நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Monday 23 September 2019

தமிழிலக்கிய ஆய்விற்கு உட்படுத்தப்படும் பிற துறைகள்




தமிழிலக்கிய ஆய்விற்கு உட்படுத்தப்படும் பிற துறைகள்

தமிழில் இலக்கிய ஆய்வுகள் இலக்கிய நயங்கள், சமுதாயச் சிக்கல்கள், வட்டார வழக்குச் சொற்கள், மனிதநேயச் சிந்தனைகள், வர்க்கச் சிந்தனை, வாழ்வியல் அறங்கள், அகப்புறச் செய்திகள், பண்பாட்டுக் கூறுகள், நிலையாமை சிந்தனைகள், இலக்கிய நயம், பிறமொழிச்சொற்கள், மெய்ப்பாடுகள், அணி நலன், உத்திகள், உவமைகள், மொழிநடை, நகைச்சுவை, நிலமும் உணவும், பாடுபொருள் மாற்றம் படைப்பாக்கத் திறன் உள்ளிட்ட பல பொருண்மைகளில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் தமிழிலக்கியம் பிற துறை கூறுகளையும் தன்னுள் கொண்டிருக்கிறது. தமிழர்களுக்கு விண்ணியல், பொறியியல், மண்ணியல், கணிமவியல்,போன்ற பல துறைகளில் ஆழ்ந்த அறிவு இருந்துள்ளது என்று இலக்கியங்கள் வழி ஆய்வுகள் எடுத்தியம்புகின்றன. இவை போல பிற துறைகளிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

மூப்பியல் துறை - - Gerontology

முதுமையானது அறிவியலால் வெல்லப்படாத ஒரு இயற்கை நியதி. இறப்புக்கு ஒரு முன்னோடியாக அமையக் கூடியது முதுமை. முதுமை பற்றிய சிந்தனை இன்று அல்லது நேற்று தொடங்கியது அன்று. இது ஒரு வளர்ந்து வரும் அறிவியல் துறை ஆகும்.   ஹிப்போகிரேட்ஸ், ஜெனோபேன், செனெகா , புளுடார்க் முதலிய தத்துவ மேதைகளும் கவிஞர்களும் முதுமையைப் பற்றிச் சிந்தித்துள்ளனர். வயது முதிர்ந்த நிலையைக் குறிக்கும் பருவம் முதுமைப் பருவம் ஆகும். பொதுவாக நாற்பது வயதில் முதுமை தொடங்குகிறது என்பது மருத்துவக் கருத்து ஆகும். (சென்னைத் தொலைக்காட்சி, உச்சி முதல் பாதம் வரை,13.3.90 ) முப்பதுக்கு மேற்பட்ட பிராயம் உள்ளவன் முதுமகன் என்பதை தமிழ்ப்பேரகராதி’ (தொகுதி 6, பக். 3266) சுட்டுகிறது. நாற்பத்தெட்டு வயதுக்கு மேல் அறுபத்து நான்கு வயதுக்கு உட்பட்ட மனிதன் மூத்தோன்எனவும் , முப்பத்திரண்டு வயதுக்கு மேல் நாற்பது வயதுக்கு உட்பட்ட பேரிளம் பெண்கள் முதுபெண்டுஎனவும் , ஐம்பத்தைந்து வயது கடந்தவர் விருத்தைஎனவும் வகைப்படுத்துவதை பன்னிருபாட்டியல்’ (செய். 135 : 1970) மூலம் அறிய முடிகிறது. இந்த நூற்றாண்டில் வளர்ச்சி பெற்று வரும் அறிவியல் துறைகளுள் ஒன்றாக மூப்பியல் துறை விளங்குகின்றது. இத்துறையானது முதுமைப் பருவத்தில் ஏற்படும் உடல் , உள்ளம் சார்ந்த சிக்கல்களை அறிந்து அவற்றிற்குரிய தீர்வுகளைக் காணும் வகையில் அமைந்துள்ளது. முதுமையைப் பற்றி இலக்கியம், உளவியல், உடலியல், சமுதாயம், சமயம், தத்துவம் போன்ற பல நிலைகளில் ஆய்வு மேற்கொள்ள முடியும்.

சிறாரியம் - children studies

குழந்தைகளின் உலகத்தை இருநிலைகளில் அணுகலாம். அவை 1. குழந்தைகளின் அக உலகம் 2. குழந்தைகளின் புற உலகம். இந்த அகப்புற உலக வாழ்க்கையில் கிடைக்கும் அனுபவங்கள், ஒரு குழந்தையை எதிர்கால வாழ்க்கைக்கு எடுத்துச் செல்கிறது. குழந்தைகள் பற்றிய பதிவுகள் உளவியல் , உடலியல் , சமுதாயம் , சமயம் , தத்துவம் போன்ற பல நிலைகளில் ஆய்வுமேற்கொள்ள முடியும்.

உணவியல் - NUTRITION

அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சுஎன்பது ஆன்றோர் மொழி.  அளவறிந்து உண்பது அறிவியல் முறை.  தன்னை, தனது உடல்நிலையை, உடலின் தேவையை அறிந்து கொண்டால்தான், தான் உண்ண வேண்டிய உணவின் அளவையும் தீர்மானிக்க முடியும்.  ஒவ்வொருவருக்கும் தேவையான உணவின் அளவும் இயல்பும் வேறுபடும்.  தான் எடுத்துக் கொள்ளும் சத்துணவின் அளவு குறையும் போதும் நோய்களை எதிர்த்து நிற்கும் ஆற்றல் குறைகின்றது.  அதே சமயம,; குறிப்பிட்ட சில உணவுகளை அளவுக்கு மீறி உண்ணும் போது இருதய நோய், பக்கவாதம், நீரிழிவு, புற்று நோய் போன்ற வியாதிகள் தோன்றுகின்றன.
               
ஒருவர் உட்கொள்ளும் உணவு வகைகள் அவரது உடம்பில் வாதம், பித்தம், கபம் என்ற முத்தாதுக்களைச் சமநிலையில் வைத்திருக்கத் தகுதியுடையவையாகயிருத்தல் வேண்டும்.  இத்தகைய உணவுப் பொருட்களின் சேர்மானம்தான் சமநிலை உணவுஎனப் பழங்கால மருத்துவத்தில் உணர்த்தப்பட்டுள்ளது   (இரா. நிரஞ்சனாதேவி, தென்னிந்திய மருத்துவ வரலாறு,  ப.167) என்ற கருத்தானது சமநிலை உணவைப் பேணவேண்டும் என்பதை வலியுறுத்தியுள்ளது.  ஒருவர் உட்கொள்ளும் உணவின் அளவு கலோரி எனும் வெப்ப சக்தியில் அளக்கப்படுகிறது.  கடுமையான வேலை செய்பவர் 1800 கலோரி சத்துள்ள உணவினையும் அதை தவிர்த்த மற்றவர்கள் 1200 கலோரி சத்துள்ள உணவையும் எடுத்துக் கொள்வது உடல் ஆரோக்கியத்திற்கு மிகவும் இன்றியமையாதது.  இத்தகைய நிலை சங்கத் தமிழர்கள் மருத்துவ உலகிற்கு வழங்கினர் என்றால் அஃது மிகையாகாது. 
இதனை,
                                இழிவறிந்து உண்பான்கண் இன்பம்போல் நிற்கும்
                                 கழிபேர் இரையான்கண் நோய்                            (குறள். 946)என்ற குறளானது பதிவு செய்துள்ளது.   இதன்வழி அளவறிந்து உண்ணாதவன் உடலில் நோய் நீங்காது குடியிருக்கும் என்பது பெறப்படுகிறது.  இந்த நிலையைக் கடைப்பிடித்து வாழ்ந்தால் உடல் எவ்வித நோய்க்கும் ஆட்படாது, ஆரோக்கியமாக இருக்கும்.




பொருளறிவியல் - PHYSICAL SCIENCE  
                                                                                                                                               
பொருளறிவியல் என்பது பொருளின் தன்மை மற்றும் அதன் உட்தன்மையை சோதிப்பது ஆகும். இதில் இயற்பியல் மற்றும் வேதியியல் என்று இரு பிரிவுகள் அடங்கும். பொருளறிவியலில் பொருளின் நிறை, அடர்த்தி, வேகம், பளு போன்றவற்றின் இயல்புகளை இயற்பியலும், அதில் அடங்கியுள்ள மூலக்கூறு மற்றும் இரசாயனத்தின் தன்மையை வேதியியலும் ஆராயும் ஒருபடித்தான இருநிலைத் தன்மையைப் பொருளறிவியல் எள்கிறார்கள் அறிவியலாளர்கள். தாவரவியல் மற்றும் விலங்கியலை உயிரியல் என்ற பிரிவுக்குள் கொண்டு வருவதைப் போன்று இயற்பியல் மற்றும் வேதியியலைப் பொருளறிவியல் என்ற பகுப்புக்குள் அடக்குகின்றனர்.  

                கடலில் திசையறிதல், திசை பற்றிய அறிவு மற்றும், இயந்திரவியல் ஒலி செல்கின்ற வேகத்தையும் அதன் தூரத்தையும் அதற்கு ஊடு பொருளாக காற்று, நீர், நிலம் அமைந்ததையும் அறிந்திருந்தனர் என்றும் ஒளி எதிரொளிப்பதையும் ஒளிபுகும் மற்றும் புகா பொருட்களைப் பற்றியும், பொருளுக்கு நிறம் இல்லையென்றும் ஒளியின் தன்மையால் அந்தப் பொருளுக்கு நிறம் உண்டாகிறது என்றும் உணவினை உப்பின் வழி பதப்படுத்திப் பாதுகாத்ததையும், உப்புநீரில் கரையும் கரைசல் பற்றிய சிந்தனையையும், நொதித்தல் எவ்வாறு நடைபெறுகிறது என்பதையும் பழந்தமிழர்கள் நன்கறிந்திருந்தனர். இயற்பியலின் இன்றியமையாத பகுதியாகக் கருதப்படுவது, அளப்பது பற்றிய பகுதிதான். பருப்பொருட்களின் பண்புகளை அறிந்து ஏற்ற வகையில் கோட்பாடுகளை வகுக்க முதலில் அளவீடுகள் செய்ய வேண்டுவது இன்றியமையாததாகிறது.

அதனால்தான் இயற்பியலை அளத்தல் பற்றிய அறிவியல் என்றும் அறிஞர்கள் கூறியுள்ளனர். இயற்பியல் தராசு உருவாக்கத்திற்கு அடிகோலிட்டவர்கள் பழந்தமிழர்களே. இதனை,“சமன் செய்து சீர்த்தூக்கும் கோல்போல் அமைந்து ஒருபால்  கோடாமை சான்றோர் கணி”(திருக்குறள்-118)என்ற வள்ளுவரின் வாக்கு அதனைத் தெளிவுறுத்துகிறது. சமன் செய்து சீர்தூக்கும் கோல் நுட்பம் குறைந்ததாக இருந்தால், ஒரு தனிப்பொருளின் எடையைக் காண முதலில் அதனையொத்த கூட்டுப்பொருளின் எடையைக் காணவேண்டும். கருங்கல்லையும் கலங்காமல் சுமக்கும் வண்டியானது, இலேசான மயிற்பீலியை அளவுக்கு அதிகமாக ஏற்றினால் அவற்றின் அச்சு முறிந்துவிடும் என்பதை,                                                                                          
               பீலிபெய் சாக்காடும் அச்சிறும் அப்பண்டம்                                             சால மிகுத்துப் பெயின்”(திருக்குறள் - 476)

  என்ற குறளின் வழி, இலேசான மயிற்பீலிக்கும் எடை அளவு உண்டு என்ற நுட்பத்தை பலபொருளின் கூட்டு எடையின் வழி கண்டு தெளிவுறுத்திய வள்ளுவரின் எடை நுட்ப அறிவை அறியமுடிகிறது.
நியூட்டன் முதலாவது விதி,   ஒரு பொருளின் மீது விசை ஏதும் செலுத்தாதிருந்தால் அப்பொருள் தான் இருந்த தன் அசையா நிலையிலோ அல்லது தான் ஒரு நேர்க்கோட்டில் சீரான விரைவோடு சென்று கொண்டிருந்த தன் நிலையில்தான் தொடர்ந்து இருக்கும்முன்றுரையறையனார், ஆண்மகனின் வீரத்திற்கும் வலிமைக்கும் உவமை கூற விழைந்த போது, விரைவாகத் தொடுத்த கூர்மையான அம்பினைக் கவசமும் தடுத்து நிறுத்தாது, தான் செல்லும் நேர்க்கோட்டிலே தொடர்ந்து செல்லும் தன்மையுடையது என்று கூறுவதை,  கூர் அம்பு அடி இழுப்பின் இல்லை அரண்” (பழமொழி நானூறு - 49)  என்ற அடியானது பதிவு செய்துள்ளது.

