நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 6 July 2020

பம்பரம்

வானம்
 மேகம்
பருவம்
 காற்று
ஆறு
நேரம்

கடந்து கொண்டே இருக்கிறது.
ஊரடங்கிலிருந்தாலும்,
 உள்ளடங்கியிருந்தாலும்...
சாட்டையாக மாறி
சுழற்றும் கால தேவனின் கைகளிலிருந்து
மீள முடியாமல்,
பம்பரம் போல் ஓரிடத்தில்
குவிந்து சுழன்று கொண்டிருக்கும்
நினைவுகளால்...
தேங்கிப் போகும் நாம்....
நினைவு முடிவதற்குள்
இந்த நிமிடம் நம்மைக் கடந்து,
திரும்பிப் பார்த்துச் சிரிக்கிறது.

No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?