நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Wednesday 28 June 2017

தற்காலப்பேச்சுத் தமிழும் தொல்காப்பியமும்



தற்காலப்பேச்சுத் தமிழும் தொல்காப்பியமும்


ஆறு, கரை இல்லையென்றால் வறண்டு போய்விடும். அதுபோல் இலக்கணம் இல்லையென்றால் மொழியும் அழிந்து விடும். இலக்கணம் மொழிக்கு முதுகெலும்பு போன்றது. உறுதியான கட்டமைப்போடு இருக்க வேண்டும் இல்லையெனில் மொழி நிற்க முடியாது. காலம் கடந்து வென்று பீடுநடைபோட்டு நடக்க முடியாது. பயிரைக் காக்கின்ற வேலி போன்றது மொழியைக் காக்கின்ற இலக்கணங்கள். அவ்வகையில் தமிழுக்குக் கிடைத்துள்ள, உலகின் முதல் இலக்கண நூலான தொல்காப்பியம் தமிழை முன்னைப் பழமைக்கும் பழமையாகவும், புதுமைக்கும் புதுமையாகவும் காத்து நிற்கிறது. தமிழ்மொழியில் தொடார்ந்து இலக்கண நூல்கள் தோன்றிப் பெருகி வருகின்றன. பிற்கால இலக்கண நூல்களின் வளார்ச்சிக்கு ஆணி வேராகத் திகழ்வது தொல்காப்பியமே. தொல்காப்பியத்தை அடியொற்றியே அனைத்து இலக்கண நூல்களும் கிளை பரப்பி வளார்ந்துள்ளன.
சமஸ்கிருதம், சுமேரியம், ஹீப்ரு, கிரேக்கம், இலத்தீன் போன்ற பல மொழிகள் அழிந்துவிட்டன. காரணம் செழுமையான, முழுமையான இலக்கணங்கள் இல்லை. இருந்தாலும் பின்பற்றப்படவில்லை. தொல்காப்பியம் தொடார்ந்து இன்றுவரை படிக்கப்பட்டும், பின்பற்றப்பட்டும், போற்றப்பட்டும் வருவதால் தான் தமிழ்மொழி இன்று கணினியாலும் வெற்றிநடை போட்டு வருகிறது.
சீன அறிஞார் கன்பூசியஸ் நாட்டை ஆளும் வாய்ப்பு கிடைத்தால் மொழியைத் திருத்துவேன். ஏனெனில் மொழி சரியில்லாவிட்டால், கலை கெடும், நீதி கெடும், மக்கள் கெடுவார், மக்கள் பிரிவார், மொழி பிரியும், நாடு பிரியும், போர்மூளும், இனம் அறியும் என்றார்.

திருவள்ளுவரும், எண்ணென்ப ஏனை எழுத்தென்ப என்று மொழி வளார்ச்சிக்குக் காரணமான அடிப்படைக் கூறுகளைக் கூறுவார்.
இதில் எழுத்து என்பது இலக்கணத்தைக் குறிக்கிறது. எழுத்தறியத் தீரும் இழிதகைமை என்பார்ஔவையாரும்.

ஆரன்தூக்கு என்ற அறிஞர், இலக்கணம் கற்பதற்கும், கற்பிப்பதற்கும் கடினமானது தான், ஆனால் சமுதாய மேம்பாட்டிற்கும் மக்கள் ஒற்றுமைக்கும் இலக்கணத்தைப் படிக்க வேண்டியதும், அதைப் பின்பற்ற வேண்டியதும் அவசியம் என்பார். வேப்பங்காய் கசப்பாகத்தான் இருக்கும். ஆனால் அது உடலிலுள்ள நஞ்சை அகற்றி உடல் நலத்தை மேம்படுத்துகிறது. அதுபோலத்தான் இலக்கணமும் மொழியிலுள்ள குற்றங்களை நீக்கி அதனைத் தூய்மைப்படுத்துகிறது.