நியூட்டனின் இரண்டாம் விதி,                ஒரு விசை ஒரு பொருளின் மீது செலுத்தும் பொழுது அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் விரைவு முடுக்கம்   அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும். செறுத்தோறு உடைப்பினும் செம்புனலோடு ஊடார்” (நாலடியார் - 222) நீரானது எப்பொழுதும் அதன் போக்கில் சீரான வேகத்தில் சென்று கொண்டிருக்கும் நியூட்டனின் முதல் விதிக்கேற்ப, ஆனால், அதனை அணைக்கட்டியோ அல்லது கரை அடைத்தோ தடுக்கும் போது அதன் விசையில் மாற்றம் ஏற்படுகிறது. இங்கு அணைக்கட்டுதல், கரை அடைத்தல் என்பது முடுக்கத்தைக் குறிக்கிறது. இதன் வழி பழந்தமிழர்களின் அறிவியல் சிந்தனையை நன்கு அறியமுடிகிறது.                    
நியூட்டனின் மூன்றாவது விதியானது ஒவ்வொரு வினைக்கும் நேர்எதிரான வினை உண்டுஎன்பது. அதாவது எந்தவொரு செயலுக்கும் நேரான எதிர் விளைவு உண்டு என்பது. சினத்திற்கு உவமை கூற விளைந்த திருவள்ளுவரின் குறள் நியூட்டனின் விதியை உள்ளவாறே காட்டியுள்ளது.                                               
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு                             நிலந்தறைந்தான் கைப்பிழையா தற்று” (திருக்குறள் - 307) என்று குறிப்பிட்டுள்ளார்.

சினத்தை விட்டொழியாமல் விடாப்பிடியாகக் கொண்டவனுக்கு, அந்த சினமே கேட்டினை விளைவிக்கும். அது போன்று, நிலத்தின் மேல் கையைக் கொண்டு அறையும் போது, அந்த நிலத்தின் நேர் எதிர் விளைவால் அவன் கையானது வலியைப்பெறும். அதாவது நிலத்திற்கு வலி கொடுக்க நினைத்த கைக்கு, அந்நிலமானது அதே விளைவினை எதிராக அந்த கைக்குக் கொடுத்த செயல்பாடானது நியூட்டனின் 3 ஆம் விதிக்கு வித்திட்டதை அறியமுடிகிறது. கல்கிள்ளி கைஉயர்ந்தார் இல்” (பழமொழி நானூறு - 36) என்ற பழமொழியும் அவ்விதியைக் காட்டியுள்ளது. கல்லைக் கிள்ளுபவனுக்கு அக்கல்லே வலியைக் கொடுத்து விடும் என்ற நேர்எதிர் வினை விதியை அறியமுடிகிறது.

உயிரியல் - - BIOLOGY

தாவரவியல்,  விலங்கியல் இரண்டையும் உயிரியல் எனலாம்.நாலடியார் பெண்பனையே பதனி போன்ற பயனுடைய பொருட்களைத் தரவல்லது ஆண்பனை பயனற்றது என்பதைக் குறிப்பிட்டு அது வளருமிடங்களையும் குறிப்பிட்டுள்ளது,  மலரின் வளர்ச்சி நிலைகளாக நனை, அரும்பு, முகை, போது, மலர், அலர் மற்றும் வீ எனத் தமிழர் பெயரிட்டு அழைத்தனர். இவை தவிர, சாதாரண பனையை காட்டிலும் உயரத்திலும், அகலத்திலும் இரு மடங்கு இருக்கும். தமிழகத்தில் இதை தாளிப் பனைஎன்றும் சில பகுதிகளில் கூந்தல் பனைஎன்றும் அழைப்பார்கள். தமிழகம் மற்றும் இலங்கை பகுதியில் மட்டும் எண்ணிக்கையில் மிகக் குறைவாக காணக்கிடைக்கும் மிக அபூர்வமான மரம். நூறு வருடங்கள் தாண்டிய மரம் மட்டுமே இது போன்று பூக்கும். இம்மரம் பூத்ததென்றால் சில மாதங்கள் மட்டுமே உயிரோடு இருக்கும்.காய்த்தால் பட்டுப் போகும் மரம் வாழை. பூத்தால் பட்டுப் போகும் மரம் தாளிப் பனைஎன்றும் கூறுவது வழக்கம். இந்த மரம் குறித்த குறிப்புகள் பழந் தமிழ் நூல்களிலும் காணக்கிடைகின்றது .பெண்ணை, தாலம், புல், தாளிபனை என இசைப்பர்” - (திவாகரம் 4:73), “தாளிப் போந்தின் தரு மயிர்ப் பெருந்தலை” (கல்லாடம் 33: 3), “தாளிப் பனையின் இலைபோல் மயிர்க்கட் டழல்வாய் ” (திருவாசகம். திருப்பதிகம் 17) இதுபோன்றஅரிய மர வகைகள் பற்றிய ஆய்வுகளை தமிழ் இலக்கியங்கள் வழி மேற்கொள்ளலாம். விலங்குகளின் உடலமைப்பு, இனப்பெருக்க நிலை, பரிமாணம், நீர்வாழ்வன, நிலவாழ்வன, இருவாழ்வி,ஊர்வன, காட்டு விலங்குகள், பறவைகள் வாழுமிடம், இணையைச் சேரும்காலம், அதன் சிறப்பம்சங்கள் . யானைக்கு மதநீர் வருவதற்குக் காரணம் புணர்ச்சி விரும்புதல் என்பதையும், புலி இடப்பக்கம் வீழ்ந்தது வலியற்ற உணவு என்று கருதி உண்ணாமையும் போன்றன என்ற அனைத்தையும் விலங்கியலுக்குள் அடக்கலாம்.

கணக்கியல் - ARITHMATICS

கணிதவியலில்  எண்ணுரு பிற்கால வளர்ச்சியானலும், அதற்கு மூலக்காரணமாகப் பழந்தமிழனே இருந்துள்ளான். கால அளவை பெயர்களாக நாழிகை, ஆண்டு, ஊழி, எண்ணல், அளவை, முந்திரி காணி பயன்பாட்டிலிருந்ததையும், நீட்டல் அளவைப் பெயர்கள் நீட்டல் அளவைக் கருவிகளாக அன்று முழம், சாண், காதம், யோசனை, கூப்பிடுதூரம், அடி, கெஜம் , கோல் போன்றவைப் பயன்படுத்தப்பட்டுள்ளன முகத்தளவையின் அலகுளாக நாழி, மரக்கால், தூணி, பதக்கு, ஆழாக்கு, உழக்கு, உரி, கலம், குறுணி, தினை, பனை போன்றன பயன்படுத்தப்பட்டுள்ளன. கணக்கதிகாரம் என்கின்ற புத்தகம் 15 ஆம் நூற்றாண்டில் காரி என்பவரால் தோன்றிய நூல். இதைத் தமிழரின் கணித கோட்பாடுகள் என்றே உரைக்கலாம். இது தற்கால கணித முறைகளில் இருந்து முழுவதும் மாறுபட்டு விளக்கப்பட்டுள்ளது .

தூரம், காலம், நேரம், எடை போன்ற அணைத்து அளவுகளும் மற்ற பொருட்களுடன் ஒப்பிட்டு அனைவருக்கும் புரியும்படி விளக்கப்பட்டுள்ளது .இந்தக் கணக்கதிகாரத்தில் அணைத்து அளவுகளும் ஒரு புறபொருளுடன் ஒப்பிட்டே கூறுகின்றனர். அதில் யோசனை என்று ஒரு அளவு வருகிறது, யோசனை என்ற ஒரு அளவு எப்படி இருக்கும் என்று கணித்துப் பார்க்கலாம். 1850 ஆம் வருடம் ஹெர்மன் வோன் ஹெல்ம்வோல்ட்ச” ( ர்நசஅயnn எழn ர்நடஅhழடவண ) என்ற புகழ் பெற்ற அறிவியலாளர் ஒரு தவளையின் கால்களில் மின்சாரத்தை அளக்கும் கருவியைப் பொருத்தி அதன் மனதின் வேகத்தை அளக்க முடியும் என்று நிருபித்தார். அதற்கு பின்பு வந்தவர்கள் அதன் சரியான மனதின் வேகத்தின் அளவைக் கண்டுபிடித்தனர். (ளுpநநன ழக வுhழரபாவ). அவை 50 மீட்டர் நொடி என்று அளவிடப்பட்டது. எனினும,; வேகமாக கடக்கும் தசைகள் இதே தகவலை 100 மீட்டர் ஃநொடி என்ற அளவிலும் கடக்குமாம். தமிழிலக்கியத்தில் யோசனை போன்ற கணிதவியல் சொற்கள் பயன்படுத்தப்பட்டுள்ளன. அவை குறித்த ஆய்வினை மேற்கொள்ளலாம்.

மருத்துவவியல் - MEDICAL

நோயாளியின் தன்மை, மருத்துவத்தின் நான்கு கூறுகள் நோயஏற்படும் விதம் நோயின் தன்மை,மருந்தின் தன்மை இவற்றோடு ஒருவர் தான் முன்பு உண்ட உணவு செரித்த பிறகும், செரிக்க கூடிய அளவை அறிந்து கொண்டும் உண்பான் என்றால் நோய் ஏற்படாது.  மருந்தும் அவனுக்கு அறவே தேவைப்படாது. நீண்ட நலமான வாழ்வை வாழமுடியும். அதுமட்டுமல்லாது, செரிக்காமல் மேலும் மேலும் உண்டால் அந்த உணவே விஷமாகி அவன் உயிரையும் போக்கிவிடும் நிலையும் ஏற்படும்.  ஆதலால், நன்கு செரித்தபின் அடுத்த வேளை உணவை மேற்கொள்ளும் நிலையில் மனிதனுக்கு நோய் என்பதே ஏற்படாது என்பது வள்ளுவரின் வாக்கில்(மருந்து அதிகாரம்) அறியலாகும். இதுபோல மருத்துவச் சிந்தனையை திருப்புகழ் உள்ளிட்ட நூல்களில் ஆராயலாம்.

மகட்பேற்றியல் - Gynecologist
கரு உருவாவதில் இருந்து குழந்தையாகப் பிறக்கும் வரை இயற்கையாகவே பல இடையூறுகள் நேருகின்றன. அவற்றை எல்லாம் எதிர்கொண்டு தாக்குதல்களில் இருந்து தப்பித்தால்தான் நிறைவான நலமான மகப்பேறு நிகழும். இதனை முன்னைத் தமிழ் மக்கள் நன்கறிந்திருந்தனர். மாணிக்க வாசகர் திருவாசகத்தில் இறைவனைப் போற்றிப் பாடும்பொழுது இத்தகைய இடையூறுகளில் இருந்தெல்லாம் பிழைத்து வந்தமைக்காக நன்றி கூறிப் பாராட்டுகிறார்.

மானுடப் பிறப்பினுள் மாதர் உதரத்து
ஈனம்இல் கிருமிச் செருவினில் பிழைத்தும்
ஒருமதித் தான்றியின் இருமையில் பிழைத்தும’; (திருவாசம்,திருஅண்டப்பகுதி) என்னும் பாடலடிகள் மூலம் கரு உருவாவதில் இருந்து மகப்பேறுவரை நேரும் இடர்களை எடுத்துரைக்கின்றார்.

