தைரியம்
மனிதனுக்கு முதலாவது வேண்டிய குணம் தைரியம்தான். அதுவே மற்ற குணங்களை விட மேலானது. பயமுறுத்தும் அபாயத்திலிருந்து புறமுதுகு காட்டி ஓடக்கூடாது. அவ்விதம் செய்தால் அபாயம் இரட்டிப்பாய் விடும். தைரியமாக அதை எதிர்த்து நின்றால் அபாயம் பாதியளவாகக் குறைந்து விடும். போஜராசன் என்னும் தினமும் எட்டு லட்சுமிகளை வைத்து வழிபடுவது வழக்கம். அவனிடம் ஒரே ஒரு லட்சுமியை மட்டும் வழிபடுமாறு தேவர்கள் கேட்டுக் கொண்டார்கள். உடனே போஜராஜன் தைரிய லட்சுமியை மட்டும் வைத்து வழிபட அனுமதி கேட்டான். இதனால் மற்ற லட்சுமிகளும் அங்கேயே இருக்க வேண்டியதாயிற்று. தைரிய லட்சுமி எங்கு இருக்கிறதோ அங்குதான் மற்ற லட்சுமிகளும் இருப்பார்கள். இதை அறிந்தே போஜராஜன் அவ்வாறு கேட்டான்.