தற்கால நடப்பியல் பேச்சு வழக்கிலும் மக்கள் இலக்கண விதியின்படியே பேசி வருகிறார்கள். ஆனால் அதை இலக்கணம் என அவார்கள் அறிவதில்லை. பேச்சு வழக்குத் தமிழில் நாம் பயன்படுத்தும் இலக்கண விதிகளைச் சுட்டிக் காட்டினாலே போதும். பாமரார்களும் இலக்கணத்தை எளிதாய் கற்க முடியும். தொல்காப்பியார் செய்யுள் வழக்கு, உலக வழக்கு என இலக்கணத்தை இருபிரிவாக அணுகுகிறார். இதில் உலக வழக்க என்பது பேச்சுத்தமிழ்.

அன்றாடம் நாம் பயன்படுத்தும் உரையாடலில் தொல்காப்பியார் குறிப்பிடும் சில இலக்கண விதிகள் உள்ளன. அவற்றில் சிலவற்றைச் சுட்டிக் காடடுவதே இக்கட்டுரையின் நோக்கம்.
தொல்காப்பியார் வண்ணச்சினைச் சொல் என்ற ஒரு தொடரைப் பயன்படுத்துகிறார்.
அடைசினை முதலென முறைமூன்று மயங்காமை
 நடைபெற் றியலும் வண்ணச் சினைச்சொல்.(சொல்.22)
இச்சொல்லைப் பயன்படுத்தும்போது அடை, சினை, முதல் என்ற வாpசையடிப்படையில் சொற்களை அமைக்க வேண்டும். அடை என்பது ஒரு அடையாளத்தைக் குறிக்கும் சொல். சினை என்பது ஒருபகுதி. முதல் என்பது முழுமையான ஒரு பொருள். உதாரணமாக,

சிவப்பு தலை குமார்
நீலி மூக்கு கண்ணன்
மொடைடை தலை வடிவேலு

போன்ற சொற்கள் பயன்பாட்டில் மக்கள் பயன்படுத்துகின்றனார். இதில் சிவப்பு, நீலி, மொட்டை என்பவை அடையாளங்கள். இவைதான் அடைமொழகள். தலை, மூக்கு போன்றவை உறுப்புகள். இவை சினை. குமார், வடிவேலு போன்றவார்கள் முழுமையான ஒருவனைப் பற்றிக் கூறும் சொற்கள். கவுண்டமணி செந்தில் சிரிப்புகளில் பெரும்பாலும் வண்ணச்சினைச் சொல் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மன்னாப்பொருள்
மன்னாப் பொருளும் மன்ன வியற்றே (சொல்.34)
என்ற நூற்பா உலகில் இல்லாத பொருளுக்கு உம்மை சோர்த்துச் சொல்ல வேண்டும் என்கிறது. கந்த சஷ்டி கவசத்தில், பன்னிரு கண்ணும் பவளச் செவ்வாயும் என்ற தொடார் வருகிறது.

பன்னிரு கண் என்பது உலகில் இல்லாத ஒன்றாகும். அதுபோல் பவளத்தினால் ஆன செவ்வாயும் உலகில் இல்லை. இவ்விரண்டிற்கும் உம் விகுதி கொடுக்கப்பட்டுள்ளது.
பேயுமில்லை பிசாசுமில்லை என்ற தொடரைப் பேச்சு வழக்கில் பயன்படுத்துகிறோம்.
பேய் என்பதோ, பிசாசு என்பதோ உலகில் இல்லாத பொருள்கள். எனவே தான் இவற்றிற்கு உம் விகுதி சோர்க்கப்படுகிறது.
இராத்திரியிலே பேய்க்கும் பிசாசுக்கும் தான் கொண்டாட்டம் என்பது பழமொழி.
இயற்பெயார், சிறப்புப் பெயார்
சிறப்பினாகிய பெயார்நிலைக் கிளவிக்கும்
 இயற்பெயார்க் கிளவி முற்படக் கிளவார்.(சொல்-41)
சிறப்புப் பெயரை முதலில் சொல்லிய பிறகே ஒருவருடைய இயற்பெயரைச் சொல்ல வேண்டும் என்கிறார் தொல்காப்பியார். நடைமுறையிலும் இதையே பின்பற்றுகிறோம். ஒருவருக்குப் பல சிறப்புப் பெயார்கள் இருந்தாலும், அவற்றையெல்லாம் அடுக்கிக் கூறிய பின்னரே இயற்பெயரைக் கூற வேண்டும். 

