நீரின்றி அமையாது உலகு.

முனைவர் ஜ.பிரேமலதா,தமிழ் இணைப்பேராசிரியர், அரசு கலைக் கல்லூரி, சேலம் 636 007 DR.J.PREMALATHA,ASSOCIATE PROFESSOR IN TAMIL,GOVT ARTS COLLEGE,SALEM -636 007.

Friday, 1 May 2020

பந்துகள்






இந்த பந்துகள் போலத்தான் நம் மனமும்
 குழந்தை பருவத்தில் ஒரே சீராக. 
பின் தாறுமாறாக...
இந்த அலைகழிப்பு நிற்பதே இல்லை...
எதற்காக என்று தெரியாமல்

நகர்ந்து போன நந்தவன நாட்கள்


Why China's commitment and ability to contain the coronavirus ... 


Coronavirus in India Reader's pix: 'We will win this battle ... 



நகர்ந்து போன நந்தவன நாட்களை
சாட்டையால் அடித்தது யாருடைய கைகள்?

நம் வீட்டுத் தெருக்களில் பாம்புகளை
நெளிய விட்டது யாருடைய கைகள்?


நமக்கானத் தென்றலைத் திசை மாற்றித்
திருப்பி விட்டது யாருடைய கைகள்?

நமக்கான வசந்தங்களை விசமாக்கியது
யாருடைய விச நச்சுக் கைகள்?

எப்போதாவது உண்ணும் கால் வயிற்றுக் கஞ்சியை
பறித்தது யாருடைய விசமக் கைகள்?

மனிதம் மறைவதற்குக் காரணமாக இருந்தவை
யாருடைய அரக்கக் கைகள்?

சக மனிதனைச் சாவின் தூதுவனாகப் பார்க்கத்

Wednesday, 29 April 2020

எதை இழந்தோம்?


 village life drawing க்கான பட முடிவு 

மண்ணின் விளையாட்டை விடுத்து
மட்டைப்பிடித்த போது எதை  இழந்தோம்?

எளிய வா்ழ்க்கை வெறுத்துப் பகட்டு
வாழ்க்கைத் தேடி எதைத் தொலைத்தோம்?

Monday, 13 April 2020

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் தொடர்பான மொழிப்பயன்பாடு



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண் தொடர்பான மொழிப்பயன்பாடு
மனித சமுதாய வரலாற்றில் சமயம், பண்பாடு, அரசியல் முதலிய காரணங்களால் தோற்றுவிக்கப்பட்ட பல கருத்தியல்களைப் பெண்ணியம் திறனாய்கிறது. நமது சிந்தனை அமைப்பு மொழி அமைப்பைப் பொறுத்தே அமைகிறது. குறிப்பிட்ட சமுதாயத்தில் வழங்கப்படும் சொற்கள் அச்சமூகத்தினருடைய பெண்கள் தொடர்பான அச்சமுதாயத்தினரின் பார்வையைக் காட்டும். ஒரு சமூகத்தில் பெண்களின் தகுதியையும் அவர்கள் தொடர்பான கருத்தியல்களையும் அச்சமூகத்தின் மொழியை ஆராய்வதன் மூலம் அறியலாம்.

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் சமூகச் சீரழிவு

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில்  பெண் சமூகச் சீரழிவு

தளிர் 
நகர மயமாதல் பெண்களுக்குக் கல்வி தந்து அவர்களை ஒரு புறம் உயர்த்தி வந்தது. மறுபுறம் சீரழிவுகளும் பெருகின. தொழிற்சாலை நகரங்களில் பெருகும் மக்கள் தொகை, மக்களிடையேயான நெருக்கத்தைக் குறைத்து வணிக நோக்குடன் செயல்படுவதற்குக் காரணமாகி விடுகின்றன. பொருளாதார நிலையில் ஏற்படும் மாற்றம் வாழ்க்கை முறையை மாற்றியமைத்து எல்லா உறவுகளிலும் போட்டியை ஏற்படுத்தி விடுகிறது. 

