நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 26 February 2016

சுயபுராணம்

26.02.2016 ...தஞ்சாவூர் பூண்டி அ.வீரையா வாண்டையார் புட்பம் கல்லூரி தமிழ்த்துறையில் நடைபெற்ற முனைவர் பட்ட ஒரு பொது வாய்மொழித் தேர்வில்.........ஆய்வுத் தலைப்பு  ....பெரியாரின் சிந்தனைகளில் சமூகப்பார்வை

Monday, 22 February 2016

சுயபுராணம்



 தமிழிலக்கியத்தில் அறிவியல் தலைப்பில் நான் சிறப்புரை வழங்கிய போது...அமர்ந்திருப்பவர்கள் முதல்வர் பேராசிரியர் முனைவர் திரு.சந்திரசேகரன் அவர்கள் ..முனைவர் தமிழரசி சற்குணம் அவர்கள்.....

Saturday, 20 February 2016

மணிமேகலை காப்பியப் பௌத்தச் சான்றோர்கள்



 

 
Image result for திரிபிடகம் 
மணிமேகலை காப்பியப்  பௌத்தச் சான்றோர்கள்


            பெளத்தமதக் கொள்கைகளைப் பரப்பவும், பௌத்தர் பெருமைகளைப் பேசவும் தமில் எழுந்த காப்பியங்கள் இரண்டு. அவை மணிமேகலை, குண்டலகேசி. இக்காப்பியங்கள் பெண்ணை மையப்படுத்தி எழுந்த காப்பியங்கள். பெண்களுக்கான முதல் சமய மரபை நிறுவியர்- அடிமை முறையை முதன் முறையாக அகற்றுவதற்கு முயற்சித்தவர் பகவான் பௌத்தர் . ஒரு பெண் உண்மையை அறிய முயன்று, பல மதக் கொள்கையினையும் அறிந்து இறுதியில் பௌத்த சமயமே உயர்ந்தது எனக் கடைப்பிடிப்பது போல இக்காப்பியங்கள்  இயற்றப்பட்டுள்ளன. இவற்றில் காலத்தால் முற்பட்டது மணிமேகலை. இவள் சமயக் கருத்துக்களை அறிகிறாள். வாது செய்வதில்லை. ஆனால் பின்னர் வந்த நீலகேசி, குண்டலகேசி காப்பியங்கள் ஒரு பெண் வாதம் செய்து, தான் கொண்ட உண்மையினை நிலை நாட்டுவதனைக் கூறுகின்றன. இதில் நீலகேசி சமணம். குண்டலகேசி என்பது பெளத்தக் கொள்கையைக் குண்டலகேசி என்ற பெண் நிலைநாட்டிப் பிற மதங்களை மறுப்பதைக் கூறுகிறது. சில பாடல்கள் அன்றி இந்தக் காப்பிய முழுவதும் இன்றுவரை (1960) கிடைக்கவில்லை. இதனைப் பாடியவர் நாதகுத்தர் என நீலகேசி கூறுகின்றது. மணிமேகலை காப்பியம் பாடியவர் சீத்தலைச்சாத்தனார். மணிமேகலை காப்பியம், பௌத்த தருமத்தைக் கடைப்பிடித்த பல பௌத்தர்களைப் பற்றிக் கூறுகிறது. பௌத்தத்தில் தேரவாத பௌத்தம், மகாயான பௌத்தம் என்ற இருபிரிவு உள்ளது.

Friday, 12 February 2016

சுயபுராணம்

மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரி நியூசெஞ்சுரி புத்தக கண்காட்சியைத் திறந்து வைத்த போது....................




Friday, 29 January 2016

சுயபுராணம்

விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் வீட்டில்.......................

இசைக் கச்சேரி...................தேஜஸ்வினும்  சர்வேஸ்வரகுமாரும்.....................

இனிய சொந்தங்கள்........................