விந்துயிர்கள் கோடிக்கணக்காய் இருப்பினும் அவற்றுள் போராடி இணைந்து கருவாவது ஒன்றுதான். எனவே, போராட்டத்தில் வெற்றி கண்டு கரு உருவாவதை முதலில் குறிப்பிடுகிறார். அவ்வாறு உருவான கரு முதல் திங்களில் இரண்டாகப் பிளவுபடுவதில் இருந்து தப்பிக்கிறது; தனக்காகவென்று தனிவடிவெடுத்தலில் தவறின்றித் தேர்ச்சி பெறுகிறது. எனவே கவனக் குறைவாக இருந்தால் கரு உருவாமலேயே அழியும் வாய்ப்பு உள்ளமையை நன்கு அறிந்திருந்தனர். இரண்டாம் திங்களில் உயிர்வளி கருவிற்குச் சென்று கண், காது, மூக்கு, வாய் முதலான உறுப்புகளின் தொடக்க முளைகள் வெளி வருகின்றன. இல்லாவிடில் இவை உருவாகாமலேயே அழிந்து விடும். எனவே, இவை இரண்டாம் திங்களில் வலிமை பெறவேண்டும். வலிமை பெறாவிடில் மீண்டும் அழிவு வாய்ப்பு உருவாகும். எனவேதான் மருத்துவர்களும் அன்னையர்களும் சூல் கொண்ட மகளிரை முதல் மூன்று திங்கள் பாதுகாப்பாக இருக்கும்படி அறிவுறுத்துகின்றனர். எனவே, கூடுதல் வலிமை பெறுவதால் அல்லது போதிய வலிமை பெறாமையால் ஏற்படும் அழிவில் இருந்து கரு பிழைக்கின்றது. மூன்றாவது திங்கள் கருப்பையில் பெருகும் கொழுப்பு நீரில் கரு அழிந்து விடும் வாய்ப்பு ஏற்படுகிறது. எனவே, அவ்விடரில் இருந்தும் பிழைக்கின்றது.

இரண்டாம் திங்களில் ஏற்படும் கண் முளை நிலை, நான்காம் திங்களில்தான் கண் வளர்நிலை ஆகிறது. இல்லையேல் பார்வைப் புலன் பெறாத இருள்நிலை தோன்றலாம். எனவே, நான்காம் திங்கள் கரு உருவம் பெறுகையில் கண்பெறா நிலைமை உண்டாகலாம். அத்தகைய அழிவிலிருந்தும் கரு பிழைக்கிறது. ஐந்தாவது திங்களில் கருக்கலையும் வாய்ப்பு நேருகிறது. எனவே, விழிப்பாக இருக்கவேண்டும்; அத்தகைய கருக்கலைவு வாய்ப்பிலிருந்தும் பிழைக்கிறது. ஆறாம் திங்கள் அனைத்து உறுப்புகளும் நன்கு அமைய வேண்டும். அவ்வாறு ஏற்படாமல் போகிற இடையூறு வராமல் அதிலிருந்தும் கரு தப்பிக்கின்றது.

சிறப்பில் சிதடும் உறுப்பில் பிண்டமும் கூனும் குறளும் ஊனமும்செவிடும் மாவும் மருளும் இன்றிக் குழந்தை பிறக்க வேண்டும். அவ்வாறாயின் ஏழாம் திங்களில் நன்கு உரிய வளர்ச்சியைக் குழந்தை பெற்றிருக்க வேண்டும். ஏழாம் திங்கள் குறைப்பேறாய் குழந்தை வெளியேறி பூமிக்கு வர வாய்ப்பு உள்ளது. எனவே, அத்தகைய இடர்ப்பாட்டிலிருந்தும் குழந்தை தப்பிக் கின்றது. 8ஆம் 9ஆம் திங்கள்களிலும் குறை பேறாவதற்கு வாய்ப்புகள் உள்ளன. அத்தகைய துன்பத்திலிருந்தும் குழந்தை பிழைக்கின்றது. 10 ஆவது திங்கள் குழந்தை பிறப்பதால் அல்லது தாய் பெறுவதால் இருவருக்குமே துன்பம் ஏற்படுகிறது. அத்தகைய துன்பங்களில் இருந்தும் குழந்தை பிழைக்கின்றது. இவ்வாறு மாணிக்கவாசகர் கூறுகின்றார். திருவாசகம் ஓர் அறிவியல் நூலன்று; இறைவணக்க நூலேயாகும். ஆனால் இதிலேயே வயிற்றில் உள்ள கரு வளர்ச்சி நிலையையும் வளர்ந்து உருவாகும் பொழுது அடையும் இடர்ப்பாடுகளையும் மாணிக்கவாசகர் குறிப்பிடுகின்றார் எனில் மகப்பேறு அறிவியல் அனைவரும் அறியும் அளவிற்கு வளர்ந்த நிலையில் இருந்திருக்கின்றது என்றுதான் பொருள்.

கருத் தொடக்க நிலையில் ஊட்டக்காம்பு, மூளை, பிரி படலம்,வால்,முகம,; பனிக்குடம், குடல் பிசிறுகள் ஆகியன கருவில் அமைந்திருக்கும். கரு நிறை நிலையில் பனிக்குடம், தொப்புள்கொடி, சூல்கொடி ஆகியன அமைந்திருக்கும். பக்திப் பனுவலாகவும் பைந்தமிழ் நூலாகவும் இலங்கும் திருவாசகம், அறவியல் கருத்துகளோடு அறிவியல் செய்திகளையும் உள்ளடக்கிய நூலாகும். திருவாசகத்தில் நான்காவது பதிகம் போற்றித் திருவகவல்! 225 அடிகளில், நிலைமண்டில ஆசிரியப்பாவாலான இப்பதிகம், இறைவனின் முதன்மையைப் போற்றுகிறது. அப் பதிகத்தின் முதற் பகுதி (வரி:12-27) உயிர்களின் உற்பத்தி பற்றிப் பேசுகிறது. அப்பகுதி இன்றைய மருத்துவத்தின் கருவியல் (Embriology) என்ற அறிவியல் கருத்துகளை ஒத்திருப்பது வியப்பு! மானுடப் பிறப்பினுள் மாதா உதரத்து ஈனமில் கிருமிச் செருவினிற் பிழைத்தும் ஒருமதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும் இருமதி விளைவின் ஒருமையிற் பிழைத்தும் மும்மதி தன்னுள் அம்மதம் பிழைத்தும் ஈரிரு திங்களிற் பேரருள் பிழைத்தும் அஞ்சு திங்களில் முஞ்சுதல் பிழைத்தும் ஆறு திங்களில் ஊரலர் பிழைத்தும் ஏழு திங்களில் தாழ்புவி பிழைத்தும் எட்டுத் திங்களில் கட்டமும் பிழைத்தும் ஒன்பதில் வருதரு துன்பமும் பிழைத்தும் தங்க தசமதி தாயொடு தான்படும் துக்க சாகரத் துயரிடைப் பிழைத்தும் (அடி:13-25) கரு உருவாவதும், தப்பிப் பிழைப்பதும் உயிரின் வினைக்கேற்ப நிகழும் என்பது சைவ சமயம் கூறும் தத்துவம். பெண்ணின் கருப்பையில் பெல்லோபியன் குழாய்ப் பாதையின் முதிர் அண்டம் விந்தணுவுடன் இணைந்து கருமுட்டை (Zygote) உண்டாகிறது. இதுவே கருவுறுதல் (Fertilization) எனப்படுகிறது. இக்கரு சிறிது சிறிதாக வளர்ந்து நிரம்பும் பருவுடம்புடன் பிறக்கும். இவ்வாறு வளர்ந்து பிறத்தற்கு இடையே உள்ள அழிவு நிலைகள் பலவுண்டு. மக்களாகப் பிறக்கும் உயிர்களும் அத்துணை அழிவுகட்கும் தப்பிப் பிழைத்தல் வேண்டும். ஈனமில் கிருமிஎனக் குன்றுதல் இல்லாத பல அழிவுகளின் திறத்தைக் குறிப்பிடுகிறார் மணிவாசகர். கருவுற்ற முட்டை அடையும் வளர்ச்சிகளை - வளர்கருவின் நிலைகளை (Embryo)  ஒரு மதித் தான்றியின் இருமையிற் பிழைத்தும், இரு மதி விளைவின் ஒருமையின் பிழைத்தும்என்ற வரிகள் சுட்டுகின்றன. தான்றிக் காயின் அளவில் 4 மி.மீ. அளவில் சிறிதாக இருக்கும். கருப்பையின் திசுச் சுவர்கள் ஆழமாகப் பதிந்து வளரத் தொடங்கும். அந்நிலையில் தாயின் அறியாமையால் அழிதல், தானே அழிவுறுதல் என இரு நிலைகளில் கருச்சிதைவு ஏற்படலாம். ஆகவேதான் மணிவாசகர், “இருமையிற் பிழைத்தும்என்கிறார் போலும். இரண்டாம் மாதத்தில் கருவானது சுமார் முக்கால் அங்குலம் நீளமுள்ளதாகவும், மூலக்கரு முட்டையை விடச் சுமார் 40,000 மடங்கு பெரியதாகவும் அமையும். இந்நிலையில் உயிர்வளியானது கருவிற்குச் செல்லும். விரல்கள், கண், செவி, நாசி, வாய் முதலிய உறுப்புகளின் ஆரம்பகால முளைகள் வெளிக்கிளம்புகின்றன; இரத்த ஓட்டமும் முழுமையடைகிறது என்ற கருவியல் நூல் செய்திகளை உள்ளடக்கி, இரு மாதங்களில் வளர்ச்சியையும் உள்ளடக்கி, “இருமை, ஒருமைகளினின்று பிழைத்துஎனக் குறிப்பாகச் சுட்டியுள்ளார்.

மூன்றாம் மாதத்தில் கருவுற்ற மங்கையர் புளிப்புப் பண்டம், மண் முதலியவற்றை உண்ணும் மசக்கை ஏற்படும். இச்செயலை, “வயவுறு மகளிர் வேட்டுண்ணின் அல்லது பகைவருண்ணா வருமன் விடையே” (புறம் 20) என்று புறநானூறு பேசுகிறது. கருவைப் பற்றிய கவலையின்றி மண் முதலியவற்றை உண்ணும் மசக்கை (அம்மதம்) யிலிருந்து கரு அழியாமல் தப்ப வேண்டும். இரண்டாம் மாதம் வெளிக் கிளம்பிய கண்ணின் ஆரம்பகால முளைகள் ஈரிரு திங்களான நான்காம் மாதத்தில் நன்கு திறக்கும் என்பது கருவியல் செய்தி. இப் பார்வைப்புலத்தின் வளர்ச்சி பற்றிய எண்ணத்தை உள்ளடக்கி மணிவாசகர், “பேரிருள் பிழைத்தும்  எனக் கட்புலன் வளர்ச்சியைக் குறித்துள்ளார;. தாயின் வயிற்றில் இருக்கும் கருக் குழவி ஐந்தாம் மாதத்தில் சாவில் (முஞ்சுதல்) இருந்து பிழைத்தல் வேண்டும். மசக்கையில் மெலிவுற்ற கரு ஐந்தாம் மாதம் வளர்ச்சியின்றி புறக் காரணிகளால் அழியும் நிலை ஏற்படலாம் என்பது அறிவியல், இறையருளால் முஞ்சுதல் பிழைக்கும் என்பது இறையியல். ஆறு, ஏழாம் மாதங்களில் கரு வளர்ச்சியில் நிகழும் தடைகளைச் சுட்டுமாறு, வளர்ச்சியைக் காட்டுவார் மாணிக்கவாசகர். பெண்களின் சினை முட்டையினைப் பூஎனக் குறித்தல் தமிழர் மரபு. மகட்பேற்றியலைப்போல, உளவியல் ஆய்வினையும் மேற்கொள்ளலாம்.




கனிமவியல் - Metallurgy

இரும்பை மணலிலிருந்து பிரித்தெடுத்து, தூய்மைப்படுத்தி உலையில் உருக்கிய பின்னரே விரும்பிய வடிவத்திற்கு மாற்ற முடியும். மேலும், இரும்பு எளிதில் துரு பிடிக்கும் உலோகம் என்பதால் அதை துரு பிடிக்காத உலோகமாக மாற்ற வேண்டும். இரும்பை பிரித்தெடுத்தல், துரத்தி மூலம் காற்றைச் செலுத்தி உருக்குதல், செம்மைப்படுத்த சாணை பிடித்தல், வடிவமைத்தல், பழுது பார்த்தல், பாதுகாத்தல் முதலான தொழில்நுட்பத்தில் தமிழர் 2500 ஆண்டுகளுக்கு முன்னரே சிறந்திருந்தனர். இரும்பை உருக்க துருத்தி (அகம்224.2-5), உலைக்ரி எடுக்க குறடு (பெரும்207-208), இரும்புப் பொருட்களைச் சாணைப்பிடிக்க பட்டைக்கல் (புறம் 170.14-17) பழுதுபார்க்கும் கருவி (புறம் 95 4-5) என இரும்புத் தொழிலுக்கென பலவித கருவிகளை உருவாக்கியிருந்தனர். இரும்பை உருக்குவதற்கும், கருவிகள் செய்வதற்கும் மிக அதிகமான வெப்பம் தேவை. எனவே இரும்பு தொடர்பான கருவிகளை உற்பத்தி செய்பவர்கள் அதிகமான வெப்பத்தில் வேலை செய்வதால் உடல் கருத்து காணப்படுவர். இவர்களுடைய தோற்றத்தை ஆண் கரடியோடு (அகம்.72 5-6) அகநானூறு ஒப்பிடுகிறது.