பொருண்மைய நோக்கும் எதையும் பணக் கண்ணோட்டத்தில் அணுகச் செய்து ஒழுக்கவுணர்வுகளைவிட உல்லாச வாழ்க்கையை முன்னிறுத்திச் சுரண்டலுக்கும் சிறுமைக்கும் வழி தந்து மற்றவரைப் பற்றியும் எதிர்காலம் குறித்தும் சிந்தனையற்றுப் பகட்டுக்கும் போலி இன்பத்துக்கும் தற்காலிக நிறைவுகளுக்கும் முன்னுரிமை நல்கும் நிலையை உருவாக்குகின்றன.” (அன்னி தாமசு, 2000:133)
காந்திமதி, பாப்பா போன்ற பெண்களிடம் இந்நகரச் சூழல் மனிதாபிமான உணர்வை நீக்கி, மரபுமீறிய நடவடிக்கைகளில் ஈடுபடச்செய்து விடுகிறது. கிராமத்துப் பெண்களின் அப்பாவித் தனத்தைத் தங்களின் சுய நலத்திற்காகப் பயன்படுத்திக் கொள்ளும் சாமர்த்தியத்தை வாழ்க்கைக் கலையாகக் கற்றுக் கொள்ளும் இப்பெண்கள் சமூகச் சிதைவின் எதிரொலிப்புகள்.

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்களும் நம்பிக்கைகளும்


ஆர்.சண்முகசுந்தரம்  புதினங்களில் பெண்களும் நம்பிக்கைகளும்


பெண்கள் மூட நம்பிக்கை, மூட பக்தி ஆகியவற்றின் பிடியில் சிக்கித் தாமும் கெடுவதுடன் நமது குழந்தைகளையும் கெடுக்கின்றனர். எனவே, கல்வியறிவால் பெண்கள் அறியாமை இருளிலிருந்தும், மூட பக்தி, மூட நம்பிக்கைகளிலிருந்தும் விடுதலையடைய வேண்டும். அதன் எதிரொளியாக மனித சமூகமே ஒளி பெறும்” (சி.என்.குமாரசாமி, 2001:344) பெண்களின் அடிமைத்தனத்திற்கான கூறுகளுள் மூட நம்பிக்கைகள் முதலிடத்தை வகிக்கின்றன.

சமூகத்தொண்டில் கொங்கு வெள்ளாள ... 
பழக்கவழக்கங்களும், நம்பிக்கைகளும் பெரும்பாலும் நாகரிகம் தோன்றாத காலப் பகுதியில் வாழ்ந்த மக்களிடம் தோன்றி நிலை பெற்றவை. இம்மரபு கருதி பழக்க வழக்கங்களையும், நம்பிக்கைகளையும் சமூக மரபுச் சின்னங்கள் எனக் கூறலாம்.” (பாலமுருகன். எம்.ஐ., 2000:113) நம்பிக்கை ஒரு செயலின் காரணமாகவும், மரபு வழியாகச் சந்ததி, பின் சந்ததி இகியோரால் பின்பற்றப்படும் வழக்காகவும் உள்ளது என்று வாழ்வியற் களஞ்சியம் (தொகுதி 11:220-221) கூறுகிறது. இந்நம்பிக்கைகளைப்  பெரிதும் பின்பற்றுபவர்கள் பெண்களே. இந்நம்பிக்கைகளில் மூழ்கித் திளைப்பதாலேயே பெண்கள் வாழ்வு இருளடைந்துள்ளது. எந்தச் சமூகமும் தான் ஒருக்கால் பற்றிப் பின் தன்னுள் ஒன்றாக இக்கிக் கொண்டுவிட்ட மரபுகள், வழக்கங்கள், சடங்குகள், கொள்கைகள் இவற்றின் போக்கிலேயே போய்க் கொண்டிருக்கும் மடிமையைத் தன் இயல்பாகக் கொண்டுள்ளது. அவை மனிதர்க்கிழைக்கும் நன்மை தீமை பற்றிய அக்கறை அதற்கில்லை.” (சேது மணி மணியன், 1994:114) பிறப்பு முதல் இறப்பு வரை மனிதனின் ஒவ்வொரு செயலிலும் பல நம்பிக்கைகள் ஆணைந்துள்ளன. படித்தவரிலிருந்து பாமரர் வரை பல வகையான நம்பிக்கைகளுக்கு அனைவரும் ஆளாகியுள்ளனர்.

