந்தது...

விண்ணில் மண்ணில் காட்டில்  நீரில்

என்னில்.....கைப்பிடிக்குள் வராமல்....

நானும் சிறகடித்தேன்....விழுந்தேன்..

அழுதேன்...மெல்ல....

பார்வையிலிருந்து மறைந்து போனது...

அமைதி தேடி ஓரிடம் அமர்ந்தேன்

 நினைவெங்கும்  பட்டாம்பூச்சி...

நிழலெல்லாம் பட்டாம்பூச்சி....

தோளில் மௌன சிறகடிப்பு

மனதில் ஒரு குறுகுறுப்பு...

பார்வை பாவை நகர்த்திப் பார்த்தேன்

பட்டாம்பூச்சி...அதே பட்டாம்பூச்சி...

மெல்ல கைவிரலில் எடுத்துப்பார்த்தேன்

அசைவின்றி இசைந்தது...

மெல்ல ஒரு கணம்...மனம்

அதை சொந்தமாக்க நினைத்தது...

அது வனதேவதைக்குச் சொந்தமானது...

விரல் விரித்தேன்....விடுபட்டுப் பறந்தது..

விரல் பார்த்தேன்.....

விரலில் அதன் வண்ணம் 

என்றும் நீங்காத வண்ணம்.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?