தொல்லியல் - Archeology

வரலாறு என்பது உணர்வுகளின் அடிப்படையில் எழுதப்படாமல் உண்மைகளின் அடிப்படையில் எழுதப்பட வேண்டும். உறுதியான தொல்லியல் ஆதாரங்கள் தான் வரலாற்றுக்கு வலுச்சேர்க்கும். இலக்கியம், கல்வெட்டு, நாணயம், தொல்பொருள்கள், செப்பேடுகள், வெளிநாட்டவர் குறிப்புகள், நேர்காணல் (வாய்மொழி வரலாறு) ஆகியவற்றின் அடிப்படையில் வரலாறு எழுதப்படுகிறது. வரலாறை எழுத உதவும் ஒரு சான்றாக தொல்லியல் உள்ளது. இலக்கியம் கூறும் பல ஊர்கள், செய்திகளுக்கு தொல்லியல் ஆதாரங்கள் வலுச் சேர்ப்பவையாக உள்ளன. வரலாற்று ஆய்வுகளும்,ஊர;ப்பெயர; ஆய்வுகளும் மேற்கொள்ளப்படலாம்.

போரியல் - war science

போரிடும் அரசுகள் தம் வலிமைக்கு ஏற்பப் போரிடுகின்றன. நாட்டின் செல்வ வலிமை, படை வலிமை, பண்டகங்களின் வலிமை போன்றவற்றைப் பொறுத்தே போராடும் வலிமை அமைகிறது. ஒரு வகையில் இவற்றைப் பெருக்கிக் கொள்வதற்காகவும் போர் நிகழ்த்தப்படுகிறது. எனினும், போர் நிகழ்த்தும்போது தன் வலிமை, மாற்றான் வலிமை, வினை என்னும் போர்வலிமை, பொருள் வலிமை, அளவு வலிமை முதலான வலிமைகளை அறிந்தே போர் தொடங்க வேண்டும் என்கிறார் வள்ளுவர். இதற்காக வலியறிதல்என்னும் அதிகாரத்தையே அமைத்துள்ளார்.

அளவறிந்து வாழாதான் வாழ்க்கை உளபோல
இல்லாகித் தோன்றக் கெடும்” ( 479)

என்ற குறள் தன் அளவினை அறியாது ஒரு மன்னன், மற்ற நாடுகளோடு தொடர்ந்து போரிட்டு வருவதால் சில காலத்தில் அந்த அரசே இல்லாமல் போய்விடும் என்கிறார். வலிமையற்ற நாடுகள் பிற நாடுகளிடமிருந்து ஒதுங்கித்தான் வாழ வேண்டும். அப்படியில்லாமல் ஒரு சில போர்களில் கிடைத்த வெற்றியைக் கொண்டு, தன் வலிமையை மிகுதியாக எண்ணிப் பெரிய அரசுகளோடு போரிட நினைத்தால், உள்ளதும் கெடும் என எச்சரிக்கிறார் வள்ளுவர்.

அமைந்தாங்கு ஒழுகான் அளவறியான் தன்னை
வியந்தான் விரைந்து கெடும்’ (474)

ஆனால் போரிட நினைக்கும் அரசுகள் தன் நிலையறியாமல் போரிட முனையும் பொழுது, இதைப் புறத்தே நின்று பார்க்கும் புலவர்கள் நிலைமையுணர்ந்து (ஒரு குறிப்பிட்ட அரசனின் வலிமையை நன்கு உணர்ந்தவர்களாதலால்), போரைக் கைவிடக் கோரி எச்சரிக்கை விடுக்கின்றனர். இவ்வாறு போர் பற்றிய செய்திகளை ஆராயலாம்.

சூழலியல் - Ecology


ஆழிப்பேரலைகள் மிகப் பெரிய அழிவை பலமுறை தமிழகத்திற்கு ஏற்படுத்தியுள்ளன. அதேசமயம், ஆழிப்பேரலையினால் சிறிதும் பாதிக்கப்படாத பல அழியா நல்ஊர்களும் இருந்துள்ளன. இதைப் பற்றிச் சங்க இலக்கியங்கள் எடுத்துரைத்துள்ளதோடு அதற்குரிய காரணத்தையும் கூறியுள்ளன தென்னிந்தியா அரபி,வங்க,பசுபிக் என்னும் மூன்று கடலும் சூழ்ந்துள்ள பகுதியாதலின் ஆழிப்பேரலையினால் இப்பகுதி பலமுறை பெரிதும் பாதிக்கப்பட்டிருக்கிறது. இப்பகுதிகளில் இயற்கைச் சீற்றங்களை மனித ஆற்றலால் தடுக்க இயலாத பொழுது, இயற்கையே மற்றொரு வடிவத்தில் நிலத்தைக் காக்கும் வலிவைப் பெற்றிருக்கிறது என்ற உண்மயைத் தமிழர் இயற்கையை உற்றுநோக்கி, தாழை,புன்னை,பனை முதலான மரங்களின் தன்மையறிந்து, அவற்றை வளர்த்து பேணிப் பாதுகாத்துள்ளனர். இவையே கடற்கரைச் சோலைகள் என்றும் கண்டல் வேலிகள் எனவும் அழைக்கப்பட்டிருக்கின்றன.

‘‘புதுமணற் கானல் புன்னை நுண்தாது
கொண்டல் அசைவளி தூக்கு தொறும் குருகின்
வெண்புறம் மொசிய வார்க்கும் தென்கடல்
கண்டல் வேலிய ஊர்”(நற்.74.7) .
               
                 கண்டவாயில் என்னும் ஊர் ஒன்று நற்றிணைப் பாடலொன்றில் வெகுவாகச் சிறப்பிக்கப்படுகிறது. இதன் சிறப்பே ஆழிப்பேரலையினால் பாதிக்கப்படாததுதான். இவ்வூர் உப்பங்கழி நிறைந்த கடற்கரைச் சோலைகளையுடையது. இதன் கடற்கரையில் முற்றிய பனைமரங்கள் வெளிறிய மணல்மேட்டில் முள்வேலி அமைத்தது போல் காணப்படும். இப்பனைமரங்களோடு இணைந்த ஞாழல், தாழை , புன்னைமரங்களும் சேர்ந்து கரிய சோலையோ என்று எண்ணும்படி அடர்ந்திருக்கும். மணற்குன்றுகள் சூழ்ந்த இச்சோலைகளே கண்டல் வேலிகள் ஆகும். இவற்றுள் வணங்கும் தன்மையுடைய தாழையே சிறப்பாகப் பேரலைகளைத் தாக்குப் பிடிக்கும் வல்லமை உடையது. பெரு வௌ;ளமாகிய ஆழிப் பேரலையைத் தாக்குப் பிடிப்பன கண்டல் வேலிகளே என்பதை நற்றிணைப் (74) பாடல் தெளிவாகக் கூறுகிறது.எனவேதான், தாழை சூழ்ந்த சோலைகளை நாட்டுவேலி,  பெருநீர்வேலி, கண்டல்வேலி எனப் பல பெயர்களில் தமிழர் அழைத்துள்ளனர்.
               
பொறியியல் அறிவு - - Engineering

தீம்பிழிஎந்திரம் பந்தல் வருந்த எனப் பதிற்றுப்பத்து குறிப்பிடுகிறது. நிலத்தில் இருந்து நீரை உறிஞ்சி இறைக்கும் ஆழ்துளைக் கிணறு அக்காத்தில் இருந்திருக்கிறது என்பதனை அந்தகக் கேணியும் எந்திரக் கிணறும் எனபெருங்கதை
வரியின் வாயிலாக அறியமுடிகிறது. மணிமேகலையின் பன்னிரண்டாம் காதையான அறவணர் தொழுத காதைஎன்னும் பகுதியில், புத்ததேவன் தோற்றம் பற்றிக் கூறவரும் கூலவாணிகன் சாத்தனார்,

  பெருங்குள மருங்கில் சுருங்கைச் சிறுவழி
 இரும்பெரு நீத்தம் புகுவது போல
 அளவாச் சிறுசெவி அளப்பரு நல்லறம்
 உளமலி உவகையொடு உயிர்கொளப் புகும்” (1384-87) என்கிறார்.

 சுருங்கைஎன்பது பூமிக்கடியில் செல்லும் சிறிய குழாய். அதாவது, பெருங்குளங்களாகிய பேரேரிகளின் ஒருபுறம் உள்ள சிறிய சுருங்கை வழியாக அங்கு தேக்கப்பட்ட நீர் வெளியேறி மக்களுக்கு அளவிட இயலாத வகையில் பயன்தரும். அதுபோல, செவித்துளை வழியே நல்ல அறக்கருத்துகள் உள்ளத்தைச் சென்றடையும் என்பதே இதன் பொருள். இதேபோல் பெருக்கெடுத்து மிகுவேகத்தில் ஓடிவரும் நீரை குறுக்கே தடுப்பணை அமைத்துத் தடுப்பதற்கு மிகுந்த தொழில்நுட்ப அறிவு தேவைப்படும். வருகிற நீரைக் கற்கள் கொண்டு தடுப்பதால், இத்தகு தடுப்பணை கற்சிறைஎனும் அழகுத் தமிழ்ச் சொல்லால் வழங்கப்பட்டுள்ளது. தொல்காப்பியம் பொருளதிகாரத்தில், “ பெருகிவரும் படையை ஒரு வீரன் தடுத்து நிறுத்திப் போராடுவதுபோல் ஆற்று வௌ;ளத்தைக் கற்சிறை தடுத்து நிறுத்துகிறது’’ (வரி:725-726) என்று கூறியுள்ளார் தொல்காப்பியர். நீர; மேலாண்மைக்கான அக்கால கட்டட, நகர அமைப்பினையும் ஆராயலாம்.


வானியல் அறிவு - Astronomy

உலகம் உருண்டை என்பதை மேற்குலகம் கண்டறிந்து கூறியதே 16-ஆம் நூற்றாண்டில் தான். அதற்கும் மத நிறுவனங்களின் கடும் எதிர்ப்பை சந்திக்க வேண்டியிருந்தது. ஆனால் இதற்கு 600 ஆண்டுகளுக்கு முன்பே பத்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த தமிழர்கள் தங்கள் முன்னோர்கள் வழியாக உலகம் உருண்டைஎன்ற உண்மையை பரவலாகத் தெரிந்து வைத்திருந்தனர் என்பதற்கு திருவாசகம் சான்று கூறுகிறது.

அண்டப் பகுதியின் உண்டைப் பிறக்கம்
அளப்பருந் தன்மை வளப்பெருங் காட்சி
ஒன்றனுக் கொன்று நின்றெடுப் பகரின்
நூற்றொரு கோடியின் மேற்பட விரிந்தன
என்ற திருவாசக வரிகள் வானியல் (அஸ்ட்ரானமி) என்ற அடிப்படை அறிவியல் குறித்த மூன்று முக்கிய செய்திகளைக் கூறுகிறது.

கடவுளை வாழ்த்திப் பாடுகிற ஒரு பாடலில் போகிறப் போக்கில் மிக அரிய அறிவியல் செய்திகள் சொல்லிச் செல்லப்படுகின்றன. ஒன்று, உலகம் அல்லது இந்த பூமி உருண்டை வடிவமானது, தட்டையானது அல்ல என்ற அறிவியல் செய்தி. இரண்டாவது, ‘நூற்றொருக் கோடிவான் பொருள்கள் இதுபோல் உருண்டை வடிவமாக இப்பேரண்டத்தில் உள்ளன என்ற அறிவியல் செய்தி. மூன்றாவது, இவை இருக்கும் வெளி விரிந்துக்கொண்டே இருக்கிறது என்ற அறிவியல் செய்தி. இதற்கென்று தனித்த ஓர் அறிவியல் நூல் எழுதி அதன் வழியாகச் இச்செய்தியை சொல்வதற்கு பதிலாக கடவுள் வாழ்த்து பாடுகிறப் போது போகிறப் போக்கில் மாணிக்கவாசகர் இப்பேருண்மையை சொல்லிச் செல்கிறார் என்றால் இந்த அறிவியல் செய்தி மிகப்பரவலாக அக்காலத் தமிழர்களிடையே புழங்கி வந்த பரவலான அறிவு இருந்திருக்கிறது என்று பொருள்.
மணிவாசகருக்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பாகவே 3000 ஆண்டுகளுக்கு முன்பே தொல்காப்பியம் இந்த அறிவியல் செய்திகளை ஏராளமாக கூறுகிறது என்ற உண்மையை ஆய்வாளர்கள் எடுத்துக் கூறியிருக்கின்றனர். (எ.கா: தமிழ் இலக்கியத்தில் உலகாய்தம்முனைவர் க. நெடுஞ்செழியன் - மனிதம் பதிப்பகம் வெளியீடு -திருச்சி, 1990)

இயற்கையின் அடிப்படையாக இருப்பவை எவை என்பதை மேற்குலகம் அறிவதற்கு பல நூற்றாண்டுகளுக்கு முன்பே அது பற்றிய அறிவியல் அறிவு தமிழர்களிடம் இருந்தது. நிலம், நீர், காற்று, தீ, விசும்பு என்ற ஐம்பூதங்களால் ஆனது இயற்கை என்ற அறிவியல் அறிவு தமிழர்களுக்கு இருந்தது. வடமொழி வாணர்களான ஆரியர்கள் கூட சதுர்பூதம்என்று நான்கு கூறுகளை மட்டுமே அறிந்திருந்தனர். காற்று வேறு அது இயங்கும் வெளி வேறு, அதன் பெயர் விசும்பு (ஸ்பேஸ்) என்ற தெளிவு தமிழர்களிடம் இருந்தது.