சமயம் சார்ந்த நம்பிக்கைகள் பண்பாட்டிற்குப் பண்பாடு வேறுபடுகின்றன, காலத்திற்குக் காலம் மாற்றம் பெற்று வந்துள்ளன. இம்மாற்றம் முன் வரலாற்றுக்கால மனிதனின் சமய நம்பிக்கையிலிருந்து தொன்மை மக்களிடையே ஆவி நம்பிக்கையாக மாறி பின்னர்ப் பேய், பிசாசு, தேவதை நம்பிக்கைகள் என வளர்ந்து, இறுதியில் கடவுள் நம்பிக்கையாகப் படிமமலர்ச்சியடைந்துள்ளது. ஆவிகளுடன் தொடர்புடைய ஆற்றல்களாயினும் சரி, பேய், பிசாசு, தேவதை முதலானவற்றின் ஆற்றல்களாயினும் சரி, கடவுளர்களின் ஆற்றல்களாயினும் சரி அனைத்து வகைகளும் மனித மனத்தின் படி மலர்ச்சி நிலைகளே  (பக்வத்சலபாரதி, 1990:491) ஆர்.சண்முகசுந்தரம்நாவல்களில் ஜாதக நம்பிக்கை, பேய் நம்பிக்கை, தெய்வ நம்பிக்கை, பூ நம்பிக்கை, தீட்டு நம்பிக்கை, கிழமை நம்பிக்கை போன்ற பல நம்பிக்கைகள் இடம் பெற்றுள்ளன.

5.14.1. ஜாதக நம்பிக்கை
ஜாதகம் பார்த்தல் என்பது ஆர்.சண்முகசுந்தரம்வைப் பொருத்த அளவில் மூடநம்பிக்கை. எனவே, ஜாதகம் பார்க்கும்பழக்கத்தைப் பல இடங்களில் சாடுகிறார். கிராமத்தில் கோவில் ஒயரிடம் பலரும் சென்று ஒôதகம் கேட்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். அவருக்கு ஜோசியம் பார்க்கத் தெரியுமா என்பது பற்றி மக்கள் கவலைப்படுவதில்லை. பஞ்சாங்கத்திற்கும் அவருக்கும் வெகு தூரம் தானுண்டு கோயில் பூசையுண்டு, பொடி மட்டையுண்டு என்று அக்கடா என இருப்பவர் தனக்கு ஜோசியம் தெரியாது என்று பலமுறை கூறியும் மக்கள் கேட்பதில்லை. அவரும் அவர்களுக்கு ஐற்றபடி பஞ்சாங்கத்தைப் புரட்டிய படியே, சனி தெசை தீருதுங்க. மேற்கொண்டு நல்ல யோகம் கொஞ்ச நாளைக்கு எதிலும் ஒதுங்கியே இருக்க வேண்டும். வக்கிர புத்தி” (ப-58) என்கிறார்.

ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்களின் பிற சிக்கல்



ஆர்.சண்முகசுந்தரம் புதினங்களில் பெண்களின் பிற சிக்கல்
சமூகம் பெண்களைப் பார்க்கும் விதம் பாலியல் ரீதியாகவே உள்ளது. வீதியிலும், வேலை செய்யும் இடங்களிலும்  ஆண்கள் பெண்களைக் கண்டும் காணாமலும் பார்ப்பது குறித்து வெட்கப் படுவதில்லை. பெண்களின் செல்பாடுகளில் உடுபாடு கொண்டு அதை கண்களால் பருகுவதில் இனந்தமடைபவர்கள் அழகை ரசிக்கும் கலா ரசிகர்கள் என்று தங்களைப் பெருமையாகக் கூறிக் கொள்கிறார்கள். ஆனால், பெண்களை முறைத்துப் பார்க்கிறவர்கள், கீழான இச்சைகளிலே இன்பம் துய்ப்பவர்கள், வெளிவேடதாரிகள், பகட்டிலே மனத்தைப் பறி கொடுப்பவர்கள், அந்தரங்கத்தில் கோழைகள்” (1999:49) என்று வெ. சாமிநாத சர்மா சாடுகிறார். கிராம சமூகத்தில் வயலில் வேலை செய்யும் பெண்களை அங்கு வேலை செய்யும் ஆண்கள், பார்த்தும் பார்க்காமல் நோக்குவதைக் காட்டுவார் (க.சு.:58) பெண்களின் ஆடைகள் போகிற பாக்கைப் பார்க்க எங்குமே ஒரு கும்பல் இருக்குமே (உதயதாரகை31) பத்து வயதுப் பெண்ணிடமும் இவர்களின் பார்வை பதிந்து கிண்டல்கள் பிறக்கும். உனக்கு குடிசை கட்ட ஊங்க மாமன் வாராங்கண்ணு சொன்னாங்களே நீ என்னடாண்ணு, சமிஞ்ச புள்ளை இப்படி மாராப்புச் சீலை கூடப் போடாமெ போறாயே” (உதயதாரகை31) இப்படிச் சிறுவயதிலிருந்தே அவள் மீது பதியும். பாலியல் பார்வை அவளைப் போகப் பொருளாகவே கருதுவதைக் காட்டுகிறது..