Wednesday, 13 January 2016

திருமங்கையாழ்வார் - பன்முகநோக்கு


திருமங்கையாழ்வார் - பன்முகநோக்கு


முன்னுரை


Image result for திருமங்கையாழ்வார் 
ஆழ்வார்களில் மிக அதிகமான பாமாலைகளை வகை வகையாகத் திருமாலுக்குப் புனைந்தவர். ஆழ்வார்களில் கடைசியாக அவதரித்தவர். நாலாயிர திவ்ய பிரபந்தத்தில் ஓராயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களைப் பாடியவர் என்ற பெருமைக்குரியவர். இந்தியா முழுமையுமுள்ள 108 திருமால் திவ்ய தேசங்களில் 86 திருமால் திவ்ய தேசங்களைத் தரிசித்து அத்தலங்களின் பெருமையுணர்த்தும் வகையில் அவற்றின் மீது பாடல்களைப் பாடியவர். தம் துணைவியார் குமுதவல்லியுடன் எழுந்தருளியுள்ள பெருமைக்குரியவர். திருமாலின் அவதாரங்களை அனைத்துப் பாசுரங்களிலும் இடம்பெறுமாறு பாடியவர். இயற்கைச் சூழலை வர்ணிப்பதில் வல்லவர் எனப் பல பெருமைக்குரியவர் திருமங்கையாழ்வார். ஆசுகவி, மதுரகவி,சித்திரக்கவி, வித்தாரக்கவி என்னும் நான்கு வகையான கவி புனைவதில் வல்லவர். எனவேநாலுகவிப் பெருமாள்எனப்பட்டவர். பல்வேறு யாப்பு வடிவங்களைப் பக்தியிலக்கியத்தில் பயன்படுத்திக் கொண்ட இவருடைய படைப்புகளின் சிறப்புக் குறித்து இக்கட்டுரை ஆராய்கிறது.

இவருடைய படைப்புகள்

1.
பெரிய திருமொழி 2. திருவெழுக்கூற்றிருக்கை 3. திருக் குறுந்தாண்டகம்
4.
திரு நெடுந்தாண்டகம் 5. பெரிய திருமடல் 6. சிறிய திருமடல் போன்றவையாகும்.

Saturday, 2 January 2016

பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும் – மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......



பௌத்தமும் சேலம் நாட்டுப்புற தெய்வ வழிபாட்டு மரபுகளும்
மயிலை சீனி. வேங்கடசாமியின் பார்வையினூடே......

முன்னுரை


கிறித்துப் பிறப்பதற்கு முன் தோன்றிய உலகத் தத்துவ ஞானிகளில் மிக உயர்ந்த இடத்தை வகிப்பவர் புத்தர். மனிதர்க்கெட்டாத எந்தத் தத்துவத்தையும் புத்தர் சொல்லவில்லை. வாழ்வியலை நெறிப்படுத்தலும் மக்கள் மனதைப் பண்படுத்துதலுமே அவரின் நோக்கங்கள். புத்தருக்கு சமகாலத்திலிருந்து, கிட்டத்தட்ட கி.பி.11ஆம் நூற்றாண்டுவரை தமிழகத்தில் கொங்குமண்ணில் பௌத்தம் சிறப்புற்றிருந்திருக்கிறது. புத்தர் சிலைகள் நிறுவப்பட்டு வழிபாடுகள் நடந்துள்ளன. பௌத்த, சமணச் சமயங்கள் 8ம் நூற்றாண்டுக்குப் பின்னர்ப் புறக்கணிக்கப்பட்டு மறக்கடிக்கபட்டுவிட்டன. ஆனால் வழிபாடு செய்யப்பட்ட சிலைகள் சிதைக்கப்பட்டது போக எஞ்சியுள்ளவை அவை புத்தர்சிலைகள் என்று தெரியாமலே இந்து மதக்கடவுளர்களின் சிறுதெய்வங்களாக வழிபடப்பட்டு வருகின்றன.