மண் திணிந்த நிலனும்
நிலனேந்திய விசும்பும்
விசும்புதை வரு வளியும்
வளித் தலைஇய தீயும்
தீ முரணிய நீரும் என்றாங்கு
ஐம்பெரும் பூதத்து இயற்கை
என்று சங்கப் பாடல் ஒன்று கூறுகிறது. புற இயற்கைக்கு மட்டுமின்றி மனித உடலுக்கும் இந்த ஐம்பூதங்களே அடிப்படை என்பதை அண்டமே பிண்டமஎன்ற சொற்களால் தமிழர்கள் வரையறுத்தனர்.

கணினியியல் - computer science

சமூக அறிவியல்சார் வகைசாரா நுண்கணிதம் (Type-free Calculus for Social Computing Science) திருக்குறளில் வாழ்வியலின் சமூக அறிவியல்சார் நெறிமுறைகளை அறம், பொருள், இன்பம் என்னும் முப்பாலில் நூற்று முப்பத்து மூன்று அதிகாரங்களின் மூலம் தெளிவாகச் சுட்டிக்காட்டியுள்ளார். வள்ளுவர் கையாண்ட சொற்பதங்களும் (Terms)) அவற்றின் எல்லைகளும் (Boundaries) மிகச் சீரிய முறையில் இக்காலக்கணித மற்றும் கணித்தல் துறைக்கேற்றவாறு முறைசார்ந்து (Formal)) படைக்கப்பட்டுள்ளது. அந்த அணுவைத்துளைத்து ஏழ்கடலையும் கட்டும் எழுசீர் குறள் வெண்பாக்களைக் கணினி மொழியியல் பார்வையில் உற்று நோக்குமிடத்து எக்காலத்துக்கும் ஏற்ற வகைசாரா வள்ளுவ நுண்கணிதம் ;(Calculus) பொதிந்துள்ளதைத் தெரியக்காணலாம்.

இலக்கியங்களில் கணிதத்தை வள்ளுவரின் திருக்குறளை ஒரு கணித்துவ மொழியியல் பார்வையில் நோக்கும் பொழுது, பொதுப்பதங்களும் நேர்மறைப் பதங்களும் எதிர்மறைப்பதங்களும் அதிகாரங்களின் தலைப்புகளாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன .   எண்ணிலடங்காப் ப்தங்களையும் மாறிகளையும் தன்னகத்தே கொண்ட வள்ளுவம் அத்தகைய மாறிகளை சூழல், மதிப்பு , வகை என்பதைப்பொறுத்து அதிகார வரம்புக்குள் இணைத்துப் பார்க்கும் ஒரு கணிதமுறை சார்ந்த கட்டமைப்பாகும்.கீழே குறிப்பிட்டுள்ள பார்வையின் படி, இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வடிக்கப்பட்ட ஓர்   நுண்கணிதக் கட்டமைப்புதான் வள்ளுவன் என கருத்தில் நிறுத்தி, இன்று சொல்லப்படும் கிரேக்க, லத்தீன் குறியீடுகள் தான் மாறியுள்ளதே தவிர  சொலமைப்புகுக்கும், பொருள் அமைப்புக்கும் பங்கம் வாராத ஓர் வகைசாரா கணித தத்துவத்தைத் தந்தது தமிழ்மொழியெனக் கொள்ளலாம். குறள் விளக்கப்படங்கள் வழியாக முப்பாலில் உள்ள அனைத்துக் குறட்பாக்களையும் நுண்கணித வெளிப்பாடுகளாக மாற்றியமைத்து தருக்க அல்லது கணித்தல் சமன்பாடுகளின்படி முடிவெடுக்க இந்த ஆய்வு சிறந்ததொரு தொடக்கமாக இருக்கும். மேலும் காலத்தைப் பொருத்தும், இட்த்தைப் பொருத்தும், மாறிகளைப் பொருத்தும் மாறும் தன்மையினையும் வகையீட்டு மற்றும் தொகையீட்டு) நியதிகளையும் வள்ளுவத்தில் பொதிந்துள்ள நுண்கணிதத்தின் மூலம் உலகுக்கு திருக்குறளைக் கணித இலக்கியமாகப் போற்றலாம்.

மண்ணியல் அறிவு - Geomagnetic science

    பாறைச் சிதைதல், மழையின் செயல், நீரோட்டத்தின் செயல், வேதியியல் மாற்றம், பாறையில் மணி இருத்தல் முதலான அறிவோடு, கண்ணாடிவகை கனிமங்களை உடைய பாறைகளைக் கண்டறிந்து வெட்டி எடுத்து அதிலிருந்து அக்கனிமத்தைப் பிரித்தெடுத்து மணிகள் செய்ததோடு, பழந்தமிழர்கள் அன்று மண்ணிற்கேற்றப் பயிரை காலநிலைக்கேற்றாற் போன்று பயிர் செய்துள்ளதையும். கடல்நீரால் அருகில் உள்ள ஏரி, குளம் போன்றன உப்புநீர் படிந்து உப்பங்கழியாக மாறுவதையும், அலைகளால் மணல் திட்டு ஏற்படுவதையும் நன்கறிந்திருந்தனர் என்றும்,கடற்கரை அமைப்பு ஏற்பட்ட விதம், கடற்கரை குளிர்ச்சியாக இருப்பதற்குக் காரணம் ஆகியவற்றையும்,நிலநடுக்கம் ஏற்படுவதற்கானக் காரணத்தையும், காடுகள் வளர்ப்பின் மூலம் மண்ணரிப்புத்தடுப்பு, மண்வளம் காக்கப்படுதல் போன்றவற்றையும்,மண்பாறைகளின் தேய்வால், சிதைவால் உருவாகிறது என்பதையும், அவ்வாறு உருவாகும் மண்ணில் உள்ள வகைகளையும் தமிழர் அறிந்திருந்தனர். கட்டடம் கட்டுவது தொடர்பான மண்ணியல் நுணுக்கத்தை ஒத்ததான அறிவு சிலப்பதிகாரத்தில் மாதவியின் நடன அரங்கேற்ற அரங்கு அமைக்க வெகுநுணுக்கமாக நிலப்பகுதியைத் தெரிவு செய்திருக்கின்ற செய்தியை,

  எண்ணிய நூலோர் இயல்பினின் வழாஅது
 மண்ணகம் ஒருவழி வகுத்தனார் கொண்டு
 புண்ணியநெடுவரைப் போகிய நெடுங்கழைக்
 கண்ணிடை ஒருசாண் வளார்ந்து கொண்டு                                 (அரங்கேற்: 95-98)

என்ற அடிகளின் வாயிலாக அறியலாம்.

நெசவியல் – textile technology

ஒருவன் உணவின்றிச் சில வேலைகள் வாழலாம்; ஆனால் உடையின்றி அரைக் கணமும் வாழ இயலாது. அரசரின் மானத்தையும், ஆண்டியின் மானத்தையும் காக்கக் கூடியது உடை. துறவிகளும் துறக்காத சிறப்புடையது உடை. தீ மூட்டி வேள்வி செய்யும் அந்தணரின் தொழிலைவிட, தீ மூட்டி உணவு சமைக்கும் சமையல் தொழிலைவிட உயர்ந்தது என்பதால்தான் வள்ளுவரும், கம்பரும் நெசவுத் தொழில் மேற்கொண்டனர் என்பது வரலாறு கூறும் உண்மை. புலவராக இருந்த போதும் அறுவை வணிகன் இளவேட்டனார் ஆடை விற்பனை செய்ததால் அறுவை வணிகன்என்ற சிறப்புப் பெயரைப் பெற்றிருக்கிறார்.உண்பதற்குரிய உணவு உழவுத்தொழில் மூலம் கிடைப்பது போல, உடுப்பதற்குரிய உடையும் உழவுத் தொழிலிருந்தே கிடைக்கிறது என்பதால் உழவுத்தொழிலுக்கு அடுத்த நிலையில் வைத்து போற்றக்கூடிய சிறந்த தொழிலாக நெசவுத் தொழிலைக் குறிப்பிடலாம்.இந்நெசவுத்தொழில்காலந்தொறும் பெற்றிருந்த வளர்ச்சி, நெசவாளர் நிலை, நெசவுக்கருவிகளின் பதிவுகள் போன்றவற்றை இலக்கியங்களின் வழி அறியலாம்.

இசையியல் - music

தமிழர்களின் முதல் நூலான தொல்காப்பியத்தில் இசையைப் பற்றிய குறிப்புகள் கிடைக்கின்றன. தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே இசைக்கலை வளர்ச்சி பெற்றிருந்தது என்பதை,                                                                                                                                                         அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்                                           உளவென மொழிப இசையொடு சிவணிய” (தொல். எழுத்து. 33)
என்னும் நூற்பாவின் வாயிலாக அறியலாம். தடுத்தாட்கொண்ட புராணத்தில் சிவபெருமான் விண்ணிலிருந்து காட்சியளிக்கும் போது ஐந்து வகையான இசைக்கருவிகள் ஒலித்தன என்ற செய்தி கூறப்பட்டுள்ளது. அவையாவன,
                                                                               
1.சிறப்பாகச் சொல்லிய நல்ல தோல்வகை
2.துளைக் கருவி வகை                                                     
3.மெல்லிய நரம்பிடக் கருவி வகை                                   
4.கற்றல் நிறைந்த உலோகக் கருவி வகை                            
5.கற்றல் நிறைந்த மிடற்றுக் கருவி வகை முதலியனவாகும்.     இதனை,              எண்ணிய ஓசை ஐந்தும் விசும்பிடை நிறைய எங்கும்              
விண்ணவர் பொழிபூ மாரி மேதினி நிறைந்துவிம்ம” (பெரியபுராணம் -  215) என்று உரைக்கிறது.

யாழிற்கு வழங்கும் வேறுபெயர்களாக,பரிபாடலின் கூரம்என்னும் சொல்லிலும் சிறுபாணாற்றுப்படையில் இன்னியம்,வேள்விஎன்று பெயர்களிலும் வழங்கப்பட்டுள்ளது என்றும் எகிப்திய மொழியில் நங்காஎன்ற பெயரிலும் குறிக்கப்பட்டுள்ளது. பிங்கலநிகண்டு யாழின் பெயர்களாகத் தந்தி, வீணை, கின்னரம், கோட்டம், கோடவதி, விவஞ்சி ஆகியவற்றைக் கூறுகிறது. மேலும் கலம், கருவி என்றும் அழைக்கப்படுகிறது என்பதை, “தந்தி வீணை கின்னரங் கோட்டங்கோடவதி விவஞ்சி யாழ்ப் பெயர்கூறும்” (பிங்கலம். நூற். 1430”அறி கலமுங் கருவியு மப்பெயர்க்குரித்தே” (பிங்கலம். நூற். 1431) மேற்கண்ட நூற்பாக்களின் வாயிலாக அறியலாம்.

