நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 11 September 2014

டால்ஸ்டாயின் அன்னா கரினினா





டால்ஸ்டாயின் அன்னா கரினினா,அன்னா என்னும் உயர்குல பெண்ணின் ஆழ்ந்த தீவிரமான காதலை சித்தரிக்கும் கதை. எனினும், ரஷ்யாவின் செல்வச் சீமான்கள் நடத்திக் கொண்டிருந்த சோம்பேறித்தனமான ஆடம்பர உல்லாச வாழ்க்கையை, அவர்களது செயல்களை, எண்ணங்களை, பொழுதுபோக்குவெட்டிப்பேச்சுகளை, அவர்களது உள்ளத்தின் இயல்புகளை எல்லாம் உள்ளது உள்ளபடி கலைத் தன்மையோடு விவரிக்கும் நாவலாகவும் அமைந்துள்ளது. 

‘டால்ஸ்டாயின் அன்னா கரினினா வெறும் நாவல் மட்டும் அல்ல பெரிய காவியம். தன்னுள்ளே முத்துக்களை வைத்திருக்கும் மகா சமுத்திரம், மனித சமுதாயத்திற்கு அன்னா கரினினா ஒரு வரப்பிரசாதம்" எனப் படித்தவர்களால் பாராட்டப்படுகிற அன்னா  கரினினா நாவல், எல்லாஅம்சங்களிலும் பரிபூரணமான ஒரு பெரும் படைப்பு.

வானவில் என்னும் புதினம்


 வானவில் என்னும் புதினம் - இரண்டாம் உலகப் போரில் ஹிட்லரின் தாக்குதலை இரஷ்யா எதிர்கொண்ட விதம் பற்றிக் கூறுகிறது வானவில் புதினம். உலக இலக்கிய வரலாற்றில்இரஷ்ய நாட்டு இலக்கியத்திற்கு என ஒரு தனி இடம் உண்டு.    அந்நாட்டு மக்களின் வாழ்க்கையை உள்ளது உள்ளபடியே எடுத்துக்காட்டும் கருவியாக அவ்விலக்கியம் செயல்படுவதுதான் அதன் சிறப்பு. யுத்த காலத்திலே உலகத்திலேயே வெளி வந்த நுhல்களில் தலைசிறந்தது வானவில் என்னும் புதினம். இப்புதினம் ஸ்டாலின் விருதினைப் பெற்றுள்ளது.
          """"வாண்டா வாஸிலெவ்ஸ்கா"" எனும் ருஷ்ய போலீஸ் பெண் எழுத்தாளரே வானவில் எனும் தலைப்பில் அமைந்த இந்த நாவலைப் படைத்தவர் . உடலில் ஓடுகின்ற இரத்தத்தை உறையச் செய்யும் குளிரில் நடந்த இருதயத்தை நடுங்கச் செய்யும் போர் நிகழ்வுகளைத் தத்ரூபமாக மிடுக்கான தமிழ் நடையில் ஓடவிட்டு வாசகர்களை இழுத்துப் பிடித்துப் பறக்க வைக்கும் அளவுக்கு இந்நாவலை மொழிப்பெயர்த்தவர்கள் ருஷ்ய மொழிப்பெயர்ப்புகளில் தேர்ந்த அந்நாளைய மொழிப்பெயர்ப்பாளர்களான ஆர். ராமநாதன், ஆர். எச். நாதன் ஆகிய இருவருமே ஆவர். தமிழில் இந்நாவலை பெரும்பாலானோர் விரும்பிப் படிக்கக் காரணம் அவர்களுடைய சரளமான மொழிப்பெயர்ப்பே காரணம் .
 வானவில்என்னும் கதையானது கிராம சோவியத் என்னும் இரஷ்ய நாட்டின் கிராம மக்கள் ஜெர்மானியரின் தாக்குதல்களை எதிர்கொள்வதை மையமாகக் கொள்கிறது. ஓலினா என்னும் பெண்ணை அவர்கள் சித்திரவதைச் செய்கின்றனர். தங்களை எதிர்ப்பவர்கள் அனைவரையும் ஜெர்மானியர்கள் கொல்லுகின்றனர். அவர்களை எவராலும் தடுக்க முடியவில்லை. கிராம மக்கள் அனைவரும் ஜெர்மானியர்களைச் சபிக்கின்றனர். பின்பு ஒரு கட்டத்தில் செம்படையினர் வந்து ஜெர்மானியர்களை வென்று கிராமத்தை மீட்பதாகக் கதை முடிகிறது. 
     இரண்டாம் உலகப்போர் கி.பி.1939-1945ஆம் ஆண்டு வரை நடைபெற்றது. உலகில் இருந்த பெரிய வல்லரசுகள், நேச நாடுகள், மற்றும் அச்சு நாடுகள் என இரு எதிரெதிர் அணிகளாகப் பிரிந்து போரில் ஈடுபட்டன. முதல் உலகப் போருக்கு ஜெர்மனிதான் காரணம் என்பதை உலக நாடுகள் உணர்ந்து, ஜெர்மனியை இழிவுபடுத்தும் நோக்கத்தோடு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் அனைத்தும் இரண்டாம் உலகப் போருக்கு வித்திட்டன.
          
