நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 27 December 2013

சிலப்பதிகாரம் 6.கடல் ஆடு காதை



6.கடல் ஆடு காதை
விஞ்சை வீரன் காமக் கடவுளுக்கு விழா எடுத்தல்

வெள்ளி மால் வரை, வியன் பெரும் சேடி,
கள் அவிழ் பூம் பொழில் காமக் கடவுட்கு,
கருங் கயல் நெடுங் கண் காதலி - தன்னொடு
விருந் தாட்டு அயரும் ஓர் விஞ்சை வீரன் -

Thursday, 12 December 2013

சிலப்பதிகாரம் -பதிகம்-1.மங்கல வாழ்த்துப் பாடல் முதல் 5.இந்திரவிழவு ஊர் எடுத்த காதை


seeko passport size
பேராசிரியர் சி.கோவிந்தராசனார்
kannaki broken icon
கண்ணகி சிலை

சிலப்பதிகாரம்

Kannagi main temple
சேரன் செங்குட்டுவன் கட்டிய கண்ணகிகோயில்
Kannagi idol
சிதைந்த சிலையின் பகுதிகள்
Kannagi temple entrance
கண்ணகிகோயில் முகப்பு

kannaki root map
சுருளி மலைதான் நெடுவேள் குன்றம்



வழக்குரைத்தல்






 

 


 

 

 

 

 

kannaki rootKannagi complex

நெடுவேள் குன்றம் வரையிலான பாதை

      

சிலப்பதிகாரம்

 

பதிகம்

குணவாயில் கோட்டத்தில் இளங்கோ
குணவாயில் கோட்டத்து, அரசு துறந்து இருந்த,
குடக் கோச் சேரல் இளங்கோ அடிகட்கு-
குறவர் கூறிய விந்தை நிகழ்ச்சி
குன்றக் குறவர் ஒருங்குடன் கூடி,
‘பொலம் பூ வேங்கை நலம் கிளர் கொழு நிழல்,
ஒரு முலை இழந்தாள் ஓர் திரு மா பத்தினிக்கு,
அமரர்க்கு அரசன் தமர் வந்து ஈண்டி, அவள்
காதல் கொழுநனைக் காட்டி, அவளொடுஇ எம்

பெண்கள் அறிவியலின் கண்கள்





பெண்கள் அறிவியலின் கண்கள்


முன்னுரை



         அனைத்துத் துறைகளிலும் பெண்கள் ஆண்களுக்கு நிகரான அறிவாற்றலையே பெற்றுள்ளனர். எனினும், பெண், கல்வி கற்கப் பலவிதமாகத் தடுக்கப்படுகிறாள். விரும்பியதைப் படிக்கவோ, வேலைக்குச் செல்லவோ இயலாத நிலை உள்ளது. அது மட்டுமின்றி வீட்டில் அதிகமான வேலை சுமை சுமத்தப்படுவதால், தனக்கான நேரமோ, தனது திறன்களை வளர்க்கப் போதுமான வாய்ப்போ இல்லாமல் ஆக்கப்படுகிறாள். எனினும் தனக்குரிய ஆற்றலை பல்வேறு வேலைகளிலும் அவள் வெளிப்படுத்திக் கொண்டு தான் இருக்கிறாள். அவை பெரிதாகப் பேசப்படாமலும், வெளிப்படாமலுமே இருந்து வருகிறது. மேலும் பெண் குறித்த ஆண்களின் பார்வை ‘பெண் ஒரு அறிவற்ற பலவீனமான இனம்’ என்பதாகவே உள்ளது. ஏனவேதான் புதிய இயந்திரங்களையும், தொழில்நுட்பங்களையும் ஆண்களே கையாள வல்லவர் என்று கருதப்பட்டு, ஆண்களுக்கே பெரிதும் அறிவியல் தொழில்நுட்பத் திறன்களைக் கற்கும் வாய்ப்பு கொடுக்கப்படுகிறது. எனவே, பெண்களுக்கும் அறிவியலுக்கும் இடையில் பெரிய இடைவெளி இருப்பதாக கருத்தியலே உலவி வருகிறது.

ஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை









 ஆனந்தாயி காட்டும் குடும்ப உறவுகளில் பெண் நிலை


 

முன்னுரை


 

 குடும்ப அமைப்பில் குழந்தை வளர்ப்பு, திருமணம், வாழ்க்கை, தாய்மை என்று பலதரப்பிலும் பெண் அடக்கப்பட்டு ஒடுக்கப்படுகிறாள். குடும்ப அமைப்பின், மரபுக் கண்ணோட்டத்தாலும், சமுதாய நெருக்கடியாலும், பொருளாதார நிலையினாலும், பெண் பல்வேறு சிக்கல்களைச் சந்திக்கின்றாள்.
பெண்ணியக் கருத்துக்கள் உலகெங்கும் பேசப்பட்டு வரும் இந்நாளில், குடும்ப உறவுகளில் பெண் நிலையைப் பற்றி அறிய வேண்டியது அவசியமாகிறது. ஆனந்தாயி நாவல் காட்டும் குடும்பமானது, இன்று பல இடங்களில் நாம் காணும் ஒரு குடும்ப அமைப்பே ஆகும். ஆசிரியர் காட்டும் அத்தனை குணாம்சங்களும் பொருந்திய குடும்பங்கள் சில தான் என்றாலும், அவர் குறிப்பிடும் பல அம்சங்கள் பெரும்பாலான குடும்பங்களில் நிலவி வருகிறது என்பதை யாரும் மறுக்கவியலாது.

குடும்பம்

ஒரே கூரையால் பாதுகாக்கப்பட்ட இதயங்களின் இணைப்பு ஒரு குடும்பமாகும். அன்பு, பரிவு, பாதுகாப்புணர்வு, ஒன்றுபட்டு வாழ்வது, சகிப்புத் தன்மை ஆகியவற்றின் உறைவிடம் குடும்பம் என்பது குடும்பததைப் பற்றிய பொதுவான கணிப்பாகும்.
ஆனால், தந்தை வழிச் சமுதாயத்தில் சொத்துரிமை பெற்ற ஆண் ஆதிக்கம் செலுத்துபவனாகவும், தலைமை சார்ந்தவனாகவும், விளங்குகிறான். சொத்துக்களைத் தனியுடைமையாக்கப், பெண்ணிற்குக் கற்புக் கோடடை விதித்து வீட்டிற்குள் பூட்டினான், அடக்கி தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டான்.

மேலும் வாசிக்க...

Monday, 9 December 2013

சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை


 சங்க இலக்கியத்தில் பஞ்சு முதல் பட்டு வரை



முன்னுரை


        ஒருவன் உணவின்றிச் சில வேளைகள் வாழலாம்; ஆனால் உடையின்றி அரைக் கணமும் வாழ இயலாது. அரசரின் மானத்தையும், ஆண்டியின் மானத்தையும் காக்கக் கூடியது உடை. துறவிகளும் துறக்காத சிறப்புடையது உடை. தீ மூட்டி வேள்வி செய்யும் அந்தணரின் தொழிலைவிட, தீ மூட்டி உணவு சமைக்கும் சமையல் தொழிலைவிட உயர்ந்தது நெசவுத் தொழில் என்பதால்தான் வள்ளுவரும், கம்பரும் நெசவுத் தொழில் மேற்கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை.

Thursday, 28 November 2013

தமிழ் வலைப்பூக்களில் பெண்களின் பங்கு


தமிழ் வலைப்பூக்களில் பெண்களின் பங்கு



வேதகாலம் தொடங்கி இன்றுவரை பெண்களின் பங்களிப்புகள் இலக்கிய உலகிலும், தகவல் பரிமாற்ற தளங்களிலும் முக்கிய இடத்தைப் பெற்று வருகின்றன. இக்கட்டுரை இணையத்தின் வழி வெளியாகும் வலைப்பூக்களில் பெண்களின் பங்களிப்பைப் பற்றி ஆராய்கிறது.

இணைய வடிவங்கள்



தமிழில் கருத்துப் பரிமாற்ற இணைய வடிவங்கள்

முன்னுரை

    கருத்துப் பரிமாற்றம் என்பது ஒருவர் தன் கருத்தை மற்றவருக்குத் தெரியப்படுத்துவதாகும். தற்காலத்தில் இணையம் இச்சேவையைத் துரிதமாகவும், மிகச் சிறப்பாகவும் செய்து வருகிறது. இணையம் இல்லாதபொழுது கருத்துப் பரிமாற்றமானது, கடிதப் போக்குவரத்து, தொலைபேசி, கைப்பேசி வழியாக நிகழ்ந்தது. தற்போது இணையத்தின் மூலமாக மின்னஞ்சல், இணையக்குழு, வலைப்திவு என பல வகைகளில் நிகழ்த்தப்படுகிறது. தமிழில் கருத்துப் பரிமாற்றத்திற்கு உதவும் இணைய வடிவங்களைப் பற்றி ஆராய்வதே இக்கட்டுரையின் நோக்கம்.