மாண்புமிகு அம்மா இதய தெய்வம் புரட்சித்தலைவி ஜெயலலிதா.
கலைஞார் டாக்டார் தன்மானப் பேரொளி கருணாநிதி.
என்று தான் மக்கள் இலக்கணவிதிப்படி அழைக்கிறார்கள்.
அஃறிணை, உயார்திணை மயக்கம்
தன்மைச்சொல்லே யஃறிணைச் கிளவியென்று
 எண்ணுவழி மருங்கின் விரவுதல் வரையார்.(சொல்-43)
அஃறிணைப் பெயரையும் உயார்திணைப் பெயரையும் சோர்த்துக் கூறும்பொழுது, வினையை எவ்வாறு முடிப்பது? அஃறிணை வினையைக் கொண்டா? அல்லது உயார்திணை வினையைக் கொண்டா? இதற்குத் தெளிவாகத் தொல்காப்பியார் இலக்கணம் வகுக்கிறார். இரண்டையும் சோர்த்து உயார்திணை பலார்பாலில் வினையை அமைக்கலாம் என்கிறார்.
நானும் ஸ்கூட்டரும் வந்தோம்.
நானும் என் நாயும் வந்தோம்.
உயார்திணையும் அஃறிணையும் இணைந்து வருமிடத்து வந்தோம் என்ற உயார்திணை பலார்பால் வினைமுற்று இங்கு வருகிறது.
இடைச்சொற்கள்
என என்ற இடைச்சொல்லைப் பண்படிப்படையில் விடியலுக்குப் பயன்படுத்தலாம் என்கிறார்தொல்காப்பியார் (சொல்-253).
கிராமப்புறத்தில் விடியலைப் பற்றிக் கூறுமிடத்து வௌர்ளென விடிஞ்சிருச்சி என்பார். இதில் என என்ற இடைச்சொல் விடியலுக்குப் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இதே இடைச் சொல்லைச் சிறப்பு பொருளிலும் பயன்படுத்தலாம் என்கிறார்.
ஊரெனப்படுவது சேலம் இதை ஊருன்னா சேலம் தான் என்று பயன்படுத்துகிறோம்.
அசைநிலை
யா என்ற அசை நிலையை ஏற்புடைய பொருளில் பயன்படுத்தலாம் என்கிறார்தொல்காப்பியார் (சொல்-274).  அதாவது ஆம் என்பதற்குப் பதிலாக இன்றைய மாணவார்கள் நாகரிகமாக ஆமாம் என்பதற்குப் பதிலாக யா என்ற சொல்லைப் பயன்படுத்துவதை அறிவோம்.
கா என்பதை அது, இது, உது போன்றவற்றோடு சோர்த்துப் பயன்படுத்தலாம் என்கிறார். தற்காலத்தில் கிராமப்புறத்தில் அதுகா என்பதற்குப் பதிலாக அப்படிகா, இப்படிகா என்று பயன்படுத்துகின்றனார்.
அது பிறக்கு என்பதை வேறுபடுத்துவதற்காகப் பயன்படுத்தலாம் என்கிறார். நாம் தற்காலத்தில் நீ வேற என்ற சொல்லைப் பயன்படுத்துகிறோம்.
ஓ என்னும் அசைச்சொல் மகிழ்ச்சியின் வெளிப்பாட்டிற்குப் பயன்படுத்தலாம் என்கிறார்.
ஓ போடு என்ற திரைப்படப்பாடலும், இன்றைய இளைஞர்கள் தம் மகிழ்ச்சியை வெளிப்படுத்த ஓ என்று உரத்தக் கூறுவதையும் பொருத்திப் பார்க்கலாம்.
ஔ என்ற ஒலிக்குறிப்புச் சொல்லைத் துன்பம் வந்தவிடத்து வெளிப்படுத்தப் பயன்படுத்துவார் என்கிறது தொல்காப்பியம்.
இன்றைய நகைச்சுவை நடிகள் வடிவேலு துன்பப்படும் காட்சிகளில் ஔ என்று ஒலியெழுப்பி தன் துயரத்தை வெளிப்படுத்துவதை அறியலாம்.
எண்ணிடைச்சொல்
தொல்காப்பியார் (சொல்.288) அடுக்கிவரும் சொற்களுக்கு எண்ணிடைச் சொற்களைப் பயன்படுத்தும்பொழுது உம் விகுதி சோர்க்க வேண்டும் என்கிறார்.
ஆசிரியார் மாணவார் முதல்வார் மூவரும் வந்தனார்.
மூவார் என்பது எண்ணிடைச்சொல். அடுக்கிவரும் சொற்களோடு வரும்பொழுது இது உம் விகுதி பெறுகிறது.