வணிகவியல் - commerce

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக
களியியல் யானைக் கரிகால் வளவ!என்கிறார், வெண்ணிப்பறந்தலைப் போரில் வெற்றி பெற்ற முதல் கரிகாலனைப் பாடிய, பெண்பாற்புலவர் வெண்ணிக்குயத்தியார். இந்த முதல் கரிகாலனுக்கு மிகமிக முன்னோனாகிய தமிழ் மன்னன் ஒருவன், காற்றைப் பயன்படுத்தி கப்பல் செலுத்தும் தொழில் நுட்பத்தைக் கற்று, நடுக்கடல் ஊடே கப்பலோட்டிச் சென்றவனாதலால், அது போன்ற புகழ் பெற்ற பரம்பரையில் வந்தவனே என முதல் கரிகாலனை வெண்ணிக்குயத்தியார் புகழ்ந்து பாடுகிறார். பண்டைய தமிழகத்தின் மிக நீண்ட கடற்கரையும், அதன் பரந்த விரிந்த பரப்பும், தமிழகப் பரதவர்களின் கடலோடும் தன்மையும், பண்டைய தமிழகத்தின் அரசியல், சமூக, பொருளாதாரச் சூழ்நிலையும் தமிழகக் கடல் வணிகம் பழங்காலம் தொட்டு நடைபெற ஒரு முக்கிய காரணியாகும். தென் இந்தியாவிற்கும் சுமேரியாவிற்கும் இடையில் பண்டைய காலத்திற்கு முன்பே வணிகப்போக்குவரத்து நடைபெற்றுவந்தது என்று சேஸ்(ளயலஉந) என்பவர் தம் ஹிப்பர்ட் சொற்பொழிவுகளில் (1887) குறிப்பிட்டு உள்ளார். அதற்கு அவர் இரண்டு காரணங்களை தெரிவித்துள்ளார். ஒன்று: சுமேரிய மன்னர்களின் தலைநகர் ஊர் என்ற இடத்தில் சந்திரக் கடவுளுக்காகக் கட்டப்பட்ட கோயில் சிதைவுகளில் இருந்து கண்டு பிடிக்கப்பட்ட தேக்கு மரத்துண்டு கேரள(பழந்தமிழகம்) நாட்டிலிருந்து கி.மு. 3000க்கு முன்பு ஏற்றுமதி செய்யப்பட்டதாகும். இரண்டு: பழங்கால உடைகளைக் குறிப்பிடும் பாபிலோனிய நாட்டுப் பட்டியல் ஒன்றில் இரண்டுவகைத் துணிகளில் ஒன்றாக சிந்துஎன்ற சொல் குறிப்பிடப் பட்டுள்ளது. சிந்து என்ற சொல்லுக்கு பழந்தமிழில் துணி என்று பெயர். இன்றும் கன்னடத்திலும் துளுவிலும் துணியைக்குறிப்பிட சிந்து என்ற சொல் பயன்படுகிறது. எனவே பழந்தமிழகத்தில் இருந்து துணிகள் ஏற்றுமதி செய்யப்பட்டன என அறிய முடிகிறது. மேலும் சிந்து என்பது ஆற்றிலிருந்து வந்த பெயர் அல்ல. துணிக்கான பண்டைய தமிழ் சொல்லிலிருந்து வந்த பெயர் ஆகும் என்கிறார் சீனிவாச அய்யங்கார். (ஆதாரம்: தமிழக வரலாறு -மக்களும் பண்பாடும்: உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம், பக்; 51,52. பதிப்பு; 2008 ரூ தமிழர் வரலாறு-பி.டி.சீனிவாச அய்யங்கார், தமிழ் பதிப்பு. பக்; 29.)  தமிழர்களின் வணிகம் சார்ந்த அறிவை இதைப் போல ஆராயலாம்.

கல்வியியல் - EDUCATION

கல்வி கற்பது என்பது மனம் பண்படுவதற்காக, நல்ல பழக்கவழக்கங்களைப் பெறுவதற்காக என்ற நிலை மாறிப் பணம் சம்பாதிப்பதற்காக என்ற நிலை ஏற்பட்டுள்ளது. பணமே பிரதானம்என்று அரசியலும் சமூகம் தப்பான பாடத்தை மீண்டும் மீண்டும் நடத்தி மக்களின் குணநலனும், சமூக அக்கறையும் திசை மாறியிருக்கிறது. கற்பிக்கும் கல்வி முறையும், இந்த நச்சு நோக்கையே இளைஞர் நெஞ்சில் விதைக்கிறது. கல்வி கற்பது என்பது மனம் பண்படுவதற்காகத்தான் என்ற நிலை மாறி அனைத்தும் வணிக நோக்கம் கொண்டதாக மாறிப்போய் விடுகிற சூழலை படைப்பாளர்கள் வெளிப்படுத்துகிறார்கள்.இது குறித்த ஆய்வுகள் காலத்தின் தேவை.

அரசியல் சார் அறிவியல் POLITICAL SCIENCE

வள்ளுவரின் பொருட்பாலின் முதல் இயலாக இருப்பது இறைமாட்சி. இப்பகுதி அரசனின் தகுதி, குணங்கள், அரசாளத் தேவையான உறுப்புகளைப் பற்றிக் குறிப்பிடுகிறது. வள்ளுவர் கண்ட அரசியலில் நாடாளும் மன்னனே முதன்மையானவன். மன்னனுடைய  உடைமைகள் படை, குடி, கூழ், அமைச்சு, நட்பு, அரண் என்று ஆறும் ஆகும். சாணக்கியரோஅரசியலின்  உடைமைகளில் மன்னனையும் ஒர் உறுப்பாக்குகின்றார். ஒரு குடும்பத்தின் தலைமை தந்தை என்பதற்கும் குடும்பத்தில் ஒருவன் தந்தை என்பதற்குமான வேறுபாடு இங்கு உள்ளது. வள்ளுவர் அரசனை உயர்த்தி மன்னன் உயிர்த்தே மலர்த்தலை  உலகம்என்கிறார். சாணக்கியார் அரசிற்குத் தேவையானவற்றில் மன்னனும் ஒருவன் என்கிறார். தமிழக அரசியலில் தலைமுறை தலைமுறையாக மூத்த மகனுக்கு அரசுரிமை வந்து கொண்டிருந்தது என்பதற்கு புறநானூற்றுப் பாடல்கள் சான்று தருகின்றது. அரசுரிமையாகிய இச்சிறிய இடத்தில் என்மக்கள் நசுகுண்டு வளர்ச்சியற்று சாகாமால், பல புதிய இடங்களில் இவர்களைக் குடியேறச் செய்து,  இவர்களைச் செழிப்புற வாழ வைக்க வேண்டும். நிறைய நிலங்களைத் தர வேண்டும்’ (புறம்,75) என்கிறான் ஒரு மன்னன். வாரிசுரிமை பற்றி வள்ளுவர் குறிப்பிடவில்லையாயினும், தமிழக அரசியல் அமைப்பின்படியே தன் கருத்துக்களைக் கூறிச்செல்கிறார்.

பொருளியல் - ECONOMICS

வள்ளுவரின் பொருளியல் கொள்கைகளோடு ஓரளவு ஒட்டி நிற்பவர் ஆதம் ஸ்மித்தே ஆகும். அடிப்படைக் கருத்துகளில் இருவருக்கும் பற்பல ஒற்றுமை காணப்படுகின்றது. முன்னாளில் இங்கிலாந்திலும், ஐரோப்பாவிலும் பொருளியல் அடிப்படையில் வகுப்பு வேற்றுமை ஓங்கியிருந்தது, பூசல்களும் நிறைந்திருந்தன. ஆதம் ஸ்மித்து பொருளியல் அடிமைத் தளையினின்றும் மக்களை விடுவிக்கப் பாடுபட்டார்; பெருவாரியான, மக்களின் உழைப்பையும் தொழிலார்வத்தையும் தூண்டித் தழைக்கச் செய்தார்; அதன் மூலம் தொழிற் புரட்சிக்கு அடிகோலினார்.

 வள்ளுவரும் மக்களிடையே வேற்றுமை எழுதலை நீக்க முனைந்தார்; பொருளியல் விடுதலையைப் போதனைசெய்தார். தொழிலுலகில் சாதியும், வகுப்பும் ஒருவனைக் கட்டுப்படுத்தா என்றார். விரும்பிய தொழிலை மேற்கொள்ள வழிவகுத்தார். பிறப்பால் மக்கள் அனைவரும் ஒரு நிகரே என்ற கொள்கையை வள்ளுவரைப் போன்றே ஆதம் ஸ்மித்தும் வற்புறுத்தினார். கல்வியாலும் சூழ்நிலையாலுமே வேற்றுமை மக்களிடையே விளையுமென இருவரும் கூறினர். அரசியலும் பொருளியலும் இசைந்து செல்லவேண்டும்; அது மக்களுக்கும் அரசுக்கும் நல்லுறவை நிலைநாட்டும்; அறம் பேணி, நலம் வளர்க்கும் - என்பன இருவரின் கருத்தும். இருவருமே, அறம் வழுவாப் பொருளியலை விரும்பினர்...ஆதம் ஸ்மித்து அறச் சிந்தனைக் கோட்பாடுகள்என்ற நூலில் அறத்தை அடித்தளமாக அமைத்தார். அதன் மீதே, ”தேசங்களின் செல்வம்என்ற பொருளியல் மாளிகையை எழுப்பினார். வள்ளுவரும் முதலில் அறத்துப்பாலை விளக்கினார். அடுத்தே பொருட்பாலை விரிக்கலானார்.

சிலர் வள்ளுவரின் பொருளியல் கருத்துக்களை, சாணக்கியரின் வடமொழி அர்த்த சாத்திரத்தோடு ஒப்பிட்டுக் காண்கின்றனர். வேறு சிலர் அர்த்த சாத்திரத்தின் கருத்துகளே திருக்குறளில் கூறப்பட்டுள்ளன என நிறுவ முயலுகின்றனர். மற்றும் சிலர் (பேராசிரியர் இராமச்சந்திர தீட்சிதர் போன்றோர்) சாணக்கியர் மோரிய அரச அவையை அணிசெய்த தென்னிந்திய அமைச்சரென்றும், வள்ளுவரின் பொருளியல் கருத்தைத் தாம் கற்று, தமது அர்த்த சாத்திரத்தில் புகுத்தினார் என்றும் கூறுகின்றனர். அகச் சான்றுகள் புறச் சான்றுகளினும் வலிவாயிருக்கின்றன. வள்ளுவரின் பொருளியல் கோட்பாடுகளுக்கும், சாணக்கியரின் பொருளியல் கோட்பாடுகளுக்கும் அடிப்படை ஒற்றுமை யாதுமில்லை. திருக்குறளில் உழவுக்கும் உழவருக்கும் முதன்மை தரப்பட்டுள்ளது. அர்த்த சாத்திரத்தில் அம்முதன்மை தரப்படவில்லை. நிலத்திலிருந்து இயன்றவரை பெரும் வருவாய் பெறவேண்டுமென்றும், மக்களை அச்சுறுத்தியோ, ஒறுத்தோ அதனைப் பெறவேண்டுமென்றும் சாணக்கியர் போதித்துள்ளார். மக்களிடையே நிலவும் சாதி வேற்றுமையை நிலையாகக் கொண்டு அர்த்த சாத்திரம் எழுதப்பட்டுள்ளது.

 திருக்குறளோ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் என்ற தத்துவத்தை நிலைநாட்டுகின்றது. திருக்குறளில் அறத்தினின்றும் வழுவாத பொருளியல் கூறப்படுகின்றது. அர்த்த சாத்திரத்தில் அவ்வாறில்லை. இரு நூல்களிலும் சுட்டப்பெறும் வரிவிதிப்புக் கொள்கைகள் முற்றிலும் வெவ்வேறானவை. மக்கள் மனமுவந்து வரிசெலுத்தல் வேண்டுமென்பது வள்ளுவர் கருத்து. மக்களை வருத்தி, அச்சுறுத்தி வரி வாங்க வேண்டுமென்பது சாணக்கியர் கருத்து. மக்களின் மூடநம்பிக்கையையும், மதப்பற்றையும், அறியாமையையும் பயன்படுத்தி, அரசன் தனது களஞ்சியத்தை நிரப்புதற்கு முயலவேண்டுமென்று அர்த்த சாத்திரம் கூறுகின்றது. அரசன் வருவாயைப் பெருக்க மதுவையும் வரைவின் மகளிரையும் பயன்படுத்தலாம் என்றும் அதன்கண் கூறப்பட்டுள்ளது. மதுவையும் விலைமாதரையும் சமூகத்துக்கு ஒவ்வாதனவாகக் கருதுகின்றது திருக்குறள்.