          1941ஆம் ஆண்டு ஜீன் 22ஆம் நாள் இரஷ்யாவுடன் செய்து கொண்ட போர்த் தொடுக்காத ஒப்பந்தத்தை  மீறி  ஹிட்லர் இரஷ்யா மீது படையெடுத்தார். ‘கிராம சோவியத்‘ என்னும் கிராமத்தின் மக்கள் ஜெர்மனியருக்கு எதிராக செயல்பட்டு பெற்ற வெற்றி இக்கதையின் கரு ஆகும்.  இரஷ்யா மிகுந்த பனிப் பொழிவினை உடைய நாடு ஆகும். ஹிட்லர் ரஷ்யா மீது போர் தொடுத்த காலம்  பனிக்காலம் . ஜெர்மனியருக்கு பழக்கமில்லாத காலம் .  நாவல் முழுவதும் பனிக்காலமும் அதனால் ஏற்படும் விளைவுகளும் காட்டப்பட்டுள்ளன. 

இதனால் ஹிட்லரின் படை வீரர்கள் கடும் அவதிப்பட்டனர். மேலும், இரஷ்யர்கள் பின்பற்றிய போர்க்கொள்கை ‘அழித்துப் பின்வாங்குதல்‘ ஆகும். இதனால் அவர்கள் முக்கிய பாலங்களை அழித்துப் பின்வாங்கினர். இது ஹிட்லருக்கு மேலும் நெருக்கடியைக் கொடுத்தது. ஹிட்லர் சோவியத் யூனியனை கைப்பற்ற செய்த நடவடிக்கைகளும், கொடுமைகளும் வானவில் புதினத்தில்  எடுத்துக் கூறப்பட்டுள்ளன.



   

ஊடகத் தமிழ்

தொலைக்காட்சி - ஊடகங்களில் தமிழின் நிலை

தொலைக்காட்சி ஊடகங்களில் இன்று பெரும்பாலும் கையாளப்படும் மொழி கலப்பு மொழியாகும்.ஆங்கிலம் கலந்து பேசினால் தான் படித்தவர் என பிறர் நினைப்பார் என்ற தவறான எண்ணவோட்டம் தான் இதற்குக் காரணம். பெரும்பாலான அறிவியல், வர்த்தக,தொழில்நுட்பம் சார்ந்த செய்திகள் தகவல்கள் ஆங்கிலத்தில் வந்து தான் பின்னர் தமிழ்ப்படுத்தப்படுகின்றன. இவற்றை உடனடியாகத் தமிழ் மொழிக்கு மாற்றி நடைமுறைக்குக் கொண்டுவருவது என்பது சாத்தியமில்லை என்றாலும் இது தமிழ் மொழிக்கு மட்டுமின்றி உலகிலுள்ள அனைத்து மொழிகளுக்கும் பொருந்துகிற ஒன்றுதான். 

Saturday, 30 August 2014

கயிறு



              


கயிறு
          2000 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தமிழர்கள் நூலிலிருந்தும் நாரிலிருந்தும் பல்வேறு கயிறுகளை  உருவாக்கியுள்ளனர்.  தொழிலுக்குஏற்ற வகையில் பல வகைகளில் அதைப் பயன்படுத்தியுள்ளனர். கயிறு திரித்தல் பற்றி பழமொழிகள் பல உள்ளன. ‘கயிறு திரிக்கிறான்‘ என ஏமாற்றுபவர்களைப் பற்றிக் கூறுகிறோம். ‘தூங்கினவன் தொடையிலே திரித்தவரை லாபம்‘ என்ற பழமொழி, கயிறு தொடையில் வைத்து திரிக்கப்படுவதையும்,அதனால் ஏற்படும் தொடை வலியிலிருந்து தப்பித்துக்கொள்ள தூங்கிக் கொண்டிருந்நதவனின் தொடையிலே திரித்து திரித்தவரை லாபம் எனச் செயல்பட்டவர்களைப் பற்றியும் கூறுகிறது.விடுகதைகளும் உள்ளன.இங்கு ஒன்று மட்டும்.  ‘கன்று நிற்க கயிறு மேயுதாம்‘ என்ற விடுகதைக்கு பதில் பூசணிக்கொடி என்பது. ஆனால் அத்தகைய கயிற்றைத் திரித்துத்தான் தமிழன் எப்படியெல்லாம் ஏற்றம் கண்டுள்ளான் என நினைத்தால்  வியப்பாக இருக்கும். சங்க இலக்கியத்தில் தமிழர்கள் பயன்படுத்திய கயிறுகளைப் பற்றி ஏராளமான குறிப்புகள் உள்ளன.