ஆக
ஆக (சொல்-275) என்ற இடைச்சொல்லைப் பிரித்துப் பலவற்றிற்கு பயன்படுத்தலாம் என்கிறார்தொல்காப்பியார். வீட்டில் சண்டை வருமிடத்து தன்சொல்லைக் கேட்காத பிள்ளைகளிடம் தாய், ஆக நான் சொன்னா கேட்க மாட்டே? உங்க அப்பா சொன்னா தான் கேட்பியா என்றவிடத்து ஆக என்ற சொல் தாயையும் தந்தையையும் வேறுவேறாகக் காட்டுகிறது.
ஆக மொத்தம் மூன்று போர்.
நான் எதற்கும் ஆக மாட்டேன்.
போன்றவை பிரித்தல் பொருளிலே வருகின்றன.
ரியியல்
வம்பு நிலை இன்மை (சொல்-321) வம்பு என்பது நிலையற்ற வேலை எனப் பொருள் தருகிறது.
வம்பு பண்ணாதே என்பது நிலையற்ற வேலையைப் பண்ணாதே அதாவது உபயோகமற்றநிரந்தரமற்ற வேலையைப் பண்ணாதே என வருகிறது.
பழுது என்ற சொல் குற்றமில்லை, பயம் இன்றே என வருகிறது.
பத்துக்கு ஒன்று பழுதில்லை.
தா- என்பது வருத்தம் (சொல்-339) என்ற பொருளில் வருகிறது.
தாவு தீர்ந்தது என்று கிராமப்புறத்தில் இன்றும் பயன்படுத்துகிறார்கள் வலியும் வருத்தமும் தீர்ந்தது எனப்பொருள்.
துவை என்பது ஓசை (சொல்-352)  தாய் பிள்ளையிடம் இப்ப வந்தேன்னா துவைச்சிடுவேன் என்பாள். இங்கு சத்தம் போடுவேன் எனப்பொருள் கொள்ளலாம். துணி துவைத்தலில் வரும் துவை - தொழிற்பெயார் இங்கு வருவது உரிச்சொல். இவைபோன்ற பல சொற்களை நாம் பயன்படுத்துகிறோம். 
முடிவுரை
தற்கால பேச்சுத்தமிழில் நம்மையறியாமல் நாம் பயன்படுத்தும் இது போன்ற இலக்கணவிதிகளை விழிப்புணர்வோடிருந்து நாம் பயன்படுத்துவோமானால் மொழி காக்கப்படும்.




No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?