நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Thursday, 13 February 2014

சோழீசர்மல்லைக் கோவை


சோழீசர்மல்லைக் கோவை

நூலாசிரியர்-பிள்ளைப் பெருமாள் சிறைமீட்டான் கவிராயரென்பவர்.


   
இம்மல்லைக் கோவை பாடிய ஆசிரியர் பிள்ளைப் பெருமாள் சிறைமீட்டான் கவிராயரென்பவர். பாகை என்னும் ஊரினர். இற்றைக்கு 334 ஆண்டுகளின் முன்பு (கி.பி.1634) வாழ்ந்தவர். இவரியற்றிய வேறு நூல்கள் அர்த்தநாரீசுவரர் சந்திரசேகரமால, கபிலமலைக் குழந்தைக் குமாரர் வருக்கக் கோவை முதலியன. இவர் மல்லசமுத்திரக் காணியாளர்களாகிய விளிய குல வேளாள குலச் செல்வர்களின் * வேண்டுகோளின்படி இந்நூல் இயற்றினார் எனத் தெரிகிறது. இந்நூலாசிரியரின் பெயர்போன்ற பெயர் சோழர்காலக் கல்வெட்டொன்றில் பொறிக்கப்பட்டுள்ளது.

Thursday, 30 January 2014

சேலம் எழுத்தாளர்கள் -2



சேலம் எழுத்தாளர்கள் -2

சேலம் இராமசாமி


 இருபதாம் நூற்றாண்டில் பதிப்புத் துறையில் மிக முக்கிய இடம் வகிப்பவர் உ.வே.சாமிநாதயைர். தமிழ்த் தாத்தா என்று போற்றப் பெறுபவர். சேலம் இராமசாமி முதலியார் என்பவரே இவரைப் பதிப்புப் பணியில் ஊக்குவித்தவர்.

தேவநேயப் பாவாணர்

சேலம் எழுத்தாளர்கள் -1



சேலம் பகடலு நரசிம்ஹலு( தமிழின் முதல் பயண இலக்கியம்)


1888 ஆம் ஆண்டு சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு அவர்கள் எழுதிய ஆரிய திவ்யதேச யாத்திரையின் சரிதம் என்ற நூலே புதிய தமிழின் முதல் பயண இலக்கியம் எனப்படுகிறது. 1886 ஆம் ஆண்டில் கல்கட்டா நகரில் சர்வ ஜன மாநாடு நடைபெற்றது. அதில் அன்றைய கோயம்புத்தூர் மாவட்டத்தின் சார்பாக சேலம் பகடலு நரசிம்ஹலு நாயுடு கலந்து கொண்டார். அப்பயண அனுபவத்தை ஆரிய திவ்ய தேச யாத்திரையின் சரிதம் என்னும் பெயரில் 528 பக்கங்கள் கொண்ட நூலாக வெளியிட்டார். இந்நூலின் இரண்டாம் பதிப்பு 1913ஆம் ஆண்டு வெளிவந்தது. இவர் தக்சின இந்திய சரித்திரம் என்னும் தலைப்பில் இன்னுமொரு பயண இலக்கிய நூலையும் வெளியிட்டார்.

ஜலகண்டபுரம் ப.கண்ணன்  

சேலம் பெயர்க்காரணம்


சேலம் - பெயர்க்காரணம்
 

Sunday, 5 January 2014

புறநானூற்றில் கொங்குநாட்டு வரலாறு

 புறநானூற்றில் கொங்குநாட்டு வரலாறு 

முனைவர் ப.முத்துசாமி      தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் -7

                பன்னெடுங்காலத்திற்கு முன்னரே மக்கள் நாகரிகமாக வாழ்ந்த நிலப்பகுதிகளாக வரலாற்று ஆய்வாளர்கள் குறிப்பிடும் பகுதிகளில் இந்தியாவில் உள்ள சிந்து சமவெளிப்பகுதியும் ஒன்றாகும். சிந்து சமவெளி நாகரிகம் ஆரியநாகரிகத்திற்கு முற்பட்டது; அது திராவிட நாகரகம்;  அது தமிழ்நாகரிகம் என்பது ஆய்யவாளர்தம் முடிவாகும். தமிழினம் மிகத்தொன்மையான இனம்; அவர்களின் தமிழ்மொழி மிகத்தொன்மையான மொழி; உலகிற்கே முதல்மொழி; அதுவே உலகமொழிகளுக்கெல்லாம் தாய்மொழி என்றெல்லாம் ஆய்வறிஞர்கள் உறுதியாக மொழிந்துள்ளனர்.

புறநானூற்று வழி மானுடநேயம்

                                                              புறநானூற்று வழி மானுடநேயம்   

முனைவர் மா.நடராசன்,         தமிழ்த்துறைத்தலைவர் (ஓய்வு),          சி.பி.எம். கல்லூரி,          கோவை.
                இலக்கியம் ஏன் படைக்கப்படுகிறது? இலக்கியத்தில் என்ன இருக்க வேண்டும்? என்பதைப் புரிந்து கொண்டால் இலக்கியத்தின் இலக்கு என்ன என்பதையும் இலக்கியத்தின் பயன்பாடுகளையும் புரிந்து கொள்ள இயலும். படைப்பாளியின்
                                """"உள்ளத்தில் உண்மை ஒளி உண்டாயின்    
                                    வாக்கினிலே ஒளி உண்டாகும்.   
                                வெள்ளத்தின் பெருக்கைப்போல் கலைப் பெருக்கும்    
                                கவிப் பெருக்கும் மேவு மாயின்       
                            பள்ளத்தில் வீழ்ந்திருக்கும் குருடரெல்லாம்     
                                   விழிபெற்றுப் பதவி கொள்வர்""
அப்படி என்றால் ஏழைகளாகிய மானுடர்கள் குருடர்களாக இருக்கக்கூடாது.

புறநானூற்றில் நிதி மேலாண்மை


புறநானூற்றில் நிதி மேலாண்மை

 அ.அறிவுநம்பி,   புலமுதன்மையர், புதுவைப்பல்கலக்கழகம்,         பாண்டிச்சேரி.
                தமிழ் இலக்கியப் பரப்பு அகன்றது. அப்பனுவல்களின் உள்ளடக்கங்களும் அளப்பரியன. நயமான இலக்கியப் பகுதிகட்டு அப்பால் மொழி வரலாறு, கலை, பண்பாடு, இடவரலாறு, அரசு, பொருளியல், பழக்கவழக்கம், நம்பிக்கைகள் போன்ற பல்வேறு கூறுகளையும் பழந்தமிழ் இலக்கியங்களில் காணலாம். சங்க இலக்கியங்களில் ஒன்றான படைப்பாகும். அரசியல் வாழ்க்கை, சமூக வாழ்க்கை, மக்களின் வாழ்வியல் போன்ற செய்திகளைப் புறநானூறு எடுத்துரைக்கும். புறநானூறு பேசும் நிதி பற்றிய புறநானூறு எடுத்துரைக்கும். புறநானூறு பேசும் நிதிபற்றிய செய்திகளை இந்த எழுத்துரை முன் வைக்கின்றது. அவ்வளவே.