பொருள் முதல் வாதம்

பிரபஞ்ச இயக்கம் பற்றிய கருத்துக்களைச் சங்க இலக்கியங்கள் கொண்டிலங்குகின்றன. சூரியனைச் சுற்றிக் கொண்டு, பூமி தன்னைத்தானே சுற்றி வருகிறது. பலவித விண்மீன்களும், கோள்களும் தம் பாதையில் மாறாமல் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்த இயக்கமே உலகில் வெளி, வளி, தீ, நீர், நிலம் ஆகிய ஐம்பூதங்கள் உருவாக்கத்திற்கும், பூமியில் உயிரினங்களின் பெருக்கத்திற்கும் காரணமாகியுள்ளன. இந்த இயங்கியிலே உலக இயக்கத்திற்குக் காரணம் என்று கூறுபவர்கள் பொருள் முதல் வாதிகள் ஆவர். இவர்களைத் தமிழர் உலகாயுதர்என்றும் இக்கொள்கையை உலகாயுதம் என்றும் அழைத்தனர்.அண்டப் பொருள்கள் அனைத்தும் இயற்கையானவை. அவை இயங்கக் கூடியவை. அவற்றைக் கடவுள் படைக்கவில்லை என்பது இவர்களின் கருத்து ஆகும். மேலும், தொல்காப்பியர; ஓன்றிலிருந்து ஆறறிவு வரையிலான உயிரிகளை வகைப்படுத்தியிருப்பதும், மரம் முதலானவற்றை உயிர; என்று குறிப்பி;ட்டிருப்பதிலிருந்தும் டார;வினின் பரிணாமத் தத்துவத்திற்கு பல ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பிருந்தே பழந்தமிழரிடம் ஐம்பூதத் தத்துவத்தின் அடிப்படையில் பரிமாணக் கோட்பாடு வளர;ச்சி பெற்றிருந்துள்ளது. இயற்கையின் தோற்றத்தின், இயக்கத்தின் அடிப்படையிலேயே உயிர;கள் தோன்றியுள்ளன. யாரும் இதைப் படைக்கவில்லை என்பது இவர்களின் வாதம்.

இவர்களின் கருத்துக்களுக்கு மாறாக இயற்கைப் பொருட்கள் உயிரினங்கள் அனைத்தையும் கடவுள்தான் படைத்தார் என மறுசாரர் கூறுகின்றனர். இவர்கள் கருத்து முதல் வாதிகள் ஆவர். சங்க இலக்கியங்களில் பொருள் முதல் வாதமும் அதன் தொடர்ச்சியாக அதை மறுக்கும் கருத்து முதல் வாதமும் இடம் பிடித்துள்ளன. காலப்போக்கில் கருத்து முதல் வாதத்தைப் பெரும்பான்மையோர் பின்பற்றத் தொடங்கினாலும், பொருள் முதல்வாதிகளின் கருத்தை மறுக்க இயலாததால், இரண்டையும் இணைத்துப் பாடியுள்ளனர். பொருள் முதல்வாதக் கருத்தியலின் அடிப்படை இயற்கைப் பொருட்களும், ஐம்பூதக் கோட்பாடுகளும் ஆகும். இயற்கை, மனிதன், சமுதாயம் ஆகியவற்றின் உள் தொடர்புகளை இயங்கியல் தத்துவத்தின் அடிப்படையில் பொருள் முதல் வாதிகள் ஆராய்ந்தனர். ஐம்பூதங்களைப் பற்றி ஆராய்ந்ததினால் தான், கோள்களின் இயக்கம், தாவரங்களின் வகைப்பாடு, உயிரியல் கோட்பாடு, திணைக் கோட்பாடு போன்றவற்றை உருவாக்கினர். கோள்களின் இயக்கத்தை ஆராய்ந்த பழந்தமிழர் இதனால் கணித அறிவில் மேம்பட்டிருந்தனர். வானத்து மீன்களை நாள் மீன், கோள் மீன் எனப் பாகுபடுத்தியிருப்பது இவர்களின் நுண்ணறிவிற்குச் சான்றாகும்.

புலம் பெயர்வியல் - DIASPORA

புலம் பெயர்ந்த       மக்களின் இலக்கியங்களில் அக, புற நெருக்கடிகள், சமூக, பொருளாதார அரசியல் சிக்கல்கள் மக்களின் வாழ்வியல் சிக்கலை வெளிப்படுத்துகின்றன. சங்க காலம் முதலே புலம் பெயர்வு தொடங்கி விட்டாலும், இதைப் பற்றிய ஆய்வுகள் தமிழில் குறைவு. உலகம் முழுதும் புலம் பெயர்ந்த மக்களின் குறிப்பாக தமிழர்கள் பற்றிய ஆய்வுகள் தேவை. உலகம் முழுவதும் மக்களின் புலம்பெயர்வு பல்வேறு காரணங்களுக்காக நடைபெற்று வருகிறது. மலேசியா பகுதிக்கு இருநூறு ஆண்டுகளுக்கு முன்னர் புலம் பெயர்ந்த மக்களின் வாழ்வியலை புலம்;பெயர;ந்த படைப்புகளில் பதிவு செய்துள்ளனர். இவர;களுடைய புனைக்கதைகளில் புலம் பெயர்வு மக்களின் பல்வேறு வாழ்க்கை அம்சங்கள் வரலாற்றுப் பார்வையோடு பதிவாகியுள்ளன.

பெண்ணியம் - -  FEMINISM

உலகம் முழுவதும் பெண்களின் துன்பங்களுக்குப்பல காரணங்கள் அடிப்படையாக உள்ளன.
                                1)பெண்கல்வி பேணாமை           2) வறுமையான குடும்ப சூழல்
                                3) இளவயது திருமணம்             4) வரதட்சனை
                                5)பாலியல் வன்முறை              6) கணவனால் ஏற்படும் துன்பங்கள்
                                7)பொருளாதார சுதந்திரமின்மை     8) விதவை நிலை
                                9) பணி புரியும் இடங்களில் ஏற்படும் சிக்கல்கள்

இது போல தலித்தியம் சார்ந்த ஆய்வுகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அரவாணியம் - TRANS GENDER STUDIES

     விளிம்பு நிலை மனிதர்கள் எனப் புறந்தள்ளப்பட்ட பெண்கள்-குழந்தைகள்-தலித்துகள் இவர்களோடு அரவாணியர்களையும் இருபத்தியோராம் நூற்றாண்டு மைய நிலைக்கு கொண்டு வந்துஅவர்களின் வாழ்க்கையை நடுநிலையோடு அணுகக் கற்றுக் கொடுத்துள்ளது. இவர்கள் குறித்த ஆய்வுகளும் படைப்புகளும் வெளிவரும் சூழலில், மரபிலக்கியங்களில் இவர்களைப் பற்றிய புரிதலை ஆராய வேண்டியுள்ளது.  தொல்காப்பியர் வகுத்த இலக்கணத்திலிருந்து தொடங்கி அரவாணியர்களைப் பற்றிய குறிப்புகள் தமிழிலக்கியம் முழுவதும் விரவிக் கிடக்கின்றன. தமிழ்ச்சமூகம் தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிணைத்தே இவர்களையும் நடத்திய செய்தியை முதற்காப்பியங்கள் காட்டுகின்றன. சிலம்பில் பணிப்பெண்ணாகவும்., சீவகசிந்தாமணியில் தோழியாகவும் அரவாணிகள் அரண்மனை வாழ்வியலோடும் இணைந்துள்ளனர்.மணிமேகலையில் இவர்கள் கூத்து நிகழ்த்திய செய்தி பதிவாகியுள்ளது நீலகேசி(76)

 அரவாணியரின் அக்கால நிலை அவர்கள் படும் துன்பம்,மக்கட்பேறற்ற நிலை,பிறரால் இழிவாகப் பார்க்கப்படல் போன்றவற்றைக் கூறுகின்றது.  தமிழர் வைதீக சமயங்கள் இறைவன் ஒருவனே ஆண் என்றும், உலக உயிர்கள் அனைத்தும் பெண் எனவும் கொண்டு, இறைவனாகிய ஆணைச் சரணடைவதே உலகஉயிர்களாகிய பெண்ணின் வீடுபேற்றிற்கு ஒரே வழி என்ற அடிப்படையில் செயல்பட்டன.இதனடிப்படையிலேயே நாயக-நாயகி பாடல்கள் புனையப்பட்டன.       மாணிக்கவாசகர் திருவாசகத்தில் இறைவனை இம்மூன்று நிலைகளிலும் கண்டு மகிழ்கின்றார்.பெணகளாகப் பிறந்தவர்களுக்கு இறைவனை ஆணாகக் கணடு சரணடைவதில் சிக்கலில்லை. ஆண்களைவிட பெண்கள் இறைப் பற்றினை கூடுதலாக பெற்றிருப்பதனால்தான் ஆழ்வார்களில் ஆண்டாள் மற்ற ஆழ்வார்களை விட மிக எளிதில் இறைவனைச் சரணடைந்து இறைப் பிரேமையில் மூழ்கிவிடுகிறாள். காரைக்காலம்மையாரும் இறைப்பற்றினை எளிதில் பெற்றுவிட்ட காரணத்தினால் தான் இறைவனுக்கு முன் அமரும் வாய்ப்பினைப் பெறுகின்றார். ஆண் பெண் அலி ஆகாசமாகி”(திருச்சதகம்.பாடல்.29)ஆணின் இயல்பையும் பெண்ணின் இயல்பையும் அறிந்த ஒருவரே அனைவரையும் அரவணைத்து காக்கவும் முடியம். சைவத்திலும் வைணவத்திலும் இறைவனை இம்மூன்று நிலைகளிலும் காணுகின்ற நிலையை நாயன்மார்களும் ஆழ்வார்களும் பதிவுசெய்துள்ளனர்.திருவாசகத்தில் பெண்ணாளும்பாகன்”(.திருஅம்மானை.10) தமிழ் இலக்கியம், இலக்கணம்,நிகண்டுகள் அனைத்திலும் அரவாணிகள் பற்றிய பதிவுகளை ஆராயலாம்.

நாட்டுப்புற ஆய்வுகள் - FOLKLORE
தென்னிந்தியாவில் உள்ள நிறையக் கிராமத்து தெய்வங்கள் பழைய பௌத்த சமணச் சாமிகளாக இருக்கலாம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். குறிப்பாக, பௌத்த சமய ஆய்வுகளை மேற்கொண்ட மயிலை சீனி வேங்கடசாமி, மற்றும் அயோத்திதாசர் இருவரும் இன்றைக்குப் பல சிற்றூர்களிலும் வழிபாடு மேற்கொள்ளப்பட்டு வருகின்ற நாட்டுப்புற தெய்வங்கள் புத்தராக இருக்கலாம் என்று குறிப்பிடுகின்றனர். இருவருடைய கருத்துக்களையும் அடியொற்றி சேலம் மாவட்டத்து நாட்டுப்புற தெய்வங்களை ஆய்வுக்குட்படுத்தியதில் அக்கூற்றுக்களில் உண்மையிருப்பதை அறிய முடிந்தது. பவுத்த கோயில்கள் புத்தருடைய பல பெயர்களில் தருமராஜா கோயில், ‘சாத்தனார் கோயில்’, ‘முனீஸ்வரர் கோயில்' உள்ளிட்ட பெயர்களுடன் பண்டைக் காலத்தில் அழைக்கப்பட்டு வந்தன. பிற்காலத்தில் இந்துமதம் செல்வாக்குப் பெற்றபோது, அவை இந்து மதக் கோயிலாக மாற்றப்பட்டு, இந்துமதம் தொடர்பான கதைகளுடன் இணைக்கப்பட்டு, நாளடைவில் அவை கிராம தேவதைக் கோயில்கள் என்னும் நிலைக்கு வந்துவிட்டதாகத் தோன்றுகிறதுஎன்று பவுத்த ஆராய்ச்சியாளர் மயிலை சீனி. வேங்கடசாமி குறிப்பிட்டுள்ளார். வடநாட்டில் இன்றும் புத்தர் சிலைகள் தருமராஜா என்றழைக்கப்பட்டு வருவதையும் சான்றாகக் குறிப்பிடுகிறார். பவுத்த மதம் நிலைபெற்றிருந்த மேற்கு வங்கத்தில், சில பவுத்த கோயில்கள் உள்ளன. அந்தக் கோயில்களில் உள்ள புத்த சிலைகளுக்குத் தருமராஜா' அல்லது தருமதாகூர்என்று பெயர் வழங்கப்படுகிறது.

சாஸ்தாஎன்னும் பெயரே புத்தருக்குரியது என்றும் புத்தருடைய கோயில்களை 'ஐயனார் கோயில்கள்' என்றும், 'சாதவாகனன் கோயில்கள்என்றும் சொல்லி, பிற்காலத்து இந்துக்கள் நாளடைவில் அவற்றைக் கிராமதேவதையின் கோயில்களாக்கிப் பெருமை குன்றச்செய்துவிட்டது போலவே ஏனைய சில புத்த பெயர்களுக்கும் வேறு பொருளும் கதையும் கற்பித்து அவற்றையும் மதிப்பிழக்கச் செய்துவிட்டதாகத் தெரிகிறது என்கிறார். சாஸ்தா - சாதவாகனராகவும் பின்னர் ஐயனாராகவும் மாற்றப்பட்டதைப் போலவே முனி என்கிற புத்தரின் பெயரை ஈஸ்வரனோடு சேர்த்து முனீஸ்வராகவும், திருமாலின் அவதாரங்களில் ஒருவராகவும் மாற்றியதோடு, தருமராசா என்ற புத்தரின் பெயரை பஞ்சபாண்டவர்களில் மூத்தவரான யுதிஷ்ரரின் பெயர் எனக் கூறியதோடு, அரசமரம் இருக்குமிடத்திலெல்லாம் இருந்த புத்தரை மாற்றிப் பிள்ளையாரை வைத்து வழிபாடு செய்யவும் தொடங்கிவிட்டனர் என்கிறார். பிற்காலத்தில் இந்துக்களால் பகவதி கோயில்களாகவும் கிராமதேவதை கோயில்களான அம்மன் கோயில்களாகவும் மாற்றப்பட்டுள்ளன. தாராதேவி கோயில் திரௌபதையம்மன் கோயிலென இப்பொழுது வழங்கப்படுகின்றது, 'தருமராஜா' என்னும் பெயருள்ள புத்தர் கோயில், பிற்காலத்தில், பாண்டவரைச் சேர்ந்த தருமராஜா கோயிலாக்கப்பட்டது போல, 'தாராதேவிஎன்னும் பௌத்த அம்மன் கோயில், தருமராஜாவின் மனைவியாகிய திரௌபதியின் கோயிலாக்கப்பட்டது என்றும் கூறுகின்றார், ஆட்சி மாற்றம் மக்களின் மதமாற்றத்திற்கும் காரணமாகியுள்ளதை மானுட வரலாறு எடுத்துக்காட்டுகிறது.

ஒப்பிலக்கியம் - COMPARITIVE STUDIES

            உலகத்தின் பண்டைய சிந்தனையாளர்களில் ஒருவரான திருவள்ளுவரின் கருத்துக்களை அவருக்குப்பின் தோன்றிய உலகின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த சிந்தனையாளர்களோடு ஒப்பிட்டுப் பார்க்கும் ஆய்வுகள் ஆங்காங்கே தோன்றி திருக்குறளின் பெருமையைப் பறை சாற்றி வருகின்றன. அவ்வகையில் இந்த ஆய்வானது இந்தியாவிலேயே வடபகுதியில் வாழ்ந்த சாண்டில்யரின் பொருள் நூலோடு திருவள்ளுவரின் பொருட்பாலை ஒப்பிட உள்ளது. மனித வாழ்க்கையின் அறம் பொருள் இன்பம் மூன்றையும் நெறிப்படுத்துகின்ற நூல் திருக்குறள். இதில் பொருட்பால் பகுதி மன்னர்க்கு தேவையான இன்றியமையாத கருத்துக்களைக் கூறிச் செல்கிறது. சாண்டில்யர் திருவள்ளுவருக்குப் பின்தோன்றியவர். சந்திரகுப்தருடைய சாம்ராச்சியத்தை நிறுவியவர். அறத்தகையாளனும், வினைசெயல்வல்லானும், மடியில்லாதவனுமாக ஒரு மன்னன் விளங்க வேண்டுமென்றும், ஒருவன் தன் குடும்பத்தைக் காப்பது போல அரசன் தன் நாட்டைக்காப்பாற்ற வேண்டும் என்றும் மன்னர்க்குரிய கடமைகளைக் கூறிச் செல்கிறார். வள்ளுவரும் இறைமாட்சி என்ற அதிகாரத்தைப் பொருட்பாலின் முதல் அதிகாரமாக வைத்து மன்னர்க்குரிய கடமையை எடுத்துரைக்கிறார்.

பின் நவீனத்துவ ஆய்வுகள்  - POST MODERNISM  - STRUCTURALISM

பின்நவீனத்துவம் இலக்கியத்திற்கு என வரையறுக்கப்பட்ட எல்லாவிதமான எல்லைகளையும் மீறுவதையும், பல வடிவச் சோதனைகளில் ஈடுபடுவதையும், உலகில் தோற்றுவிக்கப்பட்ட பல கருத்துக்களின் போதாமையையும், மையத்தை மறுத்து அனைத்தையும் பரவலாக்குவதையும் அடித்தளமாகக் கொண்டுள்ளது. இந்தப் பிரபஞ்சத்தில் தோன்றியுள்ள ஒவ்வொன்றிற்குமான முக்கியத்துவத்தை உணர்ந்து எதையும் பொதுமைப்படுத்த முயலாமல், அதனதன் இயல்பிலேயே இருக்க மனித மனம் விட்டுவிடவேண்டும் என்கிறது. இக்கருத்தியல் தளத்தில் எம்ஜி.சுரேஷின் நாவல்கள் இயங்குகின்றன.

வடிவ சோதனை - அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும், சிலந்தி என்ற இரு நாவல்களிலும் வடிவச் சோதனைகளைச் செய்திருக்கிறார். அலெக்சாண்டரும் ஒரு கோப்பைத் தேநீரும் நாவலில் ஒரு கதையல்ல பல கதைகள் இடம்பெற்றுள்ளன. ஒன்றோடு ஒன்று தொடர்பில்லாத கதைகளைப் பல பரிமாணத்தில் காலங்களை மாற்றி, களங்களை மாற்றி, பாத்திரங்களை மாற்றிச் சொல்லிச் செல்கிறார். நேர்க்கோட்டிலும் முன்னும் பின்னும், குறுக்கும் நெடுக்குமாக கதைகள் நகர்கின்றன. இதில் அத்தியாயங்களும், பாகங்களும் இடம்பெறவில்லை. தலைமைப்பாத்திரம், துணைப்பாத்திரம் என்ற பாகுபாடுகளும் இல்லை. நாவலின் நடுப்பக்கத்தில் கதை இரண்டாக ஒரே பக்கத்தில் பிரிக்கப்படுகிறது. மேல்பகுதியில் ஒரு காலத்திற்கான கதையும், கீழ்ப்பக்கத்தில் வேறொரு காலத்திற்கான கதையும் சொல்லப்படுகின்றன. நான்கு வகையான அலெக்சாண்டர்களின் வாழ்க்கையின் வழி கதை நகர்கிறது.

சிலந்தி நாவலில் வாசகர் ஆணாக இருப்பின், ஒரு போக்கிலும், பெண்ணாக இருப்பின் மற்றொரு போக்கிலும் கதை புரிந்துகொள்ளப்படுகிறது. பொதுவாக வாசகன் நாவல்களில் பங்கு பெறுவதில்லை. ஆனால் இந்நாவலில் வாசகன் தான் துப்பறிவாளன். நடந்த கொலைகளையும், நடக்கும் கொலைகளையும், இனி நடக்கப்போகும் கொலைகளையும் வாசகன் தான் பொறுப்பேற்று குற்றவாளி யார் எனக் கண்டறிய வேண்டும். இதில் கொலையாளிகள் என்று தன்னைக் கூறிக் கொள்பவர்கள் அனைவரும் மன நோயாளிகள் என்பதால் வாசகன் முழு விழிப்புணர்வோடு ஒவ்வொரு நிகழ்ச்சியையும் கூர்ந்து கவனிக்கும் வகையில் கதை அமைந்துள்ளது. இந்நாவலிலும் பல கதைகள் இடம்பெற்றுள்ளன. வாசகனும் நாவலில் பங்கு பெறும் வகையில் பின் நவீனத்துவப் போக்கை எம்.ஜி.சுரேஷ் கடைப்பிடித்துள்ளார். இந்நாவலிலும் 274ம் பக்கம் முதல் 307ம் பக்கம் வரை கதையை இரு கூறாகப் பிரித்து ஆண்வாசகர் எனில் ஒரு மாதிரியான கதைப்போக்கும், பெண் வாசகர் எனில் மற்றொரு வகையான கதைப்போக்கும் என்ற முறையில் இடமும் வலமுமாகக் கதை நகர்கிறது. பொதுவாக நாவல் ஒரு முடிவைத்தான் கொண்டிருக்கும் இந்நாவல் ஆண் வாசகருக்கு வேறு முடிவையும், பெண் வாசகருக்கு வேறொரு முடிவையும் தருகிறது. ஏழு நாள்கள் ஏழு நிகழ்ச்சிகள் பல குறுக்கீடுகள், கட்டட அமைப்பிற்கான வரைபடங்கள் என நாவல் பின்நவீனத்துவப் பாணிக்கேற்ப கட்டமைக்கப்பட்டுள்ளது.

இவை போல வரலாறு, அணுவியல், நீரியல், மேலாண்மை, சோதிடவியல், எதிர்காலவியல், மொழிபெயர்ப்பியல் போன்ற துறைகளிலும் ஆயவு மேற்கொள்ள வாய்ப்புள்ளது.


துணைநூற்பட்டியல்
1.ஆலிஸ்.அ.,(உ.ஆ) பதிற்றுப்பத்து,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்,சென்னை.
2.இராமசுப்பிரமணியம்.வ.த., (உ.ஆ)   பெரியபுராணம் மூலமும் உரையும்,திருமகள் நிலையம்,தி. நகர், சென்னை – 17,2008.
3.இராமசுப்ரமணியம், வ.த.  திருவாசகம் திருமகள் நிலையம், சென்னை பதிப்பு - 2006
4.இராமசுப்பிரமணியம்.வ.த., (உ.ஆ) பெரியபுராணம் மூலமும் உரையும், திருமகள் நிலையம்,தி. நகர், சென்னை – 17,2008.
5.கதிரைவேற்பிள்ளை, நா. தொகுதி -6, தமிழ்ப் பேரகராதி சென்னைப் பல்கலைக்கழகம்,     சென்னை 1899
6.சீனிவாசன்,ரா சிலப்பதிகாரம் மூலமும் திறனாய்வும், அணியகம், சென்னை மு.ப. 1997
7..சுப்பிரமணியன்.ச.வே., (உ.ஆ) பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மூலமும் தெளிவுரையும்,               மணிவாசகர் பதிப்பகம், சென்னை – 600 108,  2010,5. 8.செயபால்.இரா.,(உ.ஆ)- அகநானூறு,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை..
9.சுரேஷ் எம்.ஜி சிலந்தி அடையாளம்வெளியீடு, திருச்சி.  முதற்பதிப்பு 2011
10. தமிழண்ணல்., (உ.ஆ)- தொல்காப்பியம்,மீனாட்சி புத்தக நிலையம்,மதுரை – 1.    
11..நாகராசன்.வி.,(உ.ஆ)- குறுந்தொகை,நியூ செஞ்சுரி புக் ஹவுஸ் ,சென்னை
12. நிரஞ்சனா தேவி, இரா தென்னிந்திய மருத்துவ வரலாறு. உலகத் தமிழாராய்ச்சி நிறுவனம் , சென்னை 2004.
13.பரிமேலழகர் (உரை) திருக்குறள், சுரதா பதிப்பகம், ஜி-4, சாந்தி அடுக்ககம், 3, ஸ்ரீகிருஷ்ணாபுரம் தெரு, ராயப்பேட்டை, சென்னை – 14, முதல் பதிப்பு – 2002
14. பாலசுப்பிரமணியன்.கு.வெ., (உ.ஆ)- புறநானூறு, நியூ செஞ்சுரி புக் ஹவுஸ்   
15. பாலசுப்பிரமணியன்.கு.வெ.,(உ.ஆ)- நற்றிணை,நியூசெஞ்சுரி புக் ஹவுஸ்
16.பூமிச் செல்வம்.ஆ, பின்னை நவீனத்துவம்,அகரம், தஞ்சாவூர். முதற்பதிப்பு 2009
17.வேங்கடசாமி நாட்டார், ந.மு. மணிமேகலை சாரதா பதிப்பகம், சென்னை- மு.ப. 2009










               


No comments:

Post a Comment

உங்கள் கருத்துக்களைப் பதிவு செய